Wednesday, December 25, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 20


ஜெய்ப்பூர் மைதானம்.

ஜெய்ப்பூர் வீரர்கள் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஷீலாவும் ஸ்வராஜும் மடிக்கணினியை பார்த்த வண்ணம் எதைப்பற்றியோ ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது இரண்டு கைகளிலும் இனிப்பு டப்பாக்களை ஏந்தியபடி ஓடி வந்தான் ஸ்ரீகாந்த்.

"நண்பர்களே, எல்லாரும் ஒரு நிமிஷம் வாங்க. மேடம், நீங்களும் வாங்க.". எல்லாரும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு அவனை சூழ்ந்தனர்.

"ஒரு வழியா போராடி கீதா அப்பா கிட்ட சம்மதம் வாங்கியாச்சு. இன்னும் இரண்டு நாள் கழிச்சு நிச்சயதார்த்தம். " என்று மூச்சு விடாமல் ஒப்பித்தான்.

அனைவரும் சந்தோஷத்தில் "ஹுர்ரே..."என்று உற்சாகக் குரல் எழுப்பி அவனை அலாக்காகத் தூக்கி இறக்கினர்.

கோகுல் அவனருகே வந்து "வாழ்த்துக்கள் ஸ்ரீ," என்று ஒரு இனிப்பை அவன் வாயில் ஊட்டினான்.

ஷீலா, "இதெல்லாம் சரி தான். அதுக்காக பயிற்சிக்கு வராம இருக்கறது தப்பு ஸ்ரீ. நீ ஒரு முக்கியமான பௌலர். அதை மறந்துடாதே" என்று அவளும் தன் பங்குக்கு அவன் வாயை இனிப்பால் அடைத்தாள்.

"அதெல்லாம் கரெக்டா பண்ணிடுவேன் மேடம்"

**************************************************************************************

"என்ன தலைவரே, அவசரமா வரச் சொன்னீங்க?" என்று கேட்டான் ராத்தோர்.

"இந்த பத்மநாபன் சரியில்லை. அவ்ளோ சொல்லியும் மேலே யார் கிட்டேயோ பேசி தேர்தலல்ல நிக்கறான். "

"நீங்க மேலிடத்தில் பேச வேண்டியது தானே?' உங்க பேச்சை அவங்களால மீற முடியுமா? பாதி விவசாய மார்க்கெட்டே உங்க கிட்ட தான் இருக்கு. அதிலும் குறிப்பா வெங்காயம்"

"பேசினேன், ஆனால் சரியான பதில் வரலை. நம்ம பையன் வேற இந்த செல்லையா ஏர்லைன் விவகாரத்தில் கொஞ்சம் மாட்டியிருக்கான். அதனால நானும் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கு. வேற விதமாத் தான் கையாளணும்"

"ராதேவை மடக்கிடவா?'

"மடக்கணும், ஆனால் இப்ப இல்லை. இந்த வருஷ போட்டி நடக்கும்போது கொஞ்சம் சாட்சிகளை உருவாக்கணும். எல்லாரும் மாட்டணும். ஆனால் ரொம்பவும் மாட்டக் கூடாது - சொல்றது புரியுதா?"

"கவலையை விடுங்க. நான் பார்த்துக்கறேன்"

***************************************************************************************
"மாப்ளே, இந்த வருஷம் எந்த டீலிங்கும் பண்ணாதீங்க. பெரிய சிக்கலாயிடும்" என்று கவலையுடன் எச்சரித்தார் பத்மநாபன்.

"ஏன் மாமா?" என்று அப்பாவியாகக் கேட்டான் ரகு.

"காரணமெல்லாம் கேட்காதீங்க. ரொம்ப பெரிய ஆளுங்க இதுக்குப் பின்னாடி இருக்காங்க. இந்த வருஷம் விஜிலன்ஸ் அதிகமாயிருக்கு. அவ்ளோ தான் சொல்வேன்"

"ஆனால் இந்த பாலா பய..."என்று கூறி முடிக்கும் முன்,

"டீமுக்கு அவன் மேனேஜரா இல்ல நீங்களா? சொன்னதை செய்ங்க" என்று உச்சச்த்தாயியில் கத்தினார் பத்மநாபன்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் நடையைக் கட்டினான் ரகு.

**************************************************************************************

முதலாளி ராவின் முன்பு அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தான் நரேந்தர்.

"இத பாருங்க நரேந்தர், ஏதோ நீங்க டெல்லி லோக்கல்னு நினைச்சுத்தான் உங்களை எடுத்தோம். ஆனால் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா உங்க பொழைப்பு ஆயிடுச்சு."

"
அது...இன்னும் பார்ம் செட் ஆகலை சார்"

"4 வருஷமாவா? உங்களுக்கு காது கூட சரியா கேட்கறதில்லையாமே? அப்படியா?"

"அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. இதெல்லாம் என்னோட எதிரிங்க பண்ற சதி வேலை"

"சதியோ, உண்மையோ - எங்களுக்கு பெர்பார்மன்ஸ் வேணும். இதான் உங்களுக்கு கடைசி சான்ஸ். சொதப்பினீங்கன்னா நீங்களாவே போயிடுங்க"

தொங்கிய தலையுடன் எழுந்தான் நரேந்தர்.

**************************************************************************************

"தம்பி, உள்ளே போகாதீங்க. அப்பா கடுப்பா இருகாரு" என்றார் செல்லையாவின் உதவியாளர்.

"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்" என்று உள்ளே நுழைந்தான் அவரது மகன்.

"என்ன மகனே? என்ன விஷயம்" என்று அவனைப் பார்த்துக் கேட்டார் செல்லையார்.

"ஏதோ மூட் அவுட்டாமே நீங்க?"

"ஆமாம், கம்பெனில கொஞ்சம் ஷேர்ஸ் விக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். நீ வந்த விஷயத்தைச் சொல்லு"

"டீமுக்கு இந்த வருஷச் செலவுக்குப் பணம் கொடுக்கணும். மார்க்கெட்டிங் பொருட்கள் எல்லாம் வந்திடுச்சு. பேமென்ட் பண்ணலேன்னா நாறடிச்சிடுவாங்க"

"நம்ம அக்கௌண்ட்ல இருக்குமே?"

"எந்த அக்கௌண்ட்ல? உங்க பர்சனல் அக்கௌண்ட் தவிர எல்லாம் காலி"

"சரி சரி, தர்றேன்.." என்று செக்கை எடுத்து கையொப்பமிட்டு குடுத்தார்.

"இந்த உலகத்திலேயே சாராய கம்பெனி நடத்தி நாசமாப் போன ஒரே தொழிலதிபர் நீங்களாத் தான் இருப்பீங்க" என்பர் கூறிவிட்டு காசோலையுடன் வெளியேறினான் அவரது மகன்.

"என் கணக்கு உனக்குப் புரியாதுடா, போடா போடா" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் செல்லையா.

************************************************************************************

"யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிக்கிட்டிருந்தே?" என்று மனைவியைப் பார்த்துக் கேட்டான் மொஹிந்தர்.

"நம்ம ராதே தான். இந்த வருஷம் மேட்ச் பார்க்க கொஞ்சம் ஸ்பெஷல் பாஸ் வேணுமாம். நம்ம காலரியில் உட்கார்ந்து பார்க்க அனுமதி கிடைக்குமான்னு கேட்கறான்"

"நீ என்ன சொன்னே?"

"ஓகேன்னு சொல்லிட்டேன்."

"என்கிட்டே ஒரு வார்த்தை கேட்க மாட்டியா?"

"எதுக்கு கேட்கணும்? நமக்குத் தான் எல்லா மேட்ச்சுக்கும் 10 பாஸ் கிடைக்குதே?'

"அதுக்காக? எவனை வேணும்னாலும் உட்கார வைப்பியா?"

"ஹலோ, அவன் நம்ம நண்பன்"

"அதெல்லாம் அப்போ, இப்ப அவன் நடவடிக்கை ஒண்ணும் சரியில்லை. அவனோட ஜாஸ்தி வெச்சுக்காதே"

மொஹிந்தர் சொல்வது விளங்காமல் அவனை முறைத்தாள் ராக்கி.
*****************************************************************************
"டேய், மாமனார் செம கடுப்புல இருக்கார். அதனால் இந்த வருஷம் அடக்கித் தான் வாசிக்கணும்" என்று பாலாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் ரகு.

"மச்சி, போன தடவையே சொல்லிட்டேன். ஏகப்பட்ட கமிட்மென்ட் ஆயிருக்கு இந்த தடவை. அப்படியெல்லாம் பின் வாங்க முடியாது" என்று உறுதியாகக் கூறினான் பாலா.

"அப்போ எதுவானாலும் நீயே பண்ணிக்க, என்கிட்டே எந்த உதவியும் எதிர்பார்க்காதே"

"ஒரு நிமிஷம் இரு மச்சி. ராதேவுக்கு போன் போடறேன், நீயே சொல்லிடு"

எதிர் முனையில் ராதே வந்தான். "சொல்லுங்க பாலா ஜி, என்ன விஷயம்?"

"ராதே பாய், ரகு இந்த வருஷம் நமக்கு சப்போர்ட் பண்ண மாட்டாராம், அதை உன் கிட்ட சொல்றதுக்குத் தான் போன் பண்ணினேன். அவரும் இங்க தான் இருக்கார்"

"க்யா ரகு ஜி, என்ன ஆச்சு?"

"ராதே, இந்த வருஷம் ஏதோ விஜிலன்ஸ் அதிகமாயிருக்காம். அதனால இந்த வருஷம் எதுவும் பண்ணி மாட்டிக்க வேண்டாம்னு மாமனார் சொன்னார்"

"அதெல்லாம் வருஷா வருஷம் நடக்கறது தான் ரகு ஜி. "

"என்னால முடியாது ராதே. அவருக்கு என் மேல வெறுப்பு உண்டே தவிர என்கிட்டே இந்த மாதிரி கடுமையா பேசினதே கிடையாது. என்னை தொந்தரவு பண்ணாதீங்க. உங்களுக்கு என்ன ஆளா இல்லை? என்னை மாதிரி நிறைய பேரு உங்க கூட டச்ல இருக்காங்கன்னு எனக்குத் தெரியும்."

"அதெல்லாம் தேங்காய் மூடி அணி ரகு ஜி. உங்களது தான் ஹாட் பேவரிட் - முடிவா என்ன தான் சொல்றீங்க?""

"முடியாது"

"ஓஹோ, அப்போ போன மாசம் கோவா போனப்போ ஒரு நடிகையோட எக்குத் தப்பா இருந்தீங்களே, அந்த வீடியோவை உங்க பொண்டாட்டிக்கு அனுப்பிடவா? பாவம் அவங்க வேற முழுகாம இருக்காங்க"

"சும்மா மிரட்டாதே, அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை."

"அப்படியா, சரி நான் யூடுப்ல போடறேன். நீங்களே பார்த்து அடையாளம் கண்டுக்கோங்க"

"ராதே"

******************************************************************************

மகேஷின் முன் அழாத குறையாக சோகத்துடன் அமர்ந்திருந்தான் கலிங்கா. எதிரே மேஜையில் சிதறிய செல்போன்கள்.

