Wednesday, June 26, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 10


இப்படி அடிமாட்டு விலைக்குக் கேட்டா எப்படி சார்?" என்று பத்மநாபனைப் பார்த்துக் கேட்டான் மொஹிந்தர். பக்கத்தில் நண்பனும் ஆலோசகருமான வருண்.

"ஏம்பா 3.5C உனக்குக் கம்மியாப் படுதா?"

வருண், "ஏன் சார் குடுக்கக் கூடாது? வேர்ல்ட் கப் ஜெயிச்சிருக்கான். யூத் ஐக்கனா மாறிக்கிட்டு வர்றான். இன்னும் 10 வருஷத்துக்கு இந்த குதிரை ஓடும் சார்"

மொஹிந்தர், "இன்னிக்கோ நாளைக்கோ ரிடையர் ஆகப்போற பெரியவருக்கே 5C குடுக்கறாங்க. அதுவும் அவரால மும்பையைத் தவிர வேற எந்த டீம்லயும் விளையாட முடியாது. நானோ ஓபன் டிக்கெட். 8C வரைக்கும் குடுக்கறதுக்கு ரெடியா இருக்காங்க சார். நான் எதிர்பார்க்கறதுல என்ன சார் தப்பு?"

நடேசன் "ஒரு தப்பும் இல்லை. நாங்க உனக்கு வேற திட்டங்கள் யோசிச்சு வைச்சிருக்கோம். ஆனா நீ காசு மட்டும் தான் எதிர்பார்க்கறே"

வருண், "என்ன சார் திட்டம்?"

பத்மநாபன், "முதல்ல சில உண்மைகளை பேசுவோம். நீ பெரியவர் மாதிரியோ, கோகுல் மாதிரியோ தொழில்நுட்ப ரீதியா ஆடறவன் கிடையாது. இப்போதைக்கு உனக்கு பந்து மாட்டுது. உனக்கு போட்டிகள் அதிகம். டீம்ல நீ எவ்ளோ நாள் இருப்பேன்னு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு புதுப்பசங்க வந்துகிட்டே இருக்காங்க. நாளைக்கே சேர்ந்த மாதிரி இரண்டு சீரிஸ் தோத்தீன்னா குழு முதல்ல உன் தலையில் தான் கைவைக்கும். என்னைக்கும் நித்யகண்டம் பூரண ஆயுசு தான் உனக்கு.

மொஹிந்தர் கடுப்பாகி, "இன்னிக்குப் பத்தி பேசுங்க சார். நாளைய மேட்டரை நாளைக்கு பார்த்துக்கலாம். ஏன் சார், உங்களுக்கு நான் வேணும்னு எதிர்பார்க்கறீங்க, ஆனால் நான் கேட்கற காசை மட்டும் ஏன் தர மறுக்கறீங்க?"

"நான் தரமாட்டேன்னு சொல்லலியே, சம்பாதிச்சுக்கோன்னு சொல்றேன்"

இருவரும் முழித்தனர்.

"என்ன முழிக்கறீங்க? ஒண்ணும் புரியலையா?"

வருண், "அசிங்கபடுத்தறீங்கன்னு மட்டும் புரியுது, கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?"

"நடேசன், கொஞ்சம் சொல்லுங்க" என்று கூறி பத்மநாபன் மினெரல் வாட்டர் பாட்டிலை திறக்க ஆரம்பித்தார்.

நடேசன், "காண்ட்ராக்ட் மூலமா 3.5C தர்றோம், ஆனால் உனக்கு சம்பாதிக்கறதுக்கான வேற வழிவகைகளை ஏற்பாடு பண்ணித் தர்றோம். உதாரணத்திற்கு, நிறைய கிரிக்கெட் வீரர்கள் எங்க கம்பெனியில் இருக்காங்க. உனக்கும் எங்க கம்பெனியில் ஒரு பெரிய பதவி தர்றோம். - பொது மேலாளர், அந்த மாதிரி. வேலையெல்லாம் செய்ய வேண்டாம். மாசம் ஒருக்கா கையெழுத்து போட்டாப் போதும். அதுல ஒரு 50L வரும். அது போக நம்ம டீமோட மார்க்கெட்டிங் ரைட்ஸ் உனக்குத் தர்றோம். அது எப்படியும் 2-2.5C கிட்ட வரும்"

மொஹிந்தர், "நான் இன்னிக்கு இட்லி கேட்கறேன், நீங்க நாளைக்கு பிரியாணி வாங்கித்தரேன்னு சொல்றீங்க"

பத்மநாபன் சிரித்துக் கொண்டே, அடேடே, நல்லாப் பேசறியே. ஒரு உண்மையைச் சொல்லவா? உனக்குத் திறமையை விட அதிர்ஷ்டம் தான் கை குடுக்குது. பைனல்ஸ் நாம ஜெயிச்சது அதிர்ஷ்டம் தான். அதை தெரிஞ்சுக்கோ. அடுத்த 10 வருஷத்துல நீ ஒரு கிரிக்கெட் வீரரா மட்டும் இல்லாம ஒரு ஸ்போர்ட்ஸ் சிம்பலா இருக்கணும். வெறும் ப்ளேயரா இருந்து உன் வாழ்க்கையை முடிச்சுக்காதே"

மொஹிந்தர் மடக் மடக்கென்று இரண்டு க்ளாஸ் தண்ணீரைக் குடித்தான். "சார், என்ன தான் சொல்ல வர்றீங்க?"

"பெரிசா யோசின்னு சொல்றேன். நீ ஒண்ணும் சாப்பிடற பொருளுக்கு விளம்பரம் பண்ணப் போறதில்ல. ஒரு பெரிய வியாபாரத்தோட முக்கிய பகுதியா இருக்கப் போறே. நான் சொல்றபடி கேளு, நீயே ஆச்சர்யப்படற அளவுக்கு உன்னை ஆளாக்கிக் காட்டறேன்."

வருண் சிறிது யோசித்தான். பிறகு மொஹிந்தர் காதில் ஏதோ குசுகுசுத்தான்.

மொஹிந்தர், "சரி சார், நீங்க இவ்ளோ தூரம் சொல்றீங்க. சம்மதிக்கறேன். ஆனால் சில கண்டீஷன்ஸ் இருக்கு"

"என்னப்பா?"

"பொது மேலாளர் பதவி சரிப்படாது. பார்ட் டைம் டைரக்டர் அல்லது ஒரு வைஸ்-ப்ரெசிடெண்ட் பதவியாச்சும் வேணும்"

"டைரக்டரா போட்டா நீ ரெகுலரா வேலை செய்யணும். அதுக்க உன் கிரிக்கெட் இடம் கொடுக்காது. வைஸ்-ப்ரெசிடெண்ட் போஸ்ட் தர்றேன். ஆனால் சம்பளம் அதே தான். வேணும்னா சலுகைகள் கொஞ்சம் அதிகம் பண்ணித்தரேன்"

"ஓகே, மார்க்கெட்டிங் ரைட்ஸ் குடுத்த பிறகு உங்க தலையீடு அதில் இருக்கக் கூடாது"

"அதுக்காக நீ என்ன பண்ணினாலும் சரின்னு தலையாட்ட மாட்டேன். செக் பண்ணிட்டுத் தான் ஓகே சொல்லுவேன் -  ஏன்னா டீம் என்னுது"

"அப்புறம் நான் புதுசா விளம்பர ஒப்பந்த கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன். அதுல நம்ம வீரர்கள் காண்ட்ராக்ட் போட்டுக்கணும். அவங்களோட விளம்பர மேனேஜரா என் கம்பெனி தான் செயல்படும்"

"ஓகே, வேற எதாவது?'

"அவ்ளோ தான். முக்கியமான விஷயம். ஏலத்தில் என்னைத் தான் அதிக விலைக்கு எடுத்ததா நியூஸ் வரணும். அப்போ தான் எனக்கு மார்க்கெட் ஏறும்"

"சரி, என்கிட்டேயும் சில கண்டீஷன்ஸ் இருக்கு. கொஞ்சம் கேட்கறியா?"

வருண் "என்ன கண்டீஷன்ஸ்?"

"ஏயர் வாய்ஸ் தான் நம்ம அணிக்கு டைட்டில் ஸ்பான்சர். அவங்களோட ப்ராண்ட் அம்பாசிடரா நீ தான் இருக்கணும். அப்போ தான் நம்ம டீமுக்கு நல்ல காசு கிடைக்கும். நீ கேக்கற பேமென்ட் குடுக்க ரெடியா இருக்காங்க. நீ பொய்யா தயாரிச்ச கான்ட்ராக்டை இதன் மூலமா உண்மையாக்கிக்கலாம்"

வருணும் மொஹிந்தரும் சற்றே அதிர்ந்தனர்.

"எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்கறியா? எங்களுக்குத் தெரியாம எதுவும் நடக்காது. அப்புறம் உன் ப்ரெண்ட் ஒருத்தன் டெல்லி பக்கத்துல ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிச்சிருக்கானே, அதில் நீ கூட 30% ஷேர்ஸ் வாங்கியிருக்கியே? என்னவோ பேராச்சே, அமராவதியா, பத்மாவதியா?

வருண் "அமராவதி க்ரூப்"

"அதே தான், அவங்க கன்ஸ்ட்ரக்ஷன் எல்லாத்துக்கும் நம்ம கம்பெனி சிமெண்ட் தான் சப்ளை ஆகணும். வேணும்னா அவங்களை நம்ம டீமோட ஒரு சின்ன ஸ்பான்சரா போட்டுக்கலாம். என்ன சொல்றே?"

பத்மநாபன் அடுத்தடுத்து வீசிய யார்க்கரில் வருணும் மொஹிந்தரும் கிளீன் போல்டு ஆனார்கள்.

மொஹிந்தர் சற்றே சுதாரித்துக் கொண்டு "சரி சார். காண்ட்ராக்ட் பேப்பர்ஸ் அனுப்பி வைங்க. முடிச்சுடுவோம்" என்று சொல்லிவிட்டு கை குலுக்கினான், பிறகு வெளியே வந்தான். வருண் அவனைப் பின் தொடர்ந்தான்.

காரில் ஏறியவுடன் வருண், "என்னடா, இப்படி பொசுக்குன்னு எல்லாத்துக்கும் மண்டையாட்டணும்னு என்ன அவசியம்? இதுக்கு டபிள் பேமென்ட் பண்றேன், உடனே வாங்கன்னு மகேஷ் மெசேஜ் போட்டுக்கிட்டே இருக்காரு"

"அவசியம் இல்லை தான். ஆனால் எனக்கென்னவோ நான் சென்னை அணிக்கு ஆடறது தான் நல்லதுன்னு தோணுது"

"ஏன் அப்படி சொல்றே?"

