Wednesday, June 27, 2012

இதைப் படிக்காதீங்க!


என்ன தான் விமர்சகர்கள் பருத்திவீரனின் சமீபத்திய படத்தைப் போட்டுக் கிழித்தாலும் பருத்தி வீரனின் மார்க்கெட்டிங் யுத்தியினால் தேவையான அளவு கல்லா கட்டிவிட்டதாக விநியோகஸ்தர் வட்டம் தெரிவிக்கிறது. தனது யுத்தியின் மூலம் எப்படியும் படத்தை வெற்றிபெற வைத்து விடுவார் என்பதால் தயாரிப்பாளர்கள் பணப்பெட்டியுடன் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து கமென்டரி மன்னனின் சமீபத்திய பேட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை வறுத்து எடுத்திருக்கிறார். அவருக்கு போதுமான அளவு கமென்டரி வாய்ப்பு தரப்படாததே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. ஐசிசிக்கு வேண்டியவர் என்பதால் அவரை சமாதனப்படுத்தும் விதமாக வரவிருக்கும் தொடர்களில் அவரை சேர்ப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

டென்னிஸ் வீரர்களின் குழாயடி சண்டைக்குக் காரணம் சம்பளமே என்று தெரிய வந்துள்ளது. மூத்தவருக்கு செல்வாக்கு இருப்பதால் தகுதிக்கு மீறிய சம்பளத்தை கொடுக்கும் அசோசியேஷன் ஏனையோருக்கு அதில் பாதியைக் கூட தர மறுப்பதாக இளையவர்கள் புலம்புகின்றனர். இது காலம் காலமாக நடந்து வருவதாகவும் ஆனால் இந்த முறை வெளிச்சத்துக்கு வந்து விட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து தள்ளிப் போகும் இரண்டாம் பாகப் படத்தினால் தலை மிகவும் நொந்து போயிருக்கிறார். பாடல்கள் சொதப்பியது போதாதென்று ரிலீசும் தள்ளிப் போவதால் படத்தின் வெற்றி குறித்து மிகவும் கவலை கொண்டிருப்பதாகத் தகவல்.

உலக நாயகனின் புதிய படத்தைப் பற்றி என்ன தான் திரைப்பட விழாவிலும் விருது விழாக்களிலும் பிரதமாகப் பேசினாலும், அவரின் முந்தைய அவதாரப் படத்தின் இரண்டாம் பாகம் போல அமைந்திருப்பதாக பார்த்தவர்கள் கூறுகின்றனர். நின்றாலே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் இந்த வயதில் இவருக்கு நாட்டியம் தேவையா என்றும் கிண்டலடிக்கின்றனர்.

கூடிய விரைவில் இளைய காந்தி பிரதமராக அறிவிக்கப் படலாம் என்று டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே நிதி அமைச்சரை ஜனாதிபதி களத்தில் இறக்கி விட்டிருப்பதாகப் பேசப்படுகிறது.
ஊரே காறித் துப்பும் போதும் மன்மோஹனர் எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் தொடர்ந்து அமைதி காத்து வருவது எரிச்சலை அளித்தாலும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பத்து வருடத்துக்கும் மேலாக சாப்பாட்டில் துளி அளவு கூட உப்பு சேர்த்துக் கொள்ளாததே இதன் ரகசியம் என்று ரேஸ் கோர்ஸ் சமையல்காரர் நக்கலடிக்கிறார்.

நட்சத்திர டிவியின் கோடீஸ்வர நிகழ்ச்சிக்குப் போதுமான வருவாய் கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லையாம். சூரிய நடிகர் இயற்கையாகப் பேசாமல் சினிமா வசனம் போல் பேசுவதாலும், டைமிங் தெரியாமல் மொக்கை போடுவதாலும் மக்கள் எரிச்சலடைந்து சேனல் மாற்றி விடுவதாகத் தெரியவந்துள்ளது. இதனால் அடுத்த சீசனுக்கு வேறு யாரைப் போடுவதென்று இப்பொழுதே யோசித்து வருகின்றனர் சேனல்காரர்கள்.

நானும் கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று வீம்புக்கு நிகழ்ச்சி நடத்தியதில் சூரிய தொலைகாட்சி மிகவும் கையைச் சுட்டுக் கொண்டிருக்கிறதாம். பங்கேற்க ஆள் கிடைக்காமல் சீரியல் நடிகர்களை வரவழைத்து பொழுது போக்குவதாகவும் கூடுதல் தகவல்.

சிங்கம் சிறுத்தை என அனைத்துப் படங்களும் ஹிந்தியில் வெற்றி பெறுவது இங்குள்ளவர்களை மிகவும் உற்சாகப் படுத்தியிருக்கிறது. இது போக ஹிந்தித் தொலைக்காட்சிகளிலும் தென்னிந்திய டப்பிங் படங்களுக்கு வரவேற்பு கூடியிருப்பதால் இனி வட இந்தியர்களையும் கவரும் வண்ணம் கதைக் களம் மற்றும் நடிகைகளைப் போடுவதென்று நம்மவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்பு வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிங் கானின் அணி தனியார் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வங்காள அரசு அனைத்து வீரர்களுக்கும் தங்கச் சங்கிலி அணிவித்ததன் உண்மைப் பின்னணி தற்போது வெளிவந்துள்ளது. போடப்பட்ட சங்கிலிகள் அனைத்தும் போலி என்றும் சொர்ணாக்கா தனது இமேஜை உயர்த்திக் கொள்வதற்காகவே அப்படி செய்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். சங்கிலிக்குப் பதிலாக வீரர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் அளிக்கப்பட்டிருக்கிறது. இது கிங் கானுக்கு முன்னமே தெரியுமென்றும் இதிலும் அவர் கணிசமான தொகையை அக்காவிடம் இருந்து கமிஷன் அடித்திருப்பதாகவும் நெருங்கியவர்கள் கூறுகின்றனர்

முட்டாள் கானின் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் TRP ரேட்டிங் குறைவதாக சேனல் புலம்பினாலும் சம்பந்தப்பட்ட அனைவரின் பாக்கெட் நிரம்பிவிட்டதாம். நிகழ்ச்சி நிஜமாகவே மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக மார்க்கெட்டிங் நிறுவனங்களின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. குவிந்து வரும் SMS மற்றும் நிதியுதவியே இதற்கு சாட்சி என சொல்லப்படுகிறது. ஹ்ம்ம். சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒழுங்காகப் போய்ச் சேர்ந்தால் சரி.

வரும் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதில் நரேந்திரரும் குமாரரும் குடுமி சண்டை போடுவது தாமரைக் கட்சியை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. 2014 வரைக்கும் கட்சி உயிருடன் இருக்குமா என்றே தெரியவில்லை, இவர்கள் ஏன் இப்போதிருந்தே அடித்துக் கொள்கிறார்கள் என்று கட்சியின் உண்மை விசுவாசிகள் எள்ளி நகையாடுகின்றனர்.

மதுரையைக் கைப்பற்றிய சாமியாரின் அடுத்த இலக்கு காஞ்சிபுரமாம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வருவதாக விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். சாமியார் விஷயத்தில் அம்மா சும்மா இருப்பதில் பக்தர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

புயல் மீண்டும் திரைக்கு வர வேண்டும் என்று விவேகம் கூறியிருப்பதில் எல்லோருக்கும் வியப்பு. ஆனால் "சொச்சமிச்சம் மிச்சசொச்சத்துக்குஆதரவாக இருப்பதில் என்ன ஆச்சர்யம் என்று விவேகம் காதுபட கலாய்க்கின்றனர் லொள்ளு க்ரூப்பைச் சேர்ந்தவர்கள்.

என்ன யோசிக்கறீங்க? இதெல்லாம் ஒரு ஆர்டிகிள்னு ஏண்டா படிச்சோம்னு தலையைப் பிச்சிக்கறீங்களா? நாங்க தான் முதல்லயே சொன்னோம்ல இதைப் படிக்காதீங்கன்னு. நம்மாளுங்க எவன் சொல் பேச்சு கேக்கறீங்க!!

Jayaraman
New Delhi

Monday, June 25, 2012

its time for a sweet 16

Phew…thankfully not much cricket going around. I’m sure cricket buffs like me must be thanking BCCI for allowing us to spend valuable times with family, friends and possibly exploring other entertainment opportunities. In the meantime, cricket columnists and experts are running intense debates as which form of the game is under severe threat – the ODI’s or Tests?

As long as there is no over dosage or meaningless cricket exhibited, every form of the game is safe. Just as we speak meaningless cricket, here we go, India take on Sri Lanka for a 5 match ODI series and a T20 match in July 2012. Probably, a gesture from BCCI to compensate Sri Lankan Board for not allowing its players to participate in their T20 league. Since Test Cricket is not feasible revenue generating option and the number of T20’s played in a calendar year has restrictions, India takes on Sri Lanka in an ODI series!!! By the way, I wonder who is going to watch India – Sri Lanka encounters. For a poor turnout, the pundits will get another chance to blame the format.