"சார் இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க" என்று மன்றாடினான் கலிங்கா. மகேஷின் பார்வையில் அனல்.

"மன்னிப்பா? உன்னையெல்லாம் ஓட ஓட அடிச்சு விரட்டணும்யா"

"தம்பி, உங்களுக்கு இங்கே என்ன குறைச்சல்? மத்த டீம் மாதிரியா நாங்க உங்களை நடத்தறோம்?" என்று விளக்க ஆரம்பித்தார் சுக்லா..

"நீங்க என்னண்ணே இவன் கூட பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டிருக்கீங்க? எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அப்படியே.."

கலிங்கா தெனாவட்டாக," என்ன சார் ரொம்ப தான் பேசறீங்க? கிரிக்கெட்னா மேட்ச் பிக்சிங் இருக்கத்தான் செய்யும். நீங்கள்லாம் மட்டும் ரொம்ப யோக்கியமோ? உங்களுக்குள்ளேயே பேசி இந்த வருஷம் இவங்க தான் ஜெயிக்கணும்னு முடிவு பண்றதெல்லாம் எங்களுக்கும் தெரியும் சார். உங்களால என்ன செய்ய முடியும்? போலீசுக்குப் போவீங்களா? போங்க. "

மகேஷ் "போலீசுக்கு நான் எதுக்குப் போகணும்? டேய், நானெல்லாம் பூமிக்குள்ள குழாய் போட்டு எண்ணெய் எடுக்கறவன், அதுலேயே உன்னைப் போட்டு புதைச்சுட்டு, காணவில்லைன்னு FIR பைல் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன். உன் ஜட்டி கூட கிடைக்காது"

கலிங்கா வெலவெலத்துப் போனான்.

********************************************************************************

"இருக்கற தலைவலி போதாதுன்னு இது வேறயா?" என்று தலையலிடித்துக் கொண்டார் பத்மநாபன். கையில் தமிழக அரசாணையின் காப்பி.

"என்ன சார் இது?" என்று வாங்கிப் படித்தார் அவரது உதவியாளர். பிறகு, "ரொம்ப அநியாயமா இருக்கே? பக்கத்துக்கு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் யாரும் சென்னையில் நடக்கும் போட்டியில் பங்கெடுக்கக் கூடாது. அப்படிப் பங்கெடுத்தால் பாதுகாப்பு தரமாட்டோம்னு சொல்லியிருக்காங்களே"

"நடுவர் கூட இருக்கக் கூடாதாம்."

"இதனால நம்ம டீமுக்கு ஒண்ணும் பெரிய பாதிப்பு இல்லையே சார்"

"அங்க தான்யா பிரச்சினையே, இந்த மாதிரி ஒண்ணு கிளம்பும்னு தெரிஞ்சு தான் நான் நம்ம டீமை பார்த்து பார்த்து எடுத்தேன். ஆனா மத்த டீம் ஆளுங்க புலம்புவாங்களே, அந்த டீம்ல இந்தப் பசங்க தான் முக்கிய பங்கு வகிக்கறாங்க, நான் ஏதோ வேணும்னே பண்ணிட்டதா கதை கட்டுவாங்க, அதை சமாளிக்கணுமே?"

"எதுவும் பேசிப் பார்க்க முடியாதா?"

"அந்த அம்மாவுக்கும் எனக்கும் தான் ஆகாதே, என்னத்தப் பேசறது? அதுமட்டுமில்லை, மாணவர்கள் போராட்டம் வேற ரொம்ப பலமா ஓடிக்கிட்டிருக்கு. இந்த நேரத்தில் அவங்க எதுவும் செய்ய மாட்டாங்க"

**************************************************************************************

"என்ன பாலா, நம்ம மாப்ள என்ன சொல்றான்?" என்று நக்கலடித்தார் நல்லகண்ணு.

"பய ஆடிப் போயிட்டான் மாமா. வேற வழியில்லாம ஒத்துக்கிட்டான்"

"ஆமாம், நிஜமாவே கோவாவில் அப்படி எதுவும் நடந்ததா?"

"நீங்க வேற, இவனெல்லாம் பெனாட்ரில் குடிச்சாலே போதையாகிடுவான். அங்க போய் டக்கிலா ஷாட்ஸ் எடுத்தா என்னாவான்? அந்த நடிகையோட தான் ரூமுக்குப் போனான். ஆனால் பாதி வழியிலேயே வாந்தி எடுத்து அவுட் ஆயிட்டான். அவன் பேரைச் சொல்லி நாங்க நல்லா என்ஜாய் பண்ணோம்"

"பிரமாதம் மாப்ளே, நம்ம லிங்க் பத்தி அவனுக்கு ஏதும் தெரியுமா?"

"தெரிஞ்சு என்ன ஆகப்போகுது? செய்யறது என்னமோ நானா இருந்தாலும் மாட்டினா அவன் தான் மாட்டுவான். இது சம்பந்தப்பட்ட எல்லாமே அவன் பேர்ல தான் இருக்கு - அவன் கொடுத்த லேப்டாப் உள்பட.

"மாட்டுவான் மாப்ள, பத்மநாபன் குடும்பத்தைப் பார்த்து இந்த ஊரே சிரிக்கணும்"

"கூல் டவுன் மாமா. கால் முடமா இருக்கற என் தங்கச்சியை நம்ம ஜாதிப் பழக்கத்தை மீறி 10 பைசா வரதட்சணை வாங்காம உங்க அண்ணன் பையனுக்கு முடிச்சிருக்கீங்க. உங்க உர கம்பெனிக்கு வேற என்னை முதலாளியா ஆக்கியிருக்கீங்க. உங்க நல்ல மனசுக்காக எது வேணும்னாலும் செய்யலாம்"

இதுல என் சுயநலமும் இருக்குன்னு வெச்சுக்கோங்க. எனக்குன்னு யார் இருக்கா சொல்லுங்க? பெத்தது இரண்டு. அதுல ஒண்ணை நெருப்புக்குக் குடுத்துட்டேன். இன்னொண்ணு படிக்கறேன் பேர்வழின்னு அமெரிக்காவிலேயே டேரா போட்டிடுச்சு. எனக்கோ என் பொண்டாட்டிக்கோ எதாவது ஆச்சுன்னா எங்க பிணத்தைப் பார்க்கக் கூட வருமான்னு தெரியலை. மனுஷனுக்கு வயசாகும்போது தான் சாயறதுக்குத் தோள் தேவைப்படுது.

உங்க நிலைமை எனக்குப் புரியுது மாமா"

"நம்மளோட இந்த உறவினால உங்க நட்பு கெட்டுடப் போகுது மாப்ள. பதவிசா நடந்துக்குங்க"

"நண்பன்னு அவன் தான் மாமா சொல்லிக்கிட்டுத் திரியறான், நான் சொல்றதே இல்லை" என்று கூறிச் சிரித்தான் பாலா.



ஆட்டம் தொடரும்.......


ஜெயராமன்
டெல்லி

Friday, December 20, 2013

We have arrived... Are you ready???

India surprised even the most optimistic fan” is a better way to put it. To the perennial doubters who give a ^&$#@ to the youth brigade (especially in the foreign soil) this is a strong wake up call. For the No.1 side in World Cricket and its followers this is a rude shock. Finally for those who still grieve for Dravid, Laxman, Tendulkar retirements, Hope is the message.

This has been an outstanding test cricket performance by India in the foreign soil after a long time. Well the game is not over yet and 2 more days of play left. India is sitting pretty with 300 runs lead and 8 wickets on hand. Also riding the wave are the future pillars of Indian Cricket, Kohli & Pujara. If Kohli’s first innings century bailed out India from falling heap, Pujara’s century in the second innings, more or less took South Africa out of the context. It appears Pujara is all at ease to turn this into a double ton, while Kohli can complement his first innings ton with another ton. Batting an hour after lunch on Day 4 is likely to give India a lead of 450 runs. And then 4.5 sessions left to play, coupled with a wearing wicket –Indian bowlers have enough time to stomp South Africa.

A quick review of India’s performance so far…
Vijay looked solid in both innings. However, his individual scores did not reveal his important contribution of grinding the new ball in both innings. At the same time he failed to capitalize when Amla dropped him at short leg in the first innings. Great players make the opposition pay for their mistakes. Mind you, Pujara in his second innings, at around 50 also got a reprieve when Tahir dropped a sitter of his own bowling. Pujara cashed on the life and made South Africa pay for the mistake by scoring 135* with more to come. At the same time, Vijay is here to stay not because he is a Super King, not because Srinivasan is the president, but because he has it in him to grind the new ball even in alien conditions. On the contrary, Dhawan looked totally out of sort in every aspect. He appeared to be a walking wicket, but then it is only his first test abroad. Since there are not too many left handed openers in the circuit whose names doing rounds and India is not looking back to Gambir, there is a good chance, Dhawan may get a long rope. Since he is very young, he will learn from his mistakes and come good in the days ahead.

Pujara and Kohli had already passed the auditions in India, now stamped their class. Pujara’s performance confirmed Dravid’s exit, while Kohli looked so much good at No.4 than a fading Tendulkar. Rohit Sharma floundered on the limited opportunity, but then not everybody performs in the same test match. At the same time, the way he got out in the first innings was not good scene to watch too. I’m sure he has better days ahead and proves that he has it in him to replace Very Very Special Laxman. After Ganguly retired nobody really sealed that spot. That spot was always available for grabs. Yuvraj, Raina all tried their hands unsuccessfully. Little Rahane playing a different genre of cricket may be that answer to the puzzle.

On the bowling front, India may have missed the genius of Kumble or the guile of Harbhajan (at prime), but Ashwin offers a different pedigree. He is surely an all-rounder that India has been looking for a very long time. At times, I felt Ashwin may be a better opener (compared to Dhawan) and give India an option to play 4 pacers or an additional spinner (when needed). Well, these are very early thoughts and don’t carry too much merit to be introspected immediately.

For the first time, I feel Indian pace battery looks so much better than yesteryears. Zak has the knack, Shami has the pace and the duo is able to reverse swing too. Finally after 50 tests, Ishanth Sharma is coming off age. A Kumble sort of personality is the missing link in the spin department.

With Morkel out of the test match, India is looking to possess a better bowling attack than South Africa in the second test. Ooops, I already concluded that India won the match.

It is highly unlikely India will lose from here. We have always been complaining about India not putting a fight during the 8-0 debacle. Let us see what the World No.1 have in them to fight in this test match

Bottom line: We are here. Let the world better be ready for us.

Dinesh
Cricket Lover

Tuesday, December 17, 2013

A New Journey Begins...

A New Journey begins for India after their favorite son chose to end his journey. And the voyage commence with one of the most anticipated series of the year. Yeah it is sad the series is limited to just two Tests. But then what can stand up to Political Play & Tendulkar Retirement. Well, it would not have been a bad idea if India played split series, with 3 tests now and touring again later for the ODI and T20 leg. Never mind, let us move on.
 