"மகேஷ் காசு குடுப்பாரு, ஆனால் அங்கே மரியாதையை எதிர்பார்க்க முடியாது. பெரியவருக்குத் தான் முதல் மரியாதை கிடைக்கும். என்ன தான் எனக்கு மார்க்கெட் இருந்தாலும் வேற எந்த டீமுக்குப் போனாலும் அந்த ஊர் மக்கள் என்னை ஒரு அன்னியனாத்தான் பார்ப்பாங்க. குறிப்பா என்னை ஒரு பீகாரியாத் தான் பார்ப்பாங்க. ஆனால் தமிழர்கள் யாரையும் வித்யாசப்படுத்திப்படுத்தி பார்க்க மாட்டாங்க. அவங்கள்ல ஒருத்தனா என்னை சீக்கிரம் ஏத்துக்குவாங்க.

"அடேங்கப்பா, செம கணக்கு"

"ஆனால் எதுக்காக நான் பெரிய ஆளா வரணும்னு அவர் இவ்ளோ திட்டம் போடறார்னு எனக்கு புரியல"

வருண், "என்னவோ போ, நமக்கு கல்லா கட்டணும், அவ்ளோ தான். "


உள்ளே நடேசன் பத்மநாபனிடம், "ஏன் சார், இவ்ளோ செலவு பண்ணி இவனை நம்ம டீம்ல எடுக்கணுமா?"

"என்னமோ தெரியல நடேசன், அவன் முகத்தைப் பார்க்கும்போது ஓடிப்போன என் மகனோட ஞாபகம் அடிக்கடி வருது" - பத்மநாபனின் குரல் சற்றே நெகிழ்ந்தது.

"சார்"

சிறிது தண்ணீரைக் குடித்து விட்டு, "சென்டிமென்ட் எல்லாம் இல்லை, நீ இன்னிக்கு செலவை பார்க்கறே, நான் நாளைக்கு இவனால கிடைக்கப் போற பம்பர் லாட்டரியைப் பார்க்கறேன்"

"புரியலையே சார்?"

"கிரிக்கெட் எப்படி விளையாடணும்னு ஷயன் கெல்கரைப் பார்த்து மக்கள் தெரிஞ்சுக்கிட்டாங்க. அந்த கிரிக்கெட் மூலமா வாழ்க்கையில் எப்படி விளையாடணும்னு இவன் எல்லாருக்கும் கத்துக் குடுக்கப் போறான். பார்த்துக்கிட்டே இருங்க நடேசன், இது வரைக்கும் வந்த எல்லாரையும் இவன் தூக்கி சாப்பிடப் போறான்"



ஆட்டம் தொடரும்....

Monday, June 17, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 9


"க்யா மாமாஜி, மீட்டிங் போடறதுக்கு வேற இடமே கிடைக்கலையா?" என்று லலித் குமாரைப் பார்த்துக் கேட்டான் ஷீலா ஷெட்டியின் வருங்கால புருஷன் ஸ்வராஜ் சந்திரா. லலித் ஸ்வராஜின் தாய் வழி உறவினன். இடம் - மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் அருகே உள்ள ஒரு ரெசார்ட்.

"பெரு நகரங்களில் மீட்டிங் வெச்சா மீடியா ரொம்ப தொல்லை பண்ணுவாங்க. ஏன்னா இங்க நிறைய விஷயம் ரகசியமா முடிவு பண்ண வேண்டியிருக்கு. அதான் இப்படி"

"ஓகே ஓகே" என்று ஸ்வராஜ் கூறவும் அருகே இருந்த பணியாள் இருவரையும் பார்த்து "சார் உங்களை உள்ளே கூப்பிடறாங்க" - இருவரும் உள்ளே விரைந்தனர்.

உள்ளே மகேஷ் அத்வானி, ஷாதிக் கான் & ஜானகி சாவ்லா, ஸ்வராஜ் & ஷீலா ஷெட்டி, ப்ரீத்தா & மெஸ்ஸி, பிரகாஷ் ராவ், ராமோஜி ரெட்டி, அஜய் செல்லையா மற்றும் அவரது மகன் எல்லோரும் வரிசையாக அமர்ந்திருந்தனர். ரகு வரிசையில் கடைசியாக அமர்ந்திருந்தான். எதிர் வரிசையில் தலைவர், லலித் குமார், பத்மநாபன் மற்றும் தலைவர் பாசறையைச் சேர்ந்த ஓரிரு உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.

டல்லாக இருந்த ப்ரீத்தாவைப் பார்த்து ஷீலா கிண்டலாக, "என்ன சோர்வா இருக்கே? ராத்திரி ரொம்ப நேரம் கண்ணு முழிச்சீங்களோ? என்று கேட்டு கண்ணடித்தாள்.

"ச்சீ, அதெல்லாம் இல்லை."

"அப்போ? மசக்கையா? எவ்ளோ மாசம்?"

"உனக்கு எப்பவும் இதே நினைப்பு தானா? அதெல்லாம் நாங்க பாதுகாப்பாத்தான் இருக்கோம்"

தலைவர் தொண்டையைச் செருமவும் இருவரும் சுதாரித்துக் கொண்டனர்.

"நீங்க எல்லாம் இந்த புது T20 போட்டியில் ரொம்ப விருப்பம் காட்டினதால அணிகளை உங்களுக்கே குடுக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம். டீம் விவரங்களை சொல்றேன்:

மகேஷ் அத்வானி - மும்பை

ஸ்வராஜ் சந்திரா - ஜெய்ப்பூர்

பிரகாஷ் ராவ் - டெல்லி

ராமோஜி ரெட்டி - ஹைதராபாத்

அஜய் செல்லையா – பெங்களுரு

,மெஸ்ஸி வடாலா – சண்டிகர்

ஷாதிக் கான் - கல்கத்தா

சவுத் இந்தியா சிமெண்ட்ஸ் - சென்னை

சென்னை அணிக்கு கம்பெனி பெயர் சொன்னதும் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

ஷாதிக் கான் "சென்னை அணிக்கு முதலாளி யாரும் கிடையாதா?"

ரகு பதில் சொல்ல முனையும் முன்னே பத்மநாபன் குறுக்கிட்டு "அது கம்பெனியின் சொத்து தான். ரகு ஒரு கைடா இருந்து வழி நடத்துவார்"

மகேஷ், "என்னங்க இது, நம்பற மாதிரியே இல்லையே? நீங்க தான் அந்த கம்பெனிக்குச் சேர்மன், இப்படி குழுவிலும் இருந்திகிட்டு போட்டியிலேயும் பங்கெடுத்தா போட்டி எப்படிங்க நியாயமா இருக்கும்?"

"அதெல்லாம் விதிமுறைகள் படி தான் நியமிச்சிருக்கோம். எந்த வகையிலும் அவர் தலையீடு இருக்காது" என்றார் தலைவர்.

அந்த பதிலில் மகேஷுக்கு திருப்தி ஏற்படவில்லை இருந்தாலும் ஏற்றுக் கொண்டது போல் தலையாட்டினான்.

ஸ்வராஜ், "இந்த போட்டியில் ஸ்பான்ஷர்ஷிப் தவிர எங்களுக்கு வேற எந்த வருமானமும் இல்லை. கிரௌண்ட் வருவாயும் எங்களுக்கு முழுசா கிடைக்காது. அதனால நீங்க பெட்டிங் பண்ண அனுமதிக்கணும். லலித் ஸ்வராஜை புன்முறுவலுடன் பார்த்தான்.

"அதெல்லாம் முடியாது, நம்ம நாட்டுல அது சட்ட விரோதம்" என்றார் பத்மநாபன்

ஷாதிக், "என்ன சட்ட விரோதம்? இன்னமும் நம்ம நாட்டுல சிக்கிம், மணிப்பூர், ஹர்யானான்னு லாட்டரி சீட்டு விற்பனை நடந்துகிட்டு தான் இருக்கு"

மெஸ்ஸி , "இங்கிலாந்து புட்பால் லீக் மாதிரி பார்மாட் போட்டுட்டு பெட்டிங் இல்லேன்னா எப்படி? அங்க விளையாடற அணிகளுக்கு பெட்டிங் மூலமா கணிசமான வருமானம் கிடைக்குது மக்களுக்கும் போரடிக்காது. இல்லேன்னா இரண்டு மாசம் டோர்னமென்ட் முடியறதுக்குள்ள மக்கள் ஓய்ஞ்சு போயிடுவாங்க.

மகேஷ், ராவ், ரெட்டி ஆகியோரும் பெட்டிங் வேண்டுமென்ற கருத்தை ஆமோதித்தனர். பத்மநாபன் தலைவரிடம் "என்னங்க இது, புது பிரச்சினை?"

தலைவர், "எல்லாம் இந்த லலித் பண்ற வேலை. பெட்டிங் பண்றதுக்காக ஏற்கனவே ஒரு வெப்சைட் ரெடி பண்ணி வெச்சிருக்கான். அதை வியாபாரமாக்கத்தான் இவங்களை மூட்டி விட்டிருக்கான்"

பிறகு எல்லோரையும் பார்த்து, "இது பற்றி நான் தனியா முடிவு எதுவும் சொல்ல முடியாது. மேலிடத்தில் கேட்டுட்டுத் தான் சொல்ல முடியும்"

இப்பொழுது லலித் எழுந்து, "வீரர்கள் சம்பந்தமா சில விவரங்கள் சொல்றேன் என்று சொல்லி லாப்டாப்பைத் தட்டினான். திரையில் வீரர்களில் பட்டியல் ஒளிர்ந்தது.

"என்ன தான் வீரர்களை ஏல முறைப்படி தேர்ந்தெடுத்தாலும் சில வீரர்கள் சில அணிக்காக ஆடினாத்தான் அந்த அணிக்கு மதிப்பு, காசு, பெருமை, எல்லாமே. உதாரணத்திற்கு ஷயன் கெல்கர் மும்பைக்காக ஆடினாத்தான் ஜனங்க வருவாங்க. அதனால சில வீரர்களை நாங்க ரிசர்வ் பண்ணி வெச்சிருக்கோம், பாருங்க" என்று சொல்லி மீண்டும் லாப்டாப்பைத் தட்டினான்.

ஷயன் - மும்பை

கௌரவ் - கல்கத்தா

கோகுல் - பெங்களுரு

நரேந்தர் - டெல்லி

ப்ரித்விராஜ் - பஞ்சாப்

மொஹிந்தர் - சென்னை

மகேஷ் கடுப்பாகி, "அதெப்படி மொஹிந்தர் சென்னைக்கு ஆடுவான்? அவன் ஊர் பேர்ல எந்த டீமும் இல்லை. அவனை பொது ஏலத்தில் எடுக்கறது தான் நியாயம்"

பத்மநாபன் சற்று நெளியவும், "இப்ப இருக்கற டீம்ல சென்னையிலேர்ந்து எந்த நட்சத்திர வீரரும் கிடையாது. அதுவுமில்லாம கிரிக்கெட்டைப் பொறுத்தவரைக்கும் இந்தியா பெங்களுருவோட முடியுது. ஒரு சமநிலையான போட்டி வேணும்னா குறைந்த பட்சம் ஒரு தெரிஞ்ச முகம் இருக்கணும்.அதுக்குத் தான் இந்த ஏற்பாடு" என்றார் தலைவர்.