To me, Test Cricket remains ultimate Test; ODI’s provide useful opportunity to evaluate a player’s talent/temperament (in others words breeding ground for the litmus test) and T20’s provide ultimate entertainment for the audience. All formats demand sustenance for the good of the game and there are takers for each variety. For each format to bring optimal revenue, every calendar year should limit to 14 Tests (7 Home, 7 Away), 25 One Day Internationals (10 Home, 10 Away, 5 dedicated to the development of Cricket in Associated Nations), a World Cup in 4 years and T20’s should be restricted to club level with a World T20 every 2 years. In all, a year should comprise not more than 125-150 days of cricket.

Somewhere, in other part of the world, India A lost to West Indies A (1-2) in the Tests. Considering majority of the India A players has more International exposure over their counterparts, it is a disappointing loss. However, India A fought better than Team India outside subcontinent is the consoling factor. But, the bottom line remains same. India A or India, games don’t go past 3rd day (first test against WI A was an exception) is the cruel reality. Chetashwar Pujara was the lone star, probably a lone candidate too to fill the shoes of Dravid. A century performance would have been a nice icing and rendered solidarity to his case. Rahane was the biggest disappointment while Mukund was a disaster. Rohit Sharma surely let go off the glorious opportunity to seal a Test birth. Let us see what is in store for the A team on the Tour of New Zealand in Sep-Oct 2012. I wish Rohit Sharma & Rahane put a better show here to make a case for reckoning against England Tests.

The performance of A Team at the Caribbean shores should urge the selectors to look beyond the options available. Teen Debutants are an option to ponder. In the past, India managed to reap rich dividends from Teen entrants as Sachin Tendulkar, Harbhajan Singh, Yuvraj Singh, Irfan Pathan, Suresh Raina etc., However players like Parthiv Patel disappointed too. But the success of majority surely overwhelms the minority. When we talk about Teen options, Vijay Zol name appears top of the list.

If Dravid is the master of temperament, he scores about 200 runs in 2 days. While Lara scores double the amount of runs in the same amount of time with equal temperament. Though I did not witness Zol’s 451 personally, I could visualize the innings studded with stroke play coupled with Dravid’s temperament. I know I’m using some big names for reference, but it is only an analogy to make an inference. Outside that mammoth 451 he went to make few more big tons to exhibit his appetite for batting long.  Anyways, Zol being in the squad for the England & Australia Tests should only do more good to him than harm. I excluded New Zealand series here as I assume Zol could be in Australia to represent India Under19 in the World Cup. The moment has arrived to mix a kid among youth in search of name after a Dravid or Tendulkar or Laxman. Time the selectors wear a thinking cap.

Kevin Pieterson retiring from One Day cricket must have surprised many. Since the retirement came out primarily on difference of opinion grounds with the board, it is only a matter of time, before he comes out of retirement. 

Bottom line: There was a time cricketers used to prolong their career only to end up leading wicket taker/run scorer. These days’ players limit their career for a prolonged pie from a %$#@ Premier League.

Dinesh
Cricket Lover

Sunday, June 17, 2012

நீங்களும் ஆகலாம் ஜனாதிபதி!!!






இன்றைய தேதிக்கு சூடான மேட்டர்னா அது ஜனாதிபதி தேர்தல் தான், இவர் வருவார், அவர் வருவார்னு ஏகப்பட்ட புரளிகள், கணிப்புகள். என்ன தான் கூட்டணிக் கட்சிகள் நடுவுல புகுந்து கலாய்ச்சாலும் சோனியா மேடம் சொல்லப்போறது தான் பைனல். இந்த சூழ்நிலையில் ஏன் சில பிரபலங்களும் போட்டியிடக் கூடாதுன்னு நாம யோசிச்சோம்.

முதல்ல வடிவேலு இன்டர்வியூவிற்குப் போறாரு, சோனியா மேடமும் மன்மோகன் சிங்கும் உட்கார்ந்திருக்காங்க:

சோனியா, "எந்த நம்பிக்கையில நீங்க இந்த பதவிக்கு வரணும்னு ஆசைப்படறீங்க?"

வடிவேலு, "அது வந்தும்மா, ஜனாதிபதி பதவிங்கறது ரொம்ப கண்ணியமான பதவி"

சோனியா, "அதனால தான் கேக்கறேன், நீங்க ஏன் வரணும்னு நினைக்கறீங்க? தேர்தல்ல ரொம்ப அசிங்கமாப் பேசி வாங்கிக் கட்டிக்கிட்ட ஆளு தானே நீங்க?"

வடிவேலு மனசுக்குள், "அடடா, நம்ம வீக்னெஸ் அதுக்குள்ள இவங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா! சமாளிப்போம்"

சோனியா, "என்ன யோசிக்கறீங்க?"

வடிவேலு, "ஒண்ணும் இல்லை மேடம், இதுக்கு முன்னாடி இருந்தவங்கல்லாம் படிச்சவங்க, பெரிய மனுஷங்க. என்னை மாதிரி வெள்ளந்தியான ஆளுங்க யாரும் இந்த பதவிக்கு வந்ததில்ல"

சோனியா லேசாக முறைத்துவிட்டு , "யாரு நீங்களா? சரி மேல சொல்லுங்க"






வடிவேலு, (என்ன இந்தம்மா குறுகுறுன்னு பார்க்குது?) "அப்துல் கலாம் ஐயா பதவியில இருந்தப்போ ஊர் ஊராப் போய் பள்ளிக்கூடக் குழந்தைகளோட பேசினாரு. நான் ஒரு அதி பயங்கர காமெடி பீசுன்னு அகில உலகத்துக்கும் தெரியும். நான் பதவிக்கு வந்தேன்னா மக்கள் என்னை பார்த்து சிரிப்பாங்க. மகிழ்ச்சியா இருப்பாங்க. மனுஷப் பய வாழும்போது சந்தோஷமா வாழ வேண்டாமா? இப்போ உங்க ஆட்சியில ஒரு நல்லதும் நடக்க மாட்டேங்குது, பெட்ரோல் ஏறுதுங்கறாங்க, ரூபாய் இறங்குதுங்கறாங்க, யார் பிரதமர்னே தெரியலைன்னும் சில பேர் சொல்றாங்க..."

மன்மோகன் பல்லை நறநறவென்று கடிக்கிறார்.

சோனியா கடுப்பாகி, "அதுக்கு?"

வடிவேலு, "இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுல ஒரு சாதாரண மனுஷனுக்கு கொஞ்சமாச்சும் சந்தோஷத்தைக் குடுக்க வேண்டாமா? அது நம்ம கடமை இல்லையா? இப்போ நான் ஜனாதிபதி ஆகி மக்களை சந்திக்கப் போனேன்னா ஒரு நாலஞ்சு டயலாக் அடிச்சு விடுவேன், மக்கள் அதைக் கேட்டு சிரிப்பாங்க. அப்படியே பேஸ்புக், ட்விட்டர்னு எல்லாத்துலயும் போடுவாங்க. அடடே, இவ்ளோ ஜாலியான ஜனாதிபதியான்னு எல்லாரும் உங்களைத் தானே மேடம் பாராட்டுவாங்க. மத்தபடி நான் என்னிக்குமே உங்க வீட்டு நாயாத் தான் இருப்பேன். அது போக ஆப்ரிக்கா மாதிரி நாடுகளுக்கு சுற்றுப் பயணம் போனேன்னா நமக்கு நல்ல பிஸ்னெஸ் கிடைக்கும்"

சோனியா, "எப்படி?"

"அவிங்க பயங்கர கறுப்பா இருக்காங்க, நான் கறுப்பா பயங்கரமா இருக்கேன், ரெண்டு பேருக்கும் நல்லா மேட்ச் ஆவும்"

சோனியா, "பரவாயில்லையே, நல்ல ஐடியா தான்"

வடிவேலு, "அது மட்டுமில்ல மேடம், வெள்ளைக்கார நாடுகளுக்குப் போனாலும் அவங்களுக்கு மத்தியில நான் தனியாத் தெரிவேன்ல, ஒரு கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் இந்தியாவின் ஜனாதிபதி ஆயிட்டார்னு எல்லாரும் புகழுவாங்க. இதெல்லாம் உங்களுக்குப் பெருமை தானே மேடம்?

