Thursday, December 29, 2011

தோனியின் ராஜவேட்டை: இந்தியாவின் ஆஸ்திரேலியப் படையெடுப்பு (பாகம் 2)


வேதனை... அவமானம்.... வெட்கம்!

இப்படித்தானே நீங்க இப்ப பீல் பண்ணிக்கிட்டிருப்பீங்க? இப்பவே அடுத்த மேட்சுக்கு இவரை எடுக்கணும் அவரை தூக்கணும்னு எங்களை விட ஜாஸ்தியா கவலைப் பட்டுண்டிருப்பீங்களே? உங்க ஆராய்ச்சிக்குள்ள நான் வர விரும்பல. ஏன்னா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பீல்ட்ல எவன் இறங்குவான்றது தமிழ்நாட்டுல புயல் வர்ற மாதிரி. சென்னையைத் தாக்கப் போவுதுன்னு சொல்லுவாங்க. ஆனா நாகப்பட்டினம் போயிடும். இருந்தாலும் சில விஷயங்களை உங்ககிட்ட சொல்லியே ஆகணும்.

250க்கு மேல லீட் போயிட்டா இந்தியர்களால ஜெயிக்க முடியாதுன்னு பான்டிங் பேட்டியில சொன்னப்போ உங்களை மாதிரியே எனக்கும் ரத்தம் கொதிச்சுது. ரெண்டு நாள் கையில இருக்கு. இருநூறு முன்னூறு ரன்கள் அசால்ட்டா அடிக்கற பேட்ஸ்மேன்கள் நம்ம கிட்ட இருக்காங்க. 292ல்லாம் ஒரு ஸ்கோரா - அப்படித்தாங்க நாங்களும் நம்பிக்கையா இருந்தோம். ஆனா பாருங்க, மெகா சொதப்பலாயிடுச்சு. சரி விடுங்க, வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்.

"எங்க ஏரியா, உள்ளே வராதே" - எல்லாரும் அவங்கவங்க ஊர்ல நல்லாவே ஸீன் போடறாங்க. வீட்ல புலி வெளியில எலின்றது எழுதப்படாத விதி ஆயிடுச்சு. இதே ஆஸ்திரேலியா கொஞ்ச நாள் முன்னாடி சவுத் ஆப்ரிக்கா கிட்ட ஒரு டெஸ்ட் மேட்ச்ல தடவினதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவ்வளவு ஏன், போன வருஷம் இவங்க இந்தியா வந்தப்போ நம்ம கிட்ட அடி வாங்கினதை வரலாறு தெரிந்தவர்கள் நன்றாக அறிவர். அறிந்தவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. அறியாதவர்களுக்கு சொல்லிப் பயனில்லை (ஐயோ, கலைஞர் அறிக்கை மாதிரி இருக்கே!)

கிரிக்கெட் ஒரு டீம் விளையாட்டு. அதுல சூரியன், சந்திரன், நட்சத்திரம்னு யாரும் கிடையாது - மெல்போர்ன் தோல்வி இதை மறுபடியும் நிரூபிக்குது. கோஹ்லி மாதிரி இள ரத்தமும், லக்ஷ்மன் மாதிரி அனுபவசாலிகளும் சரி சமமா சொதப்பறாங்க



அஷ்வின் ரெண்டு இன்னிங்க்சிலும் 30 ரன் அடிச்சிருக்கார். இஷாந்த் ஷர்மா சும்மா கன் மாதிரி நின்னு 70 பால் face பண்ணியிருக்கான். இவங்களால ஒரு பத்து ரன் கூட அடிக்க முடியலை - நியாயமான வாதம். மேல சொன்னது தான் இதுக்கு சரியான பதிலா இருக்கும். எல்லாரும் விளையாடினாத் தான் ஜெயிக்க முடியும். ஒன் மேன் ஷோ கதைக்கு உதவாது.

வழக்கம் போல நானும் சரியா ஆடலை. ஆங்கில நாடுன்னாலே பேட் ஒரு ஆங்கிள்ல போவுது - அடுத்த வருஷமாவது ஒழுங்கா ஆடணும்

நான் பேட்டியில சொன்ன மாதிரி நம்ம ஆரம்பம் எப்பவுமே கொஞ்சம் சிக்கலாத் தான் இருக்கும். ஆனா கண்டிப்பா இங்கிலாந்து டூரோட ரெண்டாம் பாகம் மாதிரி இந்த டூர் இருக்காதுன்னு திடமா நம்பறேன் - நம்பிக்கை, அதானே எல்லாம்!! (சத்தியமா கல்யாண் ஜுவல்லர்ஸுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை)

வேர்ல்ட் சாம்பியன்ஸ் ஆன பிறகு நம்ம டீம் மேல எதிர்பார்ப்பு ரொம்ப எகிறியிருக்கு. அந்த கோப்பைக்கு நாம நிஜமாவே தகுதியானவங்க தான் அப்படின்னு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துல ஆளாகியிருக்கோம்.



வழக்கமா ஒரு டீம்ல நாலு பேர் நல்லா ஆடினா யாரை எடுக்கறதுன்னு குழப்பம் வரும். இங்க என்னடான்னா எவனை எடுத்தாலும் குளறுபடி பண்றான். இப்போ கோஹ்லி நல்லா ஆடலைன்னு அவனை அடுத்த டெஸ்ட் உட்கார வெச்சிட்டு வேற யாரையாச்சும் எடுத்தா "ஒரு மேட்ச்ல ஆடினதை வெச்சிக்கிட்டு நீங்க எப்படி அவரை ஜட்ஜ் பண்றீங்க? அவருக்கு இன்னொரு வாய்ப்பு குடுங்க"ன்னு சொல்லுவாங்க. ரெண்டாவது டெஸ்ட்ல கோஹ்லி ஆடிட்டா பரவால்ல. இல்லேன்னா "ரோஹித் இருக்கும்போது மறுபடியும் ஏம்பா கோஹ்லிய எடுத்தாங்க, பாலிடிக்ஸ் பண்றாங்க" அப்படின்னு இன்னொரு க்ரூப் சொல்லும்.



இந்தத் தோல்வி சரியான நேரத்தில் அடிக்கப்பட்ட ஒரு அலாரம். டிராவிட், லக்ஷ்மன், சச்சினுக்கு அப்புறம் நாம் இன்னும் ஒரு நம்பிக்கையான டெஸ்ட் பிளேயரைக் கூட உருவாக்கலைன்னு தெளிவாத் தெரியுது - இவங்க மூணு பேர் இல்லாம ஒரு டெஸ்ட் விளையாடிப் பாக்கணும் (நினைச்சுப் பார்க்கவே திகிலா இருக்குல்ல?).

சுருக்கமாச் சொன்னா, இந்த அக்நீபத் சீரீஸ் இந்தியன் டீமுக்கு ஒரு அக்னிப் பரீட்சை. இதுல ஜெயிச்சு வெளிய வரப்போறோமா, இல்லை பஸ்மம் ஆகப் போறோமா - இனி வரும் நாட்கள் தான் பதில் சொல்லும்.

எனக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி - "இந்தியன் டீம் வெளிய பாக்கறதுக்கு Gross Salary மாதிரி பிரமாதமா இருக்கு. பீல்ட்ல இறங்கும்போது Net Salary மாதிரி சுருங்கிடுது" - இது உண்மையாயிடுச்சுன்னா அதை விட அசிங்கம் வேற எதுவும் இல்லை.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அடுத்து, சிட்னில டிக்கிலோனா!!

Jayaraman
New Delhi

Tuesday, December 27, 2011

Cricket commentary - Aussie style

Listening to some of the Aussie commentators on Channel 9, one would think that Rahul Dravid was legitimately out and that Technology had been used to reverse a legitimate decision! Mate, Siddle bowled a No Ball and did not deserve a wicket of the ball, get that? I know we all love winning and some like to win at any cost, but this is stretching the limit. A No Ball is a No Ball. Full stop! Always was, always will be. You can't take a wicket off a No Ball, simple as that!

I strongly support the DRS and believe that BCCI has made a mistake by not opting for it and may still pay a heavy price over this. When technology is available, umpiring errors should not allowed to determine the fate of the players and the match. Remember Ponting not given out at 97 at MCG 2003 and Symonds at SCG 2008 and Hussey being given out on Day 1, MCG 2011?

The argument is that because BCCI refused the use of DRS, India should not get the benefit of no-ball line calls. Guys this is the umpire's discretion and was used to check when Haddin was out as well. What next, no 3rd umpire calls for run outs? Will a win caused by taking wickets off no-balls and non-existent run outs cause joy? (Also please remember that the players still need to select to use DRS and by all counts Ed Cowan would have not asked for DRS as Haddin thought he was out.)

A section of the Australian media is behaving like my six year old who has been denied a lolly. Yes, the BCCI refused the use of DRS, but the ICC ruling is that both teams need to agree. If the ACB has a problem with this, it needs to be raised with the BCCI and the ICC. If the BCCI has more clout at the ICC than the ACB, this needs to be dealt with. Don't forget, not long ago, the ICC was ruled by the ECB and the ACB. I so miss the sane voice of Peter Roebuck!

Sai Mahesh
Sydney

Monday, December 26, 2011

The curious case of the BCCI and the DRS

I for one can't fathom why the BCCI steadfastly refuses to embrace the DRS! There were three decisions yesterday that would have been overturned by DRS. A debutant would not have felt cheated out of a well-deserved hundred and a valiant veteran cheated out of a career. By the same token, India would be further into the Aussie tail. Incorrect umpire decisions must not be allowed to alter the course of a game and the career of cricketers. As a spectator, it leaves a bitter taste in the mouth.

It does not matter who has the overall gain. The situation could change today and a few more decisions could go against the Indians. What matters is that the umpires are human and there is technology available to the players to dispute decisions when they feel wronged! Hot spot, snicko meter and ball trajectory are based on science and offer both teams equal opportunities to question the umpires decision. The technology may not be a 100% accurate but it is better than relying solely on the umpire. I am sure the umpires feel less pressure when there is DRS available.

I was at the MCG in 2003 when Ponting clearly nicked one on 97 and went on to score 257 and who can forget the 2008 SCG Test where Symonds clearly nicked one and went on to score a century. DRS gives both teams an opportunity to ensure that such blatant errors are not allowed to change the course of a Test and a series. The argument that umpiring mistakes are part and parcel of the game and they even out in the long run, do not hold water. These views might have had limited value in the past but are no longer valid in light of technology. Sports need to embrace technology to keep up with the times and to entice spectators.

BCCI has a history of not embracing new trends - remember BCCI's steadfast opposition to T20! they even allowed an alternate league to flourish before the embraced the T20 spectacle. Will it take Sachin Tendulkar to be wrongly given out on 99 for BCCI to change its stance on DRS?

Sai Mahesh
Sydney

Sunday, December 25, 2011

Boxing Day Test, MCG 2011 preview

As I am sitting in Sydney, in front of my TV, waiting for the Boxing Day Test to begin, I can't but miss Peter Roebuck's article in the Sydney Morning Herald. For the last 9 summers, I have read every single Peter Roebuck article and more often than not agreed with him. Here is my attempt to write an article in a similar vein.

The title would read "The late of two mis-selections". Lets start with Australia. The selection of Ricky Ponting and the omissions of Simon Katich and Usman Khwaja defy logic. Ricky Ponting is long past his due by date and should have gracefully retired. That the selectors led by Inverarity have lacked the courage to tap Ponting on his shoulder may come back to haunt the Aussies. He is a sitting duck and I for one won't be surprised if he his Ishant's bunny through this series! Usman Khwaja has shown great technique and deserved to be persisted with. If experience and form is a factor, Simon Katich (based on his average over the last 2 years) should have been an automatic selection! If Australia loses this game, Inverarity and his team have a lot to answer.

A look at the Indian bowling and one is surprised at the Indian selectors selecting a half fit Zaheer Khan and Ishant Sharma in the same team. Both have them have shown a penchant for falling apart during critical games. God forbid both of them break down during this critical Boxing Day test, and India will be left playing this game with no new ball bowlers. This will lead to Ponting and Hussey coming back to form! If India wanted to play both, it would have been logical for an in-form Irfan Pathan to be selected in the middle order instead of Kohli. This would reduce the pressure on the two frontline bowlers while giving a solid five man bowling attack. Irfan is not a bad middle order batsman - remember the 50 he scored as a opener in his man-of-the-match performance at the Perth Test in 2009?
If India fail to win their forst ever series in Australia against a fragile Australian team that has got out to 47 against SA and lost their first home test against NZ since 1986, Srikanth and Dhoni will need to take the blame.

According to me, the fitness of Zaheer Khan and Ishant Sharma and the frailty of the Australian batting order will determine the course of this match and the series. Sit back and relax and wait for the first ball to be bowled!

Sai Mahesh
Sydney

Wednesday, December 21, 2011

தோனியின் ராஜவேட்டை: இந்தியாவின் ஆஸ்திரேலியப் படையெடுப்பு (பாகம் 1)



வணக்கம், நான் தான் உங்க தோனி பேசறேன். டைட்டிலைப் படிச்சிட்டு மிரண்டோ அல்லது கடுப்போ ஆகாதீங்க. எல்லாம் ஒரு விளம்பரம் தான். நீ வாங்கற பத்து, அஞ்சு பிச்சைக்கு இது தேவையான்னு கவுண்டர் ஸ்டைலில் கேக்காதீங்க. அதெல்லாம் ஒரு பெப்பப்புக்காக போடறது. லோக்கலா சொன்னா மூடு கிரியேட் பண்றதுக்காக!

இங்கிலாந்து டூர்ல இருக்கும்போது உங்களோடு பேசினது. அதுக்கப்புறம் இப்பத் தான் பேசறேன்னு நினைக்கறேன். லண்டன்ல அடி வாங்கி ஓய்ந்து போன எங்களுக்கு அவங்களை நம்மூருக்கு வரவழைச்சு நல்லா அடிச்சு அனுப்பினதுல ஒரு சின்ன சந்தோசம். வெஸ்ட் இண்டீஸ் கூட ஜெயிச்சது கூடுதல் சந்தோசம். இந்த சின்னச்சின்ன வெற்றிகள் மனதுக்கு நிறைய தெம்பைக் குடுத்திருக்கு. அதுவுமில்லாம சிம்ம ராசிக்கு ஏழரைச் சனி முடிஞ்சிடுச்சாம். இனிமே எல்லாம் நல்லதே நடக்கும்னு எல்லாரும் ஆருடம் சொல்றாங்க. ஒரு குத்துமதிப்பான டீமை வெச்சிக்கிட்டு ஆஸ்திரேலியாவுல கிரிக்கெட் ஆட வந்த எனக்கு இதை விட உற்சாகம் தரக்கூடிய செய்தி என்ன இருக்கும் சொல்லுங்க!! - சனீஸ்வரா போற்றி!

உங்களை மாதிரியே நானும் இந்த ஆஸ்திரேலியா டூரை ரொம்ப எதிர்பாக்கறேன் - ஒரு ரசிகனாக, ஒரு வீரனாக. வழக்கம் போல இந்த டூருக்கும் ஏதோ உலகப் போர் நடக்கப் போற மாதிரி பில்ட் அப் குடுக்கறாங்க நம்ம மீடியா அன்பர்கள். ஸ்டார் கிரிக்கெட் "அக்நீபத் சீரீஸ்" அப்படின்னு விளம்பரம் பண்றாங்க. இதை சாக்கா வெச்சு "அக்நீபத்" ஹிந்திப் படத்தை ப்ரொமோட் பண்றாங்க. முழு டூருக்கான விளம்பர ஸ்பாட்டுகள் எல்லாத்தையும் அவங்க வித்துட்டதா பேப்பர்ல படிச்சேன். - வாழ்க கிரிக்கெட்! (btw, எந்த நம்பிக்கையில கரன் ஜோஹர் அமிதாப்ஜி நடிச்ச படத்தை ரித்திக் ரோஷனை வெச்சு ரீமேக் பண்றாருன்னு தெரியல -ஆனா கத்ரீனா கைப் மட்டும் செம க்ளாமர்)

அவரை ஏன் எடுக்கலை, இவரை ஏன் எடுத்தாங்கன்னு பட்டிமன்றமே நடத்தறாங்க. சாலமன் பாப்பையாவை விட்டு தீர்ப்பு சொல்லச் சொல்லுவாங்க போல.அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு மீட்டர் எகிறியிருக்கு. இது நல்லதா கெட்டதான்னு எனக்கு சொல்லத் தெரியல. ஆனா இந்த மாதிரி டிஸ்கஷன் எனக்கு பழகிடுச்சு.

இங்கிலாந்து டூர்ல பண்ணின தப்பை இந்த தடவை பண்ணிடக் கூடாதுன்னு நான் ரொம்ப குறிப்பா இருந்தேன். பத்து நாளைக்கு முன்னாடியே இங்க வந்ததுல கிளைமேட் நல்லா செட் ஆயிடுச்சு. இரண்டு ப்ராக்டீஸ் மேட்ச் ஆடினது நிறைய தன்னம்பிக்கையை குடுத்திருக்கு.