It was my dream for some time that India should start a young side in the Test Arena (especially after the 8-0 drowning in the hands of England and Australia). Well, it took few retirements (some may have been forceful too), a new selection committee that also addressed the dressing room dissents, before India zeroed down to a young side. I’m sure this not the best youth brigade of India, but it is sure a good start by the selectors. In the near future we will know who will survive the long run. But, Zaheer Khan joining the bandwagon is the most heartening site. After shedding all those unwanted fat and probably (may have) lost the injury specialist tag with it, could be another compelling comeback story. When Zaheer Khan was not issued the contract, it was very obvious that it was only an effort to pacify Sehwag when the latter was not issued a contract too. In reality everybody knew Zak will return to Test fold for the South Africa series, especially after his Tour to France followed by his performance in domestic circuit. Though I’m very positive of Zak’s performance, it is still wait to be watched. Between, I personally did not count on Zaheer Khan returning to Test Fold after he was shown doors during the England series in India.
 
Now, Sehwag can take a leaf out of Zaheer’s book and consider Tour the France, may be a Corrective Vision Surgery too and importantly a Team Building exercise with Dhoni to make another compelling comeback story. After all, there is still a lot of room left for Sehwag’s comeback and he would be my personal interim pick to replace the legend at No.4 till India (and I) gets over the No.4 phobia. And Sehwag still has few more left to contribute for India.
 
Coming back to the series preview, many may consider the ODI’s were a prelude to the Test Series. It is very evident that B Kumar and Mohit Sharma are simply not ready for the big battles and quickly made to sit the remaining 2 ODI’s. From what we infer from the performances of Shami Ahmed, Umesh Yadav, Ishanth Sharma, B Kumar and Mohit Sharma in the ODI’s, India are better off starting with Zaheer, Shami and Ishanth for the first Test and Ashwin should be the lone support spinner. I’m sure Dhoni will have no place to show his love for Jadeja by calling him an all-rounder wanting to be included in the playing XI. His place will be duly taken over by a specialist batsman.
 
More than the bowlers, the performance of the batsman in the ODI’s disappointed everyone. Most of the batsman tried to display the attitude that they are ready to take on the likes of Steyn & Party (in other words not perturbed by the reputation of bowlers) and started playing their shots when they were simply not ready for it. Guess they learnt their lessons now. Possibly a dressing down by the Coach & Captain should help them find their feet before the Test Series. Pujara could have been a good addition to the ODI side, especially in the overseas condition. He is more on the Dravid mold, playing to himself, giving it to the bowlers when they demanded respect, could have curtailed flurry of wickets in the ODI series and possibly helped the other batsman to put a better show. Anyways, no point in brooding over the past, after all this is only learning curve and most of these players are still young in their careers. But showing signs of maturity at an early age can turn these young batsmen from good to great.
 
Over all, I’m not counting on India to win this series. If India loses this series 1-0, then I would say it is a huge win for Indian Cricket.
 
India is expected to field
 
Vijay, Dhawan, Pujara, Kohli, Sharma, Rahane, Dhoni, Ashwin, I Sharma, Zaheer Khan and Shami Ahmed

 
It is true Tendulkar retirement left India in a huge void. His departure left the entire nation sobbing (And I still continue to sob. I personally find it extremely difficult to digest, even though I begged for his retirement).  He made his fans so proud for choosing him his hero. Now, he has set a new yardstick for the next generation (cricketers) as to what a Hero should be. Let us see if anyone from this youth brigade can go on to become the next big thing in cricket. From now on, it will be our journey to witness if we ever witness another Tendulkar in our life time.  
 
 
Dinesh
Cricket Lover


PS: I'm commencing my journey too, after a long hibernation

Monday, December 9, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 19

வெற்றி மேல் வெற்றியைக் குவித்து வந்த மொஹிந்தருக்கு அடி மேல் இடியாக அமைந்தன இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு அவனை சூப்பர் ஸ்டாராக சித்தரித்த பத்திரிகை "நண்பர்கள்" இன்று அவனை காமெடி பீசாக கேலி செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவனோ எதைப் பற்றியும் அலட்டிக்காமல் சாந்தமாக வளைய வந்தான். கெட்டதிலும் ஒரு நன்மையாக நரேந்தர் தொடர்ந்து சொதப்பியது அவனை முழுமையாக ஓரங்கட்டுவதற்கு மொஹிந்தருக்கு இலகுவாக இருந்தது.

********************************************************************************************************************************
இந்த நவீன யுகத்தில் வியாதி மற்றும் மருத்துவமனையைப் போல் வாழ்க்கையெனும் பாடத்தைக் கற்பிக்கும் ஆசான் யாருமில்லை. அப்படி ஒரு பாடத்தை புற்றுநோய் மூலம் பெற்றுக் கொண்டான் ப்ரித்வி. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவன் உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் ஒரு புதிய மனிதனாக மாறியிருந்தான்.

********************************************************************************************************************************
தமிழகத்தில் ஆட்சி மாற்றம், மருமகனின் சூதாட்ட வெறி, இந்திய அணியின் தொடர் தோல்விகள், ப்ரித்வி போன்ற சகலகலா வல்லவன் அணியில் இல்லாதது, என பல முனைத் தாக்குதல்களுக்கு ஆளாகியிருந்தார் பத்மநாபன். அதிலும் புதிய முதல்வருக்கும் நல்ல கண்ணுவிற்குமான நெருங்கிய நட்பு அவரை மேலும் கலக்கமடையச் செய்திருந்தது.

********************************************************************************************************************************
ரகுவின் குடும்ப நிறுவனத்தில் லாஜ்வந்தி தொடர்ந்து நடித்து வந்தது பாருவின் சந்தேகத்தை மேலும் வளர்த்தது. தனக்கும் ரகுவிற்கும் அப்படி எந்தத் தகாத தொடர்பும் இல்லையென்று லஜ்வந்தியே நேரடியாக விளக்கமளித்ததால் அமைதியானாள். தான் செய்த தவறுக்காக ரகுவிடம் மிகவும் வருந்தியதன் விளைவாக தற்சமயம் மூன்றாவது குழந்தைக்குத் தாயாகியிருந்தாள்.

********************************************************************************************************************************
"நண்பர்களே, அனேகமா இது தான் நாம கலந்துக்கற கடைசி போட்டியா இருக்கும்னு
நினைக்கறேன். உங்களுக்கே தெரியும், தொடர்ந்து நாலு வருஷமா நாம ஒண்ணும் பெரிசா சாதிக்கலை. நான் பண்ற விளம்பரங்கள் தான் நமக்கு இருக்கற ஒரே வருமானம். நஷ்டம் இல்லேன்னாலும் அணியோட மதிப்பு அப்படியே தான் இருக்கு. இது மட்டுமில்லை, என்னோட சமீபத்திய சயன்ஸ்-பிக்ஷன் படமும் நான் எதிர்பார்த்த லாபத்தைக் குடுக்கலை. அதனால, ஒரு முதலீட்டாளரா இது எனக்கு சோதனையான காலம்.இந்த வருடம் நடக்கப் போகிற போட்டியில் குறைந்த பட்சம் நம்ம அணி அரை இறுதிப் போட்டிக்காவது தகுதி பெறணும். என்னை வருத்திக்கிட்டு உங்களுக்கெல்லாம் சம்பளம் குடுக்கணும்னு ஒண்ணும் தலையெழுத்தில்லை. முடிஞ்ச அளவு வெற்றிக்காக போராடுங்க. யார் விளையாடணும், விளையாடக் கூடாது - இது எதிலும் நான் தலையிடப் போறதில்லை. ஆல் தி பெஸ்ட்" என்று தன் முன்னே கூடியிருந்த வீரர்கள் முன்னாள் உரையாற்றி விட்டு வெளியேறினான் சாதிக் கான்.

********************************************************************************************************************************
"இந்த பேப்பர் மில்லை உங்களுக்குக் கொடுத்ததில் ரொம்ப சந்தோசம் சார்" என்று செழியனின் கையைப் பற்றிக் குலுக்கினார் ரெட்டி. கிரிக்கெட் மூலம் ஏற்பட்ட நட்டத்திற்கு ஈடு கட்ட முடியாமல் தனது சொத்துக்களை விற்க ஆரம்பித்திருந்தார் ரெட்டி. அதன் ஒரு பகுதியே இந்த பேப்பர் மில் விவகாரம்.

"இதில் என்ன சார் இருக்கு? எனக்கும் தான் இதில் லாபம்" என்று அடக்கத்துடன் கூறினான் தென்னிந்தியாவின் மீடியா கிங் என்று அழைக்கப்படும் செழியன்.

"நீங்க தொட்டதெல்லாம் துலங்குது. அப்புறம் ஏன் நீங்க இந்த பிரீமியர் அணிகளில் முதலீடு பண்ணலை சார்? சென்னை அணியை நீங்க ரொம்ப எளிதா வாங்கியிருக்கலாமே?" என்று கேட்டாள் அருகிலிருந்த ரெட்டியின் மகள்.

"கிரிக்கெட் ஒரு யானைம்மா. அதுக்கு தீனி போட்டு கட்டுப்படியாகாது"

"நீங்க சொல்றதும் சரி தான்" என்று தனது அனுபவத்தை நினைவு கூர்ந்தார் ரெட்டி.

"சார், ப்ளைட்டுக்கு நேரமாச்சு, இப்பவே கிளம்பினாத்தான் சரியா இருக்கும்" என்று செழியனுக்கு நினைவுபடுத்தினார் உதவியாளர்.

"ஓகே சார், கிளம்பறேன்" என்று மீண்டும் கை குலுக்கிவிட்டு கிளம்பினான் செழியன். ஆனால் சென்னை வந்து சேரும் வரை கிரிக்கெட் அணியை வாங்குவதைப் பற்றி யோசித்த வண்ணமே இருந்தான்.

*******************************************************************************************************************************
"டார்லிங், நம்ம டீமை ரத்து பண்ணிட்டாங்க" என்று மூக்கை சிந்தியவாறே சசிதரனிடம் கூறினாள் அவரது லேட்டஸ்ட் செல்லம் மோனிகா.

"அப்பாடா, இப்போ தான் நிம்மதியா இருக்கு. இதை காரணமா வெச்சு நம்ம கிட்ட இருக்கற கருப்பை வெள்ளையாக்கிடலாம்" என்றார் சசி.

"ஆனால் இது என் மானப்ப்ரசினை. நான் எவ்ளோ கனவு கண்டிருந்தேன் தெரியுமா?"

"எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்க. நல்ல கொளுத்தற வெயில்ல இந்த டீமோட இந்தியா முழுக்க எப்படி அலைய முடியும்? நீ என் செல்லம்டா, கறுத்துடுவேடா கண்ணா" என்று கொஞ்சினார் சசி.

"இப்படி எதாவது பேசியே என்னை மயக்கிடுங்க" என்று அவளும் கொஞ்சிக் கொண்டே சசியை கட்டிப் பிடித்தாள். இவளால் தன் பதவிக்கு வர இருந்த ஆபத்து விலகியதை நினைத்து பெருமூச்சு விட்டார் சசி.