சோனியா, "சரி நீங்க போகலாம், சொல்லி அனுப்பறோம்"

வடிவேலு, "ரொம்ப நன்றி மேடம்" பிறகு மன்மோஹனைக் காட்டி "மேடம் யாரு இவரு, நான் வந்ததிலேர்ந்து பார்க்கறேன், ஒண்ணுமே பேசாம சும்மாவே உட்கார்ந்திருக்காரு"

சோனியா, "இவர் தாம்பா நம்ம நாட்டுப் பிரதமர்"

வடிவேலு, "அவரா நீ? சொல்லவே இல்ல"

மன்மோகன், "என்னது நான் தான் பிரதமரா? என்கிட்டே யாரும் சொல்லவே இல்லையே"

வடிவேலு ஷாக்காகி, "இந்த வேலைக்கு உன்னை தப்பா எடுத்திருக்காங்க. ஒரு வேளை நான் ஜனாதிபதி ஆயிட்டேன்னா நீங்க எனக்கு ஒத்தாசையா உதவி ஜனாதிபதி ஆயிடுங்க, ரெண்டு பேரும் எந்த வேலையும் செய்யாம சும்மா இருக்கலாம், சர்தார்ஜி-மதராசி காம்பினேஷன் நல்லா வொர்க் அவுட் ஆகும், வர்ர்ட்டா?"

சோனியா, "அடுத்து யாரப்பா? உள்ளே வாங்க"





நெத்தி நிறைய பொட்டுடன் நித்தி உள்ளே வருகிறார். "வணக்கம்" பிறகு ஹாலை சுற்று முற்றும் பார்த்தபடி "கதவைத் திறந்து வையுங்கள், காற்று வரட்டும்"

சோனியா, "நீங்களா?"

நித்தி, "நானே தான், பெங்களுரு நீதிமன்றத்திலிருந்து நேராக இங்கு தான் வருகிறேன்"

சோனியா, "எந்த தைரியத்துல இங்க வந்தீங்க? உங்க மேல ஏகப்பட்ட புகார்கள், வழக்குகள் இருக்கே?"

நித்தி, "புகார்களும் வழக்குகளும் எல்லார் மேலும் இருக்கிறது. உங்கள் மேலும் போபோர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு 25 ஆண்டுகளாக இருக்கிறது."

"அது என் பேர்ல இல்லை, என் கணவர் பேர்ல"

நித்தி சிரித்தவாறே, "மனைவி கணவனில் சரி பாதி என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்"

திடுக்கிடும் சோனியா பிறகு சுதாரித்துக் கொண்டு, "நீங்க ஜனாதிபதி ஆனா என்ன செய்வீங்க?"

நித்தி, "அமைதி, சாந்தி"

மன்மோகன், "இவர்களெல்லாம் உங்க பெண் சீடர்களா?"

நித்தி தெய்வீகச் சிரிப்புடன், "பிள்ளாய், அமைதி என்றால் உலக அமைதி, சாந்தி என்றால் மனச்சாந்தி"

சோனியா, "கொஞ்சம் புரியற மாதிரி சொல்றீங்களா?"

நித்தி மீண்டும் சிரிப்புடன், "எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவு, போர், அமைதியின்மை, வன்முறை. இதற்கு ஒரே தீர்வு ஆன்மிகம். ஆன்மிகம் மனதை ஒருங்கிணைக்கும். உலகில் அமைதியை நிலைநாட்டும். ஆன்மீகத்தின் மூலம் தர்மம் தழைக்கும். ரஞ்சிதம் பிழைக்கும்"

மன்மோகன், "ரஞ்சிதமா? உங்க கூட இருந்தாங்களே, அவங்களா?"

நித்தி, "அதாவது மனோரஞ்சிதம், அப்படியென்றால் மகிழ்ச்சி"

சோனியா, "இருந்தாலும் உங்களை கன்சிடர் பண்ண முடியாது. அந்த ஆபாச வீடியோ உங்கள் இமேஜை ரொம்ப டேமேஜ் பண்ணிடுச்சு"





நித்தி, "உங்கள் மனதில் கெட்ட எண்ணம் இருந்தால் நீங்கள் பார்க்கிற எல்லாமே கெட்டதாகத் தான் தெரியும். நானும் என் சீடரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது யாரோ எங்களுக்குத் தெரியாமல் எடுத்த வீடியோ அது. துறவியாக வேண்டுமானால் எல்லாவற்றையும் துறக்க வேண்டும், மறக்க வேண்டும், மூடியிருக்கும் கதவுகளை, அதாவது மனக்கதவுகளை திறக்க வேண்டும். அந்த சீடரின் மனதில் சிற்சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் நீக்கி அவற்றையெல்லாம் துறந்து, அவர்களை ஒரு முழு துறவியாக்கும் ஒரு பயிற்சியில் நாங்கள் ஈடுபட்டிருந்தது உங்களுக்கு ஆபாசமாகத் தெரிகிறது."

சோனியா மெய் மறந்து நித்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைப் பார்க்கும் மன்மோகன் மனசுக்குள், "போற போக்கைப் பார்த்தா இந்த அம்மாவும் இவரோட சேர்ந்துடும் போலிருக்கே"

நித்தி, "எதையுமே மூடினால் தான் ஆபத்து. மூடியிருக்கும் வரை ஆர்வம் இருக்கும். ஆர்வம் இருந்தால் ஆசை வரும். ஆசை மனதை அலை பாய வைக்கும். அலை பாயும் மனது திடமான முடிவுகளை ஒரு நாளும் எடுக்காது. அது உங்கள் அறிவையும் வேலை செய்ய விடாது. அறிவில்லாதவர்கள் தவறான வழிக்குச் செல்வார்கள். தவறான வழிக்குச் சென்றால் தண்டனை உண்டு. ஆகா, எல்லாவற்றிற்கும் காரணம் நாம் எல்லாவற்றையும் மூடி வைப்பது தான். அதனால் தான் வந்தவுடனே சொன்னேன், கதவுகளைத் திறங்கள், காற்று வரட்டும் என்று.

சோனியா, "சுவாமி, உங்களுக்கு என்னால் இந்த பதவியைத் தரமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இப்பொழுதே என்னை உங்கள் சீடர் ஆக்கிக் கொள்ளுங்கள். எங்கே என் காவி உடை? எங்கே என் ருத்ராட்சம்?"

மன்மோகன், "மேடம் கண்ட்ரோல் கண்ட்ரோல். அப்புறம் இதான் சாக்குன்னு RSSம் பிஜேபியும் இந்து மதத்தை நீங்க இழிவுபடுத்தறீங்கன்னு புதுசா ஒரு பூதத்தை கிளப்புவாங்க. இருக்கற தலைவலி போதாதா? ஐயா நித்தி, நீங்க கிளம்புங்க, சொல்லி அனுப்பறோம்"

நித்தி அதே தெய்வீகச் சிரிப்புடன், "நினைவிருக்கட்டும். எதையுமே மூடக் கூடாது"

மன்மோகன், "அதை நாங்க பார்த்துக்கறோம், இப்போ நீங்க மூடிக்கிட்டுப் போங்க"

பிறகு சோனியாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை சுயநினைவிற்குக் கொண்டு வருகிறார். பெல்லை அழுத்தி அடுத்த ஆளை உள்ளே அனுப்புமாறு சொல்கிறார்.

சம்மக் சல்லோ பாடல் ஒலிக்கிறது.

சோனியா, "மை காட், மன்மோகன் ஜி, அவன் தான் வர்றான் போலிருக்கு"




எதிர்பார்த்தது போல் ஷாருக் கான் என்ட்ரீ ஆகிறார். "ஹெலோ சோனியாஜி, ஹெலோ மன்மோகன் ஜி, உங்க ரெண்டு பேருக்கும் நமஸ்தேஜி"

மன்மோகன் மனசுக்குள், "என்ன தீர்மானத்தோட இங்க வந்திருக்கான்னு தெரியலையே!"

சோனியா, "உங்களுக்கு என்ன தகுதியிருக்குன்னு இந்த பதவிக்கு வர ஆசைப்படறீங்க?"

ஷாருக் கான், "ஹிஹிஏய், ஆசைகள் பெரிசா இருக்கணும், கனவுகள் பெரிசா இருக்கணும். அப்போத் தான் முன்னேற முடியும்"

சோனியா, "பட் இது பேராசையா இல்ல இருக்கு"

ஷாருக் கான் வழக்கமான சிரிப்பை சிரிக்க ஆரம்பிக்கவும், மன்மோகன் குறுக்கிட்டு "எந்த வார்த்தை பேசறதா இருந்தாலும் சம்பந்தமே இல்லாம முதல்ல சிரிக்கறதுன்னு எதாவது அக்ரீமென்ட் போட்டிருக்கியா?"

ஷாருக் கான் சற்று சீரியசாகி, "கலைஞர்கள் தான் ஒரு நாட்டின் உண்மையான தூதுவர்கள். அதனால தான் நான் இந்தப் பதவிக்கு வரணும்னு ஆசைப்படறேன்"

சோனியா, வந்து என்ன செய்வீங்க?"

ஷாருக் கான், "ஊர் ஊராப் போவேன், கலை நிகழ்ச்சிகள் நடத்துவேன், இந்தியாவின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பரப்புவேன், விளம்பரத்துக்கு விளம்பரம், பணத்துக்குப் பணம்"

மன்மோகன், "கூடவே பிரியங்காவையும் கூட்டிட்டுப் போவியா?"