ரெண்டு டீமும் ஏறத்தாழ சரி சமமா இருக்கறதால போட்டிக்கும், சில ரசாபாசங்களுக்கும் குறைவிருக்காதுன்னு நல்லாத் தெரியுது. அவங்க டீம்ல பேட்ஸ்மேன் சரியில்ல. நம்ம டீம்ல பௌலிங் சரியில்ல. இரண்டு பக்கமும் இஞ்சுரி கேசுங்க நிறையவே இருக்கு. ஸோ, யாரு களம் இறங்குவாங்க, யாரு உட்காருவாங்கன்னு முடிவு பண்றது மேட்சை விட விறுவிறுப்பா இருக்கும் போலிருக்கு.

ஆரம்பமே அலைக்கழிப்பா இருக்கற மாதிரி இஷாந்த் ஷர்மாவுக்கு காயம் ஆயிடுச்சு. ஏம்பா, உனக்கு நிஜமாவே காயம் பட்டிருக்கா, உன்னால ஆட முடியுமான்னு கேட்டா, "முடியும்... ஆனா முடியாது" அப்படின்னு என்னை வெச்சு காமெடி பண்றான்.



சச்சின் தன்னோட நூறாவது சதத்தை அடிக்கறதுக்கு இதை விட சூப்பரான ஆடுகளம் அமையாது. நல்ல வேளை அவர் இந்தியாவுல அடிக்கலை. இல்லேன்னா உள்ளூர்ல அடிச்சிட்டு பெருமை பேசறார்னு சொல்லுவாங்க. அப்படியே ஒரு நாள் போட்டியிலும் ரெண்டு செஞ்சுரி போட்டு இரண்டிலேயும் 50 செஞ்சுரி போட்ட ஒரே ஆளுன்னு பேர் வாங்கிடுங்க பாஸ்!. ஆனா சில விளங்காத பயலுவ சச்சின் செஞ்சுரி அடிக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. அடிச்ச உடனே "இந்தாளு செஞ்சுரி அடிச்சா மேட்ச் விளங்கின மாதிரி தான்" அப்படின்னு சொல்லிட்டுப் போயிடுவாங்க - திருந்தாத ஜென்மங்கள்!!

உமேஷ் யாதவ் மாதிரி புதுமுகங்களுக்கும் லக்ஷ்மன், திராவிட் மாதிரி விற்பன்னர்களுக்கும் இது ஒரு நல்ல தொடரா இருக்கும்னு நம்பறேன். குறிப்பா லக்ஷ்மனுக்கு ஆஸ்திரேலியான்னா அல்வா சாப்பிடற மாதிரி.

அவங்கள்லாம் அடிக்கறது இருக்கட்டும், நீ என்ன பண்ணப் போறேன்னு கேக்கறீங்களா? முடிஞ்ச வரைக்கும் எஜ்ஜ் வாங்கி ஸ்லிப்ல அவுட் ஆகாம இருக்கணும்னு பாக்கறேன். கடவுள் அனுக்கிரகம் இருந்தா ஒரு செஞ்சுரி இல்லேன்னா ஒரு அம்பது. அதுக்கு மேல எல்லாம் நான் ஆசைப்படறது இல்லை. இதை விட முக்கியம், விக்கெட் கீப்பிங் பண்ணும்போது கேட்ச் எதையும் விடக் கூடாது. இல்லேன்னா அவ்ளோ தான், சடை பின்னி பூ வைச்சிட்டுப் போயிடுவாங்க நம்ம மீடியா மக்கள்.

2015 உலகக்கோப்பையில நான் ஆடுவேனாங்கறது 2013ல தான் தெரியும்னு தெரியாத்தனமா ஒரு ப்ளோவுல சொல்லிட்டேன். மக்கள் எல்லாரும் அதையே பிரிச்சு மேய ஆரம்பிச்சுட்டாங்க. நாம ஒண்ணு சொன்னா அவங்க ஒண்ணு புரிஞ்சுக்கறாங்க. என்னத்தைச் சொல்ல?

இதே மாதிரி பிராட்மன் ஓரேஷன்ல டிராவிட் பேசின பேச்சுக்கும் விதவிதமா அர்த்தம் கற்பிக்கறாங்க. ஆனாலும் மனுஷன் ஒரு நெருப்பு மாதிரி பேசினார் அன்னிக்கு. அந்தப் பேச்சு சம்பந்தப்பட்டவர்களை கண்டிப்பா யோசிக்க வைச்சிருக்கும்.

சச்சின் ரெகார்ட் பண்ணுவார், சேவாக் ரெகார்ட் பண்ணுவார்னு எல்லாரும் ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க. ஆனா என்னோட, இல்ல இல்ல, நம்ம டீமோட ஒரே குறிக்கோள் - டெஸ்ட் மேட்சா இருந்தாலும் காலையில நாலு மணிக்கு எழுந்து பாக்கறானே என் இந்திய கிரிக்கெட் ரசிகன், அவனை ஏமாத்தக் கூடாது. டவுன் அண்டர்ல விளையாடப் போய் டவுன் ஆகி அப்புறம் அண்டர்ல போயிடக்கூடாது.

அடுத்த ரெண்டு மாசத்துக்கு நீங்களும் என்னோட ஆஸ்திரேலியாவுல பயணம் பண்ணத் தயாரா இருப்பீங்கன்னு நம்பறேன்.



ஆஸ்திரேலியா உங்களை அன்புடன் வரவேற்கிறது!!

Jayaraman
New Delhi

Saturday, December 17, 2011

A Honest Build up for the Tour Down Under

At the start of 2011 every Indian cricket fan must have marked his calendar for three important events involving India. The World Cup, India’s Tour of England and India’s Tour of Australia positioned precisely at the start, middle and end of the year. Much to the fan’s excitement the year commenced cracker as India clinched the World Cup. The joy knew no bounds. His expectation rose sky high as India begin the Tour of England with the tag of World Champion. On the contrary the Tour turned complete disaster as India returned empty hands and wiped any hangover of World Cup joy. Now, the time has arrived for the final litmus test of the year. Having witnessed highs & lows in a short span of time, the fan is totally perplexed to set an expectation meter on the Tour Down Under.


The Tours of Australia had never been easy, if not cruel. Few careers ended but most occasions remained breeding ground for new talents on both sides. As for the results from 21st century, Tendulkar’s were crucified 3-0 in 1999-00, Ganguly’s drew 1-1 in 2003-04 and Kumble’s lost 2-1 in 2007-08. But the whole world pitied Kumble’s boys for receiving a raw deal from umpires. No one can forget the Sydney fiasco. No matter what the results been thus far, in all these years, India has only improved as a team and put spirited performance at the Kangaroo nation. 


It is now time to build up one of the most anticipated tours of the year from the common cricket fans perspective. The Test matches in the past few years around the world are producing results instead of dull draw. This is may be encouraging sign for Test Cricket, unfortunately it has also exposed the present generation batsmen vulnerability to play long innings. Except England, players from no other country expressed appetite to play sessions. With regards to this Tour, on paper the Indian batsman appear more temperamental over their Aussie counterparts. Again Indian batsmen are known for “Lions Home, Mice Abroad“. As for the Australians are concerned they are tasting success elsewhere except home. After the Ashes disaster at home, Australia won the series at Bangladesh, Sri Lanka and drew in South Africa. After some overwhelming overseas tours, the Kangaroos again fumbled badly only to draw the series against a low profile Kiwis. This should be soothing message for the Indians.


The Match up
The Aussies are having issues with their batsmen while Indians are down playing their bowling woes. In brief, Ponting, Hussey and Haddin forms are nothing short of awful, the opening combination looks unsettled, new no.3 hasn’t come to terms yet, finally the news of Watson, Marsh, Paine, Cummins and Johnson nursing injuries are adding salt to wounds. The injury worries can give the lifeline to Ponting and for the World to witness the legend one last time, if not anymore. 


I’m anticipating Aussies to start the Boxing Day Test with the following side.
Warner, Watson, Khwaja, Ponting, Clarke, Hussey, Haddin, Siddle, Lyon, Pattinson, Harris/Starc.


Despite the issues mentioned above this Aussie lineup is still a side to beat. 


As far as the Indians are concerned Ishant Sharma has made up a strong case to return home even before the commencement of the series. And Zaheer is most likely to feature only from the the First Test if not the only Test before returning home on the same grounds. That leaves Yadav, Mithun, Vinay Kumar and Ashwin/Ojha to do all the labor in both Tests and Warm Ups. I know you will all surely buy that the above quartet can only bring life to the out of form batsmen or revive careers of senior statesmen in the Aussie side. If there is still merit to hard work & faith Irfan Pathan will make a comeback, if not rewrite the fortune of Indian bowling unit.


As far as Indian batting is concerned, Rohit Sharma has displayed better application ahead of Virat Kohli and deserves to make his debut on Boxing Day. Also Gambir is available fully fit for a full tour outside sub continent in a long time. This should be a litmus test for him as well, considering Rahane has made rapid strides in the past few months.


It will be a huge surprise, if Dhoni does not field the following XI on Boxing Day.
Sehwag, Gambir, Dravid, Tendulkar, Laxman, Kohli, Dhoni, Ashwin, Zaheer, Yadav, Mithun.


However, I prefer to see (in the assumption Irfan Pathan to cover injured Ishant Sharma)
Sehwag, Rahane, Dravid, Tendulkar, Laxman, Rohit Sharma, Dhoni, Ashwin, Zaheer, Irfan, Yadav. 


Aussies have a good chance of being distracted by the Big Bash which India can use it to advantage and register the first series victory in Australian soil. In reality, the chances of Australia winning the Border-Gavaskar Trophy 2-1 looms large.


Bottom line: Praying for the evil. “Big Bash prevails to bring doomsday for Aussie Cricket!!!“ Wish to see this statement in headlines.


Dinesh
Cricket Lover

PS: I’ve deliberately avoided building up the 50th/100th Ton.

Thursday, December 15, 2011

சூப்பர் ஸ்டார்: 62ல் 26 - பிறந்த நாள் ஸ்பெஷல் (பாகம் 2)




தலைவருடனான நமது பெங்களூரு பயணம் தொடர்கிறது...

தலைவர், "புராணம் இதிகாசம் தொடங்கி இன்னிக்கு இருக்கற மாடர்ன் உலகம் வரைக்கும் எப்பவுமே இருக்கற ஒரு ஸ்டாண்டர்ட் கேள்வி "அறிவா இல்லே மனசா?, அஞ்ஞானமா இல்லே விஞ்ஞானமா? மனுஷனா இல்லே கடவுளா?" இதை பேஸ் பண்ணித் தான் கோச்சடையான் இருக்கப்போவுது”

நாம் சற்றே குழம்பிய நிலையில், "என்ன சார், இவ்ளோ சிம்பிளா சொல்லிட்டீங்க?"

"நீங்க ஒன் லைன் தானே கேட்டீங்க, அதான் சொன்னேன். See, இது ஒரு பிரம்மாண்டமான படம். எல்லாத்தையும் முன்னாடியே சொல்லிட்டா அப்புறம் படம் பாக்கற இன்டெரெஸ்ட் போயிடும்"
"ஓகே சார்"

தலைவர், "அது சரி, இந்தப் படம் பத்திக் கேள்விப்பட்டதும் உங்களுக்கென்ன தோணிச்சு?"

"கிட்டத்தட்ட நீங்க சொன்ன மாதிரி தான். பட் இன்னும் நிறைய கற்பனை பண்ணியிருந்தோம்"

"எப்படி? கொஞ்சம் சொல்லுங்க"

"ஒரு பொக்கிஷம். ஆனா அதோட மதிப்பும் ஆபத்தும் தெரியாமலேயே ஒரு குடும்பம் அதை பாதுகாத்துக்கிட்டு வராங்க.அந்தப் பொக்கிஷத்தோட மதிப்பு தெரிஞ்ச, அதை வியாபாரமாக்கத் துடிக்கற ஒரு அறிவியல் க்ரூப்பும், அதோட வரலாறும் ஆபத்தும் தெரிஞ்ச ஒரு மாந்த்ரீக க்ரூப்பும் அந்தக் குடும்பத்துக்குள்ள கலக்கறாங்க. அதனால ஏற்படற திருப்பங்கள், பிரச்சினைகள் ஒரு பக்கம். இதுக்கு நடுவுல அந்தப் பொக்கிஷத்தையும் அந்தக் குடும்பத்தையும் ஒரு மாய மனிதன் சரியான நேரத்துல அப்பப்போ வந்து காக்கறார். ஒரு பிரம்மாண்டமான க்ளைமாக்ஸ். ஆனாலும் அந்தப் பொக்கிஷத்தை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்தாத்தான் அதோட ஆபத்து குறையும் - இங்கேர்ந்து ராணாவுக்கு லீட் எடுக்கலாம். அந்த மாய மனிதன், அறிவியல் க்ரூப், மாந்த்ரீக க்ரூப், அந்த அப்பாவிக் குடும்பம் - இதெல்லாம் பிளாஷ்பேக் மாதிரி வரிசையாக் காட்டாம முன்னும் பின்னுமாக் காட்டலாம்.

தலைவர், "நல்லாருக்கே, இன்னும் கொஞ்சம் டெவெலப் பண்ணினா நல்லா வரும் போலிருக்கே, ரவி கிட்ட பேசறேன்"



“அந்த மாய மனிதன் தான் கோச்சடையான். அவருக்கும் ராணாவுக்கும் உள்ள தொடர்பை ஒரு ஹிஸ்டாரிக் ட்ராக்ல மெயின் கதைக்கு இணையா கொண்டு போகலாம். கிட்டத்தட்ட மூணு கதை இணையா போவும் இந்தப் படத்துல. தமிழ சினிமாவுல யாரும் பண்ணாதது. இது வரைக்கும் வந்ததெல்லாம் மூணு கதையை ஒரு புள்ளியில இணைப்பாங்க. ஆனா எல்லாக் கதையம் தனித்தனியாத் தான் வரும். நம்ம சொல்றது கொஞ்சம் வித்யாசமா இருக்கும்"

"இண்டரெஸ்டிங், கண்டிப்பா ரவி கிட்ட பேசறேன்" அதற்குள் தலைவர் போன் ஒலிக்கிறது. காலர் டியூனாக தனுஷின் கொலைவெறி.

"ரவி, சொல்லுங்க, வந்துக்கிட்டே இருக்கேன், btw , வழியில சில புது நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. நமக்கு சில நல்ல பாயின்ட்சும் கிடைச்சிருக்கு. வி வில் டிஸ்கஸ்"

அவர் போன் பேசி முடித்ததும் நாம், "நீங்களும் கொலைவெறி ரசிகராயிட்டீங்களா?"

"ஐயோ அதை ஏன் கேக்கறீங்க, ரொம்ப நாள் கழிச்சு நான் ஒரு பாட்டை மறுபடி மறுபடி கேக்கறேன். தனுஷ்னால இல்லை, நிஜமாவே நல்ல சாங். வேர்ல்ட் பூரா பாப்புலராயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்"

"ஆமாம் சார். முதல்ல சாதாரணமாத் தான் ஸ்ப்ரெட் ஆச்சு. ஆனா தனுஷ் உங்க மாப்பிள்ளைன்னு தெரிஞ்ச பிறகு உங்களை மாதிரியே புல் ஸ்பீட்ல பரவிடுச்சு"

சிறிய வெட்கத்துடன், "எல்லாம் God's கிரேஸ்"



நாம் இறங்கும் இடம் வருவது தெரிந்தது. "நாங்க இறங்க வேண்டிய இடம் வரப்போவுது. கடைசியா ஒரு கேள்வி, இன்றைய தேதியில வாழ்க்கைன்னா என்ன சார்?"

"பெரிய பெரிய மகான்கள், ஆச்சார்யாக்கள் கிட்ட கேக்க வேண்டிய கேள்வி. என்கிட்டே கேக்கறீங்களே?"

"கோடிக்கணக்கான தமிழர்களுக்கு நீங்க தான் சார் குரு. அதுவுமில்லாம அவங்க சொல்றது புரியாது. நீங்க சொல்றது புரியும்"

வழக்கமான யோசனைக்குப் பிறகு, " இன்னிக்கு, வாழ்க்கைன்னா, பீக் ட்ராபிக்ல கார் ஓட்டற மாதிரி. ரொம்ப ரிஸ்கி அண்ட் சாலெஞ்ஜிங். நீங்க ஒரு நல்ல டிரைவரா இருக்கணும், ரூல்ஸ் தெரிஞ்சிருக்கணும் - அதாவது ஆன்மா, புத்தி ரெண்டும் கிளீனா இருக்கணும். அப்புறம் வண்டி, அதாவது உங்க உடம்பு நல்ல கண்டீஷன்ல வெச்சுக்கணும் - மெயின்டைன் பண்ணி, தொடச்சு, ஆயில் போட்டு, சும்மா கன் மாதிரி. நீங்க ஓட்டும்போது பின்னாடிலேர்ந்து யாராச்சும் உங்க மேல மோதுவாங்க, ரோடு சரியிருக்காது, இல்லேன்னா உங்களுக்கு வழி தெரியாது - அதான் உங்க வாழ்க்கையில நடக்கற எதிர்பாராத சம்பவங்கள். அந்த மாதிரி நேரங்கள்ல தான் ஸ்டெடியா, நிலைகுலைஞ்சு போகாம பிரச்சினையை சமாளிச்சு, நாம் போக வேண்டிய இடத்துக்கு கரெக்டாப் போகணும். பென்ஸ்ல போறவன் பெரிய ஆள், மாருதில போறவன் சின்ன ஆள் - இதெல்லாம் நம்மளை நாமே அழிச்சிக்க உருவாக்கினது. கார் எதுவா இருந்தாலும் டயர்ல காத்தும் டாங்கில பெட்ரோலும் இருக்கற வரைக்கும் தான் மதிப்பு. இந்த உண்மையை நாம அடிக்கடி மறந்துடறோம். அது தான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம். எப்படியாவது சீக்கிரம் முன்னுக்குப் போயிடணும்னு சில பேர் போவாங்க. அவங்களை ட்ராபிக் இன்ஸ்பெக்டர், ஐ மீன் கடவுள் பாத்துப்பாரு."