********************************************************************************************************************************

கோகுலின் தலைமையில் ஜெய்ப்பூர் அணி திறமையான இளைஞர்கள் நிறைந்த அணியாக உருவாகியிருந்தது.ஆனாலும் அவர்களால் முக்கியமான போட்டிகளில் தோற்றுப் போவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. மாமாஜியுடன் நேரடித் தொடர்பு இல்லாததால் சூதாட்டத்தில் சற்று அடக்கியே வாசித்தான் ஸ்வராஜ். இதனால் ராதே ஜெய்ப்பூர் அணியில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களுடன் பேரம் பேச ஆரம்பித்தான்.

********************************************************************************************************************************
வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்த சென்னை அணி, மூன்று பெரிய அணிகள் தோற்றதன் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்தது அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அதிலும் முக்கியமான அரையிறுதியில் டெல்லி அணி புதுமுகத்தை அறிமுகப்படுத்தியது நரேந்தரின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியது.

********************************************************************************************************************************
4வது முறையாக சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தாலும் கல்கத்தா அணி போராடி கோப்பையைக் கைப்பற்றியது. வெற்றி பெற்ற பின்னர் பத்திரிகையாளர் முன் பெருமையாகப் பேசி தானும் கேப்டனுக்குத் தகுதியானவன் தான் என்று நிரூபிக்க முயற்சித்தான் பிரவீன். ஆனால் அது மொஹிந்தர் மீது அவனுக்கிருந்த காழ்ப்புணர்ச்சியை பட்டவர்த்தனமாக்கியது. மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் ஊர் ஊராக குதித்துக் கொண்டிருந்தான் சாதிக்.

********************************************************************************************************************************
"மேடம், நான் சொன்ன அந்த விஷயம்..." என்று போனில் முதல்வரிடம் குழைந்தார் நல்ல கண்ணு.

"இது உங்க தனிப்பட்ட பிரச்சினை சார். நான் தலையிடக் கூடாது. நீங்களே பார்த்துக்கோங்க"

"எனக்கும் அதான் மேடம் வேணும். நீங்க தலையிடாம இருந்தா போதும்" என்று கூறி போனை வைத்தார் நல்லகண்ணு.

********************************************************************************************************************************

"டேய்பாலா, இதோட நிறுத்திக்கலாம்டா, ஒருமாதிரியா இருக்கு" என்றான் ரகு.இடம்- அவர்களின் வழக்கமான மற்றும் ராசியான நண்பர்அகர்வாலின் ஹோட்டல்.
ஏன்? சரக்கு நல்லாத்தானே இருக்கு? என்று கடித்தான் பாலா.

"நான் நம்ம பண்ற திருட்டுத் தனத்தைச் சொல்றேன்"

"ஏன்,பயமா இருக்கா?" என்று மது அருந்தியவாறேகேட்டான் பாலா.
"தெரியலை,ஆனால் ஒண்ணும் சரி இல்லை"
"என்ஜாய்பண்ணு மச்சி, எவ்ளோ காசுபாரு, தினம் தினம் திருவிழாமாதிரி போகுது. வீட்ல ஏகமரியாதை. இதெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கையைஇனிமே என்னாலநினைச்சுக் கூட பார்க்க முடியாது."- போதையில் வாய் தாறுமாறாக குழறியது பாலாவுக்கு.இனிமேல் அவனிடம் பேசிப் பயனில்லைஎன்றறிந்து கொண்ட ரகு அங்கிருந்துவெளியேறினான்.
********************************************************************************************************************************
"பத்மநாபன்,அடுத்த வருஷம் நடக்கப் போகிறதலைவர் தேர்தலில் நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுக்கணும். அடுத்த வருஷம் பஞ்சாப்லேர்ந்துவந்தா நல்லாருக்கும்னு மேலிடத்தில்பிரியப்படறாங்க"என்றார் முன்னாள் தலைவர்.
பத்மநாபன்கடுப்பானாலும் "இதுல நான் சொல்றதுக்குஎன்ன சார் இருக்கு நீங்கசொல்லி நான் மறுக்க முடியுமா?ஆனால் அடுத்ததேர்தலில் தென் மண்டலத்துக்குத் தானேவாய்ப்பு?
"அதுதெரியும் பத்மநாபன், ஆனால் அது உங்ககையில் இருக்குன்னும் தெரியும். நீங்க சொன்னா அவங்ககேட்காமலா போயிடுவாங்க?"
"உங்களுக்கேதெரியும், குழுவில் தென்னிந்தியாவிற்கு எப்பவோ ஒரு தடவைதான் வாய்ப்பு கிடைக்குது. மற்றபடி முழுக்க முழுக்கவட இந்திய ஆதிக்கம் தான்.மற்றபடி உங்க பேச்சை நான்மீற மாட்டேன்"
"ரொம்பநன்றி பத்மநாபன்"
போனை வைத்த பத்மநாபனின் முகம்கோபத்தில் சிவந்திருந்தது. மீற மாட்டேன் என்றுவாக்களித்திருந்தாலும் மனதளவில் அதை மீறுவதற்கான முயற்சிகளைமேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்.
ஆட்டம் தொடரும்....

Saturday, October 19, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 18

"ஆகவே, இந்திய கிரிக்கெட் குழு விளக்கம் கேட்டு அளித்துள்ள  நோட்டீசுக்கு திரு. லலித் அவர்கள் 10 நாட்களுக்குள் விளக்கமளிக்க  வேண்டுமென்றும் இந்த வழக்கை பொருளாதாரக் குற்றவியலின் கீழ் பதிவு செய்ய வலியிறுத்தியும் இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது" என்று தனது நீண்ட உரையை முடித்தார் டெல்லி  உயர்நீதி மன்ற நீதிபதி.

லலித் எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பத்மநாபனைப் பார்த்து புன்னகைத்தான். ஜாமீன் மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட பத்மநாபனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் வெளியே காட்டாமல் சமாளித்தார். லலித் வெளியே வந்தவுடன் பத்திரிகையாளர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர். கேள்விகள் பலவகையாக இருந்தாலும் அவற்றின் நோக்கம் ஒன்றாகவே இருந்ததால் எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டே காரை நோக்கி நடந்தான். காரில் ஏறுமுன் "கூடிய விரைவில் துரோகிகள் அடையாளம் காட்டப்படுவார்கள்" என்று கூறிவிட்டு காருக்குள் நுழைந்துகொண்டான்.

********************************************************************************

 "நீங்க இப்படி நடந்துக்குவீங்கன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கலை" என்று ரகுவைக் கடிந்து கொண்டான் மொஹிந்தர். முகத்தில் சாந்தம், ஆனால் கண்களில் கோபம்.

"பெட்டிங் தாம்பா பண்ணினேன். ஆனால் அவனுங்க வீரர்கள் கூட நேரடித் தொடர்புள்ள இருக்கானுங்க. எவன் அவங்களோட கூட்டுன்னு கண்டுபிடிக்கவே முடியலை. அந்த வெள்ளைக்காரன் அவங்க ஆள்னு நீ சொன்னதுக்கப்புறம் தான் தெரியுது."

"நீங்க ஒழுங்கா இருந்தாத்தான் அவங்களை கட்டுப்படுத்த முடியும்.  இது சக்ரவியூகம் மாதிரி. உள்ளே நுழையும்போது  சுவாரஸ்யமா இருக்கும். ஆனால் ஒரு தடவை மாட்டினீங்கன்னா மானம் போயிடும். ஜாக்கிரதை"

எல்லாம் புரியுதுப்பா, பார்த்துக்கலாம். நீ கூடத்தான் கேப்டனா இருந்துக்கிட்டு உன் கீழே ஆடறவங்களை உன் மார்கெட்டிங் நிறுவனத்தில் புக் பண்ணியிருக்கே, தார்மீக ரீதியா அதுவும் தான் தப்பு"

"அதுவும் இதுவும் ஒண்ணாங்க? நீங்க பண்றது துரோகம், சட்டப்படி குற்றம். நான் பண்றது சட்டத்துக்குப் புறம்பான விஷயம் கிடையாது. அப்படியே என்னை விசாரிச்சாலும் அதனால என்ன நஷ்டம் ஆச்சுன்னு யாராலும் நிரூபிக்க முடியாது.

"சரிப்பா, இனிமே பண்ணலை. மன்னிச்சிடு. போதுமா?"

"நீங்க மன்னிப்பு கேட்க வேண்டியது என்கிட்டே இல்லை. சென்னை மக்கள் கிட்ட. அந்த ராதே ஒரு ஓபன் டிக்கெட். எப்போ எந்த பக்கம் சாய்வான்னு சொல்ல முடியாது. நீங்க முதலாளி. நான் அதிகம் பேசக்கூடாது. பார்த்து நடந்துக்குங்க"

******************************************************************************

"இதோ பாருங்க ஷயன், நீங்க திறமைசாலி தான். ஆனால் உங்க நிர்வாகத்திறமை சரியில்லை. திடீர்னு பேட்டிங் வரிசையை எதுக்காக மாத்தினீங்க?"

"அது, ஆடுகளம் மற்றும் எதிர் டீம்ல இருந்த போலர்களை மனசில் வெச்சிக்கிட்டு அப்படி பண்ணினேன். ஆனால் அது நமக்கு எதிரா போயிடுச்சு."

"அதனால இப்போ நமக்கு தானே நஷ்டம்"

ஷயன் மௌனமாக இருந்தான்.

அதுவுமில்லாம நம்ம டீம் பசங்க சில பேர் மேல எனக்கு சந்தேகமா இருக்கு. பெட்டிங், பிக்சிங்க்னு பண்றாங்கன்னு நினைக்கறேன். நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க"

"என்ன சார் சொல்றீங்க?"

"ஆமாம்யா, அவங்க தொலைபேசி அழைப்புகளை ட்ரேஸ் பண்ண சொல்லியிருக்கேன், எவன் மாட்டுறான்னு பார்க்கலாம்"

******************************************************************************
பின் வந்த நாட்களில்...

நீதிமன்ற விசாரணைக்குப் பயந்து  லண்டன் சென்று ஒளிந்து கொண்டதால் லலித் எப்பொழுது இந்தியா வந்தாலும் கைது செய்யும் அதிகாரத்தை இந்திய கிரிக்கெட் குழு நீதிமன்றத்திடம் பெற்றுக் கொண்டதில் பத்மநாபனுக்கு ஏக சந்தோசம். அடுத்த தலைவர் பதவிக்கான  ஒரு முக்கியமான போட்டியாளர் ஆயிற்றே லலித்!!

வாக்கு அளித்தபடியே ராக்கியை திருமணம் செய்துகொண்டான் மொஹிந்தர். அவனுடன் கிசுகிசுக்கப்பட்ட அபிலாஷா போஸ் தான் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தினாள்.

6 மாதங்களுக்குப் பிறகு நடந்த சாதனையாளர் போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்றது. மக்களே முக்கியத்துவம் கொடுக்காத போட்டி என்பதால் டேவிட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

சாதனையாளர் போட்டியைத் தொடர்ந்து தென்னாப்ப்ரிக்காவிலும் தனது  வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தான் மொஹிந்தர். ஒரு நாள் போட்டிகளில் தோற்றாலும் டெஸ்ட் போட்டிகள் டிரா, T20 வெற்றி என பெயரைக் காப்பாற்றிக் கொண்டான்.

