Friday, May 31, 2013

Who am I?

I’m not sure yet. But I used to be ardent cricket fan, trying to follow any cricket played in any part of the world, irrespective of who is involved. Today, I feel very depressed. I feel let down. My faith is destroyed. And, I’m not motivated to watch the sport anymore. As I spill these words, it now makes sense as how the earlier generations must have felt when the match fixing scandal first broke in 2000s’. Guess I reverberated the same words of people from a different era. By the way, I was not too young in 2000s either. It is just that I was not matured enough to understand it then. I thought the game got sane after the bad elements were removed. And, I remember fighting with those elder generations until recently assuring them that the game has come out clean and they should give it a benefit of doubt. By now, it is a no brainer that the elder generations are mocking at me. Well, I hope NOT to become a member of the earlier generations from here. I now faithfully represented the sentiments of a common a cricket fan.

On a personal note, I really did not watch any IPL match this year after the scandal broke. For the sake of time already spent, I kept following the results in news, including playoffs/championships. However, it did not deter my enthusiasm to play the game. But the truth is - I got motivated to play the sport only after passionate following from childhood. Thanks to all those elder generations who induced that love for this sport. Now, my concern is the next generation. After what happened now, parents like me may not be enthusiastic to switch on the TV and watch game. Parents like me may not be excited to send their kids to cricket coaching camp. Parents like me may not be enthusiastic to teach the sport themselves to their kids. Sooner or later people like me will turn deterrent to generation next to love the sport.

Look at what have you done, guys? Until few days ago, I was thinking if IPL was in my era, I would have taken my cricket little too seriously. Never mind, I was still excited for the fact that it is there for my kids generation. IPL gave me the courage to say the future generation kids now have the choice of considering cricket as profession. After (still) following the scandal closely, I’m not sure if I’ve the courage to talk to any kid to pursue cricket seriously.

For some reasons, I’m even losing faith in people like Rahul Dravid or Sachin Tendulkar when they say “they were shocked and surprised”. As of today, Siddharth Trivedi will be the prosecution witness. Trivedi had refused to accept an invitation by Ajit Chandila, to attend a party arranged by bookies. He had also refused money and gifts offered by the bookies. Such a faithful player, I’m sure would have appraised the situation to his captain Rahul Dravid at some point. So, if Dravid knew already, I’m sure Tendulkar knew too. I’m sure a lot of people ranging from players, ex-players, owners, coaches, commentators, support staffs, administrative staffs and many more inside the system knew all about it (and some of them still a part of it waiting to be exposed). If you have watched the Tehelka expose (http://tehelka.com/how-to-fix-greed-2) of 2000 match fixing scandal, I’m sure you will agree with my statement. It is just that none want to be the whistle blower. So, when a Dravid or Tendulkar say they are shocked and surprised, I only have to say that they were shocked and surprised that the scandal actually saw the light of the day. Between, I’m not accusing anybody here, but only venting my frustration.

If you are a regular follower of this blog, you must have known my love for Rahane. I was very upset when Dhoni deprived him opportunities in Indian Cricket. Here and there even Rahane’s name surfaced in the scandal (may be for matches played in previous year). Now if I try to put the pieces together, I’m compelled to lean towards Dhoni. May be Dhoni knew already that Rahane is not a trustable guy and hence kept him away. My frustrations and disappointments are hurting the flow of this article. I think that is how words come out of your mind, when you are in distress.

Another day, I would have been extremely excited for the Champions Trophy. Especially, patting the selectors for presenting a young India team. Now, I really don’t care what happens out there.

Bottom line: It takes a lot to heal this wound.

Dinesh

Thursday, May 30, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 2



சோழாவரம் ரேஸ் கோர்ஸ்.

ரகுநாத் தனது காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டுத் தான் வழக்கமாக அமரும் காலரியை நோக்கி நடந்தான். இவன் வருவதை தூரத்திலிருந்து கண்டுகொண்ட நண்பர்கள் பாலாவும் கதிர்வேலுவும் ரகுவைப் பார்த்து கை அசைத்தனர்.

ரகுநாத், "என்னடா, இன்னிக்கு இவ்வளவு கூட்டம்? எதாவது ஸ்பெஷலா?

பாலா,"பின்னே கிரிக்கெட் டீம் கேப்டன் மொஹிந்தர் சிங் பைக் ஓட்ட வர்றான்னா மக்கள் பார்க்க வரமாட்டாங்களா?"

"நிஜமாவா?" என்று கூறியவாறே ஆச்சர்யத்துடன் ட்ராக்கை நோக்கினான். அங்கே நீள்முடியுடன் மொஹிந்தர் பைக்கில் அமர்ந்தபடி ரேசுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். கூடவே யாருக்கோ டாட்டா காட்டிக் கொண்டிருந்தான். ரகு டாட்டா வந்த திசையில் கவனம் செலுத்தினான். அங்கே 2-3 வட இந்திய இளைஞிகளும் சில இளைஞர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவன் சுழற்பந்து வீரர் ஹர்கிரத்சிங். மற்றொருவன் பயில்வான் போல் இருந்தான். ரகுவால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. கூட வந்த பெண்கள் கல்லூரி மாணவிகள் போல் கொஞ்சமாக உடையணிந்து வந்திருந்தனர்

இது ஒன்றும் முறையான ரேஸ் அல்ல. பைக் ஆர்வலர்கள் ஒன்று கூடி ஜாலிக்காக ஓட்டும் போட்டி. இதிலும் சிலர் விளையாட்டாக சூதாடத் தொடங்கி முடிவில் சீரியசாக சண்டை போடத் தொடங்கி விடுவதும் உண்டு.

ரகு தனக்குப் பிடித்தமான குளிர்பானத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தான். ரேஸ் துவங்கியது.

கேப்டன் மொஹிந்தர் எடுத்த எடுப்பிலேயே அனாயாசமாக ஓட்டத் தொடங்கினான். பைக் ஓட்டுவதில் அவன் காட்டிய லாவகமும் நெளிவு சுளிவும் ரகுவை வாய் பிளக்க வைத்தன. ரகுவும் ஒரு காலத்தில் இது போன்ற ரேஸ்களில் பங்கெடுத்தவன் தான். திருமணம் ஆன பிறகு எப்பொழுதாவது ஒட்டினான் . குழந்தைகள் பிறந்த பிறகு ரிஸ்க் எடுக்கக் கூடாது என்பதால் பார்த்து ரசிப்பதோடு சரி .

எதிர்பார்த்தது போல் மொஹிந்தர் வெற்றி பெற்றான். ரகுவுக்கு நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு நல்ல ரேசைப் பார்த்த திருப்தி கிடைத்தது அதிலும் குறிப்பாக காலையில் வீட்டில் நடந்த நிகழ்வுக்கு இது பெரும் ஆறுதலாக அமைந்தது.