எங்களை இறக்கி விட்டுவிட்டு சூப்பர் ஸ்டாரின் கார் விரைந்தது. இறங்கிய பிறகு தான் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க மறந்து விட்டோம் என்பது நினைவிற்கு வந்தது. ஆனால் அவரை வாழ்த்த நமக்கு வயதில்லை, அவரை வணங்கினால் அவரை அன்னியப்படுத்துவது போல் ஆகிவிடும்.

"தலைவா" என்று வாய் அவரை அழைத்தாலும் மனம் அவரை ஒரு நண்பர் ஸ்தானத்தில் தான் வைத்திருகிறது. இப்பவும் துருதுருன்னு எனர்ஜெடிக்கா இருக்கறவரை எப்படிங்க பெரிசுன்னு சொல்ல முடியும்??

பின் குறிப்பு:
தலைவரின் அடுத்த வருட பிறந்த நாளைக் கொண்டாட ரசிகர்கள் இப்போதிலிருந்தே உற்சாகமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. சும்மாவா? 12 -12 -12 ஆச்சே!!!

Jayaraman
New Delhi

Thursday, December 8, 2011

சூப்பர் ஸ்டார்: 62ல் 26 - பிறந்த நாள் ஸ்பெஷல் (பாகம் 1)



சென்னை - பெங்களூரு ஹைவே.

அலுவலக விஷயமாக பெங்களூரு சென்று கொண்டிருந்தோம். இளைப்பாறுவதற்காக ஒரு டாபாவில் வண்டியை நிறுத்திவிட்டு டீ மற்றும் பக்கோடாவுக்கு ஆர்டர் சொல்லிவிட்டு பெஞ்சில் அமர்ந்தோம். இரண்டு பெஞ்சு தள்ளி ஒருவர் மிகவும் நிதானமாக, ஸ்டைலாக டீ அருந்திக் கொண்டிருப்பதை கவனித்தோம். வயதான தோற்றம் ஆனால் வசீகரப் பார்வை. மிகவும் பரிச்சயமானவர் போலத் தோன்றவே உற்று நோக்கினோம். அட... நம்ம சூப்பர் ஸ்டார். உடனே அவர் அருகே சென்று "என்ன சார், நீங்க எப்படி இங்க? கனவு மாதிரி இருக்கு சார்"

தனக்கே உரித்தான புன்முறுவலுடன், "பிரெண்ட்ஸ், சத்தம் போடாதீங்க, அப்புறம் கூட்டம் கூடிடும். வெளியே என் வண்டி பக்கத்துல போய் நில்லுங்க. அங்கே பேசுவோம்".

தலைவர் பேச்சை தட்ட முடியுமா? காரை நோக்கி நகர்ந்தோம்.

அவர் டீ குடித்து முடித்தவுடன் கடைப் பையன் க்ளாசை எடுக்க வந்தான். அவனைப் பார்த்து, "என்னடா, படிக்கறியா இல்லை முழு நேரமும் இங்கயே வேலை செய்யறியா?"

அந்தப் பையன், "இங்கே சாயந்திரம் தான் வேலை செய்யறேன். நீங்க சொன்ன மாதிரி காலையில பள்ளிக்கூடம் தான் சார் போறேன்,"

ரஜினி, 'வெரி குட். லக்ஷ்மி தேவை. ஆனா அதைப் பாதுகாக்க சரஸ்வதி ரொம்ப முக்கியம். புரிஞ்சுதா!"

அதற்குள் எங்கள் வண்டியின் டிரைவர் யாரிடமோ பதற்றமாக போனில் பேசுவதை கவனித்தோம். விசாரித்ததில் அவர் குடும்பத்தில் யாருக்கோ உடம்பு சரியில்லையென்றும் அவர் உடனே வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்றும் அறிந்தோம். ஒரு பக்கம் டிரைவர், இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் - என்ன செய்வது என்று யோசித்துகொண்டிருந்த போது தலைவர் நம்மை நோக்கி வந்து கொண்டிருந்தார். வந்தவர் எங்கள் மூவரையும் ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார். பிறகு, "என்ன எதாச்சும் பிரச்சினையா? சொல்லுங்க, முடிஞ்சா ஹெல்ப் பண்றேன்" என்றார். அவரிடம் விஷயத்தைச் சொன்னோம். சற்றும் தயங்காமல் "நான் பெங்களூர் தான் போறேன். நீங்க வேணும்னா என் கூடவே வாங்களேன், உங்களை மாதிரி யூத் கூட பேசினா எனக்கும் நிறைய விஷயங்கள் தெரிய வரும். உங்க டிரைவர் அவர் வீட்டுக்குப் போகட்டும் - என்ன சொல்றீங்க?"

அவனவன் தலைவரைப் பாக்கறதுக்கு வீட்டு வாசலில் தவம் இருக்கான், கரும்பு தின்னக் கூலியா? உடனே தலையாட்டினோம். பேச்சு காரினுள் தொடர்கிறது. அவரே ஆரம்பித்தார்.

"நீங்க என்ன பண்றீங்க?"

நாம், "முழுநேரமா கிரேசி கிரிக்கெட் லவ்வர்னு ஒரு ப்ளாக்ல கிரிக்கெட் மற்றும் பல விஷயங்களைப் பத்தி அப்பப்போ எதாச்சும் எழுதுவோம். பகுதி நேரமா ஒரு கம்பெனியில வேலை பாக்கறோம்.

ரஜினி, "ஒஹ்! நானும் சச்சினும் சந்திக்கற மாதிரி ஒரு ஆர்டிகிள் எழுதினீங்களே, அதுவா?"

"நீங்க படிச்சிருக்கீங்களா?"

"முழுசா படிக்க முடியல, பட் சத்யா எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி வெச்சிருக்கார். இட் வாஸ் குட். அப்பப்போ இதோ, (ஐபேடைக் காட்டுகிறார்) இதுல ஸ்டோர் பண்ணி வெச்சிடுவான். எப்போ டைம் கிடைக்குதோ படிப்பேன்.

"நீங்க நிஜமாவே லேட்டஸ்ட் தான் சார்"

"ஐயோ அதெல்லாம் இல்லை. பட் இது ஆபரேட் பண்றது எப்படின்னு என் பேரன் தான் எனக்கு சொல்லித் தரான். ஹி இஸ் தி லேட்டஸ்ட்"

"இப்போ நீங்க முழுசா குணமாயிட்டீங்களா சார்? நீங்க ஆஸ்பத்திரியில இருக்கறப்போ என்னல்லாமோ வதந்தி SMS அனுப்பிச்சு கலவரம் பண்ணிட்டாங்க"

சிரித்துக் கொண்டே, "யா, அது ரொம்ப funny. In fact, நான் செத்துப் போயிட்டேன்னு எனக்கே ஒருத்தர் மெசெஜ் அனுப்பியிருந்தார், இது எப்படி இருக்கு? ஹஹஹா." அவரது ஸ்டைலான சிரிப்புக்குப் பிறகு அவரே தொடர்கிறார்.



"ஜோக்ஸ் அபார்ட், எந்திரன் வெற்றிக்கு வைத்த திருஷ்டிப் பொட்டுன்னு தான் அதை எடுத்துக்கணும். பட் இப்போ நான் முழுசா fit ஆயிட்டேன். கோச்சடையான்ல ரெண்டு மூணு ஹீரோயின் இருந்தாக் கூட டூயட் பாட நான் ரெடி. ஹஹஹா" - மீண்டும் அதே ஸ்டைல் சிரிப்பு.

உங்ககிட்ட நிறைய விஷயங்களைப் பற்றிக் கேக்கணும். கேக்கலாமா?

"ஷ்யூர் ஷ்யூர்"

ராணா ஏன் சார் டிராப் பண்ணிட்டீங்க?"

"சிறிது நேரம் யோசிக்கிறார். பிறகு தொடர்கிறார் "சொல்லப் போனா அது கொஞ்சம் பெரிய கதை - ஹனுமான் வால் மாதிரி. ஆக்சுவலா சுல்தான் எவ்வளவோ பிரமாதமா எடுத்தும் திருப்தி இல்லை. டயத்துக்கு முடியாம ரொம்ப இழுத்தடிச்சிடிச்சு. ரொம்ப கேப் விழுந்திடுமோன்னு நினைச்சு ராணா ஆரம்பிச்சோம். பட் முதல் நாளே எனக்கு உடம்பு சரியில்லாம போய், - உங்களுக்குத் தான் மீதிக்கதை தெரியுமே? அப்புறம், சிங்கப்பூர்ல நான் இருக்கும்போது ஒரு நாள் ரவி போன் பண்ணினார். "என்ன சார், முதல் நாளே இப்படி ஆயிடுச்சு, நாம ரெண்டு பேரும் சேர்ந்து எவ்ளோ ஹிட் குடுத்திருக்கோம், எப்பவும் இப்படி ஆனதில்ல, இது ஏதோ கடவுள் நமக்கு குடுக்கற எச்சரிக்கை மணி மாதிரி இருக்கு, நாம் இதை ஓரமா வெச்சுட்டு வேற ஒரு கதை பண்ணினா என்ன" அப்படின்னு சொன்னாரு. எனக்கு அது சரின்னு பட்டிச்சு. நீங்க ரெடி பண்ணி வைங்க. நான் வந்ததும் ஒரு ரஷ் பார்த்துட்டு ஸ்டார்ட் பண்ணிடலாம்னு சொன்னேன். சென்னை வந்த பிறகு ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணினோம். கோச்சடையான் வொர்க் அவுட் ஆகும்னு கான்பிடென்ட்டா தோணிச்சு. ஸ்டார்ட் பண்ணிட்டோம். பட் ஆண்டவன் ஆசீர்வாதத்தோட ராணா கண்டிப்பா வரும்"

"எங்களுக்கென்னமோ அந்த தீபிகா படுகோனே ராசி சரியில்லையோன்னு தோணுது சார். பாருங்களேன், யுவராஜ் கூட சுத்தினாங்க, அவர் அழிஞ்சு போயிட்டார், ஹிந்தி நடிகர் ரன்பீர் கூட இருந்தாங்க. அவரும் ஏறக்குறைய அழியற மாதிரி ஆயிட்டார். அப்புறம் சித்தார்த் மால்யா கூட சேர்ந்தாங்க, கிங்க்பிஷர் ஏர்லைன்ஸ் கடன்ல மூழ்கிடுச்சு. இப்போ ராணாவுல உங்க கூட அவங்க நடிக்கறதா இருந்திச்சு, நீங்க ஆஸ்பத்திரிக்குப் போயிட்டீங்க. பார்த்து சார், ஜாக்கிரதையா இருங்க"

சிறிது நேர யோசனைக்குப் பிறகு, "இந்த மாதிரி நீங்க பேசலாம், நான் பேச முடியாது. அதுவுமில்லாம நல்ல நேரம் கெட்ட நேரம்னு எல்லாருக்கும் அவன் (வானை நோக்கி கை காட்டுகிறார்) டைம் டேபிள் போட்டு வெச்சிருக்கான். அது இவரால வந்திச்சு அவரால வந்திச்சுன்னு சொல்றதெல்லாம் சரியில்ல. மனுஷன் வெறும் கருவி தானே. சுவிட்ச் அவர் (கை மறுபடியும் மேலே) கையில இருக்கு"


"சரியா சொன்னீங்க சார். சரி சார், இப்போ தமிழ் சினிமா எப்படி இருக்குன்னு நினைக்கறீங்க?"

"ரொம்ப நல்லா இருக்கு. நிறைய நியூ faces, நியூ டைரக்டர்ஸ், ஸ்டோரி,..... நல்லாருக்கு. மைனா, ஆடுகளம், இப்போ ஏழாம் அறிவு - சந்தோஷமா இருக்கு"

"உங்களுக்கு அந்த மாதிரி எளிமையான படம் பண்ணனும்னு ஆசை இருக்கா சார்?"

"நிறைய இருக்கு, ஆனா எப்போன்னு தெரியல"

"இது எல்லாரும் கேக்கற கேள்வி தான். உங்களுக்கப்புறம் அடுத்த சூப்பர் ஸ்டார்னு நீங்க யாரை சார் நினைக்கறீங்க?"

"அதெல்லாம் மக்கள் நம்ம மேல இருக்கற அன்புல குடுக்கறது. வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது, போனாலும் தடுக்க முடியாது"

"சரி, கமலுக்கு அடுத்தபடியா யார் இருப்பாங்கன்னு நினைக்கறீங்க?"

"அதை கமல்ஜி தான் சொல்லணும். ஹஹஹா"

"இருந்தாலும் ஒரு சின்ன கெஸ்ஸ், சூர்யா, விக்ரம்..?

"ஸீ, சூர்யா விக்ரம் இவங்கல்லாம் அழகான எழுத்து, ஐ மீன் வேர்ட்ஸ். பட் கமல் வந்து.... என்ன சொல்றது...ஒரு டிக்ஷனரி மாதிரி. இந்த எல்லா எழுத்தும் அந்த டிக்ஷனரிக்குள்ள நீங்க பாக்கலாம். பட் நீங்க அவர்கிட்ட இந்த கேள்வி கேட்டீங்கன்னா அவர் சிவாஜியை டிக்ஷனரின்னு சொல்வார். தட் இஸ் கமல்"

முதல்லயே கேக்கணும்னு நினைச்சோம், நீங்க எப்படி சார் இந்தப் பக்கம்? பெங்களூருல கோச்சடையான் ஷூட்டிங்கா?"

"இல்ல, ஸ்டோரி டிஸ்கஷன்."

"படம் எப்படி சார் வந்துக்கிட்டிருக்கு?"

" இன்னும் முழு ஸ்கிரிப்ட் ரெடி ஆகல. பட் கான்செப்ட் நல்லா டெவெலப் ஆகியிருக்கு. நிறைய டெக்னிகல் விஷயங்கள் இருக்கறதால டைரக்டர் ஷங்கர் கிட்ட கூட நான் இதைப் பத்திப் பேசினேன். பிகாஸ் ஹி இஸ் வெரி குட் அட் இட் யு நோ. ரொம்ப பிரமாதமா இருக்கு சார். எந்திரன் பார்ட் 2 மாதிரியே இருக்குன்னு சொன்னார். ஐ ஆம் ஹாப்பி."



"எந்த மாதிரி கதையா இருக்கும் சார்?"

"எந்த மாதிரியா இருக்கணும்னு நீங்க நினைக்கறீங்க?"

"வித்யாசமா, வெரைட்டியா, லேட்டஸ்டா.."

"எல்லாமே உண்டு. லேட்டஸ்டா இருக்கும். ஆனா லேட் ஆகாது. "

"3Dல எடுக்கணும்னு உங்களுக்கு எப்படி தோணிச்சு?"

அதான் சொன்னேனே, லேட்டஸ்டா இருக்கும்னு, சினிமா நிறைய வளர்ந்திடுச்சு. முன்னாடி மாதிரி பூஜை போட்டோம், ஏவிஎம் இல்லேன்னா விஜயா ஸ்டூடியோவுல செட் போட்டோம்னு எடுக்கற சமாச்சாரம் இல்லை. சினிமா ஒரு டெக்னாலஜி மாதிரி ஆயிடுச்சு.

"இருந்தாலும் கதை ஒன் லைன் சொல்ல முடியுமா?

"சொல்லிட்டாப் போச்சு"

சூப்பர் ஸ்டார் சொன்ன அந்த ஒரு வரி..... அடுத்த வாரம்.

Jayaraman
New Delhi

Whaaadaplayaaa...


I’ve not been writing a lot these days. Thanks to the new found job status that keeps me away from sharing my wisdom. Today, all those miseries are put to a pause. Thanks to the wonderful double century from the super blades of Sehwag that brings me out of hibernation. 


It was 3 in the morning when my sleep got disturbed. Tried hard to go back but no luck. What the heck... thought will watch the India Vs West Indies match the least. Though I’m not a big fan of this series, I’m glad there is something to keep me occupied this odd hours. Guess what??? I ended up watching every single run of the historic 219 runs constructed by Virender Sehwag. Don’t worry!!! I spare you the details as the highlights and the match report will be out shortly in cricinfo. But I will be glad to mention one thing. I definitely felt the hunch about the double ton when Sehwag was caressing in 80s.   