ஷாருக் கான், "மிஸ்டர் வதேராவுக்கு ஆட்சேபனை இல்லேன்னா தாராளமா கூட்டிட்டுப் போவேன்"

மன்மோகன் குழம்பவும், சோனியா டென்ஷனாகி, "ப்ரோ, அவர் பிரியங்கா சோப்ராவைச் சொல்றார். என் பொண்ணை இல்ல."

ஷாருக் கான், "ஐ ஆம் சாரி, பை தி பை, எனக்கு எந்த சோப்ராவையும் தெரியாது - யாஷ் சோப்ராவை தவிர"

சோனியா, "வேற என்ன செய்வீங்க?"

ஷாருக் கான், "இப்போ இருக்கற பிசிசிஐ ஆளுங்களுக்கு பணம் சம்பாதிக்கத் தெரியுது, ஆனால் செலிபரேட் பண்ணத் தெரியல. அதனால இந்தியன் கிரிக்கெட் டீமையும் நானே வாங்கிடுவேன். உள்ளூர் சீரிஸ் ஜெயிச்சாக்கூட ஒரு வாரத்துக்குக் கொண்டாட்டம் தான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் டிரக்ல ஊர்வலம் போவோம். எல்லாரையும் ஜனாதிபதி மாளிகைக்குக் கூப்பிட்டு பரம் வீர் சக்ரா விருது வழங்குவேன், ஏன்னா அவர்களும் வீரர்கள் தான், மைதானமும் போர்க்களம் தான்"

மன்மோகன், "ஐயா, முதல்ல கிளம்புங்க, செலெக்ட் ஆனீங்கன்னா தபால் வரும்"

ஷாருக் கான் சிரித்துக் கொண்டே, "கிங் கான் ஜனாதிபதி போஸ்ட் லே ஜாயேங்கே" என்று அர்த்தமே இல்லாமல் பன்ச் அடித்து விட்டு செல்கிறார்.

மன்மோகன், "மேடம், இன்னிக்கு இதோட நிறுத்திக்குவோம்"

சோனியா, "இன்னும் ஒரே ஒரு ஆள் தான் பாக்கி, அவரையும் பார்த்துடுவோம்"

மன்மோகன், "யாருப்பா அங்க, சீக்கிரம் வாங்க"







கேப்டன் உள்ளே வருகிறார் - வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி, கண்ணாடி சகிதம். "நமஸ்தே சோனியாஜி, நமஸ்தே மன்மோகன் ஜி"

மன்மோகன், "அடேடே, மதராசி ஹிந்தியில நல்லாவே நமஸ்தே சொல்றியே?"

விஜயகாந்த், "எல்லா மொழியையும் நாங்க மதிப்போம், வலுக்கட்டாயமா திணிச்சா ஏறி மிதிப்போம்"

சோனியா, "சரி உட்காருங்க, அந்த கண்ணாடியைக் கொஞ்சம் கழட்டுங்க. ரூம்ல தானே இருக்கீங்க"

விஜயகாந்த் கண்ணாடியைக் கழட்டவும் சோனியா அவரது செக்கச் சிவந்த கண்களைப் பார்த்து டர்ர்ர் ஆகிறார். "ப்ரோ, நீங்க கண்ணாடியை மாட்டிக்கோங்க"

மன்மோகன், "ஏங்க கேப்டன்ஜி, உள்ளூர்லேயே நீங்க தாளம் போடறீங்களே, மத்தியில வந்தா எப்படி சமாளிப்பீங்க?"

விஜயகாந்த் ஆத்திரமாகி, "இப்படி குட்டிகுட்டித் தானேடா தமிழனை வளர விடாம வெச்சிருக்கீங்க, வடநாட்டுக்காரன் குண்டூசி கண்டுபிடிச்சாக் கூட கொண்டாடறீங்க, எங்க ஊர் GD நாயுடு எண்ணற்ற பொருட்களைக் கண்டுபிடிச்சிருக்காரு, அவருக்கு எதாச்சும் அங்கீகாரம் குடுத்திருக்கீங்களா?'

சோனியா மன்மொஹனிடம், "நீங்க என்ன கேட்டீங்க, இவர் என்ன பேசறாரு?"

மன்மோகன், "அவர் அப்படித்தான், பாவம் இன்னும் காமெரா முனாடி நிக்கறோம்னு நினைச்சிக்கிட்டிருக்காரு"

விஜயகாந்த், "அங்க என்ன சதித்திட்டம் தீட்டறீங்க?"

சோனியா, "ஓகே கேப்டன், நீங்க இந்த பதவிக்கு வந்தா என்ன செய்வீங்க?"

விஜயகாந்த், "இந்தியாவுல மொத்தம் 545 எம்பிக்கள் இருக்காங்க. அதுல 56 பேர் கேபினட் மந்திரிங்க. இந்த 56 பேருக்குக் கீழ வேலை செய்யறதுக்கு 1782 ஐஏஸ், 2301 ஐபிஎஸ், 821 ஐஎப்ஸ் அதிகாரிங்க இருக்காங்க. மொத்தம் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் 476 மாவட்டங்கள் 910 பேரூராட்சிகள், 2981 நகராட்சிகள் மற்றும் 3871 பஞ்சாயத்துங்க இருக்கு."

மன்மோகன், "அப்படியா? எனக்கே சரியா தெரியாது. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கறது நல்ல விஷயம் தான். ஆமாம், இப்போ எதுக்கு இந்த புள்ளி விவரத்தை சொல்றீங்க?"

விஜயகாந்த், "இந்த அத்தனை இடத்துலயும் தலைமைப் பொறுப்புல இருக்கறவங்களை பதவியை விட்டுத் தூக்கப் போறேன்"

சோனியாவுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது.

மன்மோகன், "தூக்கிட்டு?"

விஜயகாந்த், "இந்தியா முழுக்க குடியரசுத் தலைவர் ஆட்சி தான்"

சோனியா, "இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, அதை மறக்காதீங்க"

விஜயகாந்த், "தெரியும் மேடம், இன்னொன்னும் தெரியும், மன்னராட்சி நடந்தபோதும் சரி, இப்ப மக்களாட்சி நடக்கிற போதும் சரி, மக்களுக்கு எப்பவுமே அது ஒரு மரண ஆட்சியாத் தான் இருந்திருக்கு. எங்க பார்த்தாலும் அராஜகம், அடக்குமுறை, ஊழல், லஞ்சம் " அவரின் கண்ணாடியைத் தாண்டி கண்கள் சிவக்கிறது.





மன்மோகன், "யோவ், கறுப்புக் கண்ணாடி சிவப்புக் கண்ணாடியா மாறுதுய்யா, கண்ட்ரோல்"

சோனியா,"உங்க கண்ணு ஏன் சார் அடிக்கடி நெருப்பு மாதிரி ஆயிடுது?"

விஜயகாந்த் குரல் தழுதழுக்க, "இது கோபம் இல்லை மேடம், நம்ம நாட்டு ஏழை மக்களோட வயித்துல எரியற நெருப்பு மேடம். ஹுண்டாய் வெச்சிருக்கறவன் ஹோண்டா கார் வாங்கி ஜிலுன்னு பான்டா குடிக்கறான்.. ஆனா சைக்கிள்ல போறவனால ஒரு போண்டா கூட வாங்கித் திங்க முடியல"

விஜயகாந்தின் பேச்சைக்கேட்டு மன்மோகன் கண் கலங்குகிறார்.

ட்ராக் மாறுவதை கவனிக்கும் சோனியா, "ஓகே கேப்டன் ஜி, நீங்க போகலாம், உங்களுக்கு சொல்லி அனுப்பறோம்"

விஜயகாந்த் எகத்தாளமாக, "அதான் சொல்லிட்டீங்களே மேடம், பிரணாப் தான் உங்க வேட்பாளர்னு. முதல்லயே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு தேவையே இல்லாம ஒரு மீட்டிங் போட்டு அதுல எல்லாரையும் கருத்து சொல்லுங்கன்னு மொக்கை போடறது தான் உங்க கட்சியோட ஸ்டைல்னு இந்தியாவுல இருக்கற 120 கோடி பேருக்கும் நல்லாவே தெரியும். இந்தியா முதல்ல வெள்ளைக்காரன்கிட்ட அடிமையா இருந்திச்சு, இப்போ ஒரு வெள்ளைக்காரிகிட்ட அடிமையா இருக்கு. மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் வெடிக்கும். அதுல ஜனநாயகம் மீண்டும் மலரும், நான் வர்றேன் மேடம், வீ வில் மீட், வில் மீட், மீட்" என்று சொல்லி விட்டு ஸ்டைலாக கண்ணாடியை மாட்டியபடி வீர நடை போட்டுச் செல்கிறார். பின்னணியில் "அந்த வானத்தைப் போல மனம் படைச்ச நல்லவனே" என்ற பாடல் ஒலிக்கிறது.