ரகுவும் நண்பர்களும் மொஹிந்தரைப் பாராட்டுவதற்காக அவனை நோக்கிச் சென்றனர். மொஹிந்தர் ரகுவை அடையாளம் கண்டு கொண்டவனாக "நீங்க எப்படி இங்க"

ரகு, "என்னைத் தெரியுமா?"

"பத்மநாபன் சார் மாப்பிளை தானே நீங்க? சார் ரூம்ல உங்க குடும்ப போட்டோ இருக்கு. அதுல உங்களைப் பார்த்திருக்கேன்"

இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது ஹர்கிரத்தும் கூட வந்த பயில்வானும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

ரகு மொஹிந்தரைப் பார்த்து "எதாவது பிரச்சினையா?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் ஜெயிப்பேனா மாட்டேனான்னு ரெண்டு பேரும் பெட் கட்டினாங்க. ஹர்கிரத் தோத்துட்டான், ஆனா பணம் குடுக்க மாட்டேங்கறான். அதான் செல்லச் சண்டை,. சாரி, இவங்களை நான் அறிமுகப்படுத்தவே இல்லையே? ஹர்கிரத்தை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் . இது ராதே சிங். என் நண்பர் மற்றும் பயில்வான்.அப்புறம் இது ராக்கி, என் கேர்ள் ப்ரெண்ட். அது அவங்களோட ப்ரெண்ட் பல்லவி

எல்லோரும் கை குலுக்கிக் கொண்டனர். பிறகு மொஹிந்தர் ரகுவைப் பார்த்து "ரகு, இங்க எதாவது நல்ல சவுத் இந்தியன் ரெஸ்டாரன்ட் இருக்கா? "

ரகு, "ரெஸ்டாரன்ட் எதுக்கு? நாங்க எப்படியும் லஞ்ச் சாப்பிட எங்க கெஸ்ட் ஹவுசுக்கு போகப் போறோம். நீங்க எங்க கெஸ்டா வாங்க"

மொஹிந்தர் அவர்களிடம் சிறிது நேரம் விவாதித்து விட்டு "ஓகே ஜி, உங்க கூடவே வர்றோம்"





**************************************************************************



சவுத் இந்தியா சிமெண்ட்ஸ் அலுவலகம்

முதன்மை நிர்வாகி நடேசன் பாருவின் அறைக்குள் நுழைகிறார்

"எப்படிம்மா இருக்கே?"

"சௌக்கியம் சார், ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு காலையில் சொன்னீங்க. என்ன விஷயம்?"

கம்பெனியைப் பொறுத்தவரை பாருவுக்கு நடேசன் தான் அப்பா. இவரைக் கலந்து பேசாமல் எந்த முடிவையும் எடுக்கமாட்டாள்


பாரு கம்பெனியின் முழுநேர டைரக்டர். பாருவும் பத்மநாபனும் தான் கம்பெனியின் தூண்கள் பத்மநாபனின் நிர்வாகத் திறமையை அறிந்த அவரின் சகோதரர்கள் அனைவரும் தங்கள் பங்குகளை பத்மநாபனின் பேரில் மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக பணத்தை பெற்று கொண்டுவிட்டனர். பத்மநாபன் அவர்களிடமிருந்து பங்குகளை "பிடுங்கிக் கொண்டார்" என்றும் சிலர் கூறுவதுண்டு. பத்மநாபனுக்கு ஒரு மகனும் உண்டு. ஆனால் அவன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு பெங்களூருவில் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் - கோபத்துக்கான உண்மையான காரணம் இன்று வரை யாருக்கும் தெரியாது.


"எல்லாம் வழக்கமான விஷயம் தான்.

இந்த தடவையும் லாபம் குறைஞ்சிட்டுது இப்படியே போச்சுன்னா அப்புறம் அப்பா கஷ்டப்பட்டு இந்தக் கம்பெனியை நஷ்டத்திலேர்ந்து தூக்கி நிறுத்தினது எல்லாம் வீணாப் போயிடும்

"ஒண்ணு புரியல சார், சென்னை மற்றும் சவுத் இந்தியன் நகரங்களில் தான் ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ந்துக்கிட்டிருக்கு. அப்படி இருந்தும் நம்ம ஷேர் உயர மாட்டேங்குது. நாக்பூரைத் தாண்டி நம்மளால மேல போக முடியலையே, ஏன்?

"இங்க ஆரம்பிக்கறவங்க ஏற்கனவே வடக்கேர்ந்து தாம்மா வர்றாங்க. ஆல் இந்தியா ஒப்பந்தத்துல சிமெண்ட் சப்ளை பண்றாங்க. அதனால நம்ம கிட்ட வரமாட்டேங்கறாங்க .

"சரி, இதுக்கு என்ன தான் வழி?"

"கொஞ்சம் பப்ளிசிட்டி பண்ணணும். வடக்கில இருக்கறவங்களுக்கும் நம்ம கம்பெனியைப் பத்தி நல்லாத் தெரிய வைக்கணும்"

"எப்படி?"

பத்திரிகை விளம்பரம் வேஸ்ட் . அதை ஏற்கனவே பண்ணிப் பார்த்துட்டோம். எதாச்சும் நேஷனல் ப்ரொக்ராமுக்கு ஸ்பான்சர் பண்ணினா முன்னேற்றம் தெரியலாம்"

"புரியலையே?"

"உதாரணத்திற்கு, கிரிக்கெட் போட்டி ஸ்பான்சர் பண்ணலாம். அப்பாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் தான் நல்ல தொடர்பு இருக்கே. அதை காபிடலைஸ் பண்ணணும். இல்லேன்னா இவ்ளோ சிமெண்ட் உற்பத்தித் திறன் அதிகப்படுத்தியும் லாபம் ஒழுங்கா வரலேன்னா அப்புறம் நம்மளால தொழில்ல நிற்க முடியாது"

""சரி சார், நான் அப்பா கிட்ட பேசிட்டு முடிவு சொல்றேன்"

பணக்காரர்களுக்கே உண்டான பிரதான பிரச்சினை - சம்பாதித்த பணத்தைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி?. அதற்கு பத்மநாபன் குடும்பமும் விதிவிலக்கல்ல.


ஆட்டம் தொடரும்...