ராவ், "இப்படி முன்னாடியே எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணிட்டா அப்புறம் இந்த மீட்டிங் எதுக்கு?"

லலித், "இதுல வெளிநாட்டு வீரர்களும் விளையாடப் போறாங்க. அந்தக் கோட்டாவில் சென்னை அணி சமரசம் பண்ணிக்கறதா சொல்லியிருக்காங்க

தலைவர், "இவங்களைத் தவிர மற்ற வீரர்கள் பற்றிய விவரம் உங்ககிட்ட இருக்கு. நீங்க உங்களுக்குள்ள கலந்து பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு வாங்க. ஏலம் நடக்கும்போது எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது.மொஹிந்தரைத் தவிர வேற எதிலேயும் சென்னை டீம் தலையிடாம பார்த்துக்கறது என் பொறுப்பு"

ஷாதிக், "எல்லாத்துக்கும் நீங்களே பதில் சொல்றீங்க. அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்களா? அது என்ன உங்க டீமா?" என்று சற்று உஷ்ணமாகப் பேசினான்.

ரகு, "நாங்க சொல்ல வந்ததைத் தான் தலைவர் சொல்றார். இந்த உறுதிமொழியெல்லாம் கம்பெனி சார்பா ஏற்கனவே எழுதிக் கொடுத்துட்டுத் தான் இந்த போட்டியிலேயே பங்கெடுக்க வந்திருக்கோம்"

ரெட்டி, ராவிடம் "என்ன கிளி திடீர்னு சொந்தமா பேசுது!" என்று ஜாடையாக கிண்டலடித்தார்.

சிறிது நேரம் மௌனம் நிலவியது. பிறகு தலைவரே தொடர்ந்தார்.

"நாம எல்லாரும் இங்க சம்பாதிக்கறதுக்காகத் தான் வந்திருக்கோம். இதை ஏன் கிரிக்கெட்டாப் பார்க்கறீங்க? மக்களுக்குத் தான்யா இது விளையாட்டு. நமக்கு இன்னொரு வியாபாரம். வியாபாரத்தில் முன்னபின்ன இருக்கறது சகஜம் தானே? ஆனால் யாருக்கும் நஷ்டம் வராது. அதுக்கு நான் கியாரண்டி - வியாபாரமாப் பாருங்க"

மகேஷ், "நீங்க இவ்ளோ சொல்றீங்க, உங்களை நம்பறோம்"

லலித், "நீங்க எல்லாரும் பேசிட்டு உங்க வீரர்கள் பட்டியலை என்கிட்டே குடுங்க. ஏலத்தை அதுக்கேத்த மாதிரியே நடத்துவோம். யாருக்கும் எந்த சந்தேகமும் வராம நான் பார்த்துக்கறேன். வளர்ந்து வரும் வீரர்கள் ஒரு 4-5 பேராவது உங்க டீம்ல இருக்கற மாதிரி பார்த்துக்கோங்க. ஏன்னா மக்கள் இந்தப் போட்டி புதுமுகங்களுக்கான ஒரு நல்ல களமா இருக்கும்னு நினைச்சிக்கிட்டிருக்காங்க." என்று கூறி போட்டி பற்றிய மேலும் சில விவரங்களை சொன்னான். அதில் மைதானத்தில் விக்கெட் மற்றும் பவுண்டரிகளுக்காக ஆடும் வெளிநாட்டு உற்சாக அழகிகளும் அடக்கம்.

மீண்டும் நிசப்தம். தலைவர், "அப்புறம் என்னப்பா? இன்னும் ஏன் மௌனம்? மீட்டிங் முடிஞ்சுது. வாங்க சாப்பிடலாம்"

உணவு இடைவேளையின் போது நடந்த நன்றி நவிலல்கள்:

பத்மநாபனை சபையில் கூனிக் குறுக வைத்ததற்காக ரெட்டியும் ராவும் மகேஷ் மற்றும் ஷாதிக்கிற்கு நன்றி தெரிவித்தனர். ஏனெனில் ரெட்டியையும் ராவையும் ஓரங்கட்டிவிட்டுத் தான் பத்மநாபன் ஆந்திரா சிமெண்ட் ஆலையை கையகப்படுத்தினார்.

பெட்டிங் விஷயத்தை ஆரம்பித்து வைத்ததற்காக மெஸ்ஸியும் லலித்தும் ஸ்வராஜுக்கு நன்றி தெரிவித்தனர்

தனது பெண் ரசிகைகள் அதிகம் இருக்கும் கொல்கத்தாவை தனக்கு விட்டுக் கொடுத்ததற்காக ராவிற்கு ஷாதிக்கும் ஜானகியும் நன்றி கூறினர்

மைதானத்தில் உற்சாக அழகிகளை ஆட அனுமதித்ததற்காக அஜய் செல்லையா தலைவருக்கு நன்றி கூறினார் - அதற்கான கான்ட்ராக்ட் அவர் வசம் இருந்தது

தலைவர் பத்மநாபனிடம், "என்னய்யா ஹேப்பியா?"

"டபிள் ஹேப்பி தலைவரே"

"அப்புறம் அந்த சிமெண்ட் விஷயம்.."

"நேத்திக்கே 20 லோடு உங்க அவுரங்காபாத் சர்க்கரை ஆலைக்கு கிளம்பிடுச்சு. இன்னும் இரண்டு நாளில் போய் சேர்ந்துடும்"

"உன்னை நம்பி தான் ஆரம்பிச்சிருக்கேன்... நல்லபடியா முடிச்சுக் குடுத்துடு"

"அது இனிமே என் ஆலை, கவலையை விடுங்க"

இந்த சம்பவங்கள் அனைத்தையும் கவனித்து வந்த 2 ஹோட்டல் சிப்பந்திகள், "ஏண்ணே, இவங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா?"

"அது இல்லாததினால் தான் அவங்க சாப்பிடறாங்க. நீ எச்சை பிளேட்டை எடுத்துக்கிட்டு இருக்கே. பெரிய மனுஷங்க எல்லாம் புருஷன் பொண்டாட்டிங்க மாதிரி. இன்னிக்கு அடிச்சுக்குவாங்க, நாளைக்கு கொஞ்சிக்குவாங்க. போய் வேலையைப் பாரு"





ஆட்டம் தொடரும்...

Jayaraman
New Delhi

Tuesday, June 11, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 8

"ரகு, பாரு, ஒரு நிமிஷம் வாங்க" என்பர் வரவேற்பறையில் நுழையும் போதே இருவரையும் அழைத்தார். முகத்தில் பெருமை கலந்த சந்தோஷம்.

"போன காரியம் என்னப்பா ஆச்சு?" என்று கேட்டபடியே உள்ளேயிருந்து வந்தாள் பாரு. அதிசயமாக மாமனார் தன்னை கூப்பிடறாரே என்ற பதட்டத்தில் அவளுக்கு முன்னாடியே ஆஜரானான் ரகு.

"பழம் தான். என்ன, ரொம்ப இழுத்துட்டாங்க"

"என்ன விஷயம் மாமா? எனக்கு ஒன்னும் புரியலையே" என்றான் ரகு.

"உனக்கு என்றைக்குத் தான் நான் பேசறது புரிஞ்சிருக்கு" என்று மனதுக்குள் நினைத்தாலும் புதுசா ஒரு டோர்னமென்ட் வருது அதுல ஒரு டீமை நம்ம கம்பெனி சார்பா வாங்கியிருக்கேன்" என்றவர் இருவருக்கும் போட்டியின் மற்ற விவரங்களையும் எடுத்துக் கூறினார்

ரகு, "கேட்கவே சூப்பரா இருக்கே"

பத்மநாபன் "இந்த கமிட்டி ஆளுங்களை சம்மதிக்க வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. நல்ல வேளை, இந்த லலித் பயலும் அவன் பிரெண்ட்ஸ் மூலமா ஒரு டீம் எடுக்கறதால கொஞ்சம் எளிதா முடிஞ்சுது"

"அடேங்கப்பா, அவ்ளோ பெரிய ஆளா அவர்?"

"கொஞ்சம் ஏமாந்தா என்னையே தூக்கிச் சாப்பிட்டுடுவான், பொல்லாத பய"

பாரு, "இப்போ அடுத்து என்ன செய்யணும்?"

"டீமுக்கு பெயர் வைக்கணும். வீரர்கள் யார் யார் வேணும்னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணனும். ஏன்னா ஏல முறைப்படி தானே எடுக்க முடியும்”

பாரு, "இதை சமாளிக்க நாம ஒரு ஆளை நியமிக்கணுமே, ஏன்னா இதுல வேலை இழுத்துக்கிட்டே போகும்"

"நான் பொறுப்பை எடுத்துக்கறேன் மாமா" என்று தானாக தலையைக் கொடுத்தான் ரகு.

சற்று அதிர்ந்தாலும் மாப்பிள்ளையின் ஆர்வம் பத்மநாபனை ஆச்சர்யப்பட வைத்தது. சம்மதித்தார்.

"தாங்க்ஸ், மாமா, நான் போய் அடிப்படை வேலைகளை ஆரம்பிக்கறேன்" என்று கூறி விட்டு உற்சாகமாக சென்றான்.

"என்னம்மா உன் புருஷன் ஓவரா குதூகலிக்கறானே?"

"அவரே பொறுப்பை எடுத்துக்கறேன்னு சொல்றப்போ குடுக்கறது தான் நல்லது."

" வாஸ்தவம் தான்"

"இதுல நிறைய முதலீடு செய்ய வேண்டியிருக்குமே?"

"அது ஒண்ணும் பெரிசா இல்லை 500-600 கோடி கிட்ட வரும். ஆனா மொத்த செலவுன்னு பார்த்தேன்னா ஒரு 100-150 கோடிக்குள்ள தான் இருக்கும். எப்படிப் பார்த்தாலும் லாபம் தான். போதாகுறைக்கு மாப்பிள்ளையே பொறுப்பை எடுத்துக்கறேன்னு சொல்லிட்டான். முதன்மை நிர்வாகி சம்பளமும் மிச்சம்"

"அப்பா, நீங்க பயங்கரமான ஆளு"

"ஒரு முக்கியமான விஷயம். இதை வந்து நம்ம சிமெண்ட் கம்பெனியோட ஒரு துணைக் கம்பெனியாத்தான் காட்டணும். நடேசன் கிட்ட அதுக்கேத்த மாதிரி புக்ஸ் தயார் பண்ணச் சொல்லு. இந்த டீம் கம்பெனியோட சொத்தாத்தான் இருக்கணும்"

"ஏம்பா அப்படி?"