லண்டன் சென்ற லலித், அரசியல்வாதிகள் போல் அவ்வபொழுது பத்மநாபனுக்கு எதிராக அறிககைகள் விட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் துவங்க ஒரு மாதமே இருந்த நிலையில் பாகிஸ்தான்  வெளியுறவுச் செயலர் மரியாதை நிமித்தமாக இந்தியா வந்தார். போகுமுன் பத்திரிகையாளர்களை சந்திக்கையில் "பாகிஸ்தான் வீரர்கள் யாரும் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது" என எச்சரித்தார். ஆனால் வரும்போது வெறுங்கையுடன் வந்தவர்  போகும்போது பெட்டியுடன் சென்றார்.

ரகுவின் சூதாட்ட சமாசாரத்தைத் தெரிந்து கொண்ட நல்லகண்ணு அவனை மாட்டிவிட்டு அதன் மூலம் பத்மநாபனைப் பழிவாங்கக் காத்திருந்தார்.

ஏகப்பட்ட சொதப்பல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றுப் போனது. தனது கேட்சை ஏன் இவ்வளவு முறை தவறவிடுகிறார்கள் என்பது ஷயனுக்கு பெரும் புதிராகவே இருந்தது.

மொஹிந்தரின் கைவண்ணத்தில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது.

கோப்பையை வென்ற ஒரு வாரத்திற்குப் பிறகு தனது வீட்டில் (ஒரு மாறுதலுக்காக) உறங்கிக் கொண்டிருந்த ப்ரித்விக்குக் திடீரென குமட்டியது. கழிவறைக்குச் சென்றவன் தாங்கமாட்டாமல் வாஷ்பேசினில் வாந்தியெடுத்தான் - ரத்தமாக.

ஆட்டம் தொடரும்.....

Jayaraman
New Delhi

Thursday, October 17, 2013

Sachin Tendulkar - A Nonpareil genius

Sachin Tendulkar

– thought of many titles for this article, but could never do justice for it to meet the great man’s contribution


Well so here we are, at a juncture where we all knew one day we will eventually reach (sadly so). As much as it is hard to say goodbye to “The Greatest student” of the gentleman’s game, it is important to savoir every bit of joy he gave us! The 2 greatest pupils of the game have chosen this year (2013) to bid adieu and experience life off it (Sachin and Dravid). While Dravid’s exit was emotional and heavy, Sachin’s feels gruelling to say the least. After all for a major part of his career, Indian team was only as good as how good a form he was in. We are in a country where Cricket is like a religion without a doubt and so it is quite natural to feel sad that Sachin is retiring. Like in the “Master card” advertisement they say – “there are things that money can’t buy”, one such precious treasure is Sachin who could never be bought over by anything else but just his sheer joy for being on the field.

Sachin is cricket’s Ryan Giggs about whom Sir Alex Ferguson mentioned – “he played like a man when he was a boy and now he plays with a boy’s passion when he is a man”. Tendulkar showed maturity beyond his age when he started his career and has always been a step ahead of everyone else around him ever since.


What do I remember Sachin for? The numbers, they tell a story don’t they? But as good a picture the numbers tell, its only his contributions peripheral to the statistics that are more romantic and essential. The way he made millions of kids rush to the stadium to watch test cricket, the way he brought an entire nation to a standstill whenever he batted, the mega serials which for once took backstage when Sachin was at the crease, the modesty he taught all of us while he represented millions of his countrymen, he made us cry, he brought joy to all of us, he made everyone believe that it is possible to play hard tough cricket and still remain a gentle sportsman, and so on. It seemed like forever he carried the hopes of an entire nation on his shoulder until the time Saurav, Rahul, Sehwag and Laxman gratefully agreed to share and let him entertain the cricketing world with freedom. While his days of burden were adventurous, his days of freedom have been sumptuous!


Which are the innings I remember of Sachin’s?
1.    The first one that comes to my mind is the 169 he scored against SA at Capetown just for his sheer arrogance in stroke play and yet maintaining a beautiful shape while playing them.
2.    Who can forget the back-to-back hundreds he scored at Sharjah against the Aussies. Tony Greig’s words still ring through my ears “Oh it’s gone high, it’s on the roof. What a player! What a wonderful player!!” Individual brilliance that won India the tournament.
3.    The 150 he scored at Chennai where he just counter-attacked Shane Warne like no one ever had done before.
4.    Another 155 he scored against SA at Bloemfontein where in the process he also introduced Sehwag to this world.
5.    115 at Perth which in the words of Ian Chappell is the best he ever saw anyone ever played.
6.    There are just so many of them, but to me these are the very best of his I can list down. Others will include the 193 at Headingley, 95 at Trent Bridge the match prior to that (to help India draw the match), 98 against Pakistan at Centurion (2003 World Cup) and the list will go on.


Like how the TV quiz hosts play a game which is like “I tell you a word and you tell me a relative word in reply” (something similar to the top of the mind recall as illustrated by Philip Kotler), what is that one word(s)/phrase that would strike our minds when we hear Sachin?
  1. -          Humble giant?
  2. -          Modest gladiator?
  3. -          Exemplary professional?
  4. -          Epitome of discipline?
  5. -          An emissary sent by the gods to enrich the world of sport?
  6. -          Wow or is it “All of the above”?

The answer is “everything good about being a professional is all Sachin is about”.
Mathew Hayden said in 2003 when India toured Australia – “it feels like I am attending a class room session on batsmanship while I am standing at the slips watching Sachin, VVS and Rahul bat”.

100 international hundreds - Very good players go on to make 20-30 test hundreds in their career, think of a 100 international hundreds!! Just let those numbers ring softly through your ears (100 hundreds), and it would feel like the most commendable feat and so it is. This does not make Sachin any greater just because he has scored this feat, but what it will do is put him up on the list that will include only himself ever.

Sachin has had Lara, Ponting amongst other greats play in the same era as his. While everyone felt Ponting can go on to beat Sachin’s records (numbers), you could never relate to a Ponting as how great a sportsman Sachin is. Like how a decade from now when AB Devilliers and Virat Kohli will go on to have exceptional records for their respective countries, AB will surpass Virat in terms of being a better sportsman (by the looks of it). When Sachin was put under the ugly “Ball tampering” radar and eventually cleared off saying he is innocent, Kapil Dev spoke to the media saying - “nobody can give back Sachin the 2 painful days he would have gone through”. Probably it was only destiny that Gods decided to showcase the world that he is after all human, for him to go through these bad phases in what has proven to be the cleanest career ever known.

Sir Harold Dickie Bird said “in terms of the technique Sachin’s is the best”. This came from a man who witnessed players like Sir Gary Sobers and Sir Viv Richards. Now that’s the USP Sachin has had all through his career. In being an aggressive stroke maker he never lost his balance and foot work. This enabled him to play aggressively even when the conditions were daunting, he would just keep out all the good balls with his solid technique. I have seen this ability in Inzamam when it felt like he had a day’s time to play every delivery because of his footwork.

2011 world cup victory – If Sachin did not get to lift the world cup even once during his career, it would have been the most incomplete story in the history of sports ever. Destiny had it written and so it came. I was moved when on the next day at a press interview, Kapil Dev broke down to tears while expressing his satisfaction for Sachin. You could see the happiness in the man who helped shape Sachin’s early days in international cricket. It was only fitting that it happened at a time in his career when he could afford to play with freedom and not when he was over burdened (1st half of his career). This allowed him to savoir the achievement and the satisfaction derived from it.

Indian Premier league: IPL has not proven to be a successful venture for Sachin however, watching him play all these seasons I almost felt that he was playing himself down. It was evident that when he chose to get hard on, even Steyn could not get through his defences. Such is this great man’s prowess that he simply is the best at whatever he does on the cricketing field with passion.

The Legacy that Sachin leaves behind  -- for the current generation of cricketers, it is never about the amount of runs they make or the number of wickets they take. It is the way they carry themselves as ambassadors of the game that will be essential. The story of Sachin, Dravid, Chanderpaul, Hussey leaves these current crop of players with the path which is laid for them to excel at their own pace and capture the hearts of millions of true sports lovers around the world.

It’s only fair to say that it has been a wonderful journey which has really entertained and enriched people along the way. Sports psychologists say “Sport uplifts people” and how true has it been in this case? Not just his own life but it really has uplifted the life of a cricketing purist like me to have followed his career all the way. Feel like telling him – “If there’s anyone who deserves a break after a strenuous journey, it’s you Sachin. You have earned this right to retire with the entire cricketing world pouring their respect for your acheivements!!”.

Sunday, October 6, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 17

மூன்றாம் ஆண்டு இறுதிப் போட்டி - சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு  இடையே இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கிறது.

சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. மொஹிந்தர் ஆடுகளத்தைப் பற்றியும் வெளிவட்டத்தைப் பற்றியும் வழக்கம்போல் ஆங்கிலத்தில் ரீல் விட்டுக் கொண்டிருந்தான். ஷயன் "எங்கள் ஊர்" அட்வான்டேஜ் இருப்பதால் எப்படியும் ஜெயிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தான்.

*********************************************************************************


ராதேவின் போன் ஒலித்தது. எதிர் முனையில் குருஜி.

"சொல்லுங்க குருஜி"

"எல்லாரும் ரெடியா?"

"பக்காவா"

சென்னை குறைந்தபட்சம் 10 பைசா, மும்பை 15 பைசா (லட்சம்)

"ஒகே ஜி"

ராதே தனது மினி தொலைபேசி இணைப்பகத்தின் மூலம் பிற புக்கிகளையும், பெரும்புள்ளிகளையும் தொடர்புகொண்டு மேற்குறிப்பிட்டது போல் பந்தயப்பணத்தை சேகரிக்க ஆரம்பித்தான்.

*********************************************************************************

டாஸ் போட்டுவிட்டு டிரெஸ்ஸிங் அறைக்கு வந்தான் மொஹிந்தர். வாசலில் ரகு நின்றிருந்தான்.

"என்ன ரகு இங்க நிக்கறே? வழக்கம் போல உன் ராசியான இடத்தில் போய் நில்லு"

"இதோ போறேன், மறுபடியும் பைனல்ஸ் வந்திருக்கோம். அதான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு"

"அதெல்லாம் கவலைப்படாதே. ______கட்டி மலையை இழுப்போம்.  வந்தா மலை, போனா _____ - அவ்ளோ தான் நம்ம கொள்கை, வர்ட்டா?"

"சரி நான் போறேன், எதாச்சும் புதுசா ப்ளான் பண்ணியிருக்கியா?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை, அதே அதே சபாபதே"

"ஆல் தி பெஸ்ட்"

"தேங்க்ஸ்"

போட்டி தொடங்கியது. 

*********************************************************************************
5 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 29 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் இழப்பு எதுவும் இல்லை.

ரகு ராதேவை தொலைபேசியில் அழைத்தான். "நீங்க சொன்ன மாதிரி ஒண்ணும் நடக்கலியே? கண்டிப்பா நாங்க தானே ஜெயிக்கறோம்?"

"அதுக்குள்ளே சந்தேகமா? விட்டுத் தான்யா புடிக்கணும்"

*********************************************************************************

7வது ஓவர்.