Jayaraman
New Delhi

(If you cant visit our blog, subscribe yourself with your email id. The article will be sent to you thru automated email)

Monday, May 27, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 1


(இது உண்மைக்கதை அல்ல)


“ஏம்பா, உங்க மாப்பிள்ளை எந்நேரமும் சும்மா கோல்ப் விளையாடிக்கிட்டும், பைக் ஓட்டிக்கிட்டும் டைம் பாஸ் பண்றாரே, அவருக்கு எதாச்சும் செய்யக் கூடாதா?” டைனிங் டேபிளில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தொழிலதிபர் பத்மநாபனின் கவனத்தைக் கலைத்தாள் அவரது மகள் பாரு எனும் பார்வதி.

பத்மநாபன் எதிரில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை ரகுநாத்தைப் பார்த்து, "என்னப்பா, நம்ம கம்பெனியில் ஜாயிண்ட் டைரக்டர் போஸ்ட் காலியா இருக்கு, வர்றியா?”

ரகுநாத், "ஏற்கனவே சொன்ன பதில் தான் அங்கிள். உங்க ஆபீஸ் செம போர் . என்னால 10 நிமிஷம் கூட அங்க உட்கார முடியாது. நமக்கு அப்படியே ஜிவ்வுன்னு வேலை செய்யணும் - ரேஸ் மாதிரி பரபரன்னு இருக்கணும். உங்களுக்குக் கம்பெனி குடுக்கத்தான் என் பொண்டாட்டி ஆபீஸ் வராளே, அது போதும். நான் வேற எதுக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங்?"

பாரு, "அதுக்காக இப்படியே எவ்ளோ நாள் தான் வெட்டியா வண்டி ஓட்டுவீங்க? இரண்டு குழந்தைங்களுக்கு அப்பா வேற ஆயாச்சு"

ரகு, "எனக்குப் பிடிக்காத வேலையை நான் ஒரு நாளும் செய்ய மாட்டேன். அதுவுமில்லாம என் உடம்புல ஓடறது சினிமா ரத்தம். என்னால ஒரு இடத்துல உட்கார்ந்து வேலை செய்ய முடியாது"

பத்மநாபன், "அப்போ எதாச்சும் சினிமா எடு. உங்க குடும்பத்துக்கு தான் பெரிய ஹீரோவேல்லாம் தோஸ்த் ஆச்சே"

ரகு, "ஐயோ, அது ரொம்ப ரிஸ்க் அங்கிள். நீங்க சொல்ற அந்த பெரிய ஹீரோக்களுக்கு சம்பளம் குடுத்தே போண்டி ஆயிடுவோம். என் குடும்பம் சினிமா எடுக்கறதை விட்டதே அதனால தான்"

பாரு முணுமுணுத்தவாறே, "வேலை செய்யாம இருக்கறதுக்கு எதுக்கெடுத்தாலும் ஒரு சாக்கு. வீட்டோட மாப்பிள்ளையா இருக்கோமேன்னு கொஞ்சமாச்சும் வெட்கம் இருக்கா பாரு, ஏன் தான் லவ் பண்ணித் தொலைச்சேனோ!"

ரகு, "சத்தமாவே சொல்லு, எனக்கு பழகிப் போச்சு. பொண்டாட்டி காசுல சாப்பிடறதுல எனக்கு எந்த அவமானமும் இல்லை. உனக்கு அவமானமா இருந்தா அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது, நான் வர்றேன்" என்று சொல்லிவிட்டு விருட்டென்று கிளம்பினான்.

பாரு விசும்ப ஆரம்பிக்கவும், பத்மநாபன், "விடும்மா, இதுக்கெல்லாம் போய், அவனைச் சொல்லியும் தப்பில்லை, அப்படியே வளர்ந்துட்டான். அன்னிக்கே சொன்னேன், இது நமக்கு சரியா வராது, என்ன தான் தெய்வீகக் காதலா இருந்தாலும் நாம வேற அவன் வேறன்னு. நீ பிடிவாதமா நின்னு கல்யாணம் பண்ணிண்டே. இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்? கவலைப்படாதே, நான் எதாவது பண்றேன், நீ ஆபீசுக்கு கிளம்பு" என்று மகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பிரீப்கேசை எடுத்துக் கொண்டு இருக்கையை விட்டு எழவும் செல்போனில் SMS ஒளிர்ந்தது - "10 மணிக்கு அவசர போர்ட் மீட்டிங், உடனே வரவும்".

"இருக்கற பிரச்சினை போதாதென்று இது வேறயா" என்று நினைத்தவர், அடுத்த நொடியே மீட்டிங்கைப் பற்றி யோசித்தவாறே காரை நோக்கி நடந்தார்.





ஆட்டம் தொடரும்....


Jayaraman
New Delhi

Monday, May 20, 2013

does it matter to us???

It wouldn’t be a perfect finish to a Soap Opera, unless Rajasthan Royals win this year’s IPL. But then we will shortly see if it is Soap or Cricket that dictates showmanship in IPL.

We all know cricket is a glorious game of uncertainties. When some of these uncertainties, thread the boundaries of ‘Mission Impossible’, we begin to develop a suspicion. After all, we only developed the attitude to suspect based on what happened in the past. I’m sure some (if not majority) of the followers must have developed suspicion at varied points when IPL matches frequently threaded logic defying cricket. But then, we tried to pacify ourselves that ‘ALL IS WELL’ and it is all part of the games glorious uncertainties. And then, when the scandal broke, rather be shocked the real feeling was ‘I knew from beginning this was happening’, but only did not know it would involve a player like Sreesanth. Now, it drives us crazy to know who the other black sheep’s are. Obviously, it cannot be just one franchise with only 3 players involved. There should be more such moles from other teams too. For now, they are all waiting to be caught one after the other. May be they could all get away due to lack of supporting evidence. Let’s wait to see how it all unfolds.

In the meantime, it is revealed that, bookies don’t make big returns from spot fixing as much as they pay to players for executing it. From a common fan’s inference, the recruitment drive must have started recently. Eventually, when more players become part of their payroll from various franchises, the results of the many games can be better manipulated. In the end, the payment to players will be peanuts in comparison to the returns. And, when the entire system is compromised, it becomes even more complicated for the administrators to punish the guilt. In other words, it could all lead up to “Abandoning the League” which more or less pave safe exits to culprits involved. Guess I’m not too vivid with imaginations.

But then as a public, we are always going to be haunted with questions like, is the money paid in IPL not enough for the players? Is the extra money, worth the risks considering their stature (especially Sreesanth until now)? Are these players so starving for sex appetite? Is the pair of jeans, fancy cars, expensive watches, beautiful women etc. are beyond reach for these players in their current income? Did they not learn any lesson from the earlier scandals on similar grounds?
Well, I can’t answer these questions. But, I can share my perspective. A threat for life from the Underworld Mafia is not something that can be easily ignored. When you come from a country, where corruption exists in every nook and corner, getting involved in corruption doesn’t appear too big a crime. Also, in the past people punished for corruption charges irrespective of field don’t do any worse in social life at a later time. Thus, I find resisting corruption is irresistible. They really knew what they were up to and why they were up to. Between, they did not sign up to take anyone’s life. They are only asked to bowl few bad balls, which they will bowl anyway, except they get added incentive this time.