"ஏகப்பட்ட ஒப்பந்தங்கள் போட வேண்டி வரும். கொடுக்கல் வாங்கல் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். அது மட்டுமில்லாம கிரிக்கெட் சம்பந்தப்பட்டது. நான் வேற கம்மிட்டியில் இருக்கேன். நமக்கு வேண்டாத பயலுங்க ஊர்முழுக்க இருக்கானுங்க. எதாச்சும் குடைச்சல் குடுத்துக்கிட்டே இருப்பானுவ, தனிச்சொத்தா காமிச்சா நிறைய சட்ட சிக்கல்கள் வரும், அதனால தான் கம்பெனி பேர்ல பண்ணச்சொல்றேன்"

"சரிப்பா”


*********************************************************************************

"என்ன சார் விஷயம், திடீர்னு என் பெர்சனல் நம்பர்ல போன் பண்ணியிருக்கீங்க?" என்றார் க்ரைம் ப்ராஞ்ச் தலைவர் விக்ரம். எதிர் முனையில் தலைவர்.

"ஒரு T -20 போட்டி புதுசா ஆரம்பிக்கறோம்" என்று ஆரம்பித்து போட்டியைப் பற்றி அவனுக்கு சுருக்கமாக விவரித்தார்

"இதுல நான் என்ன சார் செய்யணும்?"

"வழக்கம் போல இந்த பசங்க மேல ஒரு கண்ணா இருக்கணும். இன்டர்நேஷனல் போட்டிகளிலேயே கண்ணுல மண்ணைத் தூவற கேடிங்க, இதுல சும்மாவா இருப்ப்பாங்க? போதாக்குறைக்கு இதுல கட்டுப்பாடுன்னு பெரிசா ஒண்ணும் கிடையாது"

"புரியுது சார்"

"இதுல பங்கெடுக்கப் போறது பெரிய புள்ளிங்க. அதனால வலை இன்னும் கொஞ்சம் பெரிசா இருக்கணும். எல்லா தொலைபேசி அழைப்புகளையும் கிளீனா அலசுங்க. எப்போ எவனுக்கு செக் வைக்கணும்னு நான் அப்புறமா சொல்றேன்"

"ஓகே சார்"

"அப்புறம் அந்தப் பசங்க விஷயம் என்னாச்சு?"

"போய்க்கிட்டிருக்கு சார், கூடிய சீக்கிரம் தெரிய வரும்"

"சரிப்பா, ரொம்ப நேரம் பேச வேண்டாம். அப்புறம் என் போனையும் எவனாச்சும் டாப் பண்ணிடப் போறான்" என்று கூறி போனை வைத்தார்




ஆட்டம் தொடரும்.....



Jayaraman
New Delhi

Monday, June 10, 2013

IPL-- Spotfixing and beyond

When Lalit Modi invented the concept of IPL (Taken from EPL), many Indians were jubilant for the fact that India as a cricket crazy nation was going to its next level. IPL was a premium idea from BCCI and hence attracted only the very rich and people associated with Bollywood when it came to team formations. IPL 1 was a grand success with Owners from Reliance, India Cements and few other Bollywood celebrities bagging teams. IPL changed cricket into a great money spinner. Sex, Money, sleaze and corrupt practices get into the stream in any entertainment industry and IPL was no exception with its late night parties and all other forms of entertainment.

Coming to the topic of spot fixing, cricket those days was called a gentleman's game and was a sport that was played once in a while across the globe. Though it has always been a popular game, the likes of Kapildev and Gavaskar played very few games throughout the year and had to be contended with the amount of compensation they received. It was driven by passion those days and that is the whole reason why you and me play the game just for the sake of happiness it provides. Though Dhoni lifted back to back trophies, the 1983 world cup win will always be the most cherished win for a true Indian fan when kapil and his boys broke all odds to beat the ruthless West Indian team. I still get goose bumps when I think of those moments. Those were the good old days of cricket.

Today Cricket is a totally different affair and IPL has taken it to a level where money takes centre stage. Money is dominating the proceeding and is even helping first class cricketers become millionaire’s in no time. It's not just what you do in the field, but off the field activities in the form promotional events which form a major chunk of celebrity cricketer’s revenue. That is what would have prompted even a passionate cricketer like kapil to even compete against IPL. Little did he know about the powers of BCCI that his venture got totally bulldozed to extinction. Few years later, he too joined the IPL bandwagon to get his dues paid for the contribution to Indian cricket.

The lifecycle of a cricketer is unpredictable. You earn fame and money as long as you strike the willow or the timber on a consistent basis. Love for the game is the entry point for a true cricketer and as you succeed, money starts becoming a priority. If you look from a practical angle, it is probably the right thing to do as cricketers also have to plan for their future once they quit playing. They will have to plan early to succeed as businessmen at a later stage. Captain cool Dhoni has led by example in this front as well with his association with Rhiti and his other ventures. I do not want to talk about conflict of interest here, but would definitely like to point out certain coincidences of Raina and Jadeja being part of test teams and Harbhajan getting omitted after he closed his contract with Rhiti management firm.

Though enough money is made in this sport, it is again restricted to very few and leaves hundreds of other first class cricketers to fend for themselves in a career that has a short life span. BCCI is a so called sport body which is run by politicians and industralists rather than being run by people who were associated with the game. It is also known for bullying other cricket boards and ensures that the plans are always in line with what they draw. It is also one of the richest boards with last year's earning of close to 850 Crore INR. With so much of money under its kitty, it was very surprising to know that player payments were to the tune of only 50 crore. What are they doing with the money other than rewarding cricketers at all levels? Where is all this money going? Is the lack of insufficient payments and rewards that is forcing cricketers to engage in fixing activities? When people like chandila got trapped under the fixing scandal, it was the easy route of money that came from IPL. IPL is not about national duty, it is about entertaining people. When Gayle or Dhoni hammers a bowler for 20 plus runs, the crowd erupts in joy. Something similar to what used to happen when a gladiator striked the sword at his opponent. IPL is all about entertainment and when owners like Mallya or Ambani own a team, don't expect passion to emerge for the game. It is pure business and the ROI associated with it. It was very foolish for someone like Gurunath or Kundra to get involved as the risk vs returns never came close. For a few crores of easy money, they have lost the false reputation that he had built so far.

Having said all this, i do not support spot fixing or rigging of games, but will not compare it with games played for national duty. BCCI has a huge role to play and should come out of IPL. But again when people like Srinivasan exist, he will bull doze his way to do whatever he wants.

As far as i am concerned, i am the happiest when i play the game and will always love the game for the happiness it provides me...

Venkat Raghavan

Sunday, June 9, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 7

"அப்பா, அப்பா, எப்படியாச்சும் என்னை இந்தியன் ஜூனியர் கிரிக்கெட் டீம்லயாச்சும் சேர்த்து விடுப்பா"

மகன் ஆனந்தின் இந்த வழக்கமான வேண்டுகோளைக் கேட்ட தொழிலதிபர் மகேஷ் அத்வானி வெறுப்புடன் பார்த்தார். மகன் இருக்கும் பாடி சைசுக்கு மல்யுத்தத்தில் வேண்டுமானால் சேர்த்து விடலாம். கிரிக்கெட்? எவ்வளவு முக்கினாலும் முடியாது

மகேஷ் வெறுப்பை மறைத்துக் கொண்டு புன்முறுவலுடன், "நாமெல்லாம் ஆட்டி வைக்கற சாதிப்பா. ஆடற ஜாதி இல்லை. நீ ஒரு வேலை பண்ணு.உனக்குப் பிடிச்ச கிரிக்கெட் வீரர்களை ஒரு லிஸ்ட் போட்டு வை. அப்பா கூடிய சீக்கிரம் வாங்கித் தரேன், அவங்க நமக்காக விளையாடுவாங்க. நீ பக்கத்துல உட்கார்ந்து பார்த்து ரசிக்கலாம்" என்று கூறிவிட்டு அலுவலகத்துக்குக் கிளம்பினார்

அப்பா சொன்னது ஆனந்திற்கு சுத்தமாகப் புரியவில்லை. இருந்தாலும் பேப்பர் பென்சிலை எடுத்து லிஸ்ட் போட ஆரம்பித்தான். பிள்ளையார் சுழி போல் அவன் முதலில் எழுதிய பெயர் கிரிக்கெட் குரு ஷயன் கெல்கர்.
***********************************************************************************

"ஹேய், ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன் வரப்போகுது, பண்றியா?" என்று தனது நண்பரும் ஹிந்தி திரையுலக நட்சத்திரமுமான ஷாதிக் கானிடம் கேட்டார் பிரபல முன்னாள் ஹிந்தி நடிகை ஜானகி சாவ்லா.

"என்ன ஆப்ஷன்?"

"புதுசா ஒரு கிரிக்கெட் டோர்னமன்ட் வரப்போகுது. பிரானச்சைஸ் அடிப்படையில் 8 டீம் கொண்ட போட்டி. ஒரு டீமை நாம எடுத்தோம்னா முதலீட்டுக்கு முதலீடும் ஆச்சு, கொஞ்சம் வித்யாசமாவும் இருக்கும்"

"உனக்கெப்படித் தெரியும்?"

"நம்ம ஷீலா ஷெட்டியும் அவ காதலனும் தான் சொன்னாங்க. ஏற்கனவே அதற்குண்டான வேலைகளையும் ஆரம்பிச்சுட்டாங்க"

"மார்க்கெட் போயிடுச்சுல்ல, அதான் இப்படி இறங்கிட்டா" என்றான் நக்கலாக.

"நீ மட்டும் என்ன யூத்தா? ஏதோ வெளிநாடுகளில் உன் படம் கலெக்ஷன் பண்ணிடுது. அதனால முதலுக்கு மோசமில்லாம போயிக்கிட்டிருக்கே. இல்லேன்னா நீ எப்பவோ பேக்-அப் தாண்டி"

"உண்மை தான், ஆனால் இது வேலைக்காகுமா?"

"நீ பண்ணித்தான் ஆகணும். உனக்கோ வயசாகிட்டே போகுது இன்னும் எவ்ளோ நாள் நீ ஹீரோவா நடிக்க முடியும்? இப்பவே உன்னோட நட்ச்சத்திர அந்தஸ்தைப் பயன்படுத்தி ஒரு மாற்று உத்யோகம் உருவாக்கிக்கணும். நீ சினிமாவுல வேணா நடிக்காம இருக்கலாம். ஆனால் உன் ஸ்டார் வேல்யூ குறையாம பார்த்துக்கணும்.நமக்கெல்லாம் அதான் கடைசி வரைக்கும் கை குடுக்கும்"

"கரெக்ட், உடனே வேலையை ஆரம்பி"

***************************************************************************************
"டார்லிங், நாமளும் ஒரு கிரிக்கெட் டீம் வாங்கலாமா?" என்று தனது காதலன் மெஸ்ஸி வடாலாவிடம் கேட்டாள் நடிகை ப்ரீத்தா. இவளும் ஒரு மார்க்கெட் போன ஹிந்தி நடிகை தான்.

"புதுசா கார் வாங்கலாமான்னு கேட்கற மாதிரி கேட்கறியேடா செல்லம்" என்றான் சிரிப்புடன்.

"நிஜமாத்தாங்க" என்று தொடங்கி முழு விவரங்களையும் கூறினாள் - தகவல் உபயம் ஷீலா ஷெட்டி.

