Monday, November 28, 2011

கும்தலக்கடி - ஒரு கொலைவெறியாடல்

ஆனா ஊனா ஒரு நாலு பேரு புதுப் படத்தைப் ப்ரொமோட் பண்றேன் பேர்வழின்னு ஏதாச்சும் ஒரு சேனலை குத்தகைக்கு எடுத்துக்கிட்டு மொக்கை போடறது ஒரு வியாதியா பரவிகிட்டு வருது. அதனால தனுஷை விட பயங்கர கொலைவெறியோட இருக்கற மக்களுக்காக இந்த ஆர்டிகிள். (நடுநடுவே சாங்க்ஸ் மற்றும் ஸீன் கிளிப்பிங்க்ஸ் எல்லாம் நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க)

டிவி தொகுப்பாளினி, "வணக்கம் வசையருவி நேயர்களே, இன்னிக்கு நம்ம ஸ்டூடியோவுக்கு "கும்தலக்கடி" படக்குழுவினர் வந்திருக்காங்க. அதிலயும் நம்ம ஹீரோ கார்யா உங்களோட பேசப்போறாரு. என்ன, அப்படியே ஷாக் ஆயிட்டீங்களா? எனக்கும் அப்படித்தான் இருக்கு. ஸோ, உடனே போன் எடுங்க, டயல் பண்ணுங்க. நம்பர் உங்க டிவி ஸ்க்ரீன்ல பிளாஷ் ஆயிக்கிட்டிருக்கு. நீங்க போன் பண்ணலேன்னா அவங்க போடற மொக்கையை நான் மட்டும் தனியா இருந்து சமாளிக்கணும். பெண் பாவம் பொல்லாதது, ஞாபகமிருக்கட்டும்.

அடுத்த சீன், எல்லாரும் சோபாவில உக்காந்துகிட்டிருக்காங்க.

டிவி தொகுப்பாளினி, "வணக்கம் சார், உங்க புதுப் படம் "கும்தலக்கடி" ரிலீஸ் ஆகி வெற்றிகரமா நாலாவது ஷோவா ஓடிக்கிட்டிருக்கு. எப்படி பீல் பண்றீங்க? கார்யா சார், நீங்க சொல்லுங்க, அதுலயும் உங்க நடிப்பைப் பற்றித் தான் ஒரே பேச்சா இருக்கு"

கார்யா, "ரொம்ப நிறைவா இருக்கு. இதையும் ஒரு படம்னு நினைச்சு மக்கள் தியேட்டருக்கு வந்து பாக்கறதுல ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. ஏன்னா, இந்தப் படம் ரிலீஸ் ஆவுமான்னே நிறைய பேருக்கு டவுட் இருந்திச்சு. ஏன், எங்களுக்கே கூட இருந்தது"

தயாரிப்பளார் தர்மப்பிரபு இடைமறித்து, "முதல்ல இந்தப் படத்தை சென்சார் போர்ட் தணிக்கையே பண்ணமாட்டேனுட்டாங்க. ஏன்னா அந்த அளவுக்கு திராபையா இருக்குன்னு சொன்னாங்க. இந்த மாதிரி படம் ரிலீஸ் பண்ணினா மக்கள் மன நலம் பாதிக்கப்படும்னு பயந்தாங்க. அவங்க சொல்றது உண்மைன்னாலும் எங்க உழைப்பு வீணாப் போயிடுமே? அவங்களை கன்வின்ஸ் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு"

டிவி தொகுப்பாளினி, "டைரக்டர் அறிவுஜீவி சார், நீங்க சொல்லுங்க, எப்படி இந்தக் கதை உங்களுக்குள்ள உருவாச்சு?"

அறிவுஜீவி, "இது ஒரு பத்து வருஷ முயற்சிக்குக் கிடைத்த வெற்றின்னு தான் சொல்லணும். ஏன்னா, இந்த பத்து வருஷத்துல அவ்ளோ பிற மொழிப் படங்களை டிவிடிலேயும், திரைப்பட விழாக்களிலும் போய் மாஞ்சு மாஞ்சு பார்த்து, அது எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி இந்த கதையை நான் உருவாக்கியிருக்கேன். இது தமிழ்ல வந்திருக்கற ஒரு குளோபல் படம்னே சொல்லலாம்"

டிவி தொகுப்பாளினி, பட ஹீரோயினைப் பார்த்து, "என்ன பனுஷ்கா மேடம், ரொம்ப அமைதியா இருக்கீங்க? இது உங்க ரெண்டாவது படம், எப்படி வந்திருக்கு?"