Now that the double ton is made comparisons are obvious. There is no doubt that Tendulkar’s double came against a superior opposition. Much the same time, there is no denial that this is a supreme effort from Sehwag to overwhelm the feat. Either ways, I’m glad the record was broken as I firmly believe records are meant to be broken. Today, Sehwag also demonstrated that an individual score of 250 is very much in vicinity. Trust me, a decade ago I wouldn’t want to believe 200 runs is possible, now I’m talking 250 myself. Now, I only wish the format to stay alive to witness the occurrence. 


How lucky I’m to lose the sleep??? 


Now that I’ve decided to write, let me pour my thoughts on few other stuff. It is extremely disappointing to see Irfan Pathan not being picked for the Test Leg of the Australian tour. Though I’m not a big Pathan fan myself, it is difficult to digest a team with too many rookies for a tour down under. With Zaheer and Ishanth injury prone, Irfan would have been a sensible choice ahead of Mithun, otherwise a better replacement for injured Praveen Kumar. Also Pathan is amongst wickets in the domestic circuit makes it even compelling to pick him. Again, I don’t know the politics that keeps him away from the scene. However it is even sad to see him left out of the 4th ODI against West Indies. I wish better sanity prevail in the minds of selectors and team management. Irfan should now hope to stay in the selectors radar as injury replacement.


Dinesh
Cricket Lover

Monday, December 5, 2011

ஒரு தீவிரவாதியின் டைரிக்குறிப்பு

திங்கட்கிழமை:
தில்லி உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்தது நாங்கள் தான் என்று 4 -5 க்ரூப்கள் அறிக்கை விட்டுள்ளது எங்கள் தலைமையகத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உண்மை என்னவென்றால் அது எங்கள் அசைன்மெண்டே அல்ல. இந்திய அரசாங்கமே அவர்களாக ஒரு அமைப்பை உருவாக்கி விட்டு எங்களுக்கு எதிராக சதி செய்கின்றனர். எங்காவது குண்டு வெடித்தால் மக்கள் அரசியல் பிரச்சினைகளை மறந்து பரிதாபம் காட்டத் தொடங்கிவிடுவார்கள் என்பது அவர்கள் எண்ணம். இதேபோல் வெறுப்பேற்றக்கூடிய இன்னொரு செய்தி எங்கள் ரகசிய இடங்களை குண்டு வைத்துத் தகர்த்ததற்கு அமெரிக்கா மன்னிப்புக் கோரியுள்ளதாம். - மன்னிப்பு, கேப்டனுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் பிடிக்காத வார்த்தை.

செவ்வாய்கிழமை:
இன்று அரசாங்க உயர் அதிகாரிகளுடன் ரகசிய மீட்டிங் நடைபெற்றது. எங்களுக்குப் பணம் தருபவர்கள் முன்பு போல் தாராளமாக இல்லாமல் சிக்கனமாகி விட்டதாகவும், செலவுகளுக்குக் கணக்கு கேட்பதாகவும் தெரிவித்தனர். இதனால் தான் புதிய அசைன்மென்ட் எதுவும் எங்களுக்கு தர முடியவில்லை என்று போலியாக வருந்தினர். - பின் லேடன் மறைவுக்குப் பிறகு அவர்கள் பேச்சில் திமிர் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அள்ளக் கைகளை எவரும் மதிப்பதில்லை என்று அன்று கற்றுக் கொண்டேன்.

புதன்கிழமை:
தென்னிந்திய மண்டல மேலாளருடன் செயற்கைக்கோள் தொலைபேசியில் உரையாடினோம். கடந்த ஆறு மாதத்தில் ஏழு இடங்களில் ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்து எடுத்ததாக உவகை பொங்கக் கூறினார். விராட் கோலி மாதிரி ஐந்து ரன் அடித்து விட்டு ஐநூறு ரன் அடித்தது போன்ற பில்ட் அப் தர வேண்டாம் என்று அவரை சாந்தி செய்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தோம். அநேகமாக எல்லா தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் ஹீரோக்கள் தீவிரவாதிகளை ஓட ஓட அடித்து விரட்டுவதாகவும், தீவிரவாதிகளுக்கெதிரான போராட்டத்தில் கட்டாயம் ஒரு இஸ்லாமிய இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் இடம் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் தாங்கள் சரி வர மக்களை மூளைச் சலவை செய்ய முடிவதில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார். இதைக் காரணம் காட்டி ஊக்கத்தொகையில் கை வைக்க வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொண்டார். உங்களுக்கு இந்த மாதம் சம்பளமே கிடையாது, நீங்கள் ஊக்கத் தொகை பற்றி வருத்தப்படுகிறீர்களே என்று அவருக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டு போனை வைத்தோம். - நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கு பாம் வாய்த்த திருப்தி.

வியாழக்கிழமை:
ஆயுத பேர இடைத்தரகர் ஒருவரை சந்தித்துப் பேசினேன். எல்லா நாடுகளிலும் பொருளாதாரம் படுத்துவிட்டதாகவும் பொது மக்கள் அரசாங்கத்தின் மீது கடுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதில் பாம் வெடித்தால் ஆட்சியே போய்விடும் என்று பதறிப் போய் இது போன்ற நாச வேலைகளை நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறினார். இது போக இந்தியாவில் அடிக்கடி குண்டு வைத்ததினால் அவர்களுக்கு பழகிப் போய்விட்டதாகவும் தீவிரவாதத் தாக்குதல்களை ஏதோ சாலை விபத்து போல பார்க்கத் தொடங்கிவிட்டதாகவும் கூறினார். ஆக மொத்தத்தில் வெடிகுண்டு பயம் போய்விட்டதாகக் கூறி எனக்கே பாம் வைத்தார். - இந்தியாவை நம்பித்தானே நாங்கள் இவ்வளவு வெடி பொருட்களை பாங்கில் லோன் போட்டு வாங்கி வைத்திருக்கிறோம். இதெல்லாம் என்ன செய்வது? அடுத்த வாரம் EMI வேறு கட்ட வேண்டுமே?!!

வெள்ளிக்கிழமை:
நக்சலைட் மூத்த தலைவர் ஒருவர் இந்தியாவில் கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். மிச்சம் இருந்த ஒரு கஸ்டமரும் காலி . கொஞ்சமாக வாங்கினாலும் ரெகுலராக வாங்கிக் கொண்டிருந்தார்கள். இதனிடையே தலைமையகத்திடமிருந்து வந்த மின்னஞ்சலில் மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நேபால், பங்களாதேஷ் மூலமாக இந்தியாவுக்குச் சென்று பாம் வைப்பதில் மிகுந்த செலவாகிறது என்றும் இனிமேல் எல்லாம் ரிமோட் மூலம் இங்கிருந்தே இயக்கப்படுமென்றும் அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆன்-சைட் ப்ராஜெக்ட் கிடைத்தால் ஓரளவுக்கு குடும்ப நிலைமையை சமாளிக்கலாம் என்று பகல் கோட்டை கட்டிய எனக்கு பெருத்த அடி.


சனிக்கிழமை:
அன்னா ஹஜாரே என்று ஒருவர் இந்தியாவில் புரட்சி செய்து வருவதாக பத்திரிகையில் படித்தேன். அவர் இந்திய இளைஞர்களுக்கு எழுச்சியூட்டி வருவதாகவும் இளைஞர்கள் அநியாயத்திற்கு எதிராக போராட வேண்டுமென்று கூறி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் மட்டும் எப்படி கிழவர்களுக்கு இவ்வளவு செல்வாக்கு கிடைக்கிறது என்றெண்ணி வியந்தேன். அங்கே ஆள்பவர்கள் எல்லோரும் அறுபதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாட்டின் எதிர்காலம் மட்டும் இளைஞர்கள் கையில் என்று உபதேசம் கூறி வருகிறார்கள். - அடுத்த ஜென்மத்திலாவது இந்தியாவில் பிறக்க வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமை:
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய அரசு அஜ்மல் கசாவுக்காக செய்த செலவு மட்டும் பதினாறு கோடியாம். இன்டர்நெட்டில் படித்தேன். இந்தியப் பிரதமருக்கு இணையான செக்யூரிடி அவனுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் நினைத்த நேரத்தில் பிரியாணி முதற்கொண்டு அனைத்து உணவு வகைகளும் கிடைப்பதாகவும் அதில் கூறியிருந்தனர் . கண்ணெதிரே அறுபது பேரை கண்மூடித்தனமாகக் கொன்றதற்கு ஆதாரம் இருந்தும் விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கும் இந்தியர்களின் திறமை கண்டு நிஜமாகவே ஆச்சர்யப்பட்டேன். இந்தியர்கள் மேரா பாரத் மஹான் என்று ஏன் பெருமையடித்துக் கொள்கிறார்கள் என அன்று தான் உணர்ந்தேன். குஜராத்தைப் பற்றிய பயம் இருந்தாலும் சீக்கிரம் எதாச்சும் சில்லறை திருட்டு செய்து இந்திய அரசால் பிடிபட வேண்டும் என்று எனக்குள் வெறி வந்து விட்டது - ஹிந்தி நடிகர் தேவ் ஆனந்தை நான் தான் கொன்றேன் என்று கூறி சரணடைந்து விடலாமா என்று யோசித்து வருகிறேன். வந்தே மாதரம்!

Monday, November 28, 2011

கும்தலக்கடி - ஒரு கொலைவெறியாடல்

ஆனா ஊனா ஒரு நாலு பேரு புதுப் படத்தைப் ப்ரொமோட் பண்றேன் பேர்வழின்னு ஏதாச்சும் ஒரு சேனலை குத்தகைக்கு எடுத்துக்கிட்டு மொக்கை போடறது ஒரு வியாதியா பரவிகிட்டு வருது. அதனால தனுஷை விட பயங்கர கொலைவெறியோட இருக்கற மக்களுக்காக இந்த ஆர்டிகிள். (நடுநடுவே சாங்க்ஸ் மற்றும் ஸீன் கிளிப்பிங்க்ஸ் எல்லாம் நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க)

டிவி தொகுப்பாளினி, "வணக்கம் வசையருவி நேயர்களே, இன்னிக்கு நம்ம ஸ்டூடியோவுக்கு "கும்தலக்கடி" படக்குழுவினர் வந்திருக்காங்க. அதிலயும் நம்ம ஹீரோ கார்யா உங்களோட பேசப்போறாரு. என்ன, அப்படியே ஷாக் ஆயிட்டீங்களா? எனக்கும் அப்படித்தான் இருக்கு. ஸோ, உடனே போன் எடுங்க, டயல் பண்ணுங்க. நம்பர் உங்க டிவி ஸ்க்ரீன்ல பிளாஷ் ஆயிக்கிட்டிருக்கு. நீங்க போன் பண்ணலேன்னா அவங்க போடற மொக்கையை நான் மட்டும் தனியா இருந்து சமாளிக்கணும். பெண் பாவம் பொல்லாதது, ஞாபகமிருக்கட்டும்.

அடுத்த சீன், எல்லாரும் சோபாவில உக்காந்துகிட்டிருக்காங்க.

டிவி தொகுப்பாளினி, "வணக்கம் சார், உங்க புதுப் படம் "கும்தலக்கடி" ரிலீஸ் ஆகி வெற்றிகரமா நாலாவது ஷோவா ஓடிக்கிட்டிருக்கு. எப்படி பீல் பண்றீங்க? கார்யா சார், நீங்க சொல்லுங்க, அதுலயும் உங்க நடிப்பைப் பற்றித் தான் ஒரே பேச்சா இருக்கு"

கார்யா, "ரொம்ப நிறைவா இருக்கு. இதையும் ஒரு படம்னு நினைச்சு மக்கள் தியேட்டருக்கு வந்து பாக்கறதுல ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. ஏன்னா, இந்தப் படம் ரிலீஸ் ஆவுமான்னே நிறைய பேருக்கு டவுட் இருந்திச்சு. ஏன், எங்களுக்கே கூட இருந்தது"

தயாரிப்பளார் தர்மப்பிரபு இடைமறித்து, "முதல்ல இந்தப் படத்தை சென்சார் போர்ட் தணிக்கையே பண்ணமாட்டேனுட்டாங்க. ஏன்னா அந்த அளவுக்கு திராபையா இருக்குன்னு சொன்னாங்க. இந்த மாதிரி படம் ரிலீஸ் பண்ணினா மக்கள் மன நலம் பாதிக்கப்படும்னு பயந்தாங்க. அவங்க சொல்றது உண்மைன்னாலும் எங்க உழைப்பு வீணாப் போயிடுமே? அவங்களை கன்வின்ஸ் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு"

டிவி தொகுப்பாளினி, "டைரக்டர் அறிவுஜீவி சார், நீங்க சொல்லுங்க, எப்படி இந்தக் கதை உங்களுக்குள்ள உருவாச்சு?"

அறிவுஜீவி, "இது ஒரு பத்து வருஷ முயற்சிக்குக் கிடைத்த வெற்றின்னு தான் சொல்லணும். ஏன்னா, இந்த பத்து வருஷத்துல அவ்ளோ பிற மொழிப் படங்களை டிவிடிலேயும், திரைப்பட விழாக்களிலும் போய் மாஞ்சு மாஞ்சு பார்த்து, அது எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி இந்த கதையை நான் உருவாக்கியிருக்கேன். இது தமிழ்ல வந்திருக்கற ஒரு குளோபல் படம்னே சொல்லலாம்"

டிவி தொகுப்பாளினி, பட ஹீரோயினைப் பார்த்து, "என்ன பனுஷ்கா மேடம், ரொம்ப அமைதியா இருக்கீங்க? இது உங்க ரெண்டாவது படம், எப்படி வந்திருக்கு?"

கார்யா (பனுஷ்காவை கலாய்ப்பதாய் நினைத்துக் கொண்டு), "அவங்க காமெரா முன்னாடி தான் இப்படி. காமெராவுக்குப் பின்னாடி அவங்களை கையில புடிக்க முடியாது, என்ன பனுஷ், சரிதானே?"

பனுஷ்கா, "ரெம்ப ஹாப்பியா இருக்கு, அதுலயும் இதுல எனக்கு ஒரு வில்லேஜ் கேர்ல் ரோல் குடுத்திருக்காங்க. நிறைய கிளாமர் அண்ட் கொஞ்சம் ஆக்டிங் ரெண்டும் இருக்கற மாதிரியான ஒரு ரோல்"

அறிவுஜீவி, "காஸ்டியூம் விஷயத்துல டெய்லி எனக்கும் அவங்களுக்கும் மினி யுத்தமே நடக்கும். “நான் புல்லா டிரஸ் போட்டா ரசிகர்கள் கோச்சுக்குவாங்க, நீங்க என்னடான்னா பாவாடை தாவணி போடச் சொல்றீங்களே”ன்னு ஷூட்டிங் ஸ்பாட்டே ரகளையா இருக்கும். அப்புறம் இவங்களுக்காக ஜன்னல் வெச்ச ஜாக்கெட், வாசக்கால் வெச்ச பாவாடை, கம்பி போட்ட தாவணி எல்லாம் மும்பைலேர்ந்து வரவழைச்சு ஒரு மாதிரி ஒப்பேத்திட்டோம்."

டிவி தொகுப்பாளினி, "தர்மப்ரபு சார், இந்தப் படத்துக்கு நீங்க நிறைய செலவழிச்சிருக்கறதா ஆடியோ ரிலீஸ்ல சொல்லியிருந்தீங்க இல்லையா?"

தர்மப்ரபு, "ஆமாம், அதுலயும் குறிப்பா அவங்க காஸ்டியூம் செலவை விட அதை வரவழைக்க ஆன கொரியர் செலவு ஜாஸ்தின்னா பார்த்துக்கோங்க.

டிவி தொகுப்பாளினி, "சரி சார், இப்போ ஒரு நேயர் லைன்ல இருக்கார், ஹலோ!"

நேயர், "ஹலோ, வசையருவி? நான் அரக்கோணத்திலேர்ந்து அமுதகுமார் பேசறேன் மேடம்"

கார்யா, "சொல்லுங்க அமுதகுமார், நீங்க தானே உங்க ஊர் ராஜா தியேட்டர்ல முதல் ஷோ முதல் டிக்கெட் வாங்கின ஆளு?"

நேயர், "முதல் ஷோ பார்த்த ஆள் மட்டும் இல்லை சார், உங்க படத்தை எங்க ஊர்ல பார்த்த ஒரே ஆளும் நான் தான்"

அறிவு ஜீவி, "அமுதகுமார், படம் பார்த்தீங்களா? எப்படி இருக்கு?"

நேயர், "செம டெரரா இருக்கு சார், அதுலயும் கார்யா சார் பேசற அந்த வசனம் "ஊறுகாயை நக்கித் தான் சாப்பிடணும், அப்பளத்தை உடைச்சித்தான் சாப்பிடணும்" சூப்பர் சார். அதுலயும் உங்க உடம்பு, என்ன பாடி சார் அது?"

கார்யா, "படத்தை ரொம்ப ரசிச்சு பார்த்திருக்கீங்க போல, உங்க நண்பர்கள் கிட்டயும் பேசி அவங்களையும் படம் பாக்க வைங்க, சரிங்களா?"