சோனியா மன்மோஹனிடம், "என்ன ஜி, இப்படி சொல்லிட்டுப் போறாரு?"

மன்மோகன், "அவரை விடுங்க, BP ஜாஸ்தி ஆயிருக்கும். நீங்க வாங்க. நமக்கு நிறைய வேலை இருக்கு - பிரணாப்புக்கு ஆதரவு திரட்டணும், கலாமை வித்ட்ரா பண்ண வைக்கணும், மம்தாவுக்கு ஐஸ் வைக்கணும், முலாயமுக்கு பணம் டிரான்ஸ்பர் பண்ணணும், மாயாவதி மேல இருக்கற கேஸ் விஷயமா ஜட்ஜ் கிட்ட பேசி கரெக்ட் பண்ணணும்,"

சோனியா நெகிழ்ச்சியாக, "என்னால உங்களுக்குத் தான் எவ்வளவு அவமானம், உங்களுக்குக் கொஞ்சம் கூட கோபமே வரலியா?"

மன்மோகன், "நான் உங்க உண்மையான விசுவாசி மேடம், நீங்களும் உங்க குடும்பமும் இன்னும் ஏழேழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சொத்து சேர்த்துக்கணும். நாங்க இதே மாதிரி வழக்கம்போல உங்களுக்கு அடிமையா இருந்து சேவகம் பண்ணணும். அதான் மேடம் என் கனவு" என்று சொல்லிவிட்டு எழுச்சியுடன் செல்கிறார்.







சீக்கிரம் எதாச்சும் கிரிக்கெட் டோர்னமென்ட் ஸ்டார்ட் பண்ணுங்கப்பா! இல்லேன்னா இந்த கண்றாவியெல்லாம் ஆராய்ச்சி பண்ண வேண்டியதா இருக்கு!

Jayaraman
New Delhi

Sunday, June 10, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!! பாகம் - 2

பாகம் 1



சூர்யா ஆப்ஷன் சொல்லி முடிப்பதற்குள் ஷாருக் ஆத்திரமடைந்து முன்னாள் இருக்கும் ஸ்க்ரீனை கையால் ஓங்கி அடிக்கிறார். LCD திரையில் நிறைய விரிசல்கள் ஏற்படுகின்றன. மேலும் கடுப்பாகி தலையால் அதை டிச்சிங் செய்து சுக்கு நூறாக உடைக்கிறார். கையிலும் தலையும் லேசாக ரத்தம் வருகிறது.

சூர்யா மிகவும் பதற்றமாகி, "என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? வாங்க ஆஸ்பத்திரிக்குப் போகலாம்"

ஸ்டூடியோவே கலவரமாகிறது.

ஷாருக் சிரித்துக்கொண்டே, "பயப்படாதீங்க, ஐ ஆம் ஆல்ரைட். அது என்னவோ தெரியல, அவன் பேரைக் கேட்டாலே என்னமோ ஆயிடுது. சரி விடுங்க, இதுவும் நல்லது தான். என் மூஞ்சில ரத்த காயம் இருந்தா எனக்கு செண்டிமெண்டா வொர்க் அவுட் ஆவும் - ஆப்ஷன் எ சல்மான் கான் லாக் பண்ணுங்க"

சூர்யா "சரியான பதில், 160000 உங்களோடது"

ஷாருக்கிற்கு வேறு திரை வைக்கப்படுகிறது.

சூர்யா, "ஒரு நிமிஷம் நான் பதறிட்டேன், ஆனா நீங்க செம கூலா இருக்கீங்களே, எப்படி?"

ஷாருக், "ஐ ஆம் ஆல்வேஸ் கூல் யூ நோ"

சூர்யா, "அடுத்த கேள்வி 320000 ரூபாய்க்கு, இதோ:

இவற்றில் மிகவும் அறுவையான திரைப்படம் எது?

A) ரா ஒன்
B) டர்ர்
C) மெய்ன் ஹூன் னா
D) டான் - 2

ஷாருக், "ரொம்ப சிக்கலான கேள்வியாச்சே, லைப் லைன் யூஸ் பண்றேன்"

சூர்யா, "மணியண்ணே நில்லுங்க. எந்த லைப் லைன் வேணும்?"

"50-50"

"மிஸ்டர் ஜீனியஸ், ரெண்டு தவறான பதில்களை நீக்கிடுங்க"

திரையிலிருந்து ஆப்ஷன் B மற்றும் C காணாமல் போகிறது

ஷாருக், "பிக்ஸ் ஆப்ஷன் D டான் -2"

சூர்யா "நிச்சயமாவா?"

ஷாருக், "கண்டிப்பா, என்னாலேயே முழுப்படத்தையும் பார்க்க முடியல"

சூர்யா, "சரியான விடை, 320000 ஜெயிச்சிருக்கீங்க. இது உறுதிப்பணம்"

எல்லோரும் கை தட்டுகின்றனர்




சூர்யா, "எப்படி உங்களால உங்க படத்துக்கு இப்படி ஒரு ப்ரோமோஷன் பண்ண முடியுது? நான் ஸ்டாப்பா ஓடிக்கிட்டே இருக்கீங்களே?"

ஷாருக், "வாங்கறோம்ல தம்பி, அதுமட்டுமில்லாம இப்பல்லாம் படம் ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடியே காசு பார்க்க வேண்டியிருக்கு. ஏன்னா முதல் ஷோ முடியறதுக்கு முன்னாடியே திருட்டு விசிடி வந்திடுது, இல்லேன்னா நெட்ல வந்துடுது"

சூர்யா, "நீங்க சொல்றது பெரிய உண்மை. திருட்டு விசிடி அந்த அளவுக்குப் பெரிய தலைவலியா இருக்கு. பிறகு மக்களைப் பார்த்து, "நேயர்களே, தயவு செய்து தியேட்டர்ல போய்ப் பாருங்க, திருட்டு விசிடிக்கு ஆதரவு குடுக்காதீங்க. அடுத்த கேள்வி 640000 ரூபாய்க்கு, இதோ:

இவற்றில் டைரக்டர் மணிரத்தினம் இயக்கிய திரைப்படம் எது?"

A) 3 இடியட்ஸ்
B) தபங்
C) தில் ஸே
D) கம்பெனி

ஷாருக் சற்றும் தாமதியாமல், "தில் ஸே, பிக்ஸ் இட்"

சூர்யா, "தப்பா இருக்காது, 640000 ஜெயிச்சிட்டீங்க"

எல்லோரும் கை தட்டிய பிறகு ஷாருக், "மணி சார் கூட வொர்க் பண்ணினது பெரிய எக்ஸ்பீரியன்ஸ். மறக்கவே முடியாது. அதுவும் லடாக் ஷூட்டிங் எல்லாம் இப்ப நினைச்சாலும் மெய் சிலிர்க்குது"

சூர்யா, "கண்டிப்பா, என்னோட முதல் படம் அவர் டைரக்ட் பண்ணல, ஆனா ப்ரடியூஸ் பண்ணினார், . ஸோ, நானும் அவர் டைரக்ஷன்ல நடிக்கறதுக்கு ரொம்ப ஆவலா இருக்கேன்"

ஷாருக், "யா யா யா.. ஜீனியஸ்"

சூர்யா, "தொடர்ந்து விளையாடுவோம். 1250000 ரூபாய்க்கான கேள்வி, இதோ:"

இவர்களில் தற்போதைய பிரதமர் யார்?

A) சோனியா காந்தி
B) மன்மோகன் சிங்
C) பிரணாப்
D) மம்தா

ஷாருக் சற்றும் யோசிக்காமல், "நான் லைப் லைன் யூஸ் பண்ண விரும்பறேன் - போன் எ பிரெண்ட்"

சூர்யா, "ஓகே, உங்க பிரெண்ட்ஸ் யாரெல்லாம் இருக்காங்கன்னு பார்க்கலாமா?"

திரையில், கரன் ஜோஹர், சாஜித் கான் மற்றும் ரிதேஷ் தேஷ்முக்கின் நம்பர்கள் பளிச்சிடுகின்றன.

ஷாருக், "கரன் ஜோஹருக்கு போன் போடுங்க - நோக்கியா போன் தானே யூஸ் பண்றீங்க? பிராண்டிங் ரொம்ப முக்கியம்"

கரன் ஜோஹர் எடுத்துப் பேசுகிறார். சூர்யா எல்லாவற்றையும் விளக்குகிறார்.




ஷாருக், "கரன், நம்ம நாட்டுல இப்ப யாரு பிரதமரா இருக்காங்க? சோனியா, மன்மோகன், மம்தா, பிரணாப்"

கரன், "சோனியா மேடம் ரொம்ப பவர்புல், ஆனா அவங்க பதவியில இல்லை, மம்தா பிரணாப் ரெண்டு பேரும் அடிக்கடி டிவியில சத்தமா பேசறாங்க. ஸோ, மன்மோஹனாத்தான் இருக்கணும்.