கார்யா (பனுஷ்காவை கலாய்ப்பதாய் நினைத்துக் கொண்டு), "அவங்க காமெரா முன்னாடி தான் இப்படி. காமெராவுக்குப் பின்னாடி அவங்களை கையில புடிக்க முடியாது, என்ன பனுஷ், சரிதானே?"

பனுஷ்கா, "ரெம்ப ஹாப்பியா இருக்கு, அதுலயும் இதுல எனக்கு ஒரு வில்லேஜ் கேர்ல் ரோல் குடுத்திருக்காங்க. நிறைய கிளாமர் அண்ட் கொஞ்சம் ஆக்டிங் ரெண்டும் இருக்கற மாதிரியான ஒரு ரோல்"

அறிவுஜீவி, "காஸ்டியூம் விஷயத்துல டெய்லி எனக்கும் அவங்களுக்கும் மினி யுத்தமே நடக்கும். “நான் புல்லா டிரஸ் போட்டா ரசிகர்கள் கோச்சுக்குவாங்க, நீங்க என்னடான்னா பாவாடை தாவணி போடச் சொல்றீங்களே”ன்னு ஷூட்டிங் ஸ்பாட்டே ரகளையா இருக்கும். அப்புறம் இவங்களுக்காக ஜன்னல் வெச்ச ஜாக்கெட், வாசக்கால் வெச்ச பாவாடை, கம்பி போட்ட தாவணி எல்லாம் மும்பைலேர்ந்து வரவழைச்சு ஒரு மாதிரி ஒப்பேத்திட்டோம்."

டிவி தொகுப்பாளினி, "தர்மப்ரபு சார், இந்தப் படத்துக்கு நீங்க நிறைய செலவழிச்சிருக்கறதா ஆடியோ ரிலீஸ்ல சொல்லியிருந்தீங்க இல்லையா?"

தர்மப்ரபு, "ஆமாம், அதுலயும் குறிப்பா அவங்க காஸ்டியூம் செலவை விட அதை வரவழைக்க ஆன கொரியர் செலவு ஜாஸ்தின்னா பார்த்துக்கோங்க.

டிவி தொகுப்பாளினி, "சரி சார், இப்போ ஒரு நேயர் லைன்ல இருக்கார், ஹலோ!"

நேயர், "ஹலோ, வசையருவி? நான் அரக்கோணத்திலேர்ந்து அமுதகுமார் பேசறேன் மேடம்"

கார்யா, "சொல்லுங்க அமுதகுமார், நீங்க தானே உங்க ஊர் ராஜா தியேட்டர்ல முதல் ஷோ முதல் டிக்கெட் வாங்கின ஆளு?"

நேயர், "முதல் ஷோ பார்த்த ஆள் மட்டும் இல்லை சார், உங்க படத்தை எங்க ஊர்ல பார்த்த ஒரே ஆளும் நான் தான்"

அறிவு ஜீவி, "அமுதகுமார், படம் பார்த்தீங்களா? எப்படி இருக்கு?"

நேயர், "செம டெரரா இருக்கு சார், அதுலயும் கார்யா சார் பேசற அந்த வசனம் "ஊறுகாயை நக்கித் தான் சாப்பிடணும், அப்பளத்தை உடைச்சித்தான் சாப்பிடணும்" சூப்பர் சார். அதுலயும் உங்க உடம்பு, என்ன பாடி சார் அது?"

கார்யா, "படத்தை ரொம்ப ரசிச்சு பார்த்திருக்கீங்க போல, உங்க நண்பர்கள் கிட்டயும் பேசி அவங்களையும் படம் பாக்க வைங்க, சரிங்களா?"

நேயர், "அப்புறம் சார் இரு சின்ன விஷயம், நீங்க முதல் டிக்கெட் வாங்கினதுக்காக ஒரு மோதிரம் குடுத்தீங்களே, அது கவரிங்க்னு தெரிஞ்சு போச்சு, ஒரிஜினல் எப்ப சார் குடுப்பீங்க?"