நேயர், "அப்புறம் சார் இரு சின்ன விஷயம், நீங்க முதல் டிக்கெட் வாங்கினதுக்காக ஒரு மோதிரம் குடுத்தீங்களே, அது கவரிங்க்னு தெரிஞ்சு போச்சு, ஒரிஜினல் எப்ப சார் குடுப்பீங்க?"

கார்யா, "ஹெலோ ஹெலோ ஹெலோ..." - லைன் கட் ஆயிடுச்சுன்னு நினைக்கறேன்"

டிவி தொகுப்பாளினி, "கார்யா சார், நானே கேக்கணும்னு நினைச்சேன், எப்படி சார் அப்படி ஒரு பாடி டெவலப் பண்ணினீங்க?"

கார்யா, "அது ரொம்ப சிம்பிள், நம்ம சைதாபேட்டை ஸ்டேஷன் வெளியில ஒருத்தர் ரொம்ப அழகா ரோட்ல டிராயிங் போடுவார். அவரைக் கூப்பிட்டு சப்பாத்தி மாவுல வரி வரியா கட்டிங்க்ஸ் போடச் சொன்னோம். அப்புறம் அதை எடுத்து என் பாடி மேல ஒட்டிக்கிடுவேன்."

டிவி தொகுப்பாளினி, "கேக்கவே ரொம்ப வித்யாசமா இருக்கு"

பனுஷ்கா, "எஸ்பெஷலி டூயட்ல அவர் ஓப்பன் பாடியா இருப்பாரு, அவரை கட்டிப் பிடிக்கும்போது மாவு என் உடம்புல ஒட்டாம கட்டிப் பிடிக்கணும். குறிப்பா அந்த வரிகள் அழிஞ்சிடாம பார்த்துக்கணும். இட் வாஸ் வெரி டப்"

கார்யா, "அவங்க டூயட்னு சொன்னதும் ஒரு விஷயம் சொல்லணும். அந்த "வாடா வாடா எச்சக்கலை" சாங்க்ல அவங்க ஒரு யெல்லோ டிரஸ் போட்டுக்கிட்டு வருவாங்க. இன்னிக்கு யூத்ஸ் மத்தியில அது தான் ஹாட்"

டிவி தொகுப்பாளினி சிரித்துக்கொண்டே, " சரி சார், இன்னொரு நேயர் லைன்ல இருக்கார், ஹெலோ?"

நேயர், "ஹெலோ, நான் கல்பாக்கத்திலேர்ந்து கலைவாணி பேசறேங்க"

"சொல்லுங்க கலைவாணி, கும்தலக்கடி படம் பார்த்தீங்களா?"

"ஆமாங்க, ரொம்ப நல்லாருக்குங்க, கார்யா சார் இருக்காரா?'

கார்யா, "நான் கார்யா தான் பேசறேன், சொல்லுங்க"

கலைவாணி, "சார் உங்க நடிப்பு சூப்பர் சார்"

"ரொம்ப தேங்க்ஸ், படம் புடிச்சிருக்கா?"

"கண்டிப்பா சார், ஒரு சீன்ல உங்க தங்கச்சி தூங்கணும்கறதுக்காக ராத்திரி பூரா கொசு அடிப்பீங்களே, அப்படியே கண்ணு கலங்கிடுச்சு சார். எனக்கும் இப்படி ஒரு அண்ணன் கிடைக்க மாட்டாரான்னு ஏங்கிட்டேன்"

கார்யா, "ஆமாங்க, அந்த ஸீன் பண்ணும்போது மொத்த யூனிட்டும் கண்ணு கலங்கிடுச்சு" (கண்ணைத் துடைத்துக் கொள்கிறார்)

டிவி தொகுப்பாளினி, "சரிங்க கலைவாணி, கால் பண்ணினதுக்கு நன்றி"

கலைவாணி, "மேடம் மேடம், உங்க ஆளுங்க என்கிட்ட வந்து ஸ்டூடியோவுக்கு போன் பண்ணுங்க, நூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் போடறோம்னு சொன்னாங்க மேடம், ஆனா அம்பது ரூபாய்க்குத் தான் பண்ணியிருக்காங்க. மீதி எப்ப மேடம் குடுப்பீங்க? (வழக்கம் போல் லைன் கட் ஆகிறது)

அறிவுஜீவி, "தங்கச்சிக்காக இவர் ஒரு பாட்டு பாடுவாரு, தமிழ்நாட்டுல இருக்கற தங்கச்சிங்க எல்லாம் இப்ப அந்த பாட்டைத் தான் காலர் டியூனா வெச்சிருக்காங்கன்னு நண்பர் ஒருத்தர் சொன்னார்"

தர்மப்ரபு, "பாட்டுன்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது, கரடிமுத்து ரொம்ப அருமையா எழுதி குடுத்திருக்கார்"

அறிவு ஜீவி, "நம்ம பால்ராஜ் டியூன் சொல்லி முடிக்கறதுக்குள்ள அப்படியே வார்த்தைகளை கொட்டிடுவாரு, நாம தான் நமக்குத் தேவையானதை பொறுக்கிக்கணும்"

டிவி தொகுப்பாளினி, "சரி சார், இன்னொரு நேயர் லைன்ல இருக்கார், ஹெலோ?

நேயர், "நான் அம்பத்தூர்லேர்ந்து ரமேஷ் பேசறேன் மேடம், படம் பார்த்தேன், சூப்பர் மேடம், சாங்க்ஸ் எல்லாம் சான்சே இல்லை. பனுஷ்கா மேடம் கிட்ட பேச முடியுமா?"

பனுஷ்கா , "நான் பனுஷ்கா பேசறேன், சொல்லுங்க ரமேஷ்"

நேயர், "மேடம், உங்க நடிப்பு சூப்பர் மேடம், டான்சும் சூப்பர்"

பனுஷ்கா, "ரொம்ப தேங்க்ஸ் ரமேஷ், இந்த படத்துல உங்களுக்குப் பிடிச்ச சாங் எது?"

நேயர், "வாடா வாடா எச்சக்கலை தான் என் பேவரிட், நீங்க ஒரு ரெண்டு வரி பாடிக்காட்டணும் மேடம், ப்ளீஸ்"

பனுஷ்கா பாடுகிறார். எல்லோரும் கை தட்டுகின்றனர்.

நேயர், "ரொம்ப தேங்க்ஸ் மேடம்"

பனுஷ்கா, "இட்ஸ் ஓகே"

நேயர், "அதுக்கில்லை மேடம், உங்க குரல் ஆக்ஸா ப்ளேடை விட கொடுரமானதுன்னு என் பிரெண்ட் கிட்ட பெட் கட்டியிருந்தேன், நீங்க நிரூபிச்சிட்டீங்க, அதுக்குத் தான் தேங்க்ஸ்"
(பனுஷ்கா கடுப்பாகிறார்)

தர்மப்ரபு பேச்சை மாற்றும் விதமாக, "ரமேஷ், படத்தைத் தியேட்டர்ல தானே பார்த்தீங்க? திருட்டு விசிடில இல்லையே?"

"தியேட்டர்ல தான் சார், அங்க தான் பிரீயாவே கூப்பிட்டு பாரு பாருன்னு சொல்றாங்களே, போதாக்குறைக்கு கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் வேற தராங்க. அது மட்டுமில்லாம திருட்டு விசிடி சங்கத்து ஆளுங்க இந்தப் படத்தை விக்கறதில்லைன்னு முடிவு பண்ணிட்டாங்களாம். ஏன்னா தியேட்டர்லயே ஒருத்தரும் இல்லை, இதை எவன் வாங்கபோறான்னு சொல்லிட்டாங்க"

எல்லோரும் கப்சிப் ஆகவே, அறிவு ஜீவி பேசுகிறார்,, "படத்தோட இன்னொரு ஹைலைட் காமெடி. கார்யாவும் நடிகர் குங்குமமும் சேர்ந்து வர்ற ஸீன் எல்லாம் தியேட்டர்ல செம க்ளாப்ஸ் தான் போங்க"

டிவி தொகுப்பாளினி, "கடைசியா ஒரு நேயர் லைன்ல வரார், ஹெலோ?"

நேயர், "ஹெலோ, நான் கோட்டையிலிருந்து முதலைமச்சர் பேசறேன்"

எல்லாரும் ஷாக்காகி, "ஐயோ மேடம் நீங்களா?"

"உங்க படத்தைத் தான் மனிதர்கள் பாக்கவே லாயக்கில்லைன்னு தமிழக அரசு தடை பண்ணியிருக்கே, அப்புறம் எதுக்கு ப்ரோமோஷன் பண்றீங்க?"

"என்னது தடை பண்ணிட்டீங்களா?"

"அது மட்டுமில்லை, நீங்கல்லாம் டிவில பண்ற ராவடி தாங்க முடியாமத்தான் தமிழ்நாட்டுல எங்கேயும் சோபா செட் போடக்கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்கேனே? அப்புறம் எப்படி நீங்க ஸ்டூடியோவுல கால் மேல கால் போட்டு உக்காந்திருக்கீங்க? உஸ்மான் ரோடு முழுக்க சீல் வெச்ச பிறகும் உங்களுக்கெல்லாம் யாரு ஸ்பான்சர் பண்றது? செக்ரெடரி, உடனே கமிஷனரை விட்டு சேனலுக்கு சீல் வைக்கச் சொல்லுங்க"

"சீலா?" எல்லோரும் தறிகெட்டு ஓடுகின்றனர்.

Jayaraman
New Delhi

Monday, November 21, 2011

இந்தியா - 2020



எவ்ளோ நாளைக்குத் தான் டிராபிக் சிக்னல்ல நிக்கற பிச்சைக்காரங்களையும் ஊனமுற்றவங்களையும் பார்த்து உச்சுக் கொட்டி பரிதாபப் படறது? நான் கடவுள் படத்துல பாலா உண்மையை வெட்ட வெளிச்சமாக் கட்டிட்டார். அதனால இடுக்கண் வருங்கால் நகுகன்னு வள்ளுவர் சொன்ன மாதிரி கொஞ்சம் லைட்டா.....



ஒரு பிரபல தனியார் வங்கியின் கிளை.

விவேக் ஏதோ ஒரு வேலைக்காக அங்கே வந்திருக்கிறார். அவரிடம் ஒருவர் பேனா கேட்கிறார். பேனா கேட்கும் நபரை நிமிர்ந்து பார்த்து அதிர்கிறார்,

"நீயா?.."

"ஆமாம், நானே தான், வாந்தி எடுக்கறவன் எல்லாம் வண்டி எடுன்னு சொல்றான்னு சொன்னீங்களே, அதே பிச்சைக்காரன் தான்"

"டேய், நீ இங்க என்னடா பண்ற?"

"பணம் போட வந்தேன், நீங்க?"

"பணம் வாங்க வந்தேன், ஐ மீன் கடன் வாங்க வந்தேன்"

"இங்க ஏன் வாங்கறீங்க? அநியாய வட்டி வாங்குவாங்களே? நான் தரேன், இவங்களை விட கம்மி ரேட்டுக்கு"

"இந்த பிசினஸ் வேற பண்றியாடா நீ?"

"இதுவும் பண்றேன், ஒரு பத்து நிமிஷம் இருங்க, ஒரு வயர் ட்ரான்ஸ்பர் பண்ணிட்டு வரேன்"

"எல்லாம் உன் நேரம்டா"

பிச்சைக்காரர் வெளியே வருகிறார்.

"சொல்லுங்க சார், உங்களுக்கு எவ்ளோ பணம் தேவைப்படுது?"

"அது இருக்கட்டும், உங்க கிட்ட எப்படி இவ்ளோ பணம்?"

"உழைக்கறோம்ல"

விவேக், "அப்போ நாங்கல்லாம் சும்மாவா இருக்கோம்? நாங்களும் தான் உழைக்கறோம்"

"நீங்க சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க, நாங்க சுய தொழில் செய்யறவங்க"

"என்னது தொழிலா? நீ செய்யறது தொழில்னா டாட்டா பிர்லா அம்பானி இவங்க செய்யறதெல்லாம் என்னடா?"

"நாங்களும் டாட்டா அம்பானி தாங்க. இந்தியன் GDPல எங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கு "

"GDPயா?"

"கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட். இது கூடத் தெரியாதா?"

விவேக், "விட்டா பாலன்ஸ் ஷீட், ப்ராபிட் அண்ட் லாஸ் அக்கௌன்ட் எல்லாம் வெச்சிருப்பே போலிருக்கே?"

"அதெல்லாம் என் ஆடிட்டர் தான் பாத்துக்கறார்"

"இருந்தாலும் பிச்சை எடுக்கறது கேவலம் தானே?"

நீங்க கூட பல சினிமாக்கள்ல பிச்சைக்காரங்களைப் பற்றியும் பிச்சை எடுக்கறதைப் பற்றியும் காமெடி பண்ணியிருக்கீங்க. அப்படின்னா அதெல்லாம் கேவலமா? சிநேகிதனை, சிநேகிதனை - மறந்துட்டீங்களா?

விவேக், "அந்தப் பாத்திரத்தை மறக்க முடியுமா!ஆனா அதெல்லாம் காமெடிக்காக எழுதினது"

பிச்சைக்காரர், "பட் உங்க பொழைப்பு ஓடிச்சுல்ல. ஹிட் ஆச்சுல்ல? யார் தான் சார் பிச்சை எடுக்கலை? நாங்க ஓபனா செய்யறோம், நீங்க மறைவா செய்யறீங்க. அவ்ளோ தான் வித்யாசம்"

"அதுவும் சரி தான்"



"பெரிய பெரிய முதலாளிங்க எல்லாம் கம்பெனி நஷ்டத்துல ஓடுதுன்னு சொல்லிட்டு கவெர்மென்ட் கிட்ட போய் மானியம் குடுங்கன்னு நிக்கறாங்க. அது பிச்சை இல்லையா?. நாங்க ஒண்ணும் ஊரை அடிச்சு உலையில போடலை. மக்கள் அவங்களால முடிஞ்சதை எங்களுக்குத் தராங்க. அத வெச்சு நாங்க பொழைக்கறோம்"

"என்னமா லாஜிக் பேசறே"

"அத்தனையும் உண்மைங்க. நாங்களும் சமுதாயத்துல பெரும்புள்ளிங்க தான். எங்களுக்கும் சுவிஸ் பாங்க்ல அக்கௌன்ட் இருக்கு"

"டேய் என்கிட்டே சுவிஸ் நைப் கூட இல்லையேடா"

"நீங்க கூலிக்கு மாரடிக்கறவங்க, நாங்க சுய தொழில் செய்யறவங்க"

"மறுபடியும் தொழில்னு சொல்லாதேடா"

"ஏங்க சொல்லகூடாது? அரசாங்கமே தீவிரமா யோசிச்சிக்கிட்டிருக்காங்க"

"எதைப்பத்தி?"

"எங்களைப் பற்றித்தான். இதை ஒரு முறையான தொழிலா அறிவிச்சு தேசிய அளவுல ஏலம் விட்டு லைசென்ஸ் கூட குடுக்கப் போறாங்க"

"எதுக்கு லைசென்ஸ்?"

"பிச்சையெடுக்கத் தான். நான் கூட கம்பெனி பார்ம் பண்ணிட்டேன்"

"கம்பெனியா?"

"ஆமாங்க, முன்ன மாதிரி அங்க இங்க ஓடி பிச்சை எடுக்க முடியல. இப்படி ஒரு கம்பெனி ஆரம்பிச்சு லைசென்ஸ் வாங்கிட்டோம்னு வைங்க, அப்புறம் என் staff போய் பிச்சை எடுத்துட்டு வருவாங்கல்ல "

"அடேங்கப்பா, நான் உன்னை என்னமோ நினைச்சேன், ஆனா உன் ரேஞ்சே வேறயா இருக்கு. ரொம்ப விவரமாத்தான் இருக்கே"

"இல்லேன்னா தொழில் பண்ண முடியுமா?"

"வேறேன்னெல்லாம் ஐடியா வெச்சிருக்கே?"



கவெர்மென்ட் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி குடுத்தாங்கன்னா ஒரு வெளி நாட்டுக் கம்பெனிய என் கூட பார்ட்னரா சேர்த்துக்குவேன். அப்புறம் IPO மூலமா என் கம்பெனிய பப்ளிக் லிமிடெட் கம்பெனியா மாத்திடுவேன்.

"இப்பவும் உன் கம்பெனி பப்ளிக் தயவுல தானேடா ஓடுது?"

அப்புறம் ஒரு பெரிய இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கணும்

"யாருக்கு?"

"பிசைக்காரங்களுக்குத் தான்"

"எதுக்கு"

புதுசா பிச்சை எடுக்க வர்றவங்களுக்கு அங்க ட்ரைனிங் குடுக்கணும்.

"என்ன ட்ரைனிங் குடுப்பே?"