"கேட்க நல்லா இருக்கு"

" வாங்கினாலும் நல்லாத்தான் இருக்கும், உங்க துணி கம்பெனியோ படுத்துடுச்சு. ஏதோ எக்ஸ்போர்ட் வருமானம், அந்தக்காலத்துல வாங்கிப்போட்ட நிலபுலன்கள் இருக்கறதால வண்டி ஓடுது, இல்லேன்னா..."

"புரியுது புரியுது. ஆனால் ஏலத்தில் நிறைய போட்டி இருக்குமே?"

"அதெல்லாம் நான் செட் பண்ணிட்டேன். கவலைப்படாதே"

"அப்போ இப்பவே அப்ளிகேஷனைப் போட்டுடுவோம்"

***************************************************************************************

"ஏமி ராவ் காரு, என்ன யோசிக்குது?" என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தார் அவரது பார்ட்னர் பிரவின் பாரேக்.

பிரகாஷ் ராவ் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தின் அதிபர். விமான நிலையங்கள், பாலங்கள் என்று இவர் இந்தியாவுக்காக கட்டியது நிறைய.

ராவ் தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தார். பிரவின், "என்ன யோசிக்கற? நீயும் ஒரு கிரிக்கெட் டீமை வாங்கிடு"

அதிர்ச்சியடைந்த பிரகாஷ், "உனக்கு எப்படிய்யா தெரியும்?"

"அதான் உன் ப்ரெண்ட் அந்த பேப்பர்காரன்..ராமோஜி ரெட்டி... அவனும் ஒரு டீமை எடுக்கப் போறானாமே? இந்தியா முழுக்க தொழிலதிபர்கள் மத்தியில் இன்னிக்கு இதான் பேச்சு"

"நீ என்ன சொல்ற? நாமளும் வாங்கிடலாமா?"

"ஒரு 400-500 கோடி ஆகும், பரவாயில்லையா?"

"அடப்பாவி, அசால்ட்டா சொல்றே?"

"இது இரு விஷயமா? ஹைவேயில் இன்னொரு பாலம் கட்டினா இதுக்கு டபிள் காசு பார்த்துடலாம்"

"ஹ்ம்ம். யோசிக்கணும்"

"நீ யோசி, நான் நமக்கு வேண்டப்பட்ட ஆளுங்க மூலமா பேசிட்டே வந்துட்டேன்"


************************************************************************************

அப்பா, இன்னும் எவ்ளோ நாளைக்குத் தான் குதிரை ஓட்டிக்கிட்டும், சாராயம் காய்ச்சிக்கிட்டும் இருக்கறது?"

"என்னடா சொல்ல வர்ற கண்ணா? என்றார் அஜய் செல்லையா. வழக்கம் போல் குட்டி-புட்டி சமேதராக இருந்தார்.

"நாமளும் கிரிக்கெட் டீம் வாங்குவோம்பா, ரெட்டி, ராவ், எல்லாரும் வாங்கறாங்க"

"நீ எதை வேணும்னாலும் வாங்கு, எனக்கு நிறைய கிளாமர் இருக்கணும். அவ்ளோ தான்"
*************************************************************************************

மேலே சொன்ன சம்பாஷனைகள் அனைத்தும் லலித் குமார் செய்த சில தொலைபேசி அழைப்புகளின் எதிரொலி தான்.

இங்கே கிரிக்கெட் மேட்சில் யார் ஜெயிப்பது என்பது மட்டுமல்ல, அதில் யார் பணம் சம்பாதிக்க வேண்டுமென்பதும் முன்னரே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.



ஆட்டம் தொடரும்....



Jayaraman
New Delhi

Thursday, June 6, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 6

அல்மோரா, உத்தரான்ச்சல் மாநிலம்.

மொஹிந்தர் சூப்பர் ஸ்டார் மாதிரி. பிறந்தது ஒரு ஊர். ஆனால் வளர்ந்ததும், வாழ்வதும், தான் யாரென்று அடையாளம் காட்டியதும் வேறொரு ஊர். இது அவன் பிறந்த ஊர். அது மட்டுமல்ல, அவனது நாளைய மனைவி இங்கே உள்ள கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருக்கிறாள்.

மொஹிந்தர் தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள தொங்கு கட்டிலில் அயர்ந்திருந்தான்.

"என்ன சார், பகலிலேயே தூக்கமா?" குரல் கேட்டு நிமிர்ந்தான். அங்கே அவன் பால்ய நண்பன் வருண் சதுர்வேதி நின்றிருந்தான்.

வருண் மொஹிந்தரின் நீண்ட கால நண்பன். மொஹிந்தர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு அவனது சம்பாத்தியம் மொத்தமும் இவன் கண்ட்ரோலில் தான். எங்கு முதலீடு செய்ய வேண்டும், எந்தப் பொருளுக்கு விளம்பரம் செய்ய வேண்டும் - எல்லா முடிவையும் இவன் தான் எடுப்பான். குறியிட்ட இடங்களில் கையெழுத்திடுவது மட்டும் தான் மொஹிந்தரின் வேலை. சுருக்கமாகச் சொன்னால் மொஹிந்தரை ஆட்டுவிக்கும் ரிமோட் கண்ட்ரோல்.

'வாடா, என்ன திடீர்னு?"

"ஒரு யூத் ஐக்கன் இப்படி பகல்ல கவுந்தடிச்சு படுத்திருக்கறதை நாலு பேர் பார்த்தா என்ன ஆவும்?"

"அதுக்காக தூங்காம இருக்கணுமா என்ன?"

"சும்மா சொன்னேன். சென்னை போனியே, என்ன செய்தி?"

"நேரா விஷயத்துக்கு வர்றான் பாரு. கொஞ்சமாச்சும் கேஷுவலா இருய்யா"

"அதெல்லாம் வயசான காலத்துல இருந்துக்கலாம். நீ மேட்டரை சொல்லு"

"புதுசா ஒரு T -20 டோர்னமென்ட் ஆரம்பிக்கப் போறாங்க. புட்பால் பிரீமியர் லீக் மாதிரி. நம்ம கிரிக்கெட் குழு வெறும் கவர்னிங் பாடி தான். முழுக்க முழுக்க தனியார் ராஜ்ஜியம் தான். இன்னும் முறையா என்கிட்டே சொல்லலை. நம்ம ஆளுங்க மூலமா தெரிய வந்திச்சு"

வருண், "அப்படிப் போடு அரிவாளை. அப்போ விளம்பர ஒப்பந்தங்கள் இனிமே சூடு பறக்கும்னு சொல்லு"

"அது சூடு பறந்தா என்ன, பறக்காட்டி என்ன. அதை விடு இங்க என்ன நடக்குது?"

"பெரிசா ஒண்ணும் இல்லை. ஒரு மதராசி செல்போன் கம்பெனி நீ தான் அவங்க பிராண்ட் அம்பாசிடரா வேணும்னு ஒத்தைக்காலில் நிக்கறாங்க. நல்ல பேமென்ட் குடுக்க ரெடியா இருக்காங்க. நீ சரின்னு சொன்னா புக் பண்ணிடலாம்"

"நீயே பார்த்து செய்."

"அப்புறம், நீ என்ன தான் பேமஸ் ஆயிட்டாலும் உன் வேல்யூ அந்த அளவுக்கு ஏறலை. இன்னமும் பெரியவர் தான் லீடிங்க்ல இருக்கார்"

"யோவ், அவர் எங்கே, நான் எங்கே?"

"அப்படி இல்லை மொஹி, அவர் ஆட வந்தப்போ இந்த அளவுக்கு நெருக்கடி கிடையாது. சிங்கம் சிங்கிளா ஆடிச்சு. ஆனா உனக்கு அப்படியா? உன்னை ஏறி மிதிக்க ஒரு கூட்டமே ரெடியா இருக்கு. குறிப்பா அந்த 3 டெல்லிப்பசங்க கழுகு மாதிரி உன்னையே வாட்ச் பண்றாங்க.

அய்யய்யே, கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடுய்யா, நானே ஏதோ குத்துமதிப்பா கிரிக்கெட் விளையாடிக்கிட்டிருக்கேன். எனக்கெல்லாம் இதுவே அதிகம். இதுல வேல்யூ ஏறலை வால்வு ஏறலைன்னு...."

"அப்படி இல்லடா..."

"என்னதான் சொல்ல வர்றே?"

"ஒரு பொய்யான ஒப்பந்தத்தை உருவாக்கப் போறேன். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு கான்ட்ராக்ட் போடப்பட்ட வீரர்னு உன்னைப் பத்தி நியூஸ் கிளப்பப்போறேன். அதுக்காக ஒரு டூப்ளிகேட் டாகுமெண்ட்டும் ரெடி பண்ணிட்டேன்"

"அதனால என்ன ஆகும்?"

அடுத்து உன்னை புக் பண்ண வர்றவங்க கிட்ட இதைக் காட்டி ரேட்டை சல்லுன்னு ஏத்திடுவேன். பொய்யாப் போட்ட அக்ரீமெண்டை நிஜமாக்கிடுவேன்"

"யப்பா ஐடியா மணி. ஜாக்கிரதையா இரு. மாட்டினோம், அப்புறம் ஜென்மத்துக்கும் பணம் சம்பாதிக்க முடியாது"

"அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். நான் பார்த்துக்கறேன்"

"என்னவோ போ"

"அது சரி, உன் டாவை பார்க்கப் போகலியா?"

"அவ ஏதோ காலேஜ் டூர்னு எங்கேயோ போயிட்டா. நான் இன்னிக்கு சாயந்தரம் ஜாம்ஷெட்பூர் போலாம்னு இருக்கேன், டிக்கெட் போடு"

"ஓகே, டிக்கெட் போட்டுட்டு சொல்றேன், வர்றேன்.
அப்புறம் நம்ம ராவத் அங்கிள் பையன் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சிருக்கான். அதுல 30% ஷேர்ஸ் வாங்கிட்டேன். டெல்லியைச் சுத்தி 15 ப்ராபர்ட்டி அவங்க கட்டப் போறாங்க. ஒரு இரண்டு நாள் ஷூட் போக வேண்டி வரும். தேதியை முடிவு பண்ணிட்டு சொல்றேன்"

"பிசினஸ்... பிசினஸ் .....பிசினஸ்.. கூல் மேன், பீர் போடறியா?"

வருண் முறைக்கவும், "சரி சரி, நீ ஒரு அக்மார்க் டீடோட்டலர்னு தெரியும். சும்மாக் கேட்டேன்"

"வர்றேன்"
***********************************************************************************

"அதெல்லாம் முடியாதுய்யா, ரொம்ப கஷ்டம்" - விஸ்கியை க்ளாசில் ஊற்றியபடியே பத்மநாபனிடம் கூறினார் தலைவர். பிறகு ஒரு க்ளாசை பத்மநாபனிடம் நீட்டினார். அது அவருக்குப் பிடித்தமான ஸ்காட்ச் என்பதால் பத்மநாபனால் மறுக்க முடியவில்லை.