கார்யா, "ஹெலோ ஹெலோ ஹெலோ..." - லைன் கட் ஆயிடுச்சுன்னு நினைக்கறேன்"

டிவி தொகுப்பாளினி, "கார்யா சார், நானே கேக்கணும்னு நினைச்சேன், எப்படி சார் அப்படி ஒரு பாடி டெவலப் பண்ணினீங்க?"

கார்யா, "அது ரொம்ப சிம்பிள், நம்ம சைதாபேட்டை ஸ்டேஷன் வெளியில ஒருத்தர் ரொம்ப அழகா ரோட்ல டிராயிங் போடுவார். அவரைக் கூப்பிட்டு சப்பாத்தி மாவுல வரி வரியா கட்டிங்க்ஸ் போடச் சொன்னோம். அப்புறம் அதை எடுத்து என் பாடி மேல ஒட்டிக்கிடுவேன்."

டிவி தொகுப்பாளினி, "கேக்கவே ரொம்ப வித்யாசமா இருக்கு"

பனுஷ்கா, "எஸ்பெஷலி டூயட்ல அவர் ஓப்பன் பாடியா இருப்பாரு, அவரை கட்டிப் பிடிக்கும்போது மாவு என் உடம்புல ஒட்டாம கட்டிப் பிடிக்கணும். குறிப்பா அந்த வரிகள் அழிஞ்சிடாம பார்த்துக்கணும். இட் வாஸ் வெரி டப்"

கார்யா, "அவங்க டூயட்னு சொன்னதும் ஒரு விஷயம் சொல்லணும். அந்த "வாடா வாடா எச்சக்கலை" சாங்க்ல அவங்க ஒரு யெல்லோ டிரஸ் போட்டுக்கிட்டு வருவாங்க. இன்னிக்கு யூத்ஸ் மத்தியில அது தான் ஹாட்"

டிவி தொகுப்பாளினி சிரித்துக்கொண்டே, " சரி சார், இன்னொரு நேயர் லைன்ல இருக்கார், ஹெலோ?"

நேயர், "ஹெலோ, நான் கல்பாக்கத்திலேர்ந்து கலைவாணி பேசறேங்க"

"சொல்லுங்க கலைவாணி, கும்தலக்கடி படம் பார்த்தீங்களா?"

"ஆமாங்க, ரொம்ப நல்லாருக்குங்க, கார்யா சார் இருக்காரா?'

கார்யா, "நான் கார்யா தான் பேசறேன், சொல்லுங்க"

கலைவாணி, "சார் உங்க நடிப்பு சூப்பர் சார்"

"ரொம்ப தேங்க்ஸ், படம் புடிச்சிருக்கா?"

"கண்டிப்பா சார், ஒரு சீன்ல உங்க தங்கச்சி தூங்கணும்கறதுக்காக ராத்திரி பூரா கொசு அடிப்பீங்களே, அப்படியே கண்ணு கலங்கிடுச்சு சார். எனக்கும் இப்படி ஒரு அண்ணன் கிடைக்க மாட்டாரான்னு ஏங்கிட்டேன்"

கார்யா, "ஆமாங்க, அந்த ஸீன் பண்ணும்போது மொத்த யூனிட்டும் கண்ணு கலங்கிடுச்சு" (கண்ணைத் துடைத்துக் கொள்கிறார்)

டிவி தொகுப்பாளினி, "சரிங்க கலைவாணி, கால் பண்ணினதுக்கு நன்றி"

கலைவாணி, "மேடம் மேடம், உங்க ஆளுங்க என்கிட்ட வந்து ஸ்டூடியோவுக்கு போன் பண்ணுங்க, நூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் போடறோம்னு சொன்னாங்க மேடம், ஆனா அம்பது ரூபாய்க்குத் தான் பண்ணியிருக்காங்க. மீதி எப்ப மேடம் குடுப்பீங்க? (வழக்கம் போல் லைன் கட் ஆகிறது)

அறிவுஜீவி, "தங்கச்சிக்காக இவர் ஒரு பாட்டு பாடுவாரு, தமிழ்நாட்டுல இருக்கற தங்கச்சிங்க எல்லாம் இப்ப அந்த பாட்டைத் தான் காலர் டியூனா வெச்சிருக்காங்கன்னு நண்பர் ஒருத்தர் சொன்னார்"