Now that it is official that some of the games we watched faithfully this IPL turn up to have illegitimate play involved, why do we still continue our patronage?
I see this difficult to answer than what was posed at those tainted cricketers. Even common sense could not provide any reasoning for full house in the inconsequential penultimate match played between Delhi and Pune. May be, there is an answer to the question. May be, we are used to living in corrupted system and so corruption crimes hardly deters our enthusiasm to dislike cricket. May be because, somebody has EPL, somebody has NFL, somebody as NBA, and so IPL is our Fashion Statement to the rest of the world.

Bottom line: Does it all really matter? The story is spicy anyway.

Dinesh
Cricket Lover

Friday, May 17, 2013

IPL 6 | டரியல் - 5

பிக்சிங் மாதிரி பரபர மேட்டர் வந்ததிற்குப் பிறகு இனிமே மேட்சை எவன் பார்ப்பான்? இதோ, அதிரடி புலன் விசாரணை தொடங்குகிறது:

சாண்டிலா:

அதிகாரி,"ஏன்?"

சாண்டிலா, “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே - பிடிக்கல, சுத்தமா பிடிக்கல"

அதிகாரி, "எங்களுக்கும் பிடிக்கல. சம்பந்தமே இல்லாம பாரதியார் கவிதை சொல்றது சுத்தமா பிடிக்கல."

சாண்டிலா "எல்லாரும் நிறுத்தணும், எல்லாத்தையும் நிறுத்தணும்"

அதிகாரி,"எதுக்கு? எப்படி?"

"அப்போ அவங்க?"

"யாரு?"

சாண்டிலா "அவங்களையும் இதே மாதிரி அடைச்சு வெச்சு கேள்வி கேட்பீங்களா?,

அதிகாரி,"யாரை? என்ன கேட்கணும்?"

"குறுந்தாடி வெச்சிருந்த மால்யா திடீர்னு ஷேவ் பண்ணிட்டு வந்தாரே, ஏன்? முகேஷ் அம்பானி ஒரு மேட்ச் கூட மைதானத்துக்கு வரலியே, ஏன்? சென்னை மேட்ச்ல RP சிங் கடைசியில நோ பால் போட்டானே, ஏன்? போலார்ட் சொல்லி வெச்ச மாதிரி ஹஸ்சி கேட்சை மூணு தடவை விட்டானே, ஏன்? செஹ்வாக் ஒரு மேட்ச் கூட உருப்படியா ஆடலையே, ஏன்? நல்லா ஆடிக்கிட்டிருந்த சாஹாவை ஓரங்கட்டிட்டு முரளி விஜய்க்கு சான்ஸ் குடுக்கறாங்களே, ஏன்?  சுமாரா ஆடிக்கிட்டிருந்த ரிக்கி பாண்டிங் திடீர்னு டீம் நன்மைக்காகன்னு சொல்லிட்டு ஓரமா உட்கார்ந்து காத்து வாங்கிக்கிட்டிருக்காரே ஏன்? எங்கேயோ போகற பாலுக்கு அப்பீல் கேட்கறதுக்கு முன்னாடியே அவுட் குடுத்து திராவிடை வெளியே அனுப்பினாங்களே, ஏன்? ஹர்பஜன் சிங் ஒரு தடவை கூட நீதா அம்பானியை அலாக்கா தூக்கலியே , ஏன்? நல்லா ஆடிக்கிட்டிருந்த டெண்டுல்கர் திடீர்னு கையில் அடின்னு சொல்லிட்டு உள்ளே போய் போலார்டை இறங்க வெச்சாரே, ஏன்? எல்லாரையும் பொளந்து கட்டிய CSK மும்பை கிட்ட 80 ரன்னுக்கு சுருண்டாங்களே, ஏன்? சுருதி ஹாசன் மேட்ச் பாக்க வந்தா மட்டும் ராயினா நல்லா ஆடறாரே, ஏன்? கவுதம் கம்பீர் பேடை கழட்டறதே இல்லை, விராட் வாயை மூடறதே இல்லை, ஏன்? ஏன்? ஏன்?

இதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சிக்கிட்டு வந்து என் சட்டையை பிடிங்க, பதில் சொல்றேன்


சவான்:
அதிகாரி, "ச்சே, இப்படி பண்ணிட்டீங்களே, நம்ம நாட்டோட மானமே போச்சு. அப்படி என்னய்யா காசு மேல ஆசை?"

சவான்," உயிர் மேல ஆசை சார்.

ஒத்துழைக்கலேன்னா உயிரை வாங்கிடுவோம்னு மிரட்டினா நாங்க என்ன சார் செய்ய முடியும்?"

"அதுக்காக, என்ன வேணா செய்வீங்களா? அவங்களுக்கு காசு கிடைச்சிடுச்சு, உனக்கு வாழ்க்கை போச்சு, உன் குடும்பத்துக்கு மானம் போச்சு, நம்ம நாட்டு மேல இருந்த நம்பிக்கை போச்சு"

"போச்சு போச்சுன்னு சொல்றீங்களே, எல்லாம் இப்போ தான் முதல் முறையா போவுதா?"

"என்ன சொல்ல வர்றே?"

அசாருதீன் மாட்டினாரே அப்போ போகலியா? நாடாளுமன்றத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்கினாங்களே, அப்போ போகலியா? இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படும்போது ராஜபக்சேவுக்கு ஆயுத சப்ளை பண்ணிட்டு வாய் மூடி இருந்தாங்களே, அப்போ போகலியா? சீனாக்காரன் நம்ம நாட்டு எல்லைக்குள்ள வந்தது கூடத் தெரியாம தூங்கிக்கிட்டிருந்தீங்களே, அப்போ போகலியா?பாகிஸ்தான் சிறையில் இந்தியக் கைதியை கொன்னுட்டு கலவரத்தில் செத்துட்டான்னு சொன்னாங்களே, அப்போ போகலியா? சராசரியா ஒரு நாளைக்கு 10 விவசாயிங்க தற்கொலை பண்ணிக்கறாங்களே, அப்போ போகலியா? தலைநகர் தில்லியில் தினம் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப் படறாளே, அந்த வழக்கெல்லாம் அப்படியே முடங்கிப் போகுதே, அப்போ போகலியா? ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன் வெல்த் கேம்ஸ் ஊழல், நிலக்கரி ஊழல், ரயில்வே ஊழல், இன்னும் என்னன்னவோ!!! கரெண்ட் எப்போ வரும்னு தெரியல, தண்ணி எப்போ போகும்னு தெரியல, மழை பெய்யுமான்னு தெரியல, வேலை இருக்குமான்னு தெரியல, வெளிய போற பொண்ணு நல்லபடியா திரும்பி வீட்டுக்கு வருவாளான்னு தெரியல - இதுல எல்லாம் போகாத நம்ம நாட்டு மானம் நான் பிக்சிங் பண்ணினதால போயிடுச்சுன்னா நான் நிஜமாவே வருத்தப்படறேன். தாராளமா என் போட்டோவுக்கு செருப்பு மாலை போடுங்க, என் உருவ பொம்மையைக் கொளுத்துங்க, நான் வெளியே வந்தா என்னை பிஞ்ச செருப்பாலேயே அடிங்க.