தலைவர், "நம்ம ஆளுங்க யாரும் இதுல பங்கெடுக்கக் கூடாதுன்னு காலையில் தானே சொன்னேன், இப்போ வந்து எனக்கு ஒரு டீம் வேணும்னு சொன்னா எப்படி?"

"காரணம் தான் நான் சொன்னேனே சார். இதுக்குத் தேவையான விதிமாற்றங்களை நான் சிக்கலில்லாம பண்ணிடறேன்"

"அது வழக்கமா பண்றது தானே, பட் அது தப்புய்யா"

"நீங்க மனசு வெச்சா எல்லாம் முடியும். போதாக்குறைக்கு என் மாப்பிள்ளை வேற ஒரு வெட்டிப் பய. இந்த மாதிரி ஒரு வேலையைக் குடுத்தா கொஞ்சம் பொறுப்பா இருப்பான். அவன் ஒழுங்கா இருந்தா என் பொண்ணு கொஞ்சம் சந்தோஷமா இருப்பா"

"உன் கஷ்டம் புரியுது. ஆனா என் மனசாட்சி எனக்கு இடம் குடுக்கலியே? உன் ஒருத்தனுக்காக இன்னிக்கு ரூல்ஸை மாத்தினா நாளைக்கு இது பெரிய சிக்கலில் போய் முடியும்ப்பா. அப்போ நீ இன்னும் கஷ்டப்படுவே"

"அப்படி எதுவும் ஆகாம நான் பார்த்துக்கறேன் சார், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு"

"சரி, நாளைக்கு ஒரு சின்ன மீட்டிங் போடுவோம். அந்த இரண்டு முசுடுங்க ரொம்ப குடைச்சல் குடுப்பாங்க. அவங்களை எப்படி சமாளிக்கறதுன்னு தான் யோசிக்கறேன்"

"அது என் கவலை. நான் பார்த்துக்கறேன்"

"சரி, அப்போ நாளைக்குக் கலந்து பேசி ஒரு முடிவு பண்ணுவோம்"

"சரி சார், கிளம்பறேன்"

"இன்னொரு பெக் போடறியா?"

"இல்லை சார், ஒரு ஸ்மால் தான். பொண்ணோட ஆர்டர்"

"ஓகே ஓகே"

பத்மநாபன் வெளியே போனவுடன் தலைவர் போனை எடுத்து நம்பர்களைத் தேடி அமுக்கினார். "யோவ் லலித், எல்லாரும் நாடகமாய்யா ஆடறீங்க?"

மறுமுனையில் லலித், "என்ன சார் ஆச்சு?"

"இப்போ பத்மநாபன் வந்தார். அவருக்கும் ஒரு டீம் வேணுமாம் - உன்னை மாதிரியே. நாளைக்கு ஒரு சின்ன மீட்டிங் சொல்லியிருக்கேன். பேசுவோம்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.

வெளியே வந்த பத்மநாபன் காரில் ஏறினார். கார் செக்யூரிட்டியைக் கடக்கும்போது ஏதோ நினைவுக்கு வந்தவராக கண்ணாடியைக் கீழிறக்கி அங்கே இருந்த பாதுகாவலரிடம் , "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி லலித் இங்க வந்தாராப்பா?"

"ஆமாம் சார், ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வந்துட்டுப் போனார்"

"நினைச்சேன்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட பத்மநாபனின் முகத்தில் மின்னல் போன்ற பிரகாசம் பரவியது.





ஆட்டம் தொடரும்..

Jayaraman
New Delhi

(subscribe with us to get this article auto-delivered to your email)

Wednesday, June 5, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 5


மும்பை ஏர்போர்ட்.

கன்வேயர் பெல்ட்டிலிருந்து லக்கேஜை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான் ராதே சிங். எதிரே மூன்று போலீசார் இவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையில் இருந்து விலகி எதிர்த் திசையில் நடக்க ஆரம்பித்தவனை விரைந்து வந்து பிடித்தனர்.

போலீஸ்காரர் நக்கலாக " கொஞ்சம் கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் வர்றீங்களா?"

"எதுக்கு?"

"அதை அங்கே சொல்றோம், வண்டியில் ஏறு" என்று அவன் காலரை பிடித்தார் போலீஸ்காரர்.

"சட்டையை விடுங்க சார், நானே வர்றேன்" என்று கூறி விட்டு ஜீப்பின் பின்புறம் ஏறி உட்கார்ந்தான்.


******************************************************************************


பத்மநாபன் தனது வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து செக்ரட்டரி கொண்டு வந்திருந்த பேப்பர்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார். மொஹிந்தர் மற்றும் அவனுடன் வந்திருந்தவர்களை ஹோட்டலில் டிராப் செய்து விட்டு வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ரகுநாத். பாரு ஆபீசிலிருந்து வந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு அப்பாவின் அருகே சோபாவில் அமர்ந்தாள். கையில் அவளுக்குப் பிடித்த பில்டர் காபி. காபியை சற்று உறிஞ்சி விட்டு அப்பாவைப் பார்த்தாள் . பிறகு அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

"நடேசன் உங்க கிட்ட பேசினாராப்பா?'

"எதைப் பற்றி? இந்த தடவையும் லாபம் குறைஞ்சு போச்சு. அதானே? தெரிஞ்ச விஷயம் தானே?"

"அது இல்லப்பா. நம்ம மார்க்கெட்டை வடக்கேயும் விரிவாக்கறதைப் பற்றி..."

"ஆமாமாம், ஏதோ நேஷனல் ஸ்பான்சர்ஷிப் பண்ணணும்னு சொன்னான். இன்னிக்கு கமிட்டியில் ஒரு புது டோர்னமென்ட் சம்பந்தமா நிறைய வேலை. அதனால அவன் சொன்னதை சரியா கவனிக்க முடியல"

"அதாம்பா. கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிப் பத்தித்தான் பேசணும்"

"அது ஒரு யானைம்மா, நம்மளால கட்டி மேய்க்க முடியாது. அதுவும் நம்ம கம்பெனி இருக்கற நிலைமைக்கு"

"பேசாம அந்த ஆந்த்ரா பேக்டரியை வித்துடுங்களேன். அது நமக்கு பெரிய பாரமா ஆயிடுச்சு"

"அப்படிச் சொல்லதேம்மா, அதுக்கப்புறம் தான் நம்ம கெபாசிட்டி அதிகமாச்சு. அதைக்காட்டித் தான் நம்மளால குளோபல் இன்வெஸ்டர்ஸ் கிட்டேர்ந்து பணம் திரட்ட முடிஞ்சுது. இன்னிக்குக் கம்பெனியில் கொஞ்சமாச்சும் கேஷ் ப்ளோ இருக்குன்னா அதாம்மா காரணம்"

பாரு சலிப்பாக "அந்த பேக்டரியை வாங்கறதுக்கு நீங்க அங்க இருக்கற அரசியல் கட்சிகளுக்கு தண்டம் அழுத காசுக்கு இங்க ஒரு புது ப்ரொடக்ஷன் லைன் போட்டிருக்கலாம்"

" வாஸ்தவம் தான்.ஆனால் மெஷினரி எல்லாம் நம்பர் ஒன்னாச்சே"

"என்ன பிரயோஜனம்? தென்னிந்தியாவில் 6 பேக்டரி இருக்குன்னு வீண் பெருமை தான் மிச்சம்"

"அதுக்காக கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிப் பண்ண முடியாதும்மா"

"கிரிக்கெட் சம்பந்தமா எதாவது ஒண்ணு. ஏன்னா நம்ம நாட்டு மக்கள் கிரிக்கெட்டைத் தவிர வேற எதையும் தினையளவு கூட மதிக்கறதில்ல. ஒரு சீரிஸ், ஒரு டோர்னமென்ட்? - அட் லீஸ்ட் வட இந்தியாவில் நடக்கற லோக்கல் டோர்னமென்ட்ல விளையாடற ஒரு டீமைக் கூடவா நம்மளால ஸ்பான்சர் பண்ண முடியாது? "

பத்மநாபன் சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு போனை எடுத்து நம்பர்களை அழுத்தினார். பத்மநாபனுக்கு அபார ஞாபக சக்தி. அவர் எப்பொழுதாவது தான் போனில் உள்ள கான்டாக்ட் லிஸ்டைப் பயன்படுத்துவார்.

எதிர் முனையில் போனை எடுத்ததும் "தலைவரே, இந்த பிரீமியர் லீக் சம்பந்தமா கொஞ்சம் பேசணுமே? இப்போ வரலாமா?...நன்றி... இதோ அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன்" என்று சொல்லிவிட்டு காரை நோக்கி விரைந்தார். அப்பாவின் அதிரடி நடவடிக்கையைப் பற்றி புரியாத பாரு மிச்சமிருந்த காபியை குடித்து விட்டு டிவி ரிமோட்டை அழுத்த ஆரம்பித்தாள்.

*******************************************************************************

மும்பை கமிஷனர் அலுவலகம்.

தன் எதிரே அமர்ந்திருந்த ராதேவை உற்று நோக்கினார் ஸ்பெஷல் க்ரைம் ப்ராஞ்ச் தலைவர் விக்ரம் ராத்தோர்.

ராதே சன்னமான குரலில், "என்ன சார் அப்படிப் பார்க்கறீங்க"'

"ஏன்யா? உன்னை மொஹிந்தர் மற்றும் ஹர்கிரத்தோட பழகி எங்களுக்குத் தேவையான விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டு வாய்யான்னா அவங்களோட சேர்ந்து பார்ம் ஹௌசிலும், ஹோட்டலிலும் கூத்தடிச்சிக்கிட்டிருக்கே?"

"சார், அவங்க கிட்ட நெருங்கறது ரொம்ப கஷ்டம் சார். கொஞ்சம் கொஞ்சமாத்தான் மூவ் பண்ணணும். அதிலேயும் அந்த மொஹிந்தர் செம ஷார்ப். சிரிச்சுப் பேசற வரைக்கும் ஓகே. எதாச்சும் சீரியஸா கேட்க ஆரம்பிச்சா சூப்பரா பேச்சை மாத்தி நம்மளையே குழப்பிடறான். எங்கே திரும்பத் திரும்பக் கேட்டா சந்தேகம் வருமோன்னு நானும் அடக்கி வாசிக்க வேண்டியதா இருக்கு"

" அதெல்லாம் சரி. ஆனால் மேலிடத்திலேர்ந்து ப்ரெஷர் அதிகமாயிட்டே போவுதுய்யா. நடந்து முடிஞ்ச வேர்ல்ட் கப்ல நிறைய பிக்சிங் நடந்திருக்கறதாகவும் அதுல துபாய்ல இருக்கற டேவிட் ஆப்ரஹாமுக்குத் தொடர்பு இருக்கறதாகவும் நமக்கு தகவல்கள் வந்திருக்கு."