இலங்கை வீரர் வீசிய பந்தை அடிக்கப் போய்  மிக எளிதாக கேட்ச் குடுத்து வெளியேறினான் துவக்க ஆட்டக்காரர் கிருஷ்ணன். அடுத்து விளையாடக் களம் இறங்கிய ரமேஷ் "என்னடா, பழம் மாதிரி அவுட் ஆயிட்டே" என்று கிருஷ்ணனைத் திட்டிக் கொண்டே ஆடுகளத்தை நோக்கி ஓடினான். ஆட்டம் துவங்கியது - உள்ளேயும் வெளியேயும்.

ரமேஷின் கேட்சை இரண்டு முறை தவறவிட்டது, 2வது விக்கெட்டுக்கு முருகன் வருவானா மொஹிந்தர் வருவானா, எலும்புமுறி வீரரின் பந்தில் மொஹிந்தர் சிக்ஸர் அடிப்பானா மாட்டானா, சென்னை அணி 150க்கு மேல் எடுக்குமா அல்லது 200 தாண்டுமா - இப்படி அடுக்கடுக்காக எல்லோரும் மாற்றி மாற்றி பணத்தால் விளையாடிக் கொண்டிருந்தனர். சென்னை-மும்பை-ஜெய்ப்பூர்-பரோடா-புனே-டெல்லி-சிம்லா-லாகூர்-கராச்சி என்று தொலைபேசி அழைப்புகள் பறந்தவண்ணம் இருந்தன. தேவைக்கதிகமாக பணம் இருந்தாலும் மனிதர்கள் அலை பாய்வதும் கரை புரள்வதும் புரியாத புதிராக இருக்கிறது.

ஒரு வழியாக சென்னை அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வெற்றி பெற மும்பைக்கு 169 ரன்கள் எடுக்க வேண்டும் - ஆட்ட இடைவேளை

*********************************************************************************

"யோவ் ராத்தோர், நாடு முழுக்க பெட்டிங் கால்ஸ் மும்பை மூலமா பறக்குது. புடிச்சு உள்ளே போடாம வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கியே?" என்று போனில் பாய்ந்தார் டெல்லி கமிஷனர் அஜய்.

"என்னங்க பண்றது? எல்லாம் பெரிய இடம். தலைவர் இப்போதைக்கு வேடிக்கை மட்டும் பார்க்கச் சொல்லியிருக்கார்"

"யாரு? பழைய தலைவரா?"

"ஆமாம், ஆமாம்"

அந்த ஆளுக்கு மட்டும் எப்படி இவ்ளோ பவர்? அதுவும் பதவியில் இல்லாதபோதும்?

"நீங்க வேற, டெல்லி மருமகன் குடுமியே அவர் கையில் தான் இருக்கு. அதனால தான் விவசாயம் சம்பந்தமா அவர் எடுக்கற முடிவுகளை மத்திய அரசு தடை பண்றதே இல்லை."

"அவனுங்கெல்லாம் அப்படித்தான் சொல்வாங்க. நாம தான்யா அதிரடியா எதாச்சும் செய்யணும். எதாவது எக்குத்தப்பா நடந்தா மன்னிப்பு கேட்டுக்க வேண்டியது தான். 10 வருஷத்துக்கு முன்னாடி தென்னாப்பிரிக்காவில் நாங்க பண்ணலை? "

"அப்போ டெல்லியிலும் மத்தியிலும் ஆட்சி ரோஜாக் கட்சி கிட்ட இருந்தது. அவங்க யாருக்கும் அதில தொடர்பு இல்லை. அதனால புகுந்து விளையாடினீங்க. இப்போ அப்படியா?"

"நீ சொல்றதும் சரி தான். இப்போ எவன் எங்க திருடறான், யாருக்கு யார் கூட லிங்க் இருக்குன்னே சொல்ல முடியல"

"எங்க போயிடப் போறானுங்க? என்னிக்கு இருந்தாலும் நம்ம கிட்ட அடியும் கொஞ்சம் களியும் வாங்கித்தான் ஆகணும். பாப்போம்"

********************************************************************************
"நான் என்னங்க பண்ணட்டும்? கடைசி ஓவர் கேட்டு வாங்கிப் போட்டேன். நானும் எவ்ளோ தான் வைடா போடறது? போதாக்குறைக்கு தாறுமாறா ஓடி ரன் அவுட் வேற ஆகறாங்க. இல்லேன்னா நீங்க சொன்ன மாதிரி 3 சிக்ஸ் கண்டிப்பா குடுத்திருப்பேங்க, என்னை நம்புங்க" என்று யாரிடமோ போனில் மன்றாடிக் கொண்டிருந்தான் மும்பை பௌலர் லலித் கலிங்கா

********************************************************************************

"நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன், ஒரே படபடப்பா இருக்கியே? என்ன விஷயம்?" என்று ரகுவைப் பார்த்துக் கேட்டான் மொஹிந்தர்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. பைனல், ஸ்கோர் வேற கம்மி, அதான்..."

"நானெல்லாம் பத்தாம் கிளாஸ்ல பெயில் ஆனதுக்கே அசரலை. இது ஆப்டர் ஆல் கிரிக்கெட் மேட்ச், இதுக்குப் போய் இப்படி அலட்டிக்கறே?"

உனக்கென்ன? கூலாத்தான் இருப்பே, நான் தானே பணம் போட்டிருக்கேன்"

"நம்ம நட்பின் காரணமாக் கேட்டேன், சீரியஸா எடுத்துக்காதே.சரி, போன்ல யார்கிட்ட அடிக்கடி பேசிக்கிட்டிருந்தே?

" பாரு மீட்டிங் போயிருக்கா, அதனால அவளுக்கு லைவ் ஸ்கோர் சொல்லிக்கிட்டிருந்தேன்..."

"அப்படியா? அப்போ அங்கே  உட்கார்ந்திருக்கறது யாரு..?" என்று எதிரே கை காட்டி விட்டு கையுறைகளை எடுத்துக் கொண்டு மைதானத்தை நோக்கி விரைந்தான் மொஹிந்தார்.

மொஹிந்தர் கை காட்டிய திசையில் பாரு தன் பிள்ளைகள் மற்றும் நண்பர்களுடன் கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தாள். ரகுவுக்குக் குப்பென்று வியர்த்தது.

*******************************************************************************

"பாய், சென்னை மேல எக்கச்சக்கமா பணம் புக் ஆகியிருக்கு" என்றார் குருஜி.

"அப்போ வழக்கம் போல கவுத்திட வேண்டியது தான். முதல் ஓவர் அந்த வெள்ளைக்காரன் தானே போடப் போறான்?"

"ப்ளான் படி அவன் தான்"

"ஓகே ஓகே."

இவர்கள் எல்லோரிடமும் தொடர்புடையவர்கள். குறிப்பிட்ட ஒரு நபரை மட்டும் நம்புவதில்லை.

*******************************************************************************

இடைவேளைக்குப் பின் ஆட்டம் துவங்கியது.

சேகர் பந்தை எதிர்கொள்ளத் தயாராக இருந்தான். எதிர் முனையில் ஷயன். ஆனால் பந்து வீச வந்ததோ தமிழகத்தைச் சேர்ந்த அசோகன்.

"ஏன் இப்படி பண்றான்" என்று ரகு யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவன் போன் அலறியது. எதிர் முனையில் பாலா.

"டேய், இப்போ திடீர்னு மும்பை ஜெயிக்கணும்னு சொல்றாங்கடா"

இன்னொரு லைனில்  இருந்த ராதே "ரகு சாப், இங்க நிலைமை மாறிடுச்சு. அதனால நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுத்துத் தான் ஆகணும். நீங்க பைனல் வரைக்கும் வர்றதுக்கு நாங்க நிறைய தடவை உதவி பண்ணியிருக்கோம். நன்றி மறக்காதீங்க.

"அப்படியெல்லாம் பண்ணாதீங்க ராதே, எங்களை ஜெயிக்க வைப்பீங்கன்னு தான் இவ்ளோ முயற்சிகளும் பண்ணினோம். இப்போ திடீர்னு பாய் மும்பை ஜெயிக்கணும்னு சொல்றார்னு சொல்றீங்க. அதெல்லாம் முடியாது" என்று கடுப்புடன் சொன்னான் ரகு.

"அதெல்லாம் பாயோட கணக்கு. உங்களுக்குப் புரியாது. சொன்னப்படி செய்ங்க" என்று போனை படக்கென்று வைத்தான் ராதே.

"என்னடா இப்படிச் சொல்றான்?" என்றான் ரகு.

"இதெல்லாம் சகஜம்டா. மக்கள் எந்த டீம் மேல பெட் அதிகமா கட்டறாங்களோ இவங்க அதுக்கு எதிரா போவாங்க. உள்ளே புகுந்து நம்மளை மாதிரி ஆளுங்களைப் புடிச்சு பிக்சிங் பண்ணி அப்படியே மேட்சை கவுத்திடுவாங்க. அப்போ தானே அவங்க சம்பாதிக்க முடியும்?"

"சேம் சைட் கோல் போடச் சொல்றே?" வெறுப்பாகச் சிரித்தான் ரகு.

"அதுக்குப் பேர் தான்டா பிக்சிங்"

*******************************************************************************

10 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை அணி 58 ரன்கள் எடுத்திருந்தது.

"என்ன பாய், போக்கே சரியில்லையே?" என்றார் குருஜி.

"அதான் பார்க்கறேன். இந்த மொஹிந்தர் பய ஏதோ பண்றான்"

*******************************************************************************

15 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை 5  விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள்  எடுத்திருந்தனர்.

ரகுவின் அலைபேசியில் ராதே. "ரொம்ப பண்றீங்க ரகு. ஒரே ஓவர்ல 2 விக்கெட்"

"ராதே, ப்ரேக் டைம்ல கூட அவன் கிட்ட பேச்சு குடுத்துப் பார்த்தேன். எதுவும் சொல்ல மாட்டேங்கறான். என் கட்டுப்பாட்டில் இப்போ எதுவும் இல்லை. இனிமே போன் பண்ணாதீங்க" என்று அழைப்பைத் துண்டித்தான் ரகு.

*******************************************************************************

பாக்ஸில் அமர்ந்து மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் எழுந்து கழிவறையை நோக்கிச் சென்றான். போகிற வழியில் உதவியாளரை பின் தொடருமாறு சைகை செய்தான்.

"சொல்லுங்க ஐயா"

"மேட்ச் போற போக்கு சரியில்ல. நாம ஜெயிக்கறது கஷ்டம். காஞ்சிலால் கிட்ட சொல்லி பணத்தை சென்னை மேல திருப்பிடச் சொல்லு."

"ஐயா, நம்ம தகுதிக்கு இது ஒண்ணும் பெரிய இழப்பு இல்லீங்களே?"

"சிறு துளி பெருவெள்ளம். இந்த மாதிரி சின்ன நஷ்டங்கள் நாளைக்கு பெரிய இழப்பாகிடும்"

"இருந்தாலும்..."