"எல்லா மொழிகள்லயும் பிச்சை எடுக்கறது எப்படி, போலீஸ் மற்றும் ரவுடிகளை ஹேண்டில் செய்வது எப்படி, ரக வாரியா பைசாவை எப்படி சீக்கிரம் எண்றது, பார்த்தா சட்டுன்னு அருவருப்போ இல்லை பரிதாபமோ வர்ற மாதிரி எப்படி மேக்கப் போடறது - இப்படி நிறைய விஷயம் யோசிச்சு வெச்சிருக்கேன். குறிப்பா மேக்கப்புக்கு கமல் சாரை டிரைனராப் போடலாம்னு ஒரு ஐடியா இருக்கு.

"அட அட அட, இளைஞர்களே, நோட் பண்ணுங்கப்பா"

இன்னும் கேளுங்க. மக்கள் போன் பண்ணினாப் போதும். டோல் ப்ரீ நம்பர் தான். நாங்களே வீடு தேடி போய் பிச்சை வாங்கிப்போம். மொபைல் மூலமாவும் எங்களுக்கு பிச்சை போடலாம். ஒரு சின்ன அப்ளிகேஷன் டவுன்லோட் பண்ணிக்கிட்டாப் போதும். ரெகுலரா பிச்சை போடறவங்களுக்கு நாங்க பாயிண்ட்ஸ் குடுப்போம். அதை அவங்க ஷாப்பிங் பண்ணும்போது ரீடீம் பண்ணிக்கலாம். இல்லேன்னா வருஷ முடிவுல அவங்களுக்கு சர்டிபிகேட் தருவோம், அதைக் காட்டி வருமான வரிலேர்ந்து விலக்கு வாங்கிக்கலாம்.




விவேக், "ஆஹா, நான் ஒரு காலத்துல காமெடியா சொன்னதெல்லாம் இப்ப நிஜமாலுமே நடக்கும் போலிருக்கே?"

"இது என் கனவுங்க. கனவு காணுங்கள்னு அப்துல் கலாமே சொல்லியிருக்காரே, உங்களுக்குத் தெரியாததா?"

விவேக், "உனக்கும் அவர் தான் ரோல் மாடலாடா? பாவம்டா அவரு. ஏற்கனவே கூடங்குளம் மேட்டர்ல மாட்டிகிட்டு மனுஷன் முழிக்கறாரு. இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப பீல் பண்ணுவாரு"

இதற்கிடையில் பிச்சைக்காரரின் போன் ஒலிக்கிறது. எடுத்துப் பேசுகிறார். "சொல்லுங்க தலைவரே, ஒஹ் அப்படியா? கண்டிப்பா, நாளைக்கே உங்க ஆளுங்களை அனுப்பி வாங்கிக்கோங்க"

பின்னர் விவேக்கைப் பார்த்து, " நாக்கமுக்க கட்சிலேர்ந்து பேசறாங்க. இடைத்தேர்தல் வருதாம், தேர்தல் நிதி வேணுமாம், வந்து வாங்கிக்கோங்கன்னு சொல்லியிருக்கேன். பிச்சைக்காரப் பசங்க, என்கிட்டயே பிச்சை கேக்கறாங்க"

"உங்ககிட்ட தானே ரெகுலரா இன்கம் வருது, அதுவும் டாக்ஸ் ப்ரீ. அதனால தான் கேக்கறாங்க"

"எங்கெங்க வருது? முன்னாடியெல்லாம் மக்கள் கிட்ட காசு கம்மியா இருந்திச்சு. ஆனாலும் நிறைய தர்மம் பண்ணினாங்க. இப்ப காசு நிறைய இருக்கு. ஆனா மனசு சின்னதாயிடுச்சு. எல்லாம் சுயநலவாதியா ஆயிட்டாங்க. அந்த அளவுக்கு போட்டி பொறாமை. அவங்களையும் தப்பு சொல்ல முடியாது. எல்லாரும் நித்ய கண்டம் பூரண ஆயுசுன்னு வேலை இன்னிக்கு போவுமோ நாளைக்கு போவுமொன்னு இருக்காங்க. போதாக்குறைக்கு என்னமோ சொல்றாங்களே, ரேஷனோ ரெசெஷனோ, அது வேற வந்திருக்காம். அரசாங்கமும் புதுசா தொழில் எதுவும் கொண்டு வரமாட்டேங்கறாங்க. எவ்ளோ நாளைக்குத் தான் கம்பியூட்டரை வெச்சு ஓட்டறது சொல்லுங்க? மக்கள் சம்பாதிச்சாத் தானே நாங்க சம்பாதிக்க முடியும்.

நீ சொல்றதை எகனாமிக் டைம்சிலேயே பப்ளிஷ் பண்ணலாம் போலிருக்கே!"

"போன வாரம் என்னோட இண்டர்வியூ வந்திச்சே, பாக்கலியா நீங்க?"

"ஆ, போதும்டா போதும்டா, என்னால இதுக்கு மேல தாங்க முடியாது"

பிச்சைக்காரர் சிரித்துக் கொண்டே, "அது சரி, உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லவே இல்லையே?"

"எனக்கு ஒரு 5 லட்சம் வேணும்"

"அவ்ளோ தானா? ஒரு நிமிஷம் இருங்க"

தன் ஐபோன் மூலம் விவேக்கை போட்டோ எடுக்கிறார். பிறகு போனில் அவரது கை ரேகையையும் எடுத்துக் கொள்கிறார்.

"டேய் என்னாங்கடா இது, புதுசா இருக்கு?"

பொறுங்க என்று சைகையில் காட்டிவிட்டு ஏதோ நாலைந்து முறை போனை தட்டுகிறார். பிறகு யாரிடமோ பேசுகிறார். "டேய் மாரி, டீடைல்ஸ் அனுப்பியிருக்கேன். சாருக்கு ஒரு 5 லட்சம் கேஷ் வீட்ல டெலிவர் பண்ணிடு, ஓகேவா?

விவேக் பிச்சைக்காரரைப் பார்த்து, "நீ என்கிட்டே எந்த விவரமும் கேக்கலையே, அப்புறம் எப்படி எனக்குப் பணம் கிடைக்கும்?"

பிச்சைக்காரர், "அதான் உங்க போட்டோ அண்ட் ரேகை இருக்குல்ல, அதை வெச்சு கண்டுபிடிச்சிடுவோம். நீங்க பணம் திருப்பிக் கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா ஜஸ்ட் ஒரு மிஸ்டு கால் குடுங்க, நாங்களே வந்து கலெக்ட் பண்ணிக்குவோம் - கஸ்டமர் சர்வீஸ் ரொம்ப முக்கியம் இல்லையா?"

"நீங்க இப்படியெல்லாம் பயன்படுத்துவீங்கன்னு முன்னமே தெரிஞ்சு தானோ என்னமோ, ஸ்டீவ் ஜாப்ஸ் சீக்கிரமே போயிட்டாரு. சரி, நான் உங்களை ஏமாத்திட்டு ஓடிட்டா?"

அதான் முடியாது. எங்க டேட்டாபேஸ் ரொம்ப ஸ்ட்ராங். இந்தியாவுல இருக்குற எல்லா பிச்சைக்காரங்க கிட்டயும் உங்க போட்டோ இருக்கும். நீங்க எங்களை ஏமாத்திட்டு எங்கேயும் ஓட முடியாது. ஏன்னா நாங்க தான் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், ஏர்போர்ட்னு எல்லா இடத்துலயும் இருக்கோமே!

"ஆமாம், கடவுள் இருக்காரோ இல்லையோ, கண்டிப்பா நீங்க எல்லா இடத்திலயும் நீக்கமற நிறைஞ்சிருக்கீங்க.

அப்படியும் மீறி நீங்க பிரச்சினை பண்ணினா, இருக்கவே இருக்கு ஆபீஸ் ரூம்"

"ஆபீஸ் ரூமா?"

"எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச ஆபீஸ் ரூம் தான் சார்"

"ஆஹா, அந்த ஆபீஸ் ரூமா? ஐ ஆம் எஸ்கேப்"

Tuesday, November 15, 2011

இதைப் படிக்காதீங்க



கொச்சின் அணி வெளியேறிய பிறகு அந்த இடத்தைத் தக்க வைத்தக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பல தென்னிந்திய நடிகர்கள் ஏழுமலையானுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தகவல்.

சாதனை சதம் தொடர்ந்து நழுவிப் போவது சாதனை நாயகனை மிகவும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. புதிய வீட்டின் அமைப்பு குறித்து வாஸ்து நிபுணர்களை மீண்டும் ஒருமுறை கல்சல்ட் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம்.

டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டை ப்ளாக்கில் விற்ற விவகாரம் தலைவர் காதுக்கு எட்டியிருக்கிறது. பார்ட்டி சூடாவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு "இப்படி ஒரு யோசனை நமக்கு வராம போச்சே" என்று ஷாக் குடுத்து வருகிறாராம்.

இந்திய வீரர்கள் மாறி மாறி செஞ்சுரி அடித்தும் கொல்கத்தா மைதானம் காலியாக இருப்பது அசோசியேஷன் அதிகாரிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. எனினும் அடுத்த இரண்டு நாட்களில் கூட்டம் கூடும் என்று நம்பிக்கையோடு இருப்பதாக கொல்கத்தாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட்டை வைத்து திரையில் சீட்டு விளையாடிய இயக்குனருக்கு நிஜத்திலும் அப்படி விளையாட ஆசை வந்து விட்டதாம். அநேகமாக அடுத்த IPLக்கு தம்பியுடன் மும்பையில் டேரா போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அடுத்தடுத்து நண்பர்கள் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவதில் பஞ்சாப் ராஜாவுக்கு ஏக வருத்தமாம். சீக்கிரம் தனக்கும் யாராவது கழுத்தை நீட்ட மாட்டார்களா என்று ஏங்கிப் போயிருக்கிறாராம். மைதானத்தில் தொடரும் சொதப்பல்களுக்கும் இதுவே காரணமாம்

திருமணமான அன்றே கிரிக்கெட் விளையாடச் சென்ற "வெற்றி" வீரரை அனைவரும் பெருமையுடன் பார்த்தாலும், அன்றைய தினம் சாந்தி முகூர்த்தத்துக்கு உகந்ததில்லை என்று ஜோதிடர் கூறியது தான் முக்கிய காரணம் என்கின்றனர் நெருங்கியவர்கள்.

மேட்ச் பிக்சிங் விவகாரத்தை முழுதாக விசாரிக்காமல் திடுமென முடித்து தீர்ப்பு வழங்கியிருப்பதாக பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்கள் குமுறி வருகின்றனர். முழுதாக விசாரித்தால் அணியின் என்றும் இளமையான வீரர் முதல் அமைச்சர் வரை பலரின் தலை உருளக் கூடும் என்பதே முக்கிய காரணம் என்கின்றனர் அவர்கள்.

தென்னாப்பிரிக்காவில் நடந்த தடாலடி டெஸ்ட் போட்டியில் ஐசிசியின் கைங்கர்யம் இருப்பதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். டெஸ்ட் போட்டியை விறுவிறுப்பாக்க இரண்டு அணிகளையும் சரி கட்டியதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இயந்திர மனிதன் எடுத்த கோடி இயக்குனர் கிரிக்கெட்டில் நடக்கும் திரைமறைவு சம்பவங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டு வருவதாகக் உதவி இயக்குனர் வட்டாரம் தெரிவிக்கிறது. அநேகமாக மேட்ச் பிகிசிங்கை மையமாக வைத்து அடுத்த படம் எடுக்கக் கூடும் என்பது கொசுறு தகவல்

விளையாட்டு மந்திரி பிசிசிஐயுடன் தொடர்ந்து விளையாடி வருவது ஏழுமலையானை உச்சகட்ட கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இருப்பினும் தற்போதைக்கு சாந்தமாக இருக்குமாறு "சக்தி" மந்திரி அறிவுறுத்தி வருவதாக நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

கங்காரு அணி மோசமாக விளையாடினாலும் வாரியம் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக சிட்னி செய்திகள் தெரிவிக்கின்றன. இதைச் சாக்காக வைத்து அணியில் அதிரடியாகக் களை பிடுங்க திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக முன்னாள் கேப்டனுக்கு செக் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"சுவர்" வீரர் தொடர்ந்து டெஸ்டில் வீடு கட்டி அடிப்பது கிரிக்கெட் பிரியர்களையும் இளம் வீரர்களையும் மிகவும் உற்சாகமூட்டியுள்ளது. இந்த வயதிலும் அவர் மன உறுதியோடு விளையாடுவது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Wednesday, November 9, 2011

நான்கு கில்லாடிகள்


இப்போதைய சென்சேஷன் மேட்ச் பிக்சிங் தான். அந்த கோர்ட் ரூம் டிராமாவைக் கொஞ்சம் வேற விதமா யோசிச்சா...?

நீதிபதி, " முதலில் ஆசிப்பை அழையுங்கள்"

ஆசிப், "வணக்கம் துரை, ஏன் சார், நமக்கு இதானே லாஸ்ட் மீட்டிங்?"

நீதிபதி, "குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா? ஏன் இப்படிச் செய்தீர்கள்?"

"நீங்களும் நிறைய தடவை கேட்டுட்டீங்க. நானும் நிறைய தடவை சொல்லிட்டேன். மறுபடியும் சொல்றேன்" என்று கூறி தொடர்கிறார்.

"மஜார் மஜீத் மஜார் மஜீத்னு ஒரு புரோக்கர் பய எங்க ஊர் கிரிக்கெட் போர்டோட ரொம்ப நாள் நெருங்கி பழகறதா எங்க ஊர்ல பேசிக்கிட்டாங்க. எனக்கு உடனே கோவம் வந்து அந்த ஆள் சட்டையைப் பிடிக்கப் போனேன். அதுக்கு அவன் "பணத்தை நீ வெச்சுக்க, கிரிக்கெட்டை நான் வெச்சுக்கறேன்னு" கூலா ஒரு பதில் சொன்னான். பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்திச்சு.

நீதிபதி, "இவ்ளோ கேவலமான கதையை எவ்ளோ தடவை தான் சொல்வே?"

"அதான் கேவலம்னு தெரியுதுல்ல, அப்புறம் திரும்பத் திரும்ப விசாரணைன்னு கூப்பிட்டு ஏன் தாலியை அறுக்கறீங்க? சீக்கிரம் கேட் பாஸ் குடுத்து அனுப்பி விடுங்க"

நீதிபதி, "ஒரு வருடம் ஜெயில் தண்டனை, நீங்க போகலாம்"

ஆசிப், "ஒரு வருடமா?". பிறகு போலீஸ் அதிகாரியைப் பார்த்து, "என் செல்லுக்குப் பக்கத்துல லேடீஸ் ஜெயில் இருக்கும்ல? ஏன்னா போரடிக்கும் பாருங்க, அதான் கேக்கறேன்"

போலீஸ் அதிகாரி, "அந்த கவலை உனக்கு வேண்டாம், நாங்க பார்த்துக்கறோம்"

அடுத்து மிஸ்டர் மஜார் மஜீத்:

"மிஸ்டர் மஜார், இந்த மொத்த ஆபரேஷனுக்கும் நீங்க தான் பொறுப்புன்னு ஒத்துக்கறீங்களா?"

"என்ன பெரிய ஆபரேஷன், கார்கில் யுத்தமா பண்ணினேன்? ஏதோ புக்கீங்களுக்கு நாலு காசு சம்பாதிச்சு கொடுத்தேன், நாலு ஏழை வீரர்களுக்கு வாழ்வு கொடுத்தேன், அப்படியே நாலு காசு நானும் பார்த்தேன். இதெல்லாம் ஒரு குற்றமா?"

"தான் செய்யறது தப்புன்னே தெரியாத அளவுக்கு உங்களுக்கெல்லாம் மரத்துப் போயிடுச்சுல்ல?"

"யோவ் பெரிசு, இங்கென்ன ஷங்கர் படம் ஷூட்டிங்கா நடக்குது? இந்தியன் தாத்தா மாதிரி பீல் பண்றே, சீக்கிரம் கடையை மூடு, ஏகப்பட்ட வேலைகள் இருக்கு"

நீதிபதி, "இரண்டு வருடம் மற்றும் எட்டு மாதம் ஜெயில் தண்டனை"

மஜார், "இம்புட்டு தானா?, இதுக்குத் தான் ஒரு வருஷமா என்னை கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய விட்டீங்களா?, உங்களால எனக்கு வருமானம் போச்சுன்னு உங்க மேல மான நஷ்ட வழக்கு போடறேன்"

அருகிலிருக்கும் போலீஸ் அதிகாரி மஜாரை முறைக்கவும், மஜார் "என்னடா லுக்கு, ஒழுங்கா ஜாக்கிரதையா ஜெயிலுக்கு கூட்டிட்டுப் போ. கேர்ல்பிரெண்ட் என்னைப் பார்க்க வரும்போது மூஞ்சி பளிச்சின்னு இருக்கணும்.

நீதிபதி, "சல்மான் பட், நீங்க வரலாம்"

நீதிபதி, "மிஸ்டர் சல்மான், உங்க மேல வைக்கப்பட்டிருக்கற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்றீங்க?, இது உங்களுக்கு நாங்க தர்ற கடைசி சான்ஸ்"

சல்மான், " நீதிமன்றம், எவ்வளவோ வித்யாசமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இது அதிவித்யாசமான வழக்கு. நோ பால் வீசச் சொன்னேன், வைடு போடச் சொன்னேன், கேட்ச் தவற விட்டேன், அதுவும் பணம் வாங்கிகொண்டு - குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.