ஷாருக், "ஹே தேங்க்ஸ் buddy, ஜெயிச்சிட்டு நேரா அங்க தான் வருவேன், வீ வில் பார்டி ஹார்ட்"

கரன், "பை"

ஷாருக், "பிக்ஸ் மன்மோகன்"

சூர்யா, "ஜீனியஸ், ஆப்ஷன் B பிக்ஸ் பண்ணுங்க - சரியான விடை 1250000 உங்களுடையதா ஆக்கியிருக்கீங்க"

பலத்த கரகோஷம் கிளம்புகிறது.

சூர்யா, "மன்மோகன் சிங் இந்தியாவின் தற்போதைய பிரதமர். தொடர்ந்து எட்டு வருஷங்களா இந்தியப் பிரதமரா இருந்து வருகிறார். 1991ல புதிய கொள்கைகள் மூலம் இந்தியாவுக்கு ஒரு புதிய முகத்தைக் குடுத்தவர். இப்பொழுது அதே கொள்கைகள் மூலம் நம்ம நாட்டை மறுபடியும் 1991க்கே திருப்பி அழைச்சிக்கிட்டுப் போறதுல மிகவும் முனைப்பா செயல்பட்டுக்கிட்டிருக்கார்"

ஷாருக், "ஒஹ் அப்படியா, நல்ல தகவல் குடுத்தீங்க"

சூர்யா, "அடுத்த கேள்வி, 25 லட்சத்துக்கானது, இதோ:

"இவர்களில் யார் கிங் கான் என்று அழைக்கப்படுபவர்?

A) ஷாருக் கான்
B) அமீர் கான்
C) அர்பாஸ் கான்
D) அம்ஜத் கான்

ஷாருக் மர்மப் புன்னகையுடன், "எனக்கு விடை தெரியும். இருந்தாலும் லைப் லைன் யூஸ் பண்ண விரும்பறேன் - ஆடியன்ஸ் போல்"

சூர்யா, "ஏன் சார், விடை தெரிஞ்சா லாக் பண்ணலாமே?"

ஷாருக், "இந்த கேள்விக்கு மக்கள் பதில் சொன்னாத்தான் பொருத்தமா இருக்கும்"

சூர்யா, "ஓகே ஆடியன்ஸ், உங்களுக்கான நேரம் ஆரம்பிக்குது. கவனமா வோட் பண்ணுங்க"

நேரம் முடிகிறது. திரையில் அதிகபட்ச விழுக்காடு ஆப்ஷன் A ஷாருக்கானிற்குக் கிடைத்திருப்பதாகப் காட்டுகிறது.

ஷாருக், "மக்களோட தீர்ப்புக்குத் தலை வணங்கறேன். அதையே லாக் பண்ணிடுங்க"

சூர்யா, "மிகச் சரி. 25 லட்சம் உங்களுடையது"




கைதட்டலும் விசிலுமாய் ஸ்டூடியோவே களை கட்டுகிறது.


சூர்யா, "அடுத்த கேள்வி, ஐம்பது லட்சத்துக்கானது. இதோ:

இவர்களில் "bhai" என்று செல்லமாக அழைக்கபடுபவர் யார்?

A) தாவூத்
B) அபு சலேம்
C) சோட்டா ஷகீல்
D) சோட்டா ராஜன்

ஷாருக் முதலில் திடுக்கிடுகிறார். பிறகு மனதிற்குள் "பய புள்ள, சமயம் பார்த்து காலை வாரறானே? இதுக்குச் சரியான பதில் சொன்னா நாளைக்கு நம்ம வீட்டு வாசலில் சிபிஐ விசாரணைக்கு வந்து நிக்குமே . பேசாம் எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்". தொண்டையை லேசாகக் செருமிக் கொண்டு, "நான் குவிட் பண்றேன்"

சூர்யா, "ஏன் சார், பதில் தெரியலையா? இல்லை, குழப்பமா இருக்கா?"

ஷாருக் சூர்யாவைக் கூப்பிட்டு ரகசியமாக, "யோவ், ஏன்யா இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டு பட்டனைப் போட்டு விடறீங்க? போலிஸ் வந்து என்னை ஆப்படிக்கறதுக்கா?"

சூர்யா புரிந்து கொண்டவராக, "25 லட்சம் ஜெயிச்சிருக்கார், குவிட் பண்றார். ப்ளீஸ்"

சூர்யா சிடி யூனியன் பேங்க் செக் எடுத்து கையெழுத்திடப் போகிறார். ஷாருக் குறுக்கிட்டு, "ICICI பேங்க் இல்லையா? சரி பரவால்ல, இந்த பேங்க் ஆளுங்களை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க. என் கூட அக்ரீமென்ட் போட்டாத்தான் இந்த செக்கை அவங்க பாங்க்ல டெபாசிட் பண்ணுவேன்"

சூர்யா ஒரு வினாடி அப்படியே ஷாக் ஆகிறார். பிறகு சுதாரித்துக் கொண்டு, " கிங் கான் இன்னிக்கு நம்ம நிகழ்ச்சியில 25 லட்சம் ஜெயிசிருக்கர். ஒரு "cause"க்காக விளையாடியிருக்கார்"

ஷாருக் சற்றே குழம்பியபடி, "ஆமாம், அடிக்கடி cause causeனு சொல்றியே? என்ன உன் கணக்கு?"

"சூர்யா, "நீங்க ஜெயிச்ச இந்தப் பணம் ஏழை மாணவர்கள் படிப்புக்கு உதவும்"

ஷாருக், "ஒஹ், நீ இங்கிலீஷ் "cause" பத்தி சொல்லிக்கிட்டிருந்தியா, நான் தமிழ் காசுன்னுல்ல இவ்ளோ நேரம் நினைச்சிக்கிட்டிருந்தேன்."

சூர்யா, "என்ன சார் இப்படிப் பேசறீங்க? பாவம் சார், ஏழைங்க சார், கல்வி சார்" லேசாகக் கண் கலங்குகிறார்.

ஷாருக் சற்றும் மதிக்காமல்,"தம்பி, இந்த டகால்ட்டி வேலையெல்லாம் இங்க வேணாம். நீயும் உன் தம்பியும் சம்பாதிக்கறதுல பத்து பெர்சென்ட் டொனேட் பண்ணினாலே ஒரு ஸ்கூல் நடத்திடலாம். இதுல என்னை மாதிரி வர்றவன் போறவன் கிட்ட வேற அடிப்பீங்களா?" அதுமட்டுமில்ல, தர்மத்துக்கு எந்தக் காரணமும் இருக்கக் கூடாது. காரணம் இருந்தால் அது தர்மமாகாதுன்னு குர்ரான்ல சொல்லியிருக்கு.எப்போ எங்கே தர்மம் பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். இப்போ ஒழுங்கு மரியாதையா செக்கை எடு"

சூர்யா டென்ஷனானாலும் சமாளித்தபடியே செக்கை வழங்குகிறார். ஷாருக் அதை ஸ்டைலாக வாங்கி பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்கிறார்.

சூர்யா, "சரி சார், இப்போ இந்தப் பணத்தை வெச்சு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?"

ஷாருக், " இவ்ளோ பெரிய தொகை ஜெயிச்சிருக்கோம், அதைக் கொண்டாட வேண்டாமா? நாங்க எல்லாரும் இங்கேர்ந்து மும்பைக்கு ஓபன் டிரக்ல போகப் போறோம். வழி நெடுக பாட்டு கூத்து கும்மாளம், கலை நிகழ்ச்சி, KKRக்கு பாராட்டு விழான்னு அமர்க்களம் பண்ணப் போறோம்"

சூர்யா ஆச்சர்யப்பட்டு, "சார், அதுக்கு நீங்க ஜெயிச்சதை விட இரண்டு மூணு மடங்கு பணம் செலவு ஆகுமே?"

ஷாருக், "ஆகட்டுமே, வாழ்க்கையை அனுபவிக்கணும் தம்பி, சம்பாதிக்கறதை செலவு பண்ணணும், செலவு பண்றதுக்காக சம்பாதிக்கணும், அதான் ஷாருக் பாலிசி"

சூர்யா விக்கித்து நிற்கிறார்.

ஷாருக் சற்றும் சளைக்காமல், "கமான் கேர்ல்ஸ், I need a hug" மறுபடியும் எல்லோரும் அவரை சூழ்ந்து கொள்கின்றனர். பின்னணியில் அதே "சம்மக் சல்லோ"பாடல் ஒலிக்கிறது. எல்லோரும் ஆடியபடி வெளியே செல்கின்றனர்.