அதிகாரி, "இப்படியெல்லாம் வசனம் பேசி உன் தப்பை நியாயப்படுத்த முடியாது"

"சரி அப்போ உண்மையை சொல்றேன். முகேஷ் அம்பானி தான் எனக்குப் பணம் குடுத்தார். சூதாட்டத்தில் ஈடுபடலேன்னா இந்தியன் டீம்ல எடுக்க மாட்டேன்னு தோனி என்னை மிரட்டினார், எவ்ளோ ஜாஸ்தியா பிக்சிங் பண்றியோ,அதுக்கேத்த மாதிரி அதிக விலை குடுத்து அடுத்த ஏலத்தில் டீம்ல சேர்த்துக்கறேன்னு ஷாருக் கான் சொன்னாரு -இவங்களையெல்லாம் அரெஸ்ட் பண்ற தைரியம் உங்களுக்கு இருக்கா?


ஸ்ரீசாந்த்:
அதிகாரி சற்று நேரம் ஸ்ரீசாந்தை உற்று நோக்குகிறார்.

ஸ்ரீசாந்த் கடுப்பாகி "என்னவோ தாவூத் இப்ராஹிமை அரெஸ்ட் பண்ணி வெச்சிருக்கற மாதிரி பெருமையா பார்க்கறீங்க? நானே ஒரு காமெடி பீசு. எனக்கெல்லாம் பெட்டிச் செய்தியே அதிகம். என்னைப் போய் தலைப்புச் செய்தியில் போடறதெல்லாம் ரொம்பவே ஓவர் சார்"

அதிகாரி, "சொல்லு, மூணாவது ஓவர்ல 20 ரன் குடுத்தியே, ஏன்?

ஸ்ரீ, "அடிச்சவனைப் போய்க் கேளுங்க, 36 ரன் குடுக்கறதாத்தான் பேச்சு. அந்த நாதாரிக்கு எவ்ளோ பழமாப் போட்டுக் குடுத்தாலும் அடிக்கத் தெரியல, நான் என்ன பண்றது?

"ரெண்டாவது பால் போடும்போது மூக்கை சொரிஞ்சே, அப்புறம் நாலாவது பால் போடும்போது தாடையை சொரிஞ்சே, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?"

"அங்கெல்லாம் அரிக்குதுன்னு அர்த்தம், என்னய்யா கேள்வி கேட்கறீங்க?"

"முதல் பால் போடும்போது உன் துண்டு இடுப்புல இருந்திச்சு, மூணாவது பால் போடும்போது அதை தோள்பட்டையில் சொருகி வெச்சிருந்தியே, எதுக்காக?

"ஹெஹெ, நான் துண்டை இடுப்புல சொருகியிருந்தா கோவிலுக்குப் போறேன்னு அர்த்தம், அதையே தோள்ல போட்டா தீர்ப்பு சொல்லப் போறேன்னு அர்த்தம் - நான் என்ன சின்னக் கவுண்டரா? போயாங்க...

"அது போகட்டும் அஞ்சாவது பால் போடும்போது தலை முடியை ரெண்டு தடவை கோதி விட்டியே ஏன்?"

"தலை முழுக்க ஒரே பேன் ஈறு தொல்லை. பப்ளிக்கா சொறிய முடியுமா? அதான் ஸ்டைலா கோதி விட்டேன், இது ஒரு குத்தமா?

"இதெல்லாம் விடு. ஆறாவது பால் போட்ட பிறகு புஸ்ஸு புஸ்ஸுனு மூச்சு விட்டியே, அது எதுக்கு?"

ஸ்ரீ, "யோவ், வேகாத வெயில்ல வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்து போலிங் போட்டா மூச்சு வாங்காதா? இதுக்கெல்லாமா புதுசு புதுசா அர்த்தம் கண்டுபிடிப்பீங்க?

இத பாருங்க அதிகாரிங்களே, ஒரு 60 லட்ச ரூபாய் பிக்சிங் மேட்டருக்கு பிளைட் புடிச்சு மும்பை வந்து எங்களை ரவுண்டு கட்டி அரெஸ்ட் பண்ணி மறுபடியும் ப்ளைட்ல டெல்லிக்கு எங்களை கூட்டிட்டு வந்து, கோர்ட்ல நிறுத்தி இப்போ கஸ்டடியில் வெச்சு விசாரணை பண்ணிக்கிட்டு.. - உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?

உன்னோட 60 லட்சத்துக்குப் பின்னாடி 600 கோடி இருக்கு தெரியுமா?

இப்போ தாவூத் இப்ராகிம் தான் என்னை பிக்சிங் பண்ணத் தூண்டினார்னு நான் சொன்னா உடனே பிளைட் புடிச்சு துபாய் போய் அவரை அரெஸ்ட் பண்ணிடுவீங்களா? தாவூத் வீட்டு வேலைக்காரனைக் கண்டு பிடிக்கறதுக்கே பல வாரங்கள் ஆகும் சார், பெரிசா வந்துட்டாங்க.போங்கய்யா, கோடை விடுமுறை ஆரம்பிச்சிடுச்சு. புள்ளகுட்டிங்கள கூட்டிக்கிட்டு சிம்லா, கொடைக்கானல்னு குளுகுளு சுற்றுலா போங்க, ஷாப்பிங் பண்ணிட்டு வாங்க, அதை விட்டுட்டு இங்க வந்து கப்பித் தனமா பேசிக்கிட்டு!!!