"அதான் அன்னிக்கே சொன்னீங்களே சார்"

"இது வரைக்கும் நாம சேகரிச்ச தொலைபேசி பதிவுகளில் இவங்க ரெண்டு பேர் தொடர்பான சங்கேத வார்த்தைகள் தான் அதிகமா இருக்கு. நிஜமாவே இவங்களுக்குத் தொடர்பு இருக்கா, இல்லை இவங்க பேரை யூஸ் பண்ணி வேற யாராச்சும் குளிர் காயறாங்களான்னு  நாம கண்டுபிடிக்கணும்"

"சரி சார்"

"என்ன சரி சார்? பேசினா மட்டும் போதாது. செயலிலும் காட்டணும். இந்த வேலைக்கு எங்க ஆளுங்களையே கூட நேரடியா போட்டிருப்பேன். பட் அவங்க உருவம் காட்டிக் குடுத்துடும். நீ கொஞ்சம் லொடுக்கான ஆளு. சந்தேகம் வராது. அதனால தான் இந்த வேலையை உன்கிட்டே ஒப்படைச்சிருக்கேன்"

"கண்டிப்பா சார். அப்புறம் ஒரு விஷயம் சார். சென்னை போனப்ப ரகுநாத்னு ஒருத்தரோட அறிமுகம் கிடைச்சுது. அவர் நம்ம கிரிக்கெட் குழு பொருளாளர் பத்மநாபனோட மாப்பிளையாம்"

"அப்படியா? நல்ல மூவ் தான். அந்த சைடிலேர்ந்தும் எதாச்சும் துப்பு கிடைக்கலாம்"

"அப்போ நான் கிளம்பறேன் சார்"

"ஓகே, இந்த பாரு. நீ போலிஸ் இல்லை. இன்பார்மர் மாதிரி தான். அதை மனசுல வெச்சுக்கோ. போலீஸ்னு சொல்லிக்கிட்டு எதாச்சும் வம்பு பண்ணினே, முதல்ல உன்னைத் தான் போட்டுத் தள்ளுவேன்"

"புரியுது சார், வர்றேன்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான் ராதே.

ஆட்டம் தொடரும்....


Jayaraman
New Delhi

(subscribe with us to get this series auto-delivered to your email)

Cricket takes a back seat ahead of Champions Trophy. What are India's chances? Who cares...

Srinivasan stepped down from Presidency (temporarily), Dalmia appointed Interim President, Shukla resigns as IPL Chairman, Shrike and Jagdale resigns from BCCI posts, Gurunath & Vindoo Dara Singh gets bail, Sreeshanth, Chandila & Chavan’s bail denied, Chavan managed to get married under worst possible circumstances, Dhoni’s found to have conflict of interest in Rhiti Sports Management Company and New revelations everyday on spot fixing investigations – like it or not, the off field activities have completely occupied the center stage. Cricket for the very first time (to the best of my knowledge) has totally taken a back seat during a marquee event like Champions Trophy. I’m surprised even the media did not care to run India’s chances in Champions Trophy. That shows the air of resignation from a cricket crazy nation, or maybe they think it is a sin to support Indian Cricket now. Even if the public follow the event, I’m sure their attitude would be – “I care a damn about this event or your performance”. Well, Dhoni & Co could not have asked for a more blessing environment. Make hay will sun shines is the phrase to be remembered for Dhoni boys.

The pressure less situation already seems to have its effect on India’s performance.  First India chased 334 against Sri Lanka comfortably after 110/4. From a dicey 55/5, India managed to pile 308 on the board against Australia. This was followed by bundling out Australia for paltry 65. On both counts, Dinesh Karthik emerged as the surprise package delivering a century each. Another day the efforts of India in the warm up matches would have been celebrated big time. Thanks for the low key interest - it really seems to benefit India.

With century performance in both the warm up games, Dinesh Karthik cemented his place in the starting XI against South Africa. It will be interesting to see who will sit out for him (Vijay / Rohit Sharma). With conflict of interest looming large, it would not be a surprise, if Dhoni prefers his CSK mate Vijay over Rohit Sharma in the XI, though Vijay appears crappier of the two. Again, the existence of the franchise in limbo next year, don’t be surprised if Rohit is preferred in the XI over Vijay. My personal pick would be Pujara. Unfortunately there is no point in talking about a person who is not selected in the squad. Between, the same conflict of interest that we talked earlier - warrant Sir Jadeja’s inclusion in the XI. But the same logic can work against Jadeja too for Pathan.

Logically, India should field the following XI against South Africa in the opener.

Rohit Sharma, Dhawan, Kohli, Karthik, Dhoni, Raina, Pathan, Ashwin, Yadav, Ishanth Sharma, B Kumar.

But, don’t be surprised if Dhoni fields the following XI (in that order) being unfair to Karthik.

Karthik, Dhawan, Kohli, Rohit Sharma, Raina, Dhoni, Jadeja, Ashwin, B Kumar, I Sharma, Yadav

Let’s see.

This appears to be the open tournament, with no team looking to be clear favorites. Let’s run a short prelude on their chances.

Group B

Australia
Clarke’s injury misery continues. 65 all out against India in the warm match don’t augur well for Aussies preparation. Australia does not appear to be a compelling side to win the tournament. I will be curious to see if they could progress to the next phase of the tournament from Group B.

England
Another day, England should have been the favorites. With Peterson ruled out and the ongoing series against Kiwis already lost, it is difficult to pin hopes on the hosts to win the tournament. However, they still appear a good side to progress to the second half of the tournament. If momentum catches from there, may be things could fall in favor of England.

New Zealand
Kiwis emergence in the shortest format in the recent days have been interesting. Especially after the drubbing against England in the recent Test Series, nobody anticipated New Zealand to lead the 3 match ODI series 2-0 over the hosts. But Trent Boult non availability for the Tournament should be a big jolt to their campaign. Since nobody expects too much from Kiwis, they should fancy their progress to the second half of the tournament.

Sri Lanka
Expecting Asian countries to do well, in a tournament played at England is little too much. Especially, when they are led by relatively new captain, with fairly young squad. All we expected to see is promise from the Island Nation and nothing more.

My pick would be England and New Zealand for second phase, while I wish to keep Sri Lanka as the dark horse for this phase of the tournament.

Group A

South Africa
South Africa would have been better off including Philander in the squad. He would have served well, especially with the absence of Kallis (Steyn joining the injury list now). With Smith and Kallis not available as batsman leaves Amla and DeVillers to guide the ship. Well, I’m not too excited about South Africa’s chances. But they have promising youngsters to put a show.


Pakistan
Pakistan appears to be one team taken this tournament seriously. Obviously they were left with no other choice like playing the IPL fanfare. Their fast bowling resources spent about a month with Akram honing their skills. They then arrived almost a month ago touring Ireland/Netherland getting used to conditions. Their bowling has always been mercurial; the question is – will the batsman join the party?

West Indies
West Indies are another young side. They won the World T20 recently; however the captaincy has moved hands. They have a good fast bowling quadrant; it is again the question of batsman coming to party. If it is the shortest format, no doubt they would have been the favorites. Since its 50 overs a side game played in England conditions, I would prefer to punt on Pakistan rather West Indies.

India
This is one team usually popular for batting talents. However, we all know how these batsmen perform outside subcontinent. For a change the fast bowling quadrant looks solid. Unfortunately they are led by a spin friendly captain. Even on fast bowler friendly bouncy surfaces like Australia, Dhoni’s preference has been the slow bowling all-rounder Jadeja instead of the medium pace all-rounder Irfan Pathan in the XI. Considering the circumstances Indian Cricket is in, I guess Dhoni will keep his personal preference aside put national interest ahead. By all means, not many Indians are going to care if India wins or lose this tournament. This should serve a huge advantage for India.

My personal pick would be India and Pakistan to qualify for the second phase of the tournament, while I wish to keep West Indies as the dark horse for this phase of the tournament.

Dinesh

Tuesday, June 4, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 4

லலித் குமாரின் அந்த கற்பனை டெஸ்ட் அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது.

லலித், "யெஸ், ஒரு வித்யாசமான கிரிக்கெட் பார்மாட்டை கிரிக்கெட் உலகத்துக்கு அறிமுகப்படுத்தப் போறோம். இங்கிலாந்துல நடக்கற புட்பால் பிரீமியர் லீக் மாதிரி"

தலைவர் "லலித், பீடிகை வேண்டாம், இது ஒண்ணும் மார்க்கெட்டிங் ப்ரோமோ கூட்டம் இல்லை"

லலித் பதறியபடி,"சரி சார்." பிறகு அங்கிருந்தவர்களைப் பார்த்து "என்னதான் ஒற்றுமையா இருந்தாலும் இந்தியாவுல பிராந்திய பிரிவினை இன்னும் பலமாத் தான் இருக்கு. அதைப் பயன்படுத்தி தான் இந்த விளையாட்டு இருக்கப் போவுது"

குழுவில் ஒருவர் "கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா"

"சொல்றேன், பிராந்திய அடிப்படையில் 8 கிரிக்கெட் டீம் உருவாக்கப் போறோம். இந்திய வீரர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டு வீரர்களும் பங்கேற்கலாம். வீரர்களோட ஸ்டார் வேல்யூவுக்கு ஏத்த மாதிரி ரேட் பிக்ஸ் பண்ணி அவங்களை ஏலம் விடுவோம். டீம் முதலாளிகள் அவங்க பட்ஜெட்டுக்கும் தேவைக்கும் ஏத்த மாதிரி வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்"

"பிராந்திய அடிப்படையிலான டீம்னா?"

"மும்பை, டெல்லி, கொல்கத்தா இந்த மாதிரி. இன்னும் முழுசா முடிவு பண்ணலை"

"போட்டி எப்போ நடக்கும்?"

"வருஷா வருஷம் கோடை விடுமுறையில். ஒவ்வொரு டீமும் மற்ற டீம்களோட இரண்டு முறை ஆடுவாங்க"

பத்மநாபன் டேபிளில் இருந்த மினெரல் வாட்டரை க்ளாசில் ஊற்றிக் குடித்தவாறே ""கிரிக்கெட்டை தனியார் மயமாக்கறேன்னு சொல்லு. இதுல நமக்கென்னய்யா லாபம்?"

லலித்," ஒவ்வொரு டீம்கிட்டேர்ந்தும் ஒரு பெரிய தொகை அட்வான்ஸ் டெபாசிட்டா வாங்குவோம். அது அவங்களுக்கு ஜென்மத்துக்கும் திருப்பிக் கிடைக்காது. அது போக ஒவ்வொரு மேட்ச்சுக்கும் மேட்ச் பீஸா விளையாடற இரண்டு டீம்கிட்டேர்ந்தும் ஒரு அமௌண்ட் கிடைக்கும். இது மட்டுமா? டிவி ரைட்ஸ், டைட்டில் ஸ்பான்சர்,ஈவன்ட் ஸ்பான்சர்னு ஒரு நாலைஞ்சு பேரை உள்ளே பிடிச்சுப் போட்டு லம்ப்பா அடிச்சுடலாம்"

"டீமுக்கு எங்கேர்ந்து காசு வரும்?"