"சொல்றதை செய்ங்க"

*******************************************************************************

அதே பாக்ஸில் இன்னொரு பகுதியில் அமர்ந்திருந்த லலித்தின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்திருந்தது. எடுத்துப் பார்த்தான்.

"நாளை கைது. தயாராக இருக்கவும்". அனுப்பியவர் பத்மநாபன்.

*******************************************************************************

18வது ஓவர். வெள்ளைக்காரன் பௌலிங் போட வந்தான். பேசியபடியே 18 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிவிட்டுச் சென்றான். ரகுவிற்கு மனதில் வருத்தம். ஆனால் வெளியே பெருமூச்சு விட்டான். வெற்றியை விட உயிர் முக்கியமாயிற்றே!!!

*******************************************************************************

கடைசி ஓவர். வெற்றி பெற மும்பைக்கு 27 ரன்கள் வேண்டும். மீண்டும் வெள்ளைக்காரன் பௌலிங் போட வந்தான். மொஹிந்தர் அவனருகே ஓடிச் சென்றான். பிறகு ரகசியமாக, "எவ்ளோ கேவலமா வேணாலும் பௌலிங் போட்டுக்கோ, நான் தான் ஜெயிக்கப் போறேன்" என்று ஸ்திரமாகக் கூறிவிட்டு மீண்டும் பொசிஷனுக்கு வந்தான். வெள்ளைக்காரனுக்குப் புரிந்தாலும் புரியாதது போல் முழித்தான்.

*******************************************************************************

ஆட்டம் முடிந்தது.  சென்னை வெற்றி பெற்றது. பரிசளிப்புகள் துவங்குமுன் லலித் மரியாதை நிமித்தமாக பேச வந்தான். அவன் பேசிய பேச்சு கடைசி நாள் பேச்சு போல தொனித்தது.

கொண்டாட்டங்கள் துவங்கின. கார், பைக், ரொக்கம் என வீரர்கள் பரிசுகளை அள்ளினர். ரமேஷ் ஆட்ட நாயகனாகவும் ஷயன் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப் பட்டார்கள்.



ஆட்டம் தொடரும்...

Monday, September 30, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 16

லலித் தலைவரின் அறைக்குள் நுழைந்தான். இவர் புதிய தலைவர். யார் பதவிக்கு வந்தாலும் தனது கைக்குள் போட்டுக் கொள்வது பத்மநாபனுக்குக் கை வந்த கலை. அதே போல் இவரையும் தன் வசம் வைத்திருந்தார்.

பத்மநாபன் தன் கையில் இருந்த பைலை பரபரப்புடன் மெதுவாகத் தட்டிக் கொண்டிருந்தார். தலைவர் தனது மூக்குக் கண்ணாடியைத் தாழ்த்தி மடிக் கணினியில் எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.

லலித் உள்ளே நுழைந்தான். "என்ன சார் விஷயம்?, அவசரமா வரச் சொன்னீங்க?"

தலைவர் மூக்குக் கண்ணாடியைக் கழட்டி கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே பத்மநாபனுக்கு கண்களால் சைகை செய்தார். பத்மநாபன் தன் கையில் இருந்த பைலை லலித்தின் முன் நீட்டினார்.

"என்ன சார் இது?"

"பாருங்க, எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம் தான்"

பைலைப் புரட்டிய லலித்திற்கு ஒரு வினாடி திக்கென்று இருந்தது. காரணம், அதில் அவன் தென்னாப்பிரிக்காவில் இருந்து லண்டனுக்கு மேற்கொண்ட பயண விபரங்கள், மில்லியன் கணக்கில் டாலர் மற்றும் யூரோக்களில் செய்யப் பட்ட பணப் பட்டுவாடா, லண்டன் மையப் பகுதியில் அவன் வாங்கிய பல கோடி மதிப்புள்ள இடம், பிரீமியர் லீகின் தொலைக்காட்சி உரிமையை சன்னி தொலைகாட்சிக்கு வழங்கியதில் பினாமி நிறுவனம் மூலம் சம்பாதித்தது, மேலும் ராஜஸ்தான் அணியில் பல்வேறு பெயர்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் என அவன் செய்த ஒட்டு மொத்த லஞ்ச லாவண்யத்தின் கண்ணாடியாக அந்த பைல் காட்சியளித்தது.

பத்மநாபன், "என்னய்யா இதெல்லாம்?"

லலித்திற்கு உள்ளுக்குள் வேர்த்தது. இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் "அதையே தான் நானும் கேட்கிறேன், என்ன இதெல்லாம்? இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது"

தலைவர், "பஸ்ல ப்ளேடு போடறவன் கூட இந்த பதில் தான் சொல்வான். என்கிட்டே கொஞ்சம் சிடிக்கள் இருக்கு. அதில் நீ லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கியது, நீ போன இடங்கள், சந்தித்த நபர்கள், கையெழுத்துப் போட்ட காகிதங்கள் சம்பந்தமான கண்காணிப்பு கேமிரா பதிவுகள் இருக்கு. பார்க்கறியா?

இனி மறைக்க ஒன்றுமில்லை என்று தெரிந்துகொண்ட லலித், "இப்போ என்ன சொல்றீங்க? வழக்கம் போல் உங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கோங்க. அவ்ளோ தானே?"

"அது அப்புறம், எங்ககிட்ட ஏன் முதலிலேயே சொல்லலை? இதெல்லாம் உள்துறை அமைச்சகம் எங்களுக்கு அனுப்பினது. இப்போ எங்களால உன்னை காப்பாத்தவும் முடியாது"

"இதெல்லாம் அந்த சசிதரன் வேலையாத்தான் இருக்கும். அவனோட கேரளா அணியை நான் இன்னும் முழுசா கிளியர் பண்ணலை. அந்தக் கடுப்புல பண்ணியிருக்கான்"

"கிளியர் பண்ண வேண்டியது தானே?"

"அது எப்படிங்க முடியும்?  இன்னும் முறையா குடுக்க வேண்டிய வங்கி ஆவணங்களே முழுசா வந்து சேரலை. அது வராம குடுக்கறது சரியில்லைங்க. அது மட்டுமில்லை, அந்த கேரளா அணி சரியான சொத்தை, மக்களைக் கவர்கிற மாதிரி பெரிய வீரர்கள் யாரும் கிடையாது. கொச்சினை தவிர்த்து வேற எங்க மேட்ச் ஆடினாலும் அதை ஒரு மதராசி டீமாத்தான் பார்ப்பாங்க. கிரௌண்ட் வருமானம் சுத்தமா வராது."

உனக்கெதுக்குய்யா அந்தக் கவலையெல்லாம்?

"எனக்கு நம்ம வருமானம் பற்றிய கவலை இருக்கு சார். ஒவ்வொரு பந்துக்கும் நான் லாபக் கணக்கு போட்டு வெச்சிருக்கேன்"

"அப்போ நீ கையெழுத்து போடலேன்னா அந்த டீம் விளையாட முடியாதா?"

"கண்டிப்பா, நான் லீக் கமிஷனர், எனக்கு எல்லா அதிகாரமும் இருக்கு"

"நீ சொல்ற லீகே நம்ம வாரியத்தின் சொத்து தான். அதை மறந்துடாதே"

"இத பாருங்க, முழு லாபத்தோட போட்டிகளை நடத்த வேண்டியது என் பொறுப்பு. அதுக்காக என்னோட உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. கடந்த 3 வருஷத்துல என்னால வாரியத்துக்கு பல கோடி ரூபாய் லாபம். அந்த அளவுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் போட்டிருக்கேன்"

பத்மநாபன்,"என்னய்யா, திடீர்னு ரொம்ப நல்லவன் மாதிரி பேசறே? அப்போ நீ செஞ்ச எதுவும் தப்பே இல்லைன்னு சொல்றியா? நீ முதலீடு பண்ணியிருக்கறது எல்லாம் வாரியத்துக்கு வர வேண்டிய பணம்"

"யார் தான் தப்பு பண்ணலை? உங்க மருமகன் கூடத்தான் சூதாடறான்"

"அப்போ நீ உன் தங்கச்சி பையன் கூட சேர்ந்துக்கிட்டு பண்றியே, அதுக்கென்ன பேரு? பெட்டிங், பிக்சிங் தனி நபர் சம்பந்தப்பட்டது. அதுல ஏமாந்து போறது ஜனங்க தான். ஆனா இது அப்படியில்ல"

லலித் கடுப்பாகி, "முடிவா என்ன தான் சொல்றீங்க? இவ்ளோ நாள் சம்பாதிச்சு குடுத்தேனே, அதுகெல்லாம் எனக்கு என்ன குடுத்தீங்க? நான் லண்டன்ல பண்ணியிருக்கற முதலீடு கூட நம்ம லீகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கிட்டு போகற ஒரு முயற்சி தான்"

பத்மநாபன்,"அதுக்கு ஒப்பந்தங்களை வாரியத்தின் பேர்ல பண்ணியிருக்கணும். உன் பேரிலும், உன் பொண்டாட்டியோட முதல் பொண்ணு பேரிலும் பண்ணியிருக்கக் கூடாது?"

லலித் மேலும் உஷ்ணமாகி, "தலைவரே, பேச்சு உங்களுக்கும் எனக்கும் தான். இவர் ஏன் குறுக்கில் வர்றார்"

பத்மநாபன் டேபிளைக் குத்தியபடியே எழுந்து," நான் செயலாளர், எனக்கு கேள்வி கேட்கிற உரிமை இருக்கு" என்று உச்சஸ்தாயியில் கூறினார்.

தலைவர் குறுக்கிட்டு, "முதல்ல இரண்டு பேரும் அமைதி ஆவுங்க, தண்ணி குடிங்க"

இருவரும் சற்று ஆசுவாசப்பட்டவுடன் தலைவர் தொடர்ந்தார். "இத பாரு லலித், இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது. ஏன்னா அந்த ஆள் FERA வரைக்கும் உன் மேல கேஸ் போட்டுட்டான். பேசாம ராஜினாமா பண்ணிட்டு லண்டனுக்கே போயிடு. குறைந்தபட்சம் உன் முதலீடுகள் காப்பாற்றப்படும்".

லலித் புருவத்தை உயர்த்தி, "இல்லேன்னா?"

பத்மநாபன், "சட்டம் கடமையைச் செய்யும்"

"அந்த அளவுக்குப் போயாச்சா? அப்போ நான் மீடியாவுக்குப் போறேன். எல்லார் பற்றியும் சொல்றேன்"

தலைவர் சிரித்தவாறே, "என்ன லலித், இவ்ளோ வெள்ளந்தியா இருக்கீங்க? மக்கள் இன்னிக்கு நீங்க குடுக்கற பேட்டியை உண்மைன்னு நம்புவாங்க. நாளைக்கு நாங்க குடுக்கற பதிலடியையும் நம்புவாங்க. அவங்களைப் பொறுத்தவரைக்கும் டிவியில் காட்டறது தான் செய்தி. உண்மை என்னன்னு அவங்களுக்கு எப்பவுமே எந்த விஷயத்திலும் தெரியாது. வாரியம் சொல்றபடி கேட்கற வரைக்கும் தான் உங்களுக்கு இந்த பதவி, மரியாதை எல்லாம். ஒரு நாளும் நீங்க இதுக்கு எதிரா போகவே முடியாது. போனா நஷ்டம் நமக்குத் தான் - இது எங்களுக்கும் பொருந்தும்."