"ஓவராப் பேசாதே, நட கோர்ட்டுக்கு"

"இன்னமுமா? ஒண்ணும் தேறாதுங்க "

உனக்கு தண்டனை வாங்கிக் குடுத்துட்டுத் தான் மறு வேலை"

"அப்போ எங்க ஊர் மினிஸ்டர் A K அந்தோணியை கூப்பிடுங்க. நான் அவர் கிட்ட பேசிக்கறேன்"








ஐந்து வருடங்களுக்குப் பிறகு:

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்

காங்கிரஸ் கட்சி சார்பில் எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீசாந்த் அவருக்கு அடுத்த வேட்பாளரை விட 50000 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சாண்டிலா மற்றும் சரத் பவார் கட்சி சார்பில் போட்டியிட்ட சவான் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று அவர்கள் சொந்தத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் சாண்டிலாவுக்கு கேபினட் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.



Jayaraman
New Delhi

Tuesday, May 7, 2013

IPL 6 | டரியல் - 4


நமது இந்த வார விமர்சகர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்:

விளையாட்டை கவர்ச்சியாகவும், கவர்ச்சியை விளையாட்டாகவும் ,இவ்விரண்டையும் சரிவரக் கலந்து அதை கவர்ச்சிகரமான வணிகமாக்கி வெற்றி நடை போடும் IPLலின் ஆறாவது வருடாந்திரப் போட்டிகள் செவ்வனே நடை பெற்று வருகின்றன. விளையாடத் தெரிந்தவர்களும் பிறர் வாழ்க்கையில் விளையாடத் தெரிந்தவர்களும் சமபங்கு வகிக்கும் போட்டி என்று கூறினால் அது மிகையாகாது. ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களுடன் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் பரபரப்பையும் தொடர்ந்து அளித்து வருகிறது இந்த வருடப் போட்டிகள்.

பெங்களுரு:தமிழகத்திற்கு தண்ணீர் தராத மாநிலத்தைச் சேர்ந்த அணி. ஊரை விட்டு வெளியே போனால் உதை வாங்கி வரும் அணி. பஞ்சாப்பிடம் வாங்கிய உதையை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பொங்கி வரும் காவேரி போன்ற கெயிலின் ஆட்டம் அவ்வப்பொழுது மேட்டூர் அணை போல் வறளுவது வருத்தமான விஷயம்.


சன்ரைசர்ஸ்:கடுமையாகப் போராடி வெற்றி முரசு கொட்டி வரும் கலாநிதியின் அணி. முதலாளி மாறியதும் அணியின் முறைகேடுகள் நீங்கி விட்டன. இதை எனது கழகத்தின் அணி என்று சிலர் கேலி பேசி வருவது வேடிக்கை. தலை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பதற்குச் சரியான உதாரணம் இந்த அணி.

பூனே வாரியர்ஸ்:பாவம் பரிதாபத்திற்குரியவர்கள். அனைத்து முயற்சிகளும் வீண் முயற்சிகளாகிப் போய் நிர்க்கதியாய் நிற்பவர்கள். ஊத்தப்பாவைத் தவிர அனைவரும் அவநம்பிக்கையுடன் ஆடி வருவது கண்கூடாகத் தெரிகிறது. அடுத்த முறை பார்க்கலாம்.

டெல்லி:இவர்களை அடுத்த முறை கூட பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. கலிங்கத்துப்பரணி பாட வேண்டியவர்கள் பரண் ஏறிப் படுத்திருக்கிறார்கள். தனது விளையாட்டுக்கு தொடர்ந்து தொடரும் போட முயற்சித்து வரும் செஹ்வாக்கிற்கு மிகப் பெரிய முற்றுப்ப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.




பஞ்சாப்:தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் எல்லோரையும் தவிக்க வைக்கும் அணி - சில சமயங்களில் பரிதவித்து நிற்கும் அணி. அணித்தலைவி ப்ரீத்தி வீரர்களுக்கு உறுதுணையாக நின்று உற்சாகமூட்டி வருவது பாராட்டுவதற்குரியது.மில்லர் அடித்தது சதமல்ல, வதம்.





ராஜஸ்தான்:மூத்த வீரர் திராவிட் அணியை செம்மையாக வழி நடத்துகிறார். ஜெய்ப்பூரை விட்டு வெளியூர் சென்றால் இவர்கள் முகம் வெளிறிப் போவது முன்னேறி வரும் அணிக்கு அழகல்ல.தகுதிச் சுற்றுக்கு இவர்கள் தகுதி பெறவில்லையெனில் அது திறமை வாய்ந்தவர்கள் போட்டியிடத் தகுந்த சுற்றாக இருக்காது என்பது திண்ணம்





சென்னை:தொடர் வெற்றி, நடுவே சில தோல்வி என சமநிலையில் உள்ள அணி. தமிழகத்தின் தன்னிகரில்லா அணி. ஹஸ்சி எனும் பேரலை, ராயினா எனும் தொடரலை, தோனி என்றொரு சுனாமி, பிராவோ எனும் புயல், ஜடேஜா எனும் சுழல், - மொத்தத்தில் CSK ஒரு பெருங்கடல். இவர்களின் தொடர் வெற்றிக்குக் காரணம் மஞ்சள் நிறமல்ல என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.






மும்பை & கொல்கத்தா:நட்ச்சத்திர வீரர்களும் பணபலமும் நிறைந்த, நீயா நானா என்று இழுபறியில் இருக்கும் அணிகள். ஒருவர் சாவின் விளிம்பிலும் மற்றொருவர் வாழ்வின் நுனியிலும் இருக்கின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது, வயதானாலும் வீரம் குறையாது - ஆம் சச்சினின் ஆட்டத்தைத் தான் சொல்கிறேன். இவரை ஓய்வெடுக்கச் சொல்பவர்கள் தான் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளனர். மேக்ஸ்வெல் என்றொரு பத்து கோடி பெறுமானமுள்ள மனிதர் வெறுமனே தொடர்ந்து பந்து பொறுக்கிப் போட்டு வருவது வேதனை.





Jayaraman

New Delhi

Wednesday, May 1, 2013

IPL 6 | டரியல் - 3



இந்த வாரம் நம்ம தூர்தர்ஷன் "நேரலை ஒளிபரப்பு" ஸ்டைல்:

வணக்கம் நேயர்களே, இந்த வாரம் IPL பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க வடிவேலு நம்ம ஸ்டூடியோவுக்கு வந்திருக்கார்.

வணக்கம் சார்.

"வணக்கம்ம்மா"

சார், இப்போ இந்த வருட IPL ரொம்ப பரபரப்பா போய்க்கிட்டிருக்கு, எங்க பார்த்தாலும் IPL பத்தின பேச்சாத்தான் இருக்கு. ஸோ, அது சம்பந்தமா நம்ம நேயர்கள் கேட்கிற கேள்விக்கு உங்க பதிலை எதிர்பார்க்கறோம்.