Jayaraman
New Delhi

Monday, June 4, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!! பாகம் - 1


வணக்கம் நேயர்களே, இது உங்கள் அபிமான "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி. என்னதான் நான் மொக்கை போட்டாலும் அதையெல்லாம் தாங்கிக்கிட்டு எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தர்றீங்க. அதுக்கு உங்கள் எல்லாருக்கும் நன்றி" என்று சொல்லி விட்டு நமஸ்காரம் செய்ய எத்தனிக்கிறார், அந்த நேரத்தில் டைரக்டர் "ஐயா, இது அவார்ட் பங்க்ஷன் இல்லை, கொஞ்சம் அடக்கி வாசிங்க என்று அறிவுறுத்தவும் சுதாரித்துக் கொண்டு, "இன்னிக்கு நம்மளோட விளையாடப் போறவர், ஒரு பிரபலம். அதாவது எந்தப் பிரபலமும் இந்த அளவுக்கு பிரபலமாகியிருக்க முடியாது, அந்த அளவுக்குப் பிரபலம். பார்ப்பதற்குக் க்ராக் மாதிரி இருந்தாலும் தன்னுடைய நடவடிக்கைகளால் எல்லோர் மனதிலும் ப்ரேக் போடுபவர். இவர் பெயருக்கு "ராஜாவின் முகம்" என்றொரு அர்த்தம் உண்டு.

கான்ட்ரோவர்சியின் செல்லப் பிள்ளை, மீடியாவின் தத்துப்பிள்ளை - ஆடியன்ஸ், ப்ளீஸ் வெல்கம் பாலிவுட்டின் கிங் ஷாருக் கான்"

அப்பொழுது திடீரென ஸ்டூடியோவின் அனைத்து விளக்குகளும் அணைகின்றன. புகை மண்டலம் உருவாகிறது. பின்னணியில் "சம்மக் சல்லோ" பாடல் ஒலிக்கிறது. மேலிருந்து ஒரு ஒளி கீழ் நோக்கிப் பாய்கிறது. அதன் நடுவில் ஒரு கயிறு தென்படுகிறது. சூர்யா கொஞ்சம் அண்ணாந்து பார்க்கவும் ஒருவர் ஒரு கையில் IPL கோப்பை, மறு கையில் கயிறு என மலைக்கள்ளன் MGR ஸ்டைலில் கயிற்றைப் பிடித்தபடி கழுத்தை ஆட்டியபடி இறங்குகிறார். அவர் கீழே இறங்கவும் எல்லா விளக்குகளும் ஒளிர்கின்றன.

சூர்யா, "வணக்கம் சார், இவ்ளோ பெரிய ஸ்டார், எங்க ப்ரோக்ராமுக்கு வந்தது பெரிய சந்தோஷம். அதுவும் ஒரு பெரிய "cause"க்காக விளையாட வந்திருக்கீங்க.

ஷாருக்கான், "ஹெஏய், காசுன்னாதான் நான் எங்கயுமே வருவேன். ஐ லைக் இட் யூ நோ. நான் எப்பவுமே ஜனங்களின் கலைஞன், எங்க கூட்டம் இருந்தாலும் நான் இருப்பேன், நான் எங்க இருந்தாலும் அங்க கூட்டம் இருக்கும், யூ நோ"

சூர்யா, "சரி வாங்க சார் விளையாடலாம்"

ஷாருக், "ஒரு நிமிஷம், ஹே கேர்ல்ஸ், எல்லோரும் என்னை ஒரு தடவை ஹக் பண்ணுங்க, அப்போத்தான் என்னால விளையாட முடியும்". வழக்கம் போல ஒரு கும்பலே வந்து அவருடன் ஒட்டிக் கொள்கிறது.

பிறகு ஷாருக் சீட்டை நோக்கி நடக்கவும் சற்றே தடுமாறுகிறார். உடனே சூர்யா, "ஸ்டூடியோவுக்குள்ள எதுக்கு சார் ரேபான் க்ளாஸ்? கழட்டுங்க"

ஷாருக், "கழட்டறதா? விளம்பரம் தம்பி, எப்பொழுதும் போட்டுக்கிட்டே இருக்கணும். அதுக்குத் தான் அஞ்சு கோடி குடுக்கறான். கரண்ட் போனாலும் நான் கண்ணாடியக் கழட்டமாட்டேன்"

தட்டுத் தடுமாறி சீட்டில் உட்கார்கிறார். முன்னால் லெனோவோ LCD திரை ஒளிர்கிறது, "இந்தக் கம்பெனியோட எனக்கு அக்ரீமென்ட் இல்லையே, போகும்போது போன் நம்பர் குடுங்க, இன்னும் ஒரு இரண்டு கோடி தேத்திடணும்"

சூர்யா மனதுக்குள், "இவன் நம்மள விட உஷாரா இருப்பான் போலிருக்கே". பிறகு சிரித்துக்கொண்டே, "பயங்கர தமாஷான ஆளு சார் நீங்க. ஜோக் அடிச்சிக்கிட்டே இருக்கீங்க"

ஷாருக், "ஜோக்கா? இரு போகும்போது கவனிச்சுக்கறேன்"

சூர்யா, "இன்னைய தேதிக்கு நீங்க தான் ஹாட் டாபிக், IPL வெற்றிக்காக நீங்க கல்கத்தாவில் நடத்திய திருவிழாவைப் பார்த்து எல்லாரும் வாய் பிளந்து நிக்கறாங்க"

ஷாருக், "அதுக்குக் காரணம் ரஜினி சார் தான், அவர் சிவாஜி படத்துல சொல்ற "பேரைக் கேட்டவுடனே சும்மா அதிருதுல்ல" டயலாக் என்னை ரொம்பவே மோடிவேட் பண்ணிடுச்சு. அதான் என் பேரைக் கேட்டாலும் எல்லாருக்கும் சும்மா அதிரணும்னு முடிவு பண்ணித் தான் எந்த வேலையும் செய்வேன்"

ரஜினி பேரைக் கேட்டதும் எல்லோரும் கை தட்டுகின்றனர். அது தனக்குத் தான் என நினைத்துக் கொண்டு தேர்தல் வேட்பாளர் போல் கையை எல்லாப் பக்கமும் ஆட்டுகிறார்.

சூர்யா, "சரி சார், விளையாட ஆரம்பிப்போமா? ரூல்ஸ் எல்லாம் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கறேன்.."

ஷாருக், "யா யா யா,,,,மொத்தம் 15 கேள்விகள், ஒவ்வொரு கேள்விக்கும் பைசா டபிள் ஆவும், மூணு லைப் லைன், கூடவே மணியண்ணன் வருவாரு - - இதானே? "

எல்லோரும் வியந்து கை தட்டுகின்றனர்.

ஷாருக், "சூர்யா, ரொம்ப தாகமா இருக்கு, இளநீர் கிடைக்குமா?"

"இருக்கே, ஆனா நீங்க ஸ்ப்ரைட் தானே குடுப்பீங்க?"

"அது விளம்பரத்துல மட்டும் தான். ஒண்ணு செய்ங்க, இளநீரை ஸ்ப்ரைட் பாட்டிலில் ஊத்திக் குடுத்துடுங்க - ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் "

சூர்யா பேஜாராகி பார்க்கவும், ஷாருக், " கமான் யா, இதெல்லாம் பிசினெஸ் நேக், கேள்வியை ஸ்டார்ட் பண்ணு"

சூர்யா, "ஆயிரம் ரூபாய்க்கான முதல் கேள்வி, இதோ உங்கள் முன்னால்"

"கோடிட்ட இடத்தை நிரப்புக - இட்லிக்கு ________, இல்லாங்காட்டி பட்டினி - உங்கள் ஆப்ஷன்ஸ்:
A) சாம்பார்
B) மிளகாய்பொடி
C) தொக்கு
D) சட்னி

ஷாருக் சற்றும் யோசிக்காமல், "பிக்ஸ் சட்னி"

சூர்யா 'சரியான விடை, 1000 உங்களுடையது - இட்லி சட்னி சாப்பிட்டிருக்கீங்களா?

ஷாருக், "நிறைய, ஐ லவ் சவுத் இந்தியன் ஐட்டம்ஸ். அதுவும் கெளரி செஞ்ச இட்லின்னா இன்னிக்கெல்லாம் சாப்பிடலாம்

சூர்யா, "அவ்ளோ ருசியா இருக்குமா?"

ஷாருக், "அவ்ளோ ரப்பர் மாதிரி இருக்கும். முழுசா சாப்பிட ஒரு நாள் வேணும்"

கெளரி ஷாருக்கை செல்லமாக முறைக்கவும் ஷாருக், "சாரி, இப்படித் தான் உண்மையைப் பேசி அடிக்கடி வம்புல மாட்டிக்கறேன்"

சூர்யா புன்முறுவலுடன், "அடுத்த கேள்வி 2000 ரூபாய்க்கு, இதோ: சென்னையிலிருந்து டெல்லி 2000km தொலைவில் உள்ளது. அப்படியானால் டெல்லியிலிருந்து சென்னை எவ்வளவு தூரத்தில் உள்ளது? உங்க ஆப்ஷன்ஸ்:
A) 2000
B) 3000
C) 4000
D) 1000

ஷாருக், "ஹெஹெஹ், பிக்ஸ் ஆப்ஷன் A 2000"

சூர்யா, "சரியான விடை, 2000 உங்களுடையது"

ஷாருக் வழக்கம்போல் சிரித்துக்கொண்டே பெருமையாகப் பார்க்கிறார்.