தர்மப்ரபு, "பாட்டுன்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது, கரடிமுத்து ரொம்ப அருமையா எழுதி குடுத்திருக்கார்"

அறிவு ஜீவி, "நம்ம பால்ராஜ் டியூன் சொல்லி முடிக்கறதுக்குள்ள அப்படியே வார்த்தைகளை கொட்டிடுவாரு, நாம தான் நமக்குத் தேவையானதை பொறுக்கிக்கணும்"

டிவி தொகுப்பாளினி, "சரி சார், இன்னொரு நேயர் லைன்ல இருக்கார், ஹெலோ?

நேயர், "நான் அம்பத்தூர்லேர்ந்து ரமேஷ் பேசறேன் மேடம், படம் பார்த்தேன், சூப்பர் மேடம், சாங்க்ஸ் எல்லாம் சான்சே இல்லை. பனுஷ்கா மேடம் கிட்ட பேச முடியுமா?"

பனுஷ்கா , "நான் பனுஷ்கா பேசறேன், சொல்லுங்க ரமேஷ்"

நேயர், "மேடம், உங்க நடிப்பு சூப்பர் மேடம், டான்சும் சூப்பர்"

பனுஷ்கா, "ரொம்ப தேங்க்ஸ் ரமேஷ், இந்த படத்துல உங்களுக்குப் பிடிச்ச சாங் எது?"

நேயர், "வாடா வாடா எச்சக்கலை தான் என் பேவரிட், நீங்க ஒரு ரெண்டு வரி பாடிக்காட்டணும் மேடம், ப்ளீஸ்"

பனுஷ்கா பாடுகிறார். எல்லோரும் கை தட்டுகின்றனர்.

நேயர், "ரொம்ப தேங்க்ஸ் மேடம்"

பனுஷ்கா, "இட்ஸ் ஓகே"

நேயர், "அதுக்கில்லை மேடம், உங்க குரல் ஆக்ஸா ப்ளேடை விட கொடுரமானதுன்னு என் பிரெண்ட் கிட்ட பெட் கட்டியிருந்தேன், நீங்க நிரூபிச்சிட்டீங்க, அதுக்குத் தான் தேங்க்ஸ்"
(பனுஷ்கா கடுப்பாகிறார்)

தர்மப்ரபு பேச்சை மாற்றும் விதமாக, "ரமேஷ், படத்தைத் தியேட்டர்ல தானே பார்த்தீங்க? திருட்டு விசிடில இல்லையே?"

"தியேட்டர்ல தான் சார், அங்க தான் பிரீயாவே கூப்பிட்டு பாரு பாருன்னு சொல்றாங்களே, போதாக்குறைக்கு கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் வேற தராங்க. அது மட்டுமில்லாம திருட்டு விசிடி சங்கத்து ஆளுங்க இந்தப் படத்தை விக்கறதில்லைன்னு முடிவு பண்ணிட்டாங்களாம். ஏன்னா தியேட்டர்லயே ஒருத்தரும் இல்லை, இதை எவன் வாங்கபோறான்னு சொல்லிட்டாங்க"

எல்லோரும் கப்சிப் ஆகவே, அறிவு ஜீவி பேசுகிறார்,, "படத்தோட இன்னொரு ஹைலைட் காமெடி. கார்யாவும் நடிகர் குங்குமமும் சேர்ந்து வர்ற ஸீன் எல்லாம் தியேட்டர்ல செம க்ளாப்ஸ் தான் போங்க"

டிவி தொகுப்பாளினி, "கடைசியா ஒரு நேயர் லைன்ல வரார், ஹெலோ?"

நேயர், "ஹெலோ, நான் கோட்டையிலிருந்து முதலைமச்சர் பேசறேன்"

எல்லாரும் ஷாக்காகி, "ஐயோ மேடம் நீங்களா?"

"உங்க படத்தைத் தான் மனிதர்கள் பாக்கவே லாயக்கில்லைன்னு தமிழக அரசு தடை பண்ணியிருக்கே, அப்புறம் எதுக்கு ப்ரோமோஷன் பண்றீங்க?"

"என்னது தடை பண்ணிட்டீங்களா?"

"அது மட்டுமில்லை, நீங்கல்லாம் டிவில பண்