பணம் வாங்கினேன், லாஹூரில் அடுக்கு மாளிகைகள் கட்டுவதற்காகவா? இல்லை, இஸ்லாமாபாத்தில் இடுப்பொடிந்த என் தாயாருக்கு வைத்தியம் பார்ப்பதற்காக.

நோ பால் போடச் சொன்னேன், எதற்காக? அவன் ஒழுங்காக பால் போடுவது பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை, ஒழுங்காகப் போட்டால் கேட்ச் பிடிக்க வேண்டி வருமே என்ற பீதியால்.

வைடு போடச் சொன்னேன், எதற்காக? டைவ் அடித்துப் பிடிப்பதற்காகவா? இல்லை, பேட்ஸ்மேன் அடித்தால் ஆறு போய்விடுமே என்ற அச்சத்தினால். கேளுங்கள் என் கதையை.

பாகிஸ்தானில் பிறந்த எல்லாருக்கும் பிறக்க ஒரு ஊர், பணம் இழக்க ஊர், பிறகு அதைக் கறக்க ஒரு ஊர். இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? கிரிக்கெட் கனவுகளுடன் இஸ்லாமாபாத் வந்தேன்.

கிரிக்கெட் போர்டு அலுவலகத்தில் நுழையவே அனுமதிச் சீட்டுக்குக் காசு வாங்கினார்கள், குடுத்தேன். அதிகாரிகளைப் பார்ப்பதற்கும் காசு வாங்கினார்கள், குடுத்தேன். வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் அணியில் நுழைய வைக்கிறேன் என்றார்கள். அதற்கும் குடுத்தேன். நான் மேட்ச் விளையாட வேண்டுமென்றால் அவர்களுக்குக் கட்டிங் தரவேண்டும் என்றார்கள் - தந்தேன். இப்படி ஒவ்வொரு இலாகாவாக இந்த சல்மானின் "பட்"டிலிருந்து ரத்தம் வரும் வரைக்கும் வாங்கிக்கொண்டே இருந்தார்கள்.

கிரிக்கெட் வாரியம் என் பணத்தைப் பதம் பார்த்தது. - ஓடினேன்

சீனியர் வீரர்கள் ப்ராக்டீஸ் என்ற பெயரில் பவுண்டரி வரை பல முறை என்னை ஓட ஓட பீல்டிங் செய்யச் சொன்னார்கள் - ஓடினேன்,

செலெக்ஷன் கமிட்டி என்னைக் கபாபும் குருமாவும் வாங்கித் தருமாறு விரட்டினர் - ஓடினேன்.
பிட்சில் கூட நான் அந்த அளவுக்கு ஓடியதில்லை.

ஓடினேன் ஓடினேன் ஓடினேன், தேம்ஸ் நதிக்கரை வரை ஓடினேன். அங்கே மஜார் மஜீத் இருந்ததால் நின்று விட்டேன்.

"ஓடினால் ரன் தான் கிடைக்கும், ஓடாமல் நின்றால் பணம் கிடைக்கும்" என்றார்.

"கேட்சைத் தவற விடு, உன் வாழ்க்கை சரியாகும்" என்றார்.

"நோ பால் வீசு, அந்த நோபெல் பரிசையே விலைக்கு வாங்கலாம்" என்றார்

"வைடாக வீசு, உன் வாழ்க்கை வசதிகள் விரிவடையும்" என்றார்
அவமானம், பணம், நாடு, மனசாட்சி - இறுதியில் பணமே வென்றது.

நீதிபதி, "அப்போ இது தப்புன்னு தெரிஞ்சே பண்ணியிருக்கீங்க?"

"இங்கு எல்லாமே தப்பு, எல்லாரும் தப்பு. சுறா மீன்கள் சிறு மீன்களை விழுங்குவது போல் சில பெரிய பண முதலைகள் எங்களைப் போன்றவர்களை முழுங்கிவிடுகின்றனர். ஒன்றை நினைவிற் கொள்ளுங்கள் நீதிபதி அவர்களே, உங்கள் வலை சிறியது. அதில் நான் கூறிய சுறா மீன்கள் சிக்காது."

நீதிபதி, "உன்னால் உன் நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?"

சல்மான் சிரித்துக் கொண்டே, "அவமானம் என் நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே அனைத்து பாகிஸ்தானியர்களும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப் பட்டுவிட்டனர். இலங்கை வீரர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதி மானம் பறி போனது. பாப் வூமர் மேற்கிந்தியத் தீவில் ரத்த வெள்ளத்தில் மிதந்த போது மீதி மானமும் மறைந்தது."

நீதிபதி, "உனக்கு தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது"

"அதற்கு முன்னாள் உங்களிடம் ஒரு கேள்வி. இதே ஒரு வெள்ளை கிரிக்கெட் வீரர் மேட்ச் பிக்சிங்கில் மாட்டியிருந்தால் அப்பொழுதும் உங்கள் விசாரணை இப்படித் தான் இருக்குமா? நன்றாக யோசித்து விட்டு தீர்ப்பு எழுதுங்கள்"

"கண்டிப்பாக, ஹன்சி குரோனே கதை தெரியாதா உனக்கு?"

"அதனால் தான் கேட்கிறேன், அவர் எப்படி இறந்தார் என்பது இன்று வரை ரகசியமாகவே இருக்கிறதே! முரளிதரன் எங்கே ஷேன் வார்னை முந்தி விடுவாரோ என்ற பயத்தில் அவரின் பௌலிங் திறமையை மீண்டும் மீண்டும் சோதித்தீர்கள். ஆசியர்களுக்கெதிரான ஐசிசியின் இந்த இனவெறித் தாக்குதல் என்று தான் அடங்குமோ!"

"என்ன பிதற்றுகிறாய்? நீ கூறுவதற்கும் இந்த கேசுக்கும் என்ன சம்பந்தம்?"

"அது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியும்"

நீதிபதி, "முப்பது மாதங்கள் சிறைத் தண்டனை"

சல்மான் சிரித்துக் கொண்டே, "வாழ்க்கையே சிறை, வருகிறேன் கனவான்களே"

அடுத்து டவாலி அமீரை அழைக்கிறார்.

டவாலி, "அமீர், அமீர், அமீர்"

நீதிபதி, "மேட்ச் பிக்சிங்க்ல நிஜமாவே பணம் வாங்கினியா?"

அமீர், "என்ன பணம் வாங்கினியா?"

"இல்லப்பா, நீ காசு வாங்கிட்டு விளையாடினதா சொல்றாங்களே!"

"என்ன காசு வாங்கிட்டு விளையாடினதா சொல்றாங்க?"

"தம்பி, நீ உன் நாட்டுக்கு பெரிய கெட்ட பேரை உண்டாக்கியிருக்கியே, அதை சொல்றேன்"

"என்ன பெரிய கெட்ட பெயர் உண்டாயிடுச்சு?"

"ஏற்கனவே கிரிக்கெட்டுக்கும் மேட்ச் பிக்சிங்குக்கும் வாய்க்கா தகராறு இருக்கு"

"என்ன வாய்க்கா தகராறு இருக்கு?"

நீதிபதி கடுப்பாகி, "நீ ஜட்ஜா நான் ஜட்ஜா?"

"என்ன நீ ஜட்ஜா நான் ஜட்ஜா?"

"டேய், உனக்கு 20 வருஷம் ஜெயில் தண்டனை, போயிடு"

போலீஸ் அதிகாரி குறுக்கிட்டு, "ஐயா, இவனை 20 வருஷம் ஜெயிலில் வெச்சிருந்தா எங்க நிலைமை என்னாவும்? பார்த்து செய்ங்க"

நீதிபதி, "ஆறு மாசம், ஒழிஞ்சு போ"

அமீர், "என்ன ஆறு மாசம்?"

நீதிபதி டென்ஷனாகி கத்தியபடியே கோர்ட்டை விட்டு தலை தெறிக்க ஓடுகிறார், கோர்ட் கலவரமாகிறது.

Greatness can be Humble... Can't be Subtle

India won the First Test with a day to spare. I’m glad we drew the first blood but the performance in home territory is far too convincing due to first innings debacle. Since we analyzed the episode far too much let’s move on. Now, “Did India just demonstrate the bounce backability or West Indies lacked the aptitude to surrender India after securing the first round?
Funny huh!!! First I wanted India to win and now I validate the feat.

It is very sad to watch the Master reaching a major milestone in front of empty audience. Lucky I witnessed the moment on TV. This reminds me a sweet memory from the past. Not sure the timeline precisely, but surely a decade years ago the least, around Diwali time, when New Zealand was on tour to India. The match was played at Chepauk Stadium, India won the toss and batted first but not much of play possible due to rain. When the pitch and conditions improved for any play on the afternoon of third day, the stands started filling pretty fast. Mind you everyone knew the game is not going to bring any result, but flocked the stadium just for a session to see the master sizzle. Much to the expectation Tendulkar served the fans appetite with a stylish half century. Mind you, we all ran to the stadium to get a glimpse of Tendulkar in a No Result game. Today watching the maestro reaching 15000 runs in empty stands hurts me badly. There could be several reasons for the poor turnout (skipping the analysis for your convenience) but if your son is playing a game out there and is in verge of achieving a major milestone won’t you be there to cheer him (if not witness the history for yourself)??? Sometimes no matter what the reason, it will be a good gesture to cheer the countries favorite son (or anybody) when they reach an important milestone. Am I over reacting??? Never mind. 

For once, Mumbai Cricket Association is doing all possible to get the crowd so as there are souls to cheer the 100th ton. Between, did Tendulkar on purpose miss his C at Delhi so as he doesn’t embarrass himself? Pl excuse, greatness can be humble but can’t be subtle. So I’m certain to see the biggie coming in front of a packed stadium and thousands of fans take privilege of witnessing the moment.

On the positives, good to see India breeding the new age cricketers. Also it is heartening to see the young spinners cashing the opportunity with commendable performance and prolong Harbhajan’s comeback. At the same time it is disappointing to watch seasoned pro like Yuvi wasting opportunities. Though his place is on the line, he could still feel secured of a spot throughout the series. Anyways, wish to see India winning the remaining Tests inside 5 days (BUT BATTING ONLY ONCE).

Somewhere in another part of the world there is another Test series between Australia and South Africa currently in progress. Once again it is disappointing to know it is only 2 Test Series. On paper, South Africa looks to be a better side in all aspects compared to Australia whose bowling seems to be a letdown. In reality, Australia has more match practice compared to South Africa. This should be an intriguing contest for true cricket fans.

Bottom line: A Tendulkar walking on the streets would attract more crowd than the Tendulkar in action during a Test Match at an Indian venue. Even Tendulkar could not save the game, time BCCI take good note of it.

Dinesh
Cricket Lover


PS: There is little happening in my professional life. So I might take a little break from sharing my views. Until then Jai should thrill you with his witty stuffs.

Monday, November 7, 2011

200 ALL OUT... INEXCUSABLE!!!


Cricket is a game of surprises. I’m sure every Indian fan must have experienced it today after India performed dismally on the second day of the first test match at home against a spineless attack.

For starters let me clarify my idea of the Test Match prior to the commencement. I expected a dry Kotla pitch, anticipated India to bat only once and perceived the game to finish inside four days with an India win. Looks like 2 out of 3 readings are certain to turn true, while the one that failed is not digestible by any means. At the same time one can’t ignore the devil in the pitch especially when 17 wickets fall on the same day. Of course these are specially doctored conditions that are demons for visitors and heavens for hosts. And India is expected to put better show when they are not dealing the likes Murali or Warne or Donald in the opposition ranks. But, 200 all out... INEXCUSABLE!!!

Now that set and done, what explains India’s poor show with the bat? Are the batsmen still in T20 mode?
Many might actually buy this, for some reasons I don’t want to blame T20, though I agree the format has big impact on Test cricket. Half the batmen in the XI namely Tendulkar, Dravid, Laxman are not actively involved in the format at all. So definitely can’t blame T20 entirely for the debacle. However it is very evident Tendulkar is yet to recover from the bout of failures, Dravid succumbed yet again for running out of partners and Laxman lost himself to low bounce. That leaves Sehwag, Gambir, Yuvraj performances to debate. The case of Sehwag Test, ODI or T20 he plays the same way and more over this game/series is sort of comeback for the Trio in order to be in shape for the big boys show down under. Today, Sehwag got out to a bizarre stumping episode, Gambir for holding the bat in the wrong hands and Yuvraj on the softer side. That leaves us to blame Dhoni and tail for the poor show. I opine the batmen’s reckless attitude to decimate WI has put the team in a spot of bother ahead of T20 cricket. Except the big 3, the remaining batsman showed a sense of urgency to dominate WI. Anyways, today’s show must have shaked India for good. I still want to believe the hosts will bundle the guests inside 150 and end up chasing 250 successfully.

Though it is wise to accept Indian standards deteriorating steeply, I’m curious to know if the ability to RISE still exists. Like, the Australian Cricket may have declined, but Australians continue to win. When India wins the test match and going forward display the attitude to bat 5 day cricket, it is still hope for Indian Cricket and this jerk could be pardoned.

Bottom line: Some part of my brain still asks, “Is it a lame BCCI gimmick to generate curiosity of the fans to follow Test Cricket?

Dinesh
Cricket Lover

Thursday, November 3, 2011

ஐ, எனக்குக் கல்யாணம்.....



கவுதம் கம்பீர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி.

எல்லோரும் கூடிக் குலாவிக் கொண்டிருக்க, யுவராஜ் மட்டும் "தனியே தன்னந்தனியே" என்று ஓரமாக ஒதுங்கியிருக்கிறார்.

ஸ்ரீசாந்த், "இங்க என்னய்யா பண்றே? அங்க எல்லாரும் உன்னை போட்டோ செஷனுக்காகத் தேடிக்கிட்டிருக்காங்க. ஆமாம், உன் மூஞ்சி ஏன் இப்படி வாடியிருக்கு? ஜாமீன் கிடைக்காத கனிமொழி மாதிரி"

"அட போய்யா, மனசே சரியில்ல"

"என்ன யுவி, என்ன ஆச்சு?"

"ஒரே வெறுப்பா இருக்கு, எதுவும் புடிக்கல"

ஸ்ரீசாந்த் புன்னகையுடன், "உனக்கும் கல்யாண ஆசை வந்திருச்சு போல. கவலையை விடு, ஒரு நல்ல புரோக்கர் இருக்கான். நாளைக்கு அவனைக் கூட்டிக்கிட்டு வரேன், நாம போய் பொண்ணு தேடுவோம். இப்போ எழுந்திருச்சு வா - கொஞ்சம் சிரிச்ச முகமா வா"

"ஹிஹிஹி"

"இதுக்கு சின்னக் கௌண்டர் மனோரமாவே பெட்டர்" "

Next day morning:
யுவி டிப் டாப்பாக டிரஸ் பண்ணிக் கொண்டு வீட்டு வாசலில் காத்திருக்கிறார். ஸ்ரீசாந்த் கார் அவர் அருகில் வந்து நிற்கிறது.

"ஏறு, வா போகலாம்"

யுவி காரில் யாரையோ தேடியவாறே, "யாரோ புரோக்கரைக் கூட்டிட்டு வரேன்னு சொன்னே, நீ மட்டும் வந்திருக்கே?"

ஸ்ரீசாந்த், "எல்லாருக்கும் அவங்களோட நெருங்கிய நண்பன் தான் முதல் புரோக்கர். அந்த வகையில் நான் தான் உனக்கு புரோக்கர். சீக்கிரம் ஏறு”

ஸ்ரீசாந்த் வண்டி ஒட்டியவாறே, "நீ பாட்டுக்கு பிக் அப், டிராப், எஸ்கேப்னு நல்லாத்தானே இருந்தே, திடீர்னு என்ன கல்யாண ஆசை?"

யுவி, "முன்ன மாதிரி எவளும் சரியா சிக்க மாட்டேங்கராளுங்க. கிரிக்கெட்லயும் எப்பவாச்சும் தான் சான்ஸ் கிடைக்குது, வயசு வேற ஏறிக்கிட்டே போகுது, அதான்"

"வயசு ஏறுதோ இல்லையோ, தொப்பை ஏறிக்கிட்டே போகுது, யுவி தொப்பையைக் குத்தியவாறே, "இங்க பாரு, உடம்பு டெல்லி வர்றதுக்கு முன்னாடி தொப்பை சிம்லாவுக்குப் போகுது"



"இன்னும் ரெண்டே மாசம் தான், அப்புறம் பாரு"

ஸ்ரீசாந்த், "என்ன குழந்தை டெலிவெரி பண்ணிடுவியா?"