லலித் இருக்கையிலிருந்து எழுந்தான். "என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. உங்களால ஆனதைப் பார்த்துக்கோங்க" என்று கூறி அறையை விட்டு வெளியேறினான்.

பத்மநாபன் தலைவரைப் பார்த்தார். தலைவர், "இனி பேசிப் பிரயோஜனமில்லை, தூக்கிடுங்க"

****************************************************************************

இடம் - நல்லகண்ணுவின் வீடு. நெடு நாள் நோய்வாய்ப்பட்டிருந்த அவரது மகள் செல்வி இறந்து விட்டாள். பாரு செல்வியின் தோழி என்பதால் கணவன் ரகுவுடன் துக்கம் விசாரிக்க வந்திருந்தாள்.

இருவரையும் பார்த்த நல்லகண்ணு கடுங்கோபத்துடன், 'எங்க வந்தீங்க? அதான் இவ்ளோ வருஷம் படுக்கவெச்சு இப்போ பாடையிலேயும் ஏத்திட்டீங்க, இன்னும் என்ன பாக்கி இருக்கு?"

ரகு,"ஐயா, இன்னமும் பழசையே நினைச்சிக்கிட்டிருந்தா எப்படி? நடந்த தவறுக்கு நாங்க நிறைய தடவை உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுட்டோம். வேணும்னா இங்க எல்லார் முன்னாடியும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கறோம்"

"சீ, நீங்க எவ்ளோ தடவை மன்னிப்புக் கேட்டாலும் என் பொண்ணு ஆத்மா சாந்தி அடையாதுடா. முதல்ல இங்கேர்ந்து வெளிய போங்க"

இருவரும் வாசலை நோக்கிச் செல்லும்போது, "பாரு, என் பொண்ணை நெருப்புக்குக் குடுத்துட்டு நீ மட்டும் உன் புருஷன் குழந்தைகளோட சந்தோஷமா ரொம்ப நாள் வாழலாம்னு நினைக்காதே, ஆண்டவன் ஒருத்தன் இருக்கான், மறந்துடாதீங்க" என்று சாபம் விடாத குறையாக கத்தினார் நல்லகண்ணு.

வீடு திரும்பும் வழி முழுவதும் பாரு கலக்கத்துடனே இருந்தாள். ரகு மீதிருந்த சந்தேகமும், அவனின் அரசால் புரசலான சூதாட்டத் தொடர்புகளும், நல்லகண்ணுவின் சாபம் கலந்த வயிற்றெரிச்சலும் அவளுக்குள் புயலடிக்க ஆரம்பித்திருந்தன.




ஆட்டம் தொடரும்.....

Jayaraman
New Delhi

Saturday, September 28, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 15

பணம் பத்தும் செய்யும். பணம் பாதாளம் வரை பாயும் - இது பழமொழி. ஆனால் பிரீமியர் லீகில் தொடர்புடையவர்கள்  அந்தப் பணத்துக்காக பாதாளம் வரை பாயத் தயாராக இருந்தார்கள். முதல் போட்டி தந்த பணம், புகழ், கவர்ச்சி, விளம்பரம் அனைவரையும் திக்குமுக்காட வைத்தது. இந்திய ரசிகனின் கிரிக்கெட் வெறியும், கிரிக்கெட் மீது அவன் கொண்டிருந்த / கொண்டுள்ள காதலும் மோகமும் பண முதலைகளை மேலும் சம்பாதிக்கத் தூண்டின. முடிந்தவரை எல்லா போட்டிகளையும் "த்ரில்" வெற்றியாக்கி ரசிகர்களின் ரத்தத்தைச் சூடேற்றினர்.

பணம் வந்தாலே மனிதன் மாறிவிடுவான். இதில் புகழும் சேர்ந்து வந்தால் கேட்கவா வேண்டும்?

உளவு பார்க்க வந்த லாஜ்வந்தி மொஹிந்தருடன் ஏற்பட்ட கிசுகிசுவையும் ரகுவின் சினிமாத் தொடர்புகளையும் பயன்படுத்தி இரண்டு திரைப்படங்களில் கதாநாயகி வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாள். இப்பொழுதெல்லாம்  ராத்தோரின் தொலைபேசி அழைப்புகளை அவள் சட்டை செய்வதே இல்லை.

முன்னாள் தலைவர் நல்லகண்ணு தன் மீது போட்ட நன்னடத்தை வழக்கை தவிடுபொடி ஆக்கியதோடு மட்டுமல்லாமல் வாரியத்தின் செயலாளர் பதவிக்கும் முன்னேறினார் பத்மநாபன்.

10-12 வருடங்களுக்கு முன்னால் நல்லகண்ணுவின் மகளுக்கு பத்மநாபனின் மகனை திருமணம் செய்து வைப்பதாய் முடிவு செய்திருந்த நிலையில் அதை கடைசி நேரத்தில் தடை செய்தார் பத்மநாபன். அந்த அதிர்ச்சியில் நல்லகண்ணுவின் மகள் பக்கவாதத்தில் விழுந்துவிட்டாள். இன்னமும் எழுந்த பாடில்லை. தன் மகள் வாழ்க்கையை நாசம் செய்த பத்மநாபனின் நிம்மதியை முடிநத அளவு குலைக்க வேண்டுமென்று சபதம் எடுத்துக் கொண்டார் நல்லகண்ணு. அதன் விளைவே அவர் மீதான தொடர் வழக்குகளும் கோர்ட் படி ஏறல்களும்.

தன் மகன் ஒரு ஓரினச் சேர்க்கை விரும்பி என்பதையும் அவன் தனது ஓரின நண்பனுடன் தாய்லாந்து சென்று போலீஸ் ரிமாண்ட் ஆனதையும் பத்மநாபனால் எப்படி பகிரங்கமாகச் சொல்ல முடியும்? நல்லகண்ணுவின் மகளைக் காப்பாற்ற வேண்டி அவர் எடுத்த முடிவால் அந்தப் பெண்ணிற்கு இப்படி ஆகிவிடும் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாகிவிட்டதே என்ற குற்ற உணர்ச்சி இன்றும் அவருக்கு உண்டு.

கணவன் ரகு மீது சந்தேகம் இருந்தாலும் காதலன் ரகு தனக்கு துரோகம் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையில் வேலைகளைத் தொடர்ந்தாள் பாரு.

அணி எவ்வளவு கேவலமாக ஆடினாலும் அதை தன் சினிமா புகழ் மற்றும் விளம்பர செல்வாக்கின் மூலம் மறைத்து கல்லா கட்டினான் சாதிக். ஆனால் மும்பை குண்டு வெடிப்பிற்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்களை தடை செய்ததில் சற்றே பாதிப்படைந்திருந்தான்.

பொதுத் தேர்தல் காரணமாக போட்டிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டதால் இரண்டாம் வருடப் போட்டிகள் தென்னாப்ப்ரிக்காவில்  நடந்தன.

உள்ளூர்ப் போட்டிகளில் ஊறுகாய் போட்டவர்களுக்கு வெளிநாட்டில் போட்டி நடந்தால் சொல்லியா தரவேண்டும்?

தனது அணி இறுதிப் போட்டி வரை வந்ததை நம்ப முடியாத செல்லையா பணத்தை பீராகவும் பீரை அழகிகளாகவும் செலவழித்தார்.

ஹர்கிரத்தும் ப்ரித்வியும் மைதானத்தில் விளையாடியதை விட படுக்கையறையில் பெண்களுடன் அதிகம் விளையாடினர் - 50 நாட்கள், 50 பெண்கள் என்ற கொள்கையோடு.

ப்ரித்வியின் லூட்டியாலும் பஞ்சாப் காவல் துறையுடன் ஏற்பட்ட தகராறாலும் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தனர் ப்ரீத்தாவும் வடாலாவும்.

தான் வளர்ந்த மாநிலத்தில் சகல வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டான் மொஹிந்தர். பிரபல ஹிந்தி நடிகை அபிலாஷா போசுடன் தனக்கிருந்த நெருங்கிய தொடர்பு ராக்கிக்குத் தெரிய வந்ததால் மூன்றாமாண்டுப் போட்டி முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாய் உறுதி அளித்தான்.

உலகளாவிய போட்டிகள் தங்கள் மாநில மைதானத்திலும் நடத்த வேண்டுமென்ற பீகார் குழுவின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வந்தார் பத்மநாபன். "எல்லா பயலும் நாட்டுத் துப்பாக்கியோட சுத்தறான். எவனையாச்சும் போட்டுத் தள்ளிட்டா நாளைக்கு நாங்க தான் பதில் சொல்லணும்" என்பது அவர் வாதம். தலைவர் பத்மநாபன் பக்கம் இருந்ததால் பீகார் குழுவினரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் மொஹிந்தரின் மைதான முயற்சிகளுக்கு அவர் மறைமுக ஆதரவு அளித்து வந்தார். இதனால் பீகார் குழுவினர் பத்மநாபன் மீது ஜென்ம பகையுடன் கறுவிய வண்ணம் இருந்தனர்.

தொடர்ந்து இரண்டு போட்டிகள் வெற்றிகரமாக நடந்தேறியதில் ஏகப்பட்ட தலைச்செருக்குடன் உலவ ஆரம்பித்தான் லலித். தான் வைத்ததே சட்டமென்று தறிகெட்டு அலைந்தான். தலைவர் உட்பட எவர் எது சொன்னாலும் "இது எனது குழந்தை, நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் பணத்தை மட்டும் எண்ணிக் கொள்ளுங்கள்" என்று கூறி எல்லோர் வாயையும் பணத்தால் அடைத்தான்.

தென்னாப்பிரிக்காவில் வெற்றி வாகை சூடினாலும் வரவு எட்டணா செலவு பத்தணா என்றிருந்ததால் "டைட்டானிக்"காக மாற ஆரம்பித்திருந்தார் ரெட்டி.

"சும்மா சொல்லக் கூடாது சார், இந்த வயசிலும் கும்முன்னு இருக்காங்க உங்க பொண்டாட்டி" என்று போதையில் யதார்த்தமாக மகேஷிடம் சொல்லப் போக ஏகத்துக்கும் உள்காயம் வாங்கிக் கட்டிக் கொண்டான் ஹர்கிரத். 

ஷாஜகான் தன் காதலிக்காக தாஜ் மஹால் கட்டினான். மலையாள மத்திய அமைச்சர் சசிதரன் தன் காதலிக்காக 1500 கோடிக்கு கேரளா கிரிக்கெட் அணியை உருவாக்கிக் கொடுத்தார். இதில் "சேட்டா" ஸ்ரீகாந்திற்கும் பங்கு உண்டு. 

மூன்றாம் ஆண்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் தலைவரும் பத்மநாபனும் லலித்தை அவசரக் கூட்டத்துக்காக அழைத்தனர்.



ஆட்டம் தொடரும்....

Jayaraman
New Delhi
Related Posts Plugin for WordPress, Blogger...