"ரொம்ப சந்தோஷம்மா"

சரி சார், நிகழ்ச்சிக்குப் போவோம், முதல் நேயர் லைன்ல வர்றார், ஹெலோ யார் பேசறது?

நேயர், "மேடம், நான் ஜெய்ப்பூர்லேர்ந்து திராவிட் பேசறேன்,

பெண்மணி, "சார், உங்க வாய்ஸ் சரியா கேட்கலை, வாயில ஏதோ ஓரமா ஒதுக்கி வைச்சிருக்கீங்களே, அதை துப்பிட்டுப் பேசுங்க"

"சரி மேடம், (துப்பி விட்டு) ஒவ்வொரு வருஷமும் எங்க டீம் நல்லாத்தான் ஆடுது, ஆனாலும் செமி பைனல் கூட வர முடியலை. இந்த வருஷமாச்சும் வர முடியுமா?"

வடிவேலு, "அது ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை சார். நீங்க ஜெய்ப்பூரை விட்டு வெளியே போனா சொதப்பிடறீங்க. முக்கியமான மேட்ச்செல்லாம் வெளியே தானே சார் நடக்குது. அதுக்கேத்த மாதிரி உங்க டீமை தயார் பண்ணுங்க.





அடுத்து சார், நமக்கு ஒரு ஈமெயில் வந்திருக்கு. பூனேலேர்ந்து யுவராஜ் அனுப்பியிருக்கார்.

"என்ன பெரிசா கேட்கப்போறாரு, அடுத்த வருஷம் எங்க டீம் இருக்குமான்னு டவுட்டா இருக்குன்னு எழுதியிருப்பார்"

"எப்படி சார் கரெக்டா சொன்னீங்க? நானே கூட கேட்கணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்"

"உங்களுக்கு மட்டுமா? IPL பாக்கற எல்லாருக்குமே இந்த டவுட் இருக்கு. காலம் தான் இதற்கு பதில் சொல்லணும்."

சரி சார், இப்போ அடுத்த நேயர் வர்றார், ஹெலோ?

நேயர், "யோவ், நான் பெங்களூருவிலிருந்து விராட் பேசறேன், ஒ....இந்த கெயில் பா.... ஒரு மேட்ச் ஆடறான், ஒ.....அடுத்த மேட்ச் ஆப்பு வைக்கறான். ஒ... இந்த ல...கோ...தொடர்ந்து ஒழுங்கா ஆடுவானா மாட்டானா? மவனே ஆடலேன்னா அவ்ளோ தான், ..

வடிவேலு குறுக்கிட்டு, "தம்பி தம்பி, இது பொது நிகழ்ச்சி தம்பி, இப்படி ஏக வசனத்தில பேசறது நல்லாவா இருக்கு.."

விராட் கடுப்பாகி "யோவ்...ஒ.... எனக்கே அட்வைசா? நான் இளைய தலைமுறையின் அடையாளம், தெரிஞ்சுக்கோ. ரொம்ப பேசினே அவ்ளோ தான், சூ...அடிச்சு சு...தடவிடுவேன் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுய்யா என் வென்று" படக்கென்று போனை வைக்கிறார்.

வடிவேலு முகத்தைத் துடைத்த படியே, "தம்பி அவர் பேரோ கெயிலு, அவர் அடிச்சா புயலு - புயல் வருஷம் முழுக்கவா அடிக்கும்? ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை தான் தம்பி அடிக்கும், சரிங்களா?" - மறுபடியும் முகத்தைத் துடைக்கிறார்.

பெண்மணி, "ஓகே சார், ஒரு சிறிய விளம்பர இடைவேளை "

வடிவேலு, "தயவு செஞ்சு பிரேக் விடுங்க, காதிலேர்ந்து ரத்தம் வர்ற மாதிரி இருக்கு, பஞ்சு வைக்கணும் - பாவிப்பய, இப்படியா வண்டை வண்டையா திட்டுவான்?"




இடைவேளைக்குப் பிறகு..

ஓகே சார், ஒரு கால் வருது..ஹெலோ யார் பேசறது?"

நேயர், "நீங்க தான் பேசறீங்க"

வடிவேலு உஷாராகி,"மேடம் இவன் அவனே தாங்க, இங்கேயும் வந்துட்டான்"

நேயர், "சார் சார், நான் நீங்க நினைக்கற ஆள் இல்லை, பஞ்சாப்பிலேர்ந்து கில்லி பேசறேன்"

"யாரு விஜய் தம்பியா?'

"அர்ரே, ஆடம் கில்க்ரிஸ்ட் பேசறேன்யா"

"அப்படி தெளிவா பேசிப் பழகு, என்ன விஷயம்?"

"டீம் சரியா ஆடலேன்னு நான் பெஞ்ச்சில உட்கார்ந்தேன். ஆனாலும் ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லையே? எவ்ளோ முக்கினாலும் முடியலையே?"

"முக்கினாலும் முடியலேன்னா நல்ல டாக்டரா பாரு."

"அட அது இல்லீங்க, டீம் ஜெயிக்க மாட்டேங்குதே, அதைச் சொன்னேன்"

"அதுக்கு நீங்க பெஞ்சில உட்கார்ந்தா பத்தாது. அம்ரித்சர் குருத்வாரா வாசலில் குத்த வைச்சு உட்காருங்க. குரு நானக்கின் அருள் கிடைச்சாலாவது எதாச்சும் நல்லது நடக்குதான்னு பார்க்கலாம், போனை வைங்க"

வடிவேலு, "பதில் சொல்லி தொண்டை வறண்டு கிடக்கு, கொஞ்சம் தண்ணி குடுங்க"

தண்ணீர் குடிக்கும்போதே போன் மணி அடிக்கிறது. உடனே பெண்மணி,"சார் ஒரு நேயர் லைன்ல.."

வடிவேலு, "எங்களுக்கு எல்லாம் தெரியும். ஆமாம், நீங்க எதுக்கு இங்க சும்மா உட்காந்திருக்கீங்க? போய் வேற வேலை வெட்டி இருந்தாப் பாருங்க" என்று விரட்டி விட்டு போனை எடுக்கிறார்.




"ஹெலோ, வடிவேலுவா?, நான் ரிக்கி பாண்டிங் பேசறேன்"

"வாய்யா, என்ன திடீர்னு?"