"டீம் ஸ்பான்சர்ஸ் குடுப்பாங்க. வீரர்கள் ஹெல்மெட் தொடங்கி ஷூ வரைக்கும் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டாத் தான் மைதானத்துக்குள்ள நுழைய முடியும். ஸ்பான்சர்கள் விளம்பரம் மற்றும் க்ரௌண்ட்ல ஸ்டால்ஸ் போடுவதன் மூலமா சம்பாதிப்பாங்க. இது எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம், இந்திய அணியில் சான்ஸ் கிடைக்காத, வாய்ப்புக்காக ஏங்குகிற இளம் வீரர்களுக்கு அவங்க திறமையைக் காட்ட இது ஒரு நல்ல களமா அமையும். மக்களுக்கு வழக்கம்போல என்டர்டைன்மென்ட்

பத்மநாபன் நக்கலாக சிரிக்கவும், லலித் "ஏன் சார் சிரிக்கறீங்க?"

"எங்கே மக்களுக்கு வழக்கம்போல நாமம்னு சொல்லிடுவியோன்னு நினைச்சேன், அதான் சிரிச்சேன்"

லலித், "சார் நீங்க வேற. இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ளே..."

பிறகு லலித் தன் லாப்டாப்பைத் தட்டி போட்டி சம்பந்தப்பட்ட சில கற்பனை வடிவங்களையும், மாதிரி அமைப்புகளையும் காண்பித்தான். அவை பார்ப்பதற்கே வண்ணமயமாக இருந்தன.

அறையில் சிறிது நேரம் மௌனம். எல்லோரும் எதையோ யோசித்த வண்ணம் பென்சிலால் நோட்புக்கை நோண்டிக் கொண்டிருந்தனர்.

தலைவர் "என்ன நண்பர்களே, ப்ளான் ஓகேவா? இதுல ஒரே ஒரு கண்டீஷன், நம்ம குழுவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தப் போட்டியில் பங்கெடுக்கக் கூடாது"

எல்லோரும் தலையைசைத்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருக்கையை விட்டு எழும்போது குழுவில் இருந்த மூத்த உறுப்பினர் "ஆமாம், இந்தப் போட்டிக்கு எதாவது பெயர் வெச்சிருக்கீங்களா?

லலித் உற்சாகமாக, "பாரத் பிரீமியர் லீக்" என்று கூறிவிட்டு லாப்டாப்பை கையில் எடுத்துக் கொண்டு நடக்கலானான்.


ஆட்டம் தொடரும்...


Jayaraman
New Delhi

(If you cant visit our blog, subscribe yourself with your email id. The article will be sent to you thru automated email)

Monday, June 3, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 3



பத்மநாபன் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவரைப் பற்றி சற்று அலசுவோம்.

இரட்டைக் குதிரை சவாரி செய்பவர்கள் அநேகம். ஆனால் இவர் வண்டியில் எண்ணிலடங்காக் குதிரைகள் பூட்டப்பட்டுள்ளன. தொழிலதிபர், கிரிக்கெட் புரவலர், கிரிக்கெட் ஆர்வலர், மாநில கிரிக்கெட் குழு தலைவர், இந்திய கிரிக்கெட் குழுவின் நாளைய தலைவராகப் போகும் இன்றைய பொருளாளர், ஆத்திகவாதி, பாசமிகு ஆனால் கோபக்கார அப்பா (தான் ஆசைப்பட்டபடி மகளுக்கு தமிழக செஸ் வீரருடன் மணமுடிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் கோபமும் இன்றும் உண்டு) மாநில மற்றும் மத்திய அரசியல் வட்டாரத்தில் செல்வாக்கு பெற்றவர், விரல்களில் கணிசமான அளவு கலர் கலர் ராசி மோதிரங்கள், ஆனால் எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல் யோசித்து முடிவெடுப்பவர், கறார் முதலாளி, ஆனால் தொழிலாளர்களுக்கு 30% போனஸ் வழங்கிய வள்ளல், சர்வாதிகாரி, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் காரியவாதி - மொத்தத்தில் நல்லவரா, கெட்டவரா என்று வரையறுக்க முடியாத நவீன "நாயகன்".

கார் இந்திய கிரிக்கெட் குழு அலுவலகத்தின் முன் வந்து நின்றது. இவர் வருவதை அறிந்தவுடன் லலித் குமார் ஓடோடி வந்தான்.

"எல்லாரும் உங்களுக்காகத்தான் காத்திருக்கோம், தலைவர் கூட வெளியூர் ப்ரோக்ராமை கான்ஸல் பண்ணிட்டு உள்ளே உட்கார்ந்திருக்கார், சீக்கிரம் வாங்க"

"ஏன்யா, அவர் இருக்கார்னு ஒரு மெசேஜ் பண்ண மாட்டியா? இப்போ நான் போய் வழியணும்"

"உங்க நண்பர் தானே சார் அவர்?"

"அதெல்லாம் 6 மணிக்கு மேல, சரி சரி வா" என்று நடையில் வேகம் கூட்டினார் - 64 வயதுக்கு அது ஓவர் ஸ்பீட்.  பத்மநாபனின் கொழுக் மொழுக் தொப்பை நிஜமாகவே "விழுந்து" விடும் போலிருந்தது

லலித் குமார் - திராவிட நிறத்தில் இருக்கும் மார்வாடி. வட இந்தியர்கள் சிகப்பானவர்கள் என்ற கருத்தை உடைத்தெறியும் கருமை நிறக் கண்ணன். பத்மநாபன் அயோத்யா என்றால் இவர் மதுரா. கோபிகைகள் இவருடன் இருப்பர், அல்லது இவர் கோபிகைகளுடன் இருப்பார். ஆனால் வேலையில் கில்லாடி. லலித்தின் தமிழ் ஆங்காங்கே சிதையும். ஆனால் தமிழ் தொ(ல்)லைக்காட்சி போல் கொல்லமாட்டான்.

பத்மநாபன் வியர்வையைத் துடைத்தவாறே மீட்டிங் ரூம் உள்ளே நுழைந்தார். எல்லோருக்கும் சம்பிரதாய வணக்கத்தைச் சொல்லி விட்டு அமர்கிறார் – தலைவருக்கு மட்டும் குழைவான வணக்கம். தலைவருக்கும் இவருக்குமான நெருக்கம் ஊரறிந்த ஒன்று. பத்மநாபன் மாநிலத் தலைவர் ஆனதில் தலைவருக்குப் பெரும் பங்கு உண்டு. தனக்குப் பிறகு தலைவர் பத்மநாபனைத் தான் தேசியத் தலைவர் பதவிக்கு வழிமொழிவார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்ட விஷயம். ஆனால் மத்ராசிகளை வேலையாட்களாகப் பார்த்துப் பழகிய குழுவில் உள்ள ஏனைய வட இந்திய நண்பர்களுக்கு தமிழன் தலைமைப் பொறுப்புக்கு வந்து விடுவானோ என்கிற வயிற்றெரிச்சலும் பயமும் நிறையவே உண்டு.

தலைவர், "20-20 கிரிக்கெட் நம்ம நாட்டுல நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கு. அது சம்பந்தமா நம்ம லலித் குமார் ஒரு பிசினஸ் மாடல் ரெடி பண்ணியிருக்கார். நான் பார்த்தவரைக்கும் அது ஓகே. இருந்தாலும் உங்க ஒபினியன் ரொம்ப முக்கியம். அதுக்காகத் தான் இந்த மீட்டிங். லலித், ஆரம்பிங்க"

லலித் குமார் "குட் மார்னிங், ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு சின்ன கற்பனை டெஸ்ட். செஹ்வாக், பீட்டர்சன் ஒரே அணியில் ஆடினா எப்படி இருக்கும்? சச்சினும் மலிங்காவும் ஒரே டீம்ல இருந்தா எப்படி இருக்கும்? க்றிஸ் கெயிலும் ப்ரெட் லீயும் ஒரே அணியில் இருந்தா எப்படி இருக்கும்? கற்பனை பண்ணிப் பாருங்க"

அனைவரின் கண்களும் ஆச்சர்யத்தில் ஒரு சுற்று பெருக்க ஆரம்பித்தன.. ஆனால் பத்மநாபன் வழக்கம் போல தன் பணக் குதிரைக்கு சாவி கொடுக்க ஆரம்பித்தார்


******************************************************************************


"டிஸ்கவரி சானலே செத்துக் கிடக்குதேய்யா" - அந்த டைனிங் டேபிளைப் பார்த்த பொழுது இந்த வசனம் தான் நினைவுக்கு வந்தது. ரகுநாத் அவன் நண்பர்கள் மற்றும் எதிர்பாராத விருந்தினர்களுடன் வருவதை அறிந்து அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட அசைவ உணவு தான் அங்கே தயாராக இருந்தது.

சாப்பிடும் பொழுது பேச்சு வாக்கில் ரகு ராதேவைப் பார்த்து, "ஏன் சார், நீங்க என்ன பண்றீங்க?"

"நான் சும்மாத்தான் இருக்கேன், ஊர்ல கொஞ்சம் நிலபுலம் இருக்கு. அப்பா ஹிந்தி சினிமாவுல எடுப்பா நடிச்சாரு, நானும் சில படங்கள்ல ஹீரோவுக்கு தொடுப்பா நடிச்சேன், ரேஸ், பெட்டிங்க்னா கொள்ளைப் பிரியம். ஊட்டி, பெங்களுருன்னு ஒரு ரேஸ் விடமாட்டேன். நிறைய சினிமாவுல நடிக்கலைன்னாலும் எனக்குத் தெரியாத பாலிவுட் ஹீரோக்களே கிடையாது. எல்லோரும் அவ்ளோ க்ளோஸ்"

பாலா உற்சாகமாகி, "அப்போ நீங்க இந்த நட்சத்திரப் பார்ட்டிக்கெல்லாம் சகஜமா போவீங்கன்னு சொல்லுங்க, ஒரே குஜாலா இருக்குமே?"

"ஐயோ நீங்க வேற, அங்க தான் நான் பழியா கிடப்பேன். "ஏன்யா, பார்டிக்குன்னே உன் குடும்பத்துல உன்னை நேர்ந்து விட்டுட்டாங்களா" அப்படின்னு மொஹிந்தர் கூட அடிக்கடி கிண்டல் பண்ணுவாப்ல.

ஹர்கிரத் "இவன் பார்ட்டிக்கு வர்றான்னாத் தான் நாங்களே போவோம். சூப்பரா எண்டெர்டைன் பண்ணுவான்"

ராதே, "டைம் கிடைச்சா மும்பை பக்கம் வாங்க, செமையா என்ஜாய் பண்ணலாம்" என்று கூறி கண்ணடித்தான்.

ரகு அவனைப்பார்த்து ஒரு பொய்யான புன்னகையைச் சிந்தினான்."இவன் ஒரு டைப்பான ஆளு போல, இவன்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.


ஆட்டம் தொடரும்......


Jayaraman
New Delhi



Related Posts Plugin for WordPress, Blogger...