"மொக்கை போடாதே, ஸ்ட்ரிக்ட் டயட்ல இருக்கேன், எப்படி ஸ்லிம் ஆகறேன்னு பாரு. தினமும் ரெண்டு டேப்லட் revital சாப்பிடறேன்"

"அடப்பாவி, நீ வீணாப் போனதுக்குக் காரணமே அந்த மாத்திரை தான். என்னிக்கு அதுக்கு விளம்பரம் பண்ண ஆரம்பிச்சியோ அன்னிக்கு புடிச்சுது சனி உன்னை"

"எங்க ஊர் கம்பெனிப்பா. அது சரி, இப்ப நாம எங்க போறோம்?"

பொண்ணு பாக்க. சரி, உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?"

"அழகா, படிச்சவளா, புத்திசாலியா, குடும்பபாங்கா..."

ஸ்ரீசாந்த் இடைமறித்து, "உனக்கு ஒரு பொண்டாட்டி வேணுமா இல்லை 4 -5 எதிர்பாக்கறியா?"

"இப்போதைக்கு ஒண்ணு தான்"

"அப்போ இதுல எதாச்சும் ஒண்ணு தான் கிடைக்கும்". காரை ஒரு அபார்ட்மென்டில் நுழைத்து பார்க்கிங்கில் நிறுத்துகிறார்.

யுவி கலவரமாகி, 'டேய், இங்க ஏண்டா வந்தே, இங்க யார் இருக்காங்கன்னு தெரியும்ல?"

"தெரியும், எப்பவுமே தெரிஞ்சவங்ககிட்டேர்ந்து தான் ஆரம்பிக்கணும்"

ஸ்ரீசாந்த் காலிங் பெல்லை அழுத்தவும், கதவு திறக்கிறது - சித்தார்த் மால்யா நிற்கிறார்.

"நீங்க எங்க இங்க வந்தீங்க?"

"தீபிகாவைப் பார்க்க. கொஞ்சம் பெர்சனலாப் பேசணும்"

சித்தார்த், "தீபி, உன் முன்னாள் தோஸ்த் வந்திருக்கார், வந்து என்னன்னு கேளு"

யுவி ஸ்ரீயிடம், "என்னடா, இந்த முள்ளம்பன்னித் தலையன் இங்கயே டேரா போட்டிருக்கானா?

ஸ்ரீ, "அவன்கிட்ட முள்ளங்கி பத்தை மாதிரி கரென்சி இருக்கே மச்சி, அதான்"

அனைவரும் சோபாவில் அமர்கின்றனர்.

சித்தார்த் மனசுக்குள் "இவன் ஏன் இப்ப வந்திருக்கான்? இவன் கூட கனெக்ஷனை கட் பண்ணிட்டேன்னு தானே சொன்னா, எவளையும் நம்ப முடியலையே!"

யுவி மனசுக்குள், "அதான் அவளுக்கு கோடியைக் காட்டி என்னை தெருக்கோடிக்கு அனுப்பிட்டீல்ல, அப்புறம் ஏன் நடுக்கம்?'


ஸ்ரீசாந்த் மனசுக்குள் "ஒரு மொள்ளமாரிக்கும் முடிச்சவுக்கிக்கும் நடுவுல மாட்டிக்கிட்டேனே, ஒரு ஜோர்ல இங்க வந்துட்டேன், இப்போ லெக் ரொம்ப ஸ்லிப் ஆவுதே"

தீபிகா உள்ளேயிருந்து வருகிறார், "ஹாய் யுவி, எப்படியிருக்கே? பார்த்து ரொம்ப நாளாச்சு?"
சித்தார்த் மறுபடியும் மனசுக்குள் "அப்பாடா, கனெக்ஷன் நிஜமாவே கட் தான் போல"

யுவி, "ஒண்ணும் இல்லை, சும்மாதான்....."

ஸ்ரீசாந்த், "அதன் இவ்ளோ தூரம் வந்தாச்சுல்ல? அப்புறம் ஏன் இழுக்கற? அது வேற ஒண்ணும் இல்லை தீபிகா, யுவிக்கு பொண்ணு பாக்கறோம்"

சித்தார்த் நடுவில் புகுந்து "அதுக்கு?"



ஸ்ரீசாந்த், "தீபிகாவும் யுவியும் ஒரு காலத்துல நல்ல நண்பர்கள் ஆச்சே, ஒரு வேளை தீபிகாவுக்கு இன்னமும் யுவி மேல இண்டரெஸ்ட் இருக்கான்னு தெரிஞ்சிகிட்டுப் போகலாம்னு வந்தோம்"

சித்தார்த் கடுப்பாகி "ஒழுங்கு மரியாதையா ரெண்டு பெரும் வெளிய போயிடுங்க, இல்லேன்னா அசிங்கமாயிடும்"

யுவி, "ஏய், என்ன வாய் நீளுது? பேட் எடுத்து அடிச்சேன்னு வெச்சுக்கோ,அப்புறம் உன் பாடியை பெங்களூர்ல தான் பொறுக்க வேண்டியிருக்கும்"

சித்தார்த் கோபத்தில் யுவியின் சட்டையைப் பிடிக்கப் போக இருவரும் கை கலப்பில் ஈடுபடவே, தீபிகாவும் ஸ்ரீயும் நடுவில் புகுந்து இருவரையும் விலக்கி விடுகின்றனர்.

தீபிகா, "Guys, ரிலாக்ஸ். யுவி, உனக்கு என்ன வேணும்?"

யுவி, "நீ வேணும் தீபி, நீ வேணும்"

தீபிகா, "நீ என்ன பைத்தியமா? நா சித்துவோட செட்டில் ஆயிட்டேன்"

யுவி, "அவன் கிட்ட அவங்கப்பா சம்பாதிச்ச பணம் தான் இருக்கு. என்னை மாதிரி சுயமா உழைச்சு முன்னேறியிருக்கானா?"

தீபிகா, "யாரு, நீயா? உங்கப்பா முன்னாள் ப்ளேயர். அந்த சிபாரிசுல உனக்கு சான்ஸ் கிடைச்சுது. ஏதோ ஆரம்பத்துல கொஞ்சம் விளையாடினதால இவ்ளோ நாள் டீம்ல வந்து போற."

ஸ்ரீசாந்த் யுவியிடம் "யோவ் உணர்சிவசப்படாதேன்னா கேக்கறியா? இப்ப பாரு உன் குப்பையை அவ நோண்ட ஆரம்பிச்சிட்டா!"

யுவி, "நம்ம ஆஸ்திரேலியா டூரெல்லாம் மறந்துட்டியா?"

தீபிகா, "எப்படி மறக்க முடியும்? ஆறு மணிக்கு டிஸ்கோ வாடான்னா 9 மணிக்கு வருவே, உனக்காக காத்திருந்து காத்திருந்து என் கால் வலிச்சது தான் மிச்சம். அந்த கேப்ல தோனி யதேச்சையா வந்து என்கிட்டே பேச அதுக்கு என் மேல சந்தேகப்பட்டே"

ஸ்ரீ, "யுவி, வா கிளம்புவோம்"

யுவி, "இருடா, கொஞ்சம் பேசிப் பாக்கறேன்"

ஸ்ரீ, "ரெண்டு பாலுக்கு ரெண்டு விக்கெட் எடுத்துட்டா, ஹாட்ரிக் அடிக்கறதுக்குள்ள போயிரலாம் வா"



வெளியே வரும்போது, "என்ன யுவி இப்படி டென்ஷன் ஆயிட்ட? வழக்கமா நான் தான் சீக்கிரம் சூடாவேன், சொம்பு மாதிரி இருக்கற உனக்குள்ள ஒரு சிம்பு இருப்பான்னு நான் எதிர்பாக்கலை"

"யுவி, "அவளைப் பார்த்தாலே அப்படி ஆயிடறேன், சரி அவளை விடு. அடுத்தது யாரு?"

ஸ்ரீ, "கிம் ஷர்மா?"

"அவ எவனோ ஆப்பிரிக்கக்காரனோட குடும்பம் நடத்தறா. "

"உன்னோட இப்பத்தைய கேர்ல்பிரெண்ட் ஆஞ்சல்?"

"அவ சும்மா டைம் பாஸ்,

"டைம் பாஸா?"

"அவ என்னை டைம் பாஸுக்குன்னு வெச்சிருக்கா, எப்போ என்னை கழட்டி விட்டுட்டு அந்தத் தொழிலதிபர் பின்னாடி போகப் போறாளோ!"



"கிரேஸ், மினிஷா, இவங்கள்ல யாரையாச்சும் பாப்போமா?"

கிரேஸ் மறுபடியும் அந்த வீணாப்போன விவேக் ஓபராயோட சுத்தறதா கேள்விப்பட்டேன். மினிஷா சரியான தெத்துப்பல்லி"

ஸ்ரீசாந்த் யோசிக்கிறார்...

யுவி, "யாராச்சும் புதுசா சொல்லுடா? Homely , family , Simply "

நார்த் முழுக்க நாறிட்ட போலிருக்கு, சவுத் இந்தியா ஓகேவா?'



"யாரு யாரு, மீரா ஜாஸ்மினா?"

அட நாயே, பேரைக் கூட தெரிஞ்சு வெச்சிருக்க. ஆனால் அது வேண்டாம்பா"

"ஏன்?"

"ஏன்னா, நானும் அவளும்..."

"அடப்பாவி, சரி, த்ரிஷா?"

"நீ சிக்சர் அடிச்சு சம்பாதிக்கறதை அவ breezer அடிச்சே காலி பண்ணிடுவா. உனக்கு ஒரு கட்டிங் கூட கிடைக்காது"

"நயன்தாரா?"

"அதுக்கு நீ மூக்கு நுனி கால் கட்டை விரலைத் தொடற மாதிரி வளைஞ்சு டான்ஸ் ஆடணும், முடியுமா?"

"ம்ஹும், தொப்பை நிஜமாவே பிதுங்கி கீழே விழுந்துடும். அனுஷ்கா?"

"நல்ல மாதிரி தான். ஆனா ஏகப்பட்ட கிராக்கி"

"வேற யாருமே இல்லையா?"

"ஒரு குடும்பக் குத்து விளக்கு ஒண்ணு இருக்கு, ஓகேவா?"

"டபுள் ஓகே"

Over to Chennai.



நடிகை ஸ்னேஹாவின் தாயார் இருவரையும் வரவேற்று அமரச் செய்கிறார். சிரித்த முகத்துடன் ஸ்னேஹா என்ட்ரீ ஆகிறார்.

யுவி, "டேய் ஸ்ரீ, இவ்ளோ நாள் இவ எப்படி என் கண்ல படாம இருந்தா?"

ஸ்ரீ, "நீ போற பார் பப் இங்கெல்லாம் இவங்க வர மாட்டாங்க, அதனால தான்"

ஸ்னேஹா, "வாங்க வாங்க, என்னால நம்பவே முடியல, நீங்க எவ்ளோ பெரிய கிரிக்கெட் ஸ்டார், எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க!! என்ன சாப்பிடறீங்க?"

ஸ்ரீ, "ஆஷிர்வாத் மாவுல செஞ்ச ரொட்டியும், குலாப் ஜாமூனும் கொண்டு வாங்க"

ஸ்னேஹா சிரித்துக்கொண்டே, "பரவாயில்லையே, இதெல்லாம் நோட் பண்ணியிருக்கீங்களே?"

"பிகர்னு வந்துட்டா நாங்க எல்லாத்தையும் நோட் பண்றது வழக்கம்"

ஸ்னேஹா, "சரி என்ன விஷயமா வந்திருக்கீங்க?"

யுவி, "நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்லலை, உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை, ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு சந்தோஷமா இருக்கு"

ஸ்னேஹாவின் அம்மா டென்ஷன் ஆகவே, "அம்மா, நீங்க உள்ள போங்க, நான் பேசிக்கறேன்"

ஸ்னேஹா "எந்த அடிப்படையில உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு எதிர்பாக்கறீங்க?"

யுவி, "என்னங்க, தெரியாத மாதிரி கேக்கறீங்க? இந்தியன் டீமுக்காக விளையாடறேன், நல்லா சம்பாதிக்கறேன், ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்லாப் போயிக்கிட்டிருக்கு. கொஞ்சம் அப்படி இப்படி பொண்ணுங்களோட ஊர் சுத்தறதா செய்திகள் வந்திருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் அதெல்லாம் சுத்தமா கட் பண்ணிடுவேங்க. நான் குடிக்கற பீர் மேல சத்தியம். வேறென்ன எதிர்பாக்கறீங்க?"

"நீங்க சொன்ன எல்லாம் சரி, ஆனா இந்தியன் டீமுக்காக ஆடறேன்னு சொன்னது தப்பு. டீமுக்காக ஆடறவனா இருந்தா இங்கிலாந்து டூர்ல சுண்டு விரல்ல அடிபட்டிடுச்சுன்னு சொல்லி திரும்பி ஓடி வருவியா?

"அந்த டூர்ல நிறைய பேருக்கு அடிபட்டுதே!. கிரிக்கெட்ல அதெல்லாம் சகஜம்"

"என்னால அப்படி எடுத்துக்க முடியாது. நீங்க ஒரு பஞ்சாபியாச்சே, தைரியமா நின்னு போராட வேண்டாம்?, அதை விட்டுட்டு கோழை மாதிரி பாதியிலேயே திரும்பி வந்துட்டியே? இந்தியாவுல ஆடும்போது மட்டும் அந்த குதி குதிக்கறே, உன் பவுசு எல்லாம் உள்ளூர்ல தானா? வெளிய போனா உன் பருப்பு வேகாதா?"

"வேர்ல்ட் கப்ல நான் எல்லா மேட்சும் நல்லா ஆடினேனே?"

"உன்னால தான் வேர்ல்ட் கப் ஜெயிச்சோம்னு சொல்ல வர்றியா? உனக்கு இப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா?'

"அப்படியில்ல...."

"நீ ஆடற IPL டீமும் ஒரு வெத்துவேட்டு டீம். உன் தாய் மண்ணான பஞ்சாப் டீமை விட்டுட்டு வட இந்தியர்களை ஓட ஓட விரட்டற மகாராஷ்டிரா டீம்ல பொய் சேர்ந்திருக்கே"

"அது தொழில், இது வாழ்க்கை"

"எனக்கு ரெண்டும் ஒண்ணு தான். உயிருக்கு உயிரா பழகின கிம் ஷர்மாவை உங்கம்மா சொன்ன ஒரே காரணத்துக்காக கழட்டி விட்டுட்டியே, நானும் சினிமாக்காரி தான், நாளைக்கு உங்கம்மா பேச்சைக் கேட்டுட்டு என்னையும் நடுத்தெருவுல நிறுத்தமட்டேன்னு என்ன நிச்சயம்?"

யுவி மௌனமாகவே, ஸ்ரீ "மேடம், இன்னும் எதாச்சும் பாக்கி இருக்கா?"

ஸ்ரீ, யுவியைப் பார்த்து, "யப்பா, நீ ஆறு பாலுக்கு ஆறு சிக்ஸ் தான் அடிச்சே, இவங்க அறுபது சிக்ஸ் அடிப்பாங்க போலிருக்கு, உனக்கு பால் போட்ட ஸ்டுவர்ட் பிராட் மாதிரி ஆயிடுச்சே உன் நிலைமை! வா கிளம்புவோம்"

வெளியே வந்தவுடன் யுவி, "என்ன ஸ்ரீ, குத்து விளக்குன்னு சொன்னே, இப்படி குடைஞ்சிட்டாங்க!"

"அதான் ஒரிஜினல் குத்து விளக்கு, குத்துற குத்துல எங்க எரியும்னு உனக்கே தெரியாது. பட் ஒண்ணும் பீல் பண்ணாதே, நம்பிக்கையே வாழ்க்கை"

யுவி, "சேச்சே, இதைவிட கேவலமா எல்லாம் திட்டியிருக்காங்க. ஆனாலும் அவங்க எனக்கு ஒரு நல்ல ஹின்ட் குடுத்திருக்காங்க"

"என்ன அது?"

"தாய் மண், பஞ்சாப் டீம்.."

"புரியலையே?"

"ப்ரீத்தி ஜின்டாடா"

ஸ்ரீ "அட்றா சக்கை, அட்றா சக்கை, அட்றா சக்கை. எனக்கு இப்பவே டான்ஸ் ஆடணும் போல தோணுதே!"

யுவி, "நான் போய் கேட்டு அவ முடியாதுன்னு சொல்லிட்டா? அந்த வாடியா வேற இருப்பானே?"

"அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது. அவளும் உன் நினைவாத்தான் இருப்பான்னு எனக்குள்ள பட்சி சொல்லுது, நீ பார்த்தாலே போதும்"

"அப்படியா? இப்பவே போறேன்" வண்டியில் ஏறி சடாரெனக் கிளப்பிக் கொண்டு பறக்கிறார்.

ஸ்ரீ, "இவனாச்சும் வித்யாசமா இருப்பான்னு நினைச்சேன், இவனும் பிகர் கிடச்ச உடனே பிரெண்டை கட் பண்றவன் தான் போலிருக்கு"

யுவி சென்று ப்ரீத்தியைப் பார்க்கிறார். அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள். இதற்கு மேல் வார்த்தைகள் தேவையில்லை...





Jayaraman
New Delhi


(This article is 100% imaginery one)
Related Posts Plugin for WordPress, Blogger...