"ஒண்ணும் இல்லை, டீம் நல்லா இருக்கணும்னு நினைச்சு வெளியே வந்தாலும் வந்தேன். ஆனா இந்த ரோஹித் பய போடற ஆட்டம் தாங்க முடியல"

"என்ன பண்றது? பயபுள்ள ஓவராத்தான் துள்ளுது, ஆனா அவனைச் சொல்லி தப்பில்லை. ஏன்னா இருந்திருந்து அவனுக்கு கேப்டன் பதவி கிடைச்சிருக்கு. காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் பாஞ்ச மாதிரி பாயறான். விடு விடு, ரெண்டு மேட்ச் தோத்தான்னா போதை எல்லாம் பிதுங்கி வெளியே போய் ப்ரெஷ் ஆயிடுவான்.

"அப்படியா" என்று சொல்லிவிட்டு ரிக்கி போனை வைக்கவும், வடிவேலு "சூடு தாங்க முடியாம ஓரமா உட்கார்ந்து காத்து வாங்கற நன்னாரிப் பயலுக்கு வயிறு எரியுது பாரு" என்று அவர் ஸ்டைலில் போனைப் பார்த்து முணுமுணுக்கிறார்.



உடனே அடுத்த மணி அடிக்கிறது. "சார் நான் கம்பீர் பேசறேன்,"

உடனே இன்னொரு குரல் "சார் நான் வீரு பேசறேன்"

வடிவேலு, "யாராச்சும் ஒருத்தர் பேசுங்கய்யா, ரெண்டு பேருக்கும் ஒண்ணும் பெரிய வித்யாசம் இல்லை. நீ இன்னிக்குப் போகபோற, அவன் நாளைக்குப் போகப்போறான்"

கம்பீர் , "போன வருஷம் கப் வாங்கின டீம் சார் எங்களுது. இந்த வருஷம் நிலைமையைப் பார்த்தீங்களா?

"என்ன பெரிய நிலைமை? போன வருஷம் ஆடின மாதிரி ஆட வேண்டியது தானே?"

"அதான் முடியலையே சார்"

"முடியலேன்னா மூடிக்கிட்டு போ. அதை விட்டுட்டு டீம்ல இருக்கற சின்னப் பசங்க கிட்ட வீராப்பா முறைக்கற வேலையெல்லாம் வைச்சுக்காதே, நீயே ஒரு தேவையில்லாத ஆணி. ஞாபகம் வெச்சிக்க.

வீரு குறுக்கிட்டு, "சார் எனக்கு எதாச்சும்...?"

"பெரிசு, வயசில பெரியவங்க நீங்க, நான் உங்களுக்கு அறிவுரை சொல்லக்கூடாது, பார்த்து செய்யுங்க"

வடிவேலு போனை வைத்து விட்டு ஓய்வாக உட்காரவும் அவரது செல்போனில் மெசேஜ் வருகிறது. எடுத்துப் பார்க்கிறார்.

"மெசேஜ் ப்ரம் கலாநிதி மாறன் - ஷோ ரொம்ப அருமையா பண்றீங்க, சன் நியூஸ் தொலைக்காட்சியில் கூட இதே மாதிரி ஒரு ப்ரோக்ராம் வருது. வர்றீங்களா?"

வடிவேலு படக்கென்று மெசேஜை டிலீட் செய்கிறார் - "நல்ல வேளை, அழிச்சிட்டேன். இந்த ஆள்கிட்டேர்ந்து மெசேஜ் வந்தது தெரிஞ்சாக் கூட அந்த அம்மா உள்ளே வெச்சிடும்" - என்று ரிலாக்ஸ் ஆகவும் போன் மணி ஒலிக்கிறது. எடுக்கிறார்.





மறுமுனையில் "சார் நான் தோனி பேசறேன்"

வடிவேலு குஷியாகி "அடடடா, நம்மூர்க்காரன் கிட்ட பேசற சந்தோஷமே தனி. நானே உங்களுக்கு போன் போடணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன், நீங்களே பண்ணிட்டீங்க"

தோனி, "என்கிட்டே உங்களுக்கு என்ன கேட்கணும்?"

வடிவேலு, "எல்லா மேட்சையும் கடைசி பால் வரைக்கும் இழுத்துக் கொண்டு போய், நாடி நரம்பு, இதயத்துடிப்பு எல்லாம் அடங்கிப் போகற அளவுக்கு மனுஷனை டென்ஷன் பண்ணி ஜெயிக்கறீங்களே? உங்களுக்கு ஏன் இந்தக் கொலைவெறி?"

"அப்போ தான் "சென்னை அணி த்ரில் வெற்றி" அப்படின்னு கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தி போட முடியும் அய்யாச்சாமி"

"அய்யாச்சாமியா? சரி பரவால்ல. இன்னொரு கேள்வி"

"என்னது?"

"உங்க பேட்ல மட்டுந்தேன் அந்த பவர் இருக்கா? இல்லை எல்லா பேட்லயும் இருக்கா? அடிச்சா பந்து பாதாளம் வரைக்கும் பாயுதே? எப்படி எப்படி எப்படி?"

"பேட்ல என்ன இருக்கு? எல்லாம் படைச்சவன் கையில் இருக்கு"

"என்ன இவ்ளோ சிம்பிளா சொல்றீங்க?"

"ஆமாய்யா, ஆஸ்திரேலியா கிட்ட தோத்தப்போ காறித் துப்பினீங்க. அதே டீமை இங்க துவைச்சு எடுத்தப்போ தலையில தூக்கி வைச்சு கொண்டாடினீங்க. இப்போ IPL பார்த்துட்டு பாராட்டறீங்க. இது முடிஞ்சு சவுத் ஆப்பிரிக்கா போய் உதை வாங்கினா மறுபடியும் கழுவி ஊத்துவீங்க. உங்க இஷ்டத்துக்கு நாங்க ஆட முடியுமா?ஏதோ ஒரு கணக்குல அகஸ்மாத்தா வீசறேன், அதுவா பட்டுப் போகுது. ரொம்ப ஆராய்ச்சி பண்ணாதீங்கய்யா"

"நியாயமான பதில்"

"போனை வைச்சிடவா?

"சார் சார், கடைசியா ஒரு கேள்வி"

"கேளுங்க"

"மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வரக்கூடாது, IPL ஆடக்கூடாதுன்னு சொல்லி நம்ம எதிர்ப்பைக் காட்டினோம். ஆனால் ரமீஸ் ராஜா, வாகார் யூனுஸ், முஷ்டாக் அஹ்மத், வாசிம் அகரம் இப்படின்னு ஒரு பெரிய பாகிஸ்தான் பட்டாளமே IPLலோட சம்பந்தப்பட்டிருக்காங்களே, இவங்களுக்கெல்லாம் அந்த விதிமுறை பொருந்தாதா?"

.

.

.

.

.

பிசிசிஐ சிந்திக்குமா?



Jayaraman

New Delhi
Related Posts Plugin for WordPress, Blogger...