சூர்யா, "5000 ரூபாய்க்கான மூன்றாவது கேள்வி இதோ: இவர்களில் யார் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரர்? உங்கள் ஆப்ஷன்ஸ்:
A) கமலஹாசன்
B) ரஜினிகாந்த்
C) அமிதாப் பச்சன்
D) ஷாருக் கான்

ஷாருக், "இதெல்லாம் ஒரு கேள்வியா? ரஜினி ரஜினி ரஜினி தான்"

சூர்யா, "சரியான பதில், 5000 உங்களுடையது"

சூர்யா, "10000 ரூபாய்க்கான நான்காவது கேள்வி இதோ:IPL அணியான KKR என்பதன் விரிவாக்கம் என்ன? உங்கள் ஆப்ஷன்ஸ்:
A) கான்பூர் கைட் ரைடர்ஸ்
B) கல்கத்தா கிட்ஸ் ரைடர்ஸ்
C) காளி கோலா ரைடர்ஸ்
D) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஷாருக், சிரித்துக்கொண்டே, "ஆப்ஷன் D தவிர வேற எதுவும் சரியா இருக்க முடியாது. பிக்ஸ் இட்"

சூர்யா, "உறுதிப்பணம் 10000 ரூபாய் உங்களுடையது" எல்லோரும் கை தட்டுகின்றனர். வழக்கம் போல எல்லோரையும் பார்த்து கை அசைக்கிறார் ஷாருக்.


சூர்யா நேயர்களைப் பார்த்து, "கிங் கான் ஷாருக்குடன் இன்னிக்கு விளையாடிக்கிட்டிருக்கோம். 10000 ஜெயிச்சிருக்கார். டக்கு டக்குன்னு பதில் அடிச்சிக்கிட்டே இருக்காரு" பிறகு ஷாருக்கைப் பார்த்து, "உங்க குடும்பம் கூட இங்க வந்திருக்காங்க போலிருக்கு?'

ஷாருக், "யா யா யா, என் குடும்பம், என் டீம், எல்லாரும் வந்திருக்காங்க. அங்க பாருங்க. கவுதம் இங்க கூட பேடைக் கழட்டாம உட்கார்ந்திருக்காரு"

சூர்யா, "ஹாய், கவுதம், என்ன இங்கயும் அதே செண்டிமெண்டா?"

கவுதம், "யா, கல்கத்தா டீம் எங்கும் எதிலும் தோற்கக் கூடாது"

சூர்யா ஷாருக்கைப் பார்த்து, "ஒரு விஷயம் சொல்லுங்க, IPL போட்டி ஒரு தனியார் போட்டி. அதில ஜெயிச்சதுக்கு இப்படி ஒரு அமளி தேவையா?"

ஷாருக், "ஒரு வேளை நான் தோத்திருந்தா உங்க ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும்? ஷாருக் டீம் சுத்த வேஸ்ட்னு நினைச்சிருப்பீங்க. அதிகாரமுள்ள டீமெல்லாம் ஒவ்வொரு தடவையும் எதாவது பண்ணி அட் லீஸ்ட் செமி பைனல் வரைக்குமாச்சும் வந்துடறாங்க. நாலு வருஷமா நாங்க பட்ட வலியும் வேதனையும் எங்களுக்குத் தான் தெரியும். அதை உங்களால புரிஞ்சுக்க முடியாது" லேசாகக் கண் கலங்குகிறார். பிறகு சுதாரித்துக் கொண்டு, "பாருங்க, நான் சாதாரண மனுஷன். கோபம், அழுகை. சிரிப்பு எல்லாம் எனக்கும் உண்டு. எனக்கு எதையும் மறைக்கத் தெரியாது"

சூர்யா சிறிது நேரம் அவரை உற்றுப் பார்க்கிறார், பிறகு கை தட்டுகிறார். மக்களும் கை தட்டுகின்றனர்.

சூர்யா, "அடுத்த கேள்விக்குப் போவோமா? அடுத்த கேள்வி 20000 ரூபாய்க்கு. இதோ:

இவற்றில் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் எது?
A) டெல்லி
B) சென்னை
C) பெங்களுரு
D) மும்பை

ஷாருக் சற்றும் தயங்காமல், "மும்பை...மேரி... ஜான்... ப்ளீஸ் லாக் ஆப்ஷன் D"

சூர்யா, "சரியான பதில், 20000 உங்களுடையது"

ஷாருக் சூர்யாவிடம் ரகசியமாக, "உங்க காமெராக்காரர் கிட்ட என் போன், வாட்ச் எல்லாத்தையும் அப்பப்ப க்ளோசப் எடுக்கச் சொல்லுங்க. இல்லேன்னா அக்ரீமென்ட் கான்ஸல் ஆயிடும்.

சூர்யா யாரிடமோ சைகை காட்டுகிறார். அவரும் புரிந்த மாதிரி தலை ஆட்டுகிறார்.

சூர்யா, "அடுத்த கேள்வி, 40000 ரூபாய்க்கு, இதோ உங்கள் திரையில்:

இவற்றில் ரசகுல்லாவிற்குப் புகழ்பெற்ற நகரம் எது?
A) மைலாப்பூர்
B) மாம்பலம்
C) தாம்பரம்
D) கொல்கத்தா

ஷாருக், "கடைசி ஆப்ஷனை பிக்ஸ் பண்ணிடுங்க"

சூர்யா, "சரியான விடை 40000 உங்களுடையது"

ஷாருக், "என்னா மேன் எல்லாம் சில்லரைக் கேள்வியா இருக்கு"

சூர்யா, "நீங்க ஒரு "cause "க்காக விளையாடறீங்க. அதனால எவ்ளோ நிறைய ஜெயிக்கறீங்களோ அவ்ளோ நல்லது"

ஷாருக், "ஆமாமாம், காசு எப்பவுமே நல்லது தான்"

சூர்யா, "80000 ரூபாய்க்கான அடுத்த கேள்வி இதோ:

"பாரிஸ் நகரம் எந்த நாட்டில் உள்ளது?"
A) லண்டன்
B) இந்தியா
C) பிரான்ஸ்
D) அமெரிக்கா

ஷாருக், "ஹிஹிஹெய், ஸில்லி பாய், பிரான்ஸ் லாக் கரோ"

சூர்யா, "சரியான பதில், 80000 உங்களோடது"

மறுபடியும் ஒரு ரவுண்டு கை ஆட்டல் - கோணல் சிரிப்புடன்.

சூர்யா, "இன்னொரு விஷயம் கேக்கணும், மும்பை ஸ்டேடியம்ல என்னா தான் சார் நடந்தது? அப் கோர்ஸ் அதுக்கு நீங்க சென்னையில மன்னிப்பும் கேட்டீங்க "

ஷாருக், தலையைக் கோதியவாறே, "நான் எந்த தப்பும் பண்ணல. என் கூட வாக்குவாதம் பண்ணியவர் என்னைவிட வயசில பெரியவர், அதனால மன்னிப்பு கேட்டேன். இல்லேன்னா நானாவது மன்னிப்பு கேட்கறதாவது?? ரா ஒன் மாதிரி படம் எடுத்ததற்கே நான் யார் கிட்டயும் மன்னிப்பு கேட்கல, இதெல்லாம் பிஸ்கோத்து மேட்டர்"

சூர்யா, "ஒரு விஷயம் நான் கவனிச்சிருக்கேன், எந்நேரமும் மீடியா உங்களை சுத்தியே இருக்கு"

ஷாருக் ,"அதை அவாய்ட் பண்ண முடியாது. எங்களுக்கு அவங்க வேணும் அவங்களுக்கு எங்களை மாதிரி செலிப்ரிடிஸ் வேணும். ஐஸ்வர்யா ராய் உண்டானதுக்கும் பிரேக்கிங் நியூஸ் போட்டாங்க, இப்போ அவங்க குண்டானதுக்கும் பிரேக்கிங் நியூஸ் போடறாங்க."

மக்களிடையே பலத்த கரகோஷம் கிளம்புகிறது.

சூர்யா, "சரி சார், அடுத்த கேள்விக்குப் போவோம். 160000 ரூபாய்க்கானது, இதோ உங்கள் திரையில்:

இவர்களில் யாருடன் உங்களுக்கு, அதாவது நடிகர் ஷாருக்கானிற்கு வெறுப்பு அதிகம்?
A) சல்மான் கான்
B)...

அப்பொழுது திடீரென ஒரு சத்தம், சூர்யா பதறிபோய் "ஐயோ சார், என்ன காரியம் பண்ணிட்டீங்க?"

ஷாருக் என்ன செய்தார்? நடந்தது என்ன? அடுத்த எபிசோடில்....



Related Posts Plugin for WordPress, Blogger...