Sunday, June 17, 2012

நீங்களும் ஆகலாம் ஜனாதிபதி!!!






இன்றைய தேதிக்கு சூடான மேட்டர்னா அது ஜனாதிபதி தேர்தல் தான், இவர் வருவார், அவர் வருவார்னு ஏகப்பட்ட புரளிகள், கணிப்புகள். என்ன தான் கூட்டணிக் கட்சிகள் நடுவுல புகுந்து கலாய்ச்சாலும் சோனியா மேடம் சொல்லப்போறது தான் பைனல். இந்த சூழ்நிலையில் ஏன் சில பிரபலங்களும் போட்டியிடக் கூடாதுன்னு நாம யோசிச்சோம்.

முதல்ல வடிவேலு இன்டர்வியூவிற்குப் போறாரு, சோனியா மேடமும் மன்மோகன் சிங்கும் உட்கார்ந்திருக்காங்க:

சோனியா, "எந்த நம்பிக்கையில நீங்க இந்த பதவிக்கு வரணும்னு ஆசைப்படறீங்க?"

வடிவேலு, "அது வந்தும்மா, ஜனாதிபதி பதவிங்கறது ரொம்ப கண்ணியமான பதவி"

சோனியா, "அதனால தான் கேக்கறேன், நீங்க ஏன் வரணும்னு நினைக்கறீங்க? தேர்தல்ல ரொம்ப அசிங்கமாப் பேசி வாங்கிக் கட்டிக்கிட்ட ஆளு தானே நீங்க?"

வடிவேலு மனசுக்குள், "அடடா, நம்ம வீக்னெஸ் அதுக்குள்ள இவங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா! சமாளிப்போம்"

சோனியா, "என்ன யோசிக்கறீங்க?"

வடிவேலு, "ஒண்ணும் இல்லை மேடம், இதுக்கு முன்னாடி இருந்தவங்கல்லாம் படிச்சவங்க, பெரிய மனுஷங்க. என்னை மாதிரி வெள்ளந்தியான ஆளுங்க யாரும் இந்த பதவிக்கு வந்ததில்ல"

சோனியா லேசாக முறைத்துவிட்டு , "யாரு நீங்களா? சரி மேல சொல்லுங்க"






வடிவேலு, (என்ன இந்தம்மா குறுகுறுன்னு பார்க்குது?) "அப்துல் கலாம் ஐயா பதவியில இருந்தப்போ ஊர் ஊராப் போய் பள்ளிக்கூடக் குழந்தைகளோட பேசினாரு. நான் ஒரு அதி பயங்கர காமெடி பீசுன்னு அகில உலகத்துக்கும் தெரியும். நான் பதவிக்கு வந்தேன்னா மக்கள் என்னை பார்த்து சிரிப்பாங்க. மகிழ்ச்சியா இருப்பாங்க. மனுஷப் பய வாழும்போது சந்தோஷமா வாழ வேண்டாமா? இப்போ உங்க ஆட்சியில ஒரு நல்லதும் நடக்க மாட்டேங்குது, பெட்ரோல் ஏறுதுங்கறாங்க, ரூபாய் இறங்குதுங்கறாங்க, யார் பிரதமர்னே தெரியலைன்னும் சில பேர் சொல்றாங்க..."

மன்மோகன் பல்லை நறநறவென்று கடிக்கிறார்.

சோனியா கடுப்பாகி, "அதுக்கு?"

வடிவேலு, "இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுல ஒரு சாதாரண மனுஷனுக்கு கொஞ்சமாச்சும் சந்தோஷத்தைக் குடுக்க வேண்டாமா? அது நம்ம கடமை இல்லையா? இப்போ நான் ஜனாதிபதி ஆகி மக்களை சந்திக்கப் போனேன்னா ஒரு நாலஞ்சு டயலாக் அடிச்சு விடுவேன், மக்கள் அதைக் கேட்டு சிரிப்பாங்க. அப்படியே பேஸ்புக், ட்விட்டர்னு எல்லாத்துலயும் போடுவாங்க. அடடே, இவ்ளோ ஜாலியான ஜனாதிபதியான்னு எல்லாரும் உங்களைத் தானே மேடம் பாராட்டுவாங்க. மத்தபடி நான் என்னிக்குமே உங்க வீட்டு நாயாத் தான் இருப்பேன். அது போக ஆப்ரிக்கா மாதிரி நாடுகளுக்கு சுற்றுப் பயணம் போனேன்னா நமக்கு நல்ல பிஸ்னெஸ் கிடைக்கும்"

சோனியா, "எப்படி?"

"அவிங்க பயங்கர கறுப்பா இருக்காங்க, நான் கறுப்பா பயங்கரமா இருக்கேன், ரெண்டு பேருக்கும் நல்லா மேட்ச் ஆவும்"

சோனியா, "பரவாயில்லையே, நல்ல ஐடியா தான்"

வடிவேலு, "அது மட்டுமில்ல மேடம், வெள்ளைக்கார நாடுகளுக்குப் போனாலும் அவங்களுக்கு மத்தியில நான் தனியாத் தெரிவேன்ல, ஒரு கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் இந்தியாவின் ஜனாதிபதி ஆயிட்டார்னு எல்லாரும் புகழுவாங்க. இதெல்லாம் உங்களுக்குப் பெருமை தானே மேடம்?

சோனியா, "சரி நீங்க போகலாம், சொல்லி அனுப்பறோம்"

வடிவேலு, "ரொம்ப நன்றி மேடம்" பிறகு மன்மோஹனைக் காட்டி "மேடம் யாரு இவரு, நான் வந்ததிலேர்ந்து பார்க்கறேன், ஒண்ணுமே பேசாம சும்மாவே உட்கார்ந்திருக்காரு"

சோனியா, "இவர் தாம்பா நம்ம நாட்டுப் பிரதமர்"

வடிவேலு, "அவரா நீ? சொல்லவே இல்ல"

மன்மோகன், "என்னது நான் தான் பிரதமரா? என்கிட்டே யாரும் சொல்லவே இல்லையே"

வடிவேலு ஷாக்காகி, "இந்த வேலைக்கு உன்னை தப்பா எடுத்திருக்காங்க. ஒரு வேளை நான் ஜனாதிபதி ஆயிட்டேன்னா நீங்க எனக்கு ஒத்தாசையா உதவி ஜனாதிபதி ஆயிடுங்க, ரெண்டு பேரும் எந்த வேலையும் செய்யாம சும்மா இருக்கலாம், சர்தார்ஜி-மதராசி காம்பினேஷன் நல்லா வொர்க் அவுட் ஆகும், வர்ர்ட்டா?"

சோனியா, "அடுத்து யாரப்பா? உள்ளே வாங்க"





நெத்தி நிறைய பொட்டுடன் நித்தி உள்ளே வருகிறார். "வணக்கம்" பிறகு ஹாலை சுற்று முற்றும் பார்த்தபடி "கதவைத் திறந்து வையுங்கள், காற்று வரட்டும்"

சோனியா, "நீங்களா?"

நித்தி, "நானே தான், பெங்களுரு நீதிமன்றத்திலிருந்து நேராக இங்கு தான் வருகிறேன்"

சோனியா, "எந்த தைரியத்துல இங்க வந்தீங்க? உங்க மேல ஏகப்பட்ட புகார்கள், வழக்குகள் இருக்கே?"

நித்தி, "புகார்களும் வழக்குகளும் எல்லார் மேலும் இருக்கிறது. உங்கள் மேலும் போபோர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு 25 ஆண்டுகளாக இருக்கிறது."

"அது என் பேர்ல இல்லை, என் கணவர் பேர்ல"

நித்தி சிரித்தவாறே, "மனைவி கணவனில் சரி பாதி என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்"

திடுக்கிடும் சோனியா பிறகு சுதாரித்துக் கொண்டு, "நீங்க ஜனாதிபதி ஆனா என்ன செய்வீங்க?"

நித்தி, "அமைதி, சாந்தி"

மன்மோகன், "இவர்களெல்லாம் உங்க பெண் சீடர்களா?"

நித்தி தெய்வீகச் சிரிப்புடன், "பிள்ளாய், அமைதி என்றால் உலக அமைதி, சாந்தி என்றால் மனச்சாந்தி"

சோனியா, "கொஞ்சம் புரியற மாதிரி சொல்றீங்களா?"

நித்தி மீண்டும் சிரிப்புடன், "எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவு, போர், அமைதியின்மை, வன்முறை. இதற்கு ஒரே தீர்வு ஆன்மிகம். ஆன்மிகம் மனதை ஒருங்கிணைக்கும். உலகில் அமைதியை நிலைநாட்டும். ஆன்மீகத்தின் மூலம் தர்மம் தழைக்கும். ரஞ்சிதம் பிழைக்கும்"

மன்மோகன், "ரஞ்சிதமா? உங்க கூட இருந்தாங்களே, அவங்களா?"

நித்தி, "அதாவது மனோரஞ்சிதம், அப்படியென்றால் மகிழ்ச்சி"

சோனியா, "இருந்தாலும் உங்களை கன்சிடர் பண்ண முடியாது. அந்த ஆபாச வீடியோ உங்கள் இமேஜை ரொம்ப டேமேஜ் பண்ணிடுச்சு"





நித்தி, "உங்கள் மனதில் கெட்ட எண்ணம் இருந்தால் நீங்கள் பார்க்கிற எல்லாமே கெட்டதாகத் தான் தெரியும். நானும் என் சீடரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது யாரோ எங்களுக்குத் தெரியாமல் எடுத்த வீடியோ அது. துறவியாக வேண்டுமானால் எல்லாவற்றையும் துறக்க வேண்டும், மறக்க வேண்டும், மூடியிருக்கும் கதவுகளை, அதாவது மனக்கதவுகளை திறக்க வேண்டும். அந்த சீடரின் மனதில் சிற்சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் நீக்கி அவற்றையெல்லாம் துறந்து, அவர்களை ஒரு முழு துறவியாக்கும் ஒரு பயிற்சியில் நாங்கள் ஈடுபட்டிருந்தது உங்களுக்கு ஆபாசமாகத் தெரிகிறது."

சோனியா மெய் மறந்து நித்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைப் பார்க்கும் மன்மோகன் மனசுக்குள், "போற போக்கைப் பார்த்தா இந்த அம்மாவும் இவரோட சேர்ந்துடும் போலிருக்கே"

நித்தி, "எதையுமே மூடினால் தான் ஆபத்து. மூடியிருக்கும் வரை ஆர்வம் இருக்கும். ஆர்வம் இருந்தால் ஆசை வரும். ஆசை மனதை அலை பாய வைக்கும். அலை பாயும் மனது திடமான முடிவுகளை ஒரு நாளும் எடுக்காது. அது உங்கள் அறிவையும் வேலை செய்ய விடாது. அறிவில்லாதவர்கள் தவறான வழிக்குச் செல்வார்கள். தவறான வழிக்குச் சென்றால் தண்டனை உண்டு. ஆகா, எல்லாவற்றிற்கும் காரணம் நாம் எல்லாவற்றையும் மூடி வைப்பது தான். அதனால் தான் வந்தவுடனே சொன்னேன், கதவுகளைத் திறங்கள், காற்று வரட்டும் என்று.

சோனியா, "சுவாமி, உங்களுக்கு என்னால் இந்த பதவியைத் தரமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இப்பொழுதே என்னை உங்கள் சீடர் ஆக்கிக் கொள்ளுங்கள். எங்கே என் காவி உடை? எங்கே என் ருத்ராட்சம்?"

மன்மோகன், "மேடம் கண்ட்ரோல் கண்ட்ரோல். அப்புறம் இதான் சாக்குன்னு RSSம் பிஜேபியும் இந்து மதத்தை நீங்க இழிவுபடுத்தறீங்கன்னு புதுசா ஒரு பூதத்தை கிளப்புவாங்க. இருக்கற தலைவலி போதாதா? ஐயா நித்தி, நீங்க கிளம்புங்க, சொல்லி அனுப்பறோம்"

நித்தி அதே தெய்வீகச் சிரிப்புடன், "நினைவிருக்கட்டும். எதையுமே மூடக் கூடாது"

மன்மோகன், "அதை நாங்க பார்த்துக்கறோம், இப்போ நீங்க மூடிக்கிட்டுப் போங்க"

பிறகு சோனியாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை சுயநினைவிற்குக் கொண்டு வருகிறார். பெல்லை அழுத்தி அடுத்த ஆளை உள்ளே அனுப்புமாறு சொல்கிறார்.

சம்மக் சல்லோ பாடல் ஒலிக்கிறது.

சோனியா, "மை காட், மன்மோகன் ஜி, அவன் தான் வர்றான் போலிருக்கு"




எதிர்பார்த்தது போல் ஷாருக் கான் என்ட்ரீ ஆகிறார். "ஹெலோ சோனியாஜி, ஹெலோ மன்மோகன் ஜி, உங்க ரெண்டு பேருக்கும் நமஸ்தேஜி"

மன்மோகன் மனசுக்குள், "என்ன தீர்மானத்தோட இங்க வந்திருக்கான்னு தெரியலையே!"

சோனியா, "உங்களுக்கு என்ன தகுதியிருக்குன்னு இந்த பதவிக்கு வர ஆசைப்படறீங்க?"

ஷாருக் கான், "ஹிஹிஏய், ஆசைகள் பெரிசா இருக்கணும், கனவுகள் பெரிசா இருக்கணும். அப்போத் தான் முன்னேற முடியும்"

சோனியா, "பட் இது பேராசையா இல்ல இருக்கு"

ஷாருக் கான் வழக்கமான சிரிப்பை சிரிக்க ஆரம்பிக்கவும், மன்மோகன் குறுக்கிட்டு "எந்த வார்த்தை பேசறதா இருந்தாலும் சம்பந்தமே இல்லாம முதல்ல சிரிக்கறதுன்னு எதாவது அக்ரீமென்ட் போட்டிருக்கியா?"

ஷாருக் கான் சற்று சீரியசாகி, "கலைஞர்கள் தான் ஒரு நாட்டின் உண்மையான தூதுவர்கள். அதனால தான் நான் இந்தப் பதவிக்கு வரணும்னு ஆசைப்படறேன்"

சோனியா, வந்து என்ன செய்வீங்க?"

ஷாருக் கான், "ஊர் ஊராப் போவேன், கலை நிகழ்ச்சிகள் நடத்துவேன், இந்தியாவின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பரப்புவேன், விளம்பரத்துக்கு விளம்பரம், பணத்துக்குப் பணம்"

மன்மோகன், "கூடவே பிரியங்காவையும் கூட்டிட்டுப் போவியா?"

ஷாருக் கான், "மிஸ்டர் வதேராவுக்கு ஆட்சேபனை இல்லேன்னா தாராளமா கூட்டிட்டுப் போவேன்"

மன்மோகன் குழம்பவும், சோனியா டென்ஷனாகி, "ப்ரோ, அவர் பிரியங்கா சோப்ராவைச் சொல்றார். என் பொண்ணை இல்ல."

ஷாருக் கான், "ஐ ஆம் சாரி, பை தி பை, எனக்கு எந்த சோப்ராவையும் தெரியாது - யாஷ் சோப்ராவை தவிர"

சோனியா, "வேற என்ன செய்வீங்க?"

ஷாருக் கான், "இப்போ இருக்கற பிசிசிஐ ஆளுங்களுக்கு பணம் சம்பாதிக்கத் தெரியுது, ஆனால் செலிபரேட் பண்ணத் தெரியல. அதனால இந்தியன் கிரிக்கெட் டீமையும் நானே வாங்கிடுவேன். உள்ளூர் சீரிஸ் ஜெயிச்சாக்கூட ஒரு வாரத்துக்குக் கொண்டாட்டம் தான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் டிரக்ல ஊர்வலம் போவோம். எல்லாரையும் ஜனாதிபதி மாளிகைக்குக் கூப்பிட்டு பரம் வீர் சக்ரா விருது வழங்குவேன், ஏன்னா அவர்களும் வீரர்கள் தான், மைதானமும் போர்க்களம் தான்"

மன்மோகன், "ஐயா, முதல்ல கிளம்புங்க, செலெக்ட் ஆனீங்கன்னா தபால் வரும்"

ஷாருக் கான் சிரித்துக் கொண்டே, "கிங் கான் ஜனாதிபதி போஸ்ட் லே ஜாயேங்கே" என்று அர்த்தமே இல்லாமல் பன்ச் அடித்து விட்டு செல்கிறார்.

மன்மோகன், "மேடம், இன்னிக்கு இதோட நிறுத்திக்குவோம்"

சோனியா, "இன்னும் ஒரே ஒரு ஆள் தான் பாக்கி, அவரையும் பார்த்துடுவோம்"

மன்மோகன், "யாருப்பா அங்க, சீக்கிரம் வாங்க"







கேப்டன் உள்ளே வருகிறார் - வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி, கண்ணாடி சகிதம். "நமஸ்தே சோனியாஜி, நமஸ்தே மன்மோகன் ஜி"

மன்மோகன், "அடேடே, மதராசி ஹிந்தியில நல்லாவே நமஸ்தே சொல்றியே?"

விஜயகாந்த், "எல்லா மொழியையும் நாங்க மதிப்போம், வலுக்கட்டாயமா திணிச்சா ஏறி மிதிப்போம்"

சோனியா, "சரி உட்காருங்க, அந்த கண்ணாடியைக் கொஞ்சம் கழட்டுங்க. ரூம்ல தானே இருக்கீங்க"

விஜயகாந்த் கண்ணாடியைக் கழட்டவும் சோனியா அவரது செக்கச் சிவந்த கண்களைப் பார்த்து டர்ர்ர் ஆகிறார். "ப்ரோ, நீங்க கண்ணாடியை மாட்டிக்கோங்க"

மன்மோகன், "ஏங்க கேப்டன்ஜி, உள்ளூர்லேயே நீங்க தாளம் போடறீங்களே, மத்தியில வந்தா எப்படி சமாளிப்பீங்க?"

விஜயகாந்த் ஆத்திரமாகி, "இப்படி குட்டிகுட்டித் தானேடா தமிழனை வளர விடாம வெச்சிருக்கீங்க, வடநாட்டுக்காரன் குண்டூசி கண்டுபிடிச்சாக் கூட கொண்டாடறீங்க, எங்க ஊர் GD நாயுடு எண்ணற்ற பொருட்களைக் கண்டுபிடிச்சிருக்காரு, அவருக்கு எதாச்சும் அங்கீகாரம் குடுத்திருக்கீங்களா?'

சோனியா மன்மொஹனிடம், "நீங்க என்ன கேட்டீங்க, இவர் என்ன பேசறாரு?"

மன்மோகன், "அவர் அப்படித்தான், பாவம் இன்னும் காமெரா முனாடி நிக்கறோம்னு நினைச்சிக்கிட்டிருக்காரு"

விஜயகாந்த், "அங்க என்ன சதித்திட்டம் தீட்டறீங்க?"

சோனியா, "ஓகே கேப்டன், நீங்க இந்த பதவிக்கு வந்தா என்ன செய்வீங்க?"

விஜயகாந்த், "இந்தியாவுல மொத்தம் 545 எம்பிக்கள் இருக்காங்க. அதுல 56 பேர் கேபினட் மந்திரிங்க. இந்த 56 பேருக்குக் கீழ வேலை செய்யறதுக்கு 1782 ஐஏஸ், 2301 ஐபிஎஸ், 821 ஐஎப்ஸ் அதிகாரிங்க இருக்காங்க. மொத்தம் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் 476 மாவட்டங்கள் 910 பேரூராட்சிகள், 2981 நகராட்சிகள் மற்றும் 3871 பஞ்சாயத்துங்க இருக்கு."

மன்மோகன், "அப்படியா? எனக்கே சரியா தெரியாது. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கறது நல்ல விஷயம் தான். ஆமாம், இப்போ எதுக்கு இந்த புள்ளி விவரத்தை சொல்றீங்க?"

விஜயகாந்த், "இந்த அத்தனை இடத்துலயும் தலைமைப் பொறுப்புல இருக்கறவங்களை பதவியை விட்டுத் தூக்கப் போறேன்"

சோனியாவுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது.

மன்மோகன், "தூக்கிட்டு?"

விஜயகாந்த், "இந்தியா முழுக்க குடியரசுத் தலைவர் ஆட்சி தான்"

சோனியா, "இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, அதை மறக்காதீங்க"

விஜயகாந்த், "தெரியும் மேடம், இன்னொன்னும் தெரியும், மன்னராட்சி நடந்தபோதும் சரி, இப்ப மக்களாட்சி நடக்கிற போதும் சரி, மக்களுக்கு எப்பவுமே அது ஒரு மரண ஆட்சியாத் தான் இருந்திருக்கு. எங்க பார்த்தாலும் அராஜகம், அடக்குமுறை, ஊழல், லஞ்சம் " அவரின் கண்ணாடியைத் தாண்டி கண்கள் சிவக்கிறது.





மன்மோகன், "யோவ், கறுப்புக் கண்ணாடி சிவப்புக் கண்ணாடியா மாறுதுய்யா, கண்ட்ரோல்"

சோனியா,"உங்க கண்ணு ஏன் சார் அடிக்கடி நெருப்பு மாதிரி ஆயிடுது?"

விஜயகாந்த் குரல் தழுதழுக்க, "இது கோபம் இல்லை மேடம், நம்ம நாட்டு ஏழை மக்களோட வயித்துல எரியற நெருப்பு மேடம். ஹுண்டாய் வெச்சிருக்கறவன் ஹோண்டா கார் வாங்கி ஜிலுன்னு பான்டா குடிக்கறான்.. ஆனா சைக்கிள்ல போறவனால ஒரு போண்டா கூட வாங்கித் திங்க முடியல"

விஜயகாந்தின் பேச்சைக்கேட்டு மன்மோகன் கண் கலங்குகிறார்.

ட்ராக் மாறுவதை கவனிக்கும் சோனியா, "ஓகே கேப்டன் ஜி, நீங்க போகலாம், உங்களுக்கு சொல்லி அனுப்பறோம்"

விஜயகாந்த் எகத்தாளமாக, "அதான் சொல்லிட்டீங்களே மேடம், பிரணாப் தான் உங்க வேட்பாளர்னு. முதல்லயே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு தேவையே இல்லாம ஒரு மீட்டிங் போட்டு அதுல எல்லாரையும் கருத்து சொல்லுங்கன்னு மொக்கை போடறது தான் உங்க கட்சியோட ஸ்டைல்னு இந்தியாவுல இருக்கற 120 கோடி பேருக்கும் நல்லாவே தெரியும். இந்தியா முதல்ல வெள்ளைக்காரன்கிட்ட அடிமையா இருந்திச்சு, இப்போ ஒரு வெள்ளைக்காரிகிட்ட அடிமையா இருக்கு. மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் வெடிக்கும். அதுல ஜனநாயகம் மீண்டும் மலரும், நான் வர்றேன் மேடம், வீ வில் மீட், வில் மீட், மீட்" என்று சொல்லி விட்டு ஸ்டைலாக கண்ணாடியை மாட்டியபடி வீர நடை போட்டுச் செல்கிறார். பின்னணியில் "அந்த வானத்தைப் போல மனம் படைச்ச நல்லவனே" என்ற பாடல் ஒலிக்கிறது.

சோனியா மன்மோஹனிடம், "என்ன ஜி, இப்படி சொல்லிட்டுப் போறாரு?"

மன்மோகன், "அவரை விடுங்க, BP ஜாஸ்தி ஆயிருக்கும். நீங்க வாங்க. நமக்கு நிறைய வேலை இருக்கு - பிரணாப்புக்கு ஆதரவு திரட்டணும், கலாமை வித்ட்ரா பண்ண வைக்கணும், மம்தாவுக்கு ஐஸ் வைக்கணும், முலாயமுக்கு பணம் டிரான்ஸ்பர் பண்ணணும், மாயாவதி மேல இருக்கற கேஸ் விஷயமா ஜட்ஜ் கிட்ட பேசி கரெக்ட் பண்ணணும்,"

சோனியா நெகிழ்ச்சியாக, "என்னால உங்களுக்குத் தான் எவ்வளவு அவமானம், உங்களுக்குக் கொஞ்சம் கூட கோபமே வரலியா?"

மன்மோகன், "நான் உங்க உண்மையான விசுவாசி மேடம், நீங்களும் உங்க குடும்பமும் இன்னும் ஏழேழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சொத்து சேர்த்துக்கணும். நாங்க இதே மாதிரி வழக்கம்போல உங்களுக்கு அடிமையா இருந்து சேவகம் பண்ணணும். அதான் மேடம் என் கனவு" என்று சொல்லிவிட்டு எழுச்சியுடன் செல்கிறார்.







சீக்கிரம் எதாச்சும் கிரிக்கெட் டோர்னமென்ட் ஸ்டார்ட் பண்ணுங்கப்பா! இல்லேன்னா இந்த கண்றாவியெல்லாம் ஆராய்ச்சி பண்ண வேண்டியதா இருக்கு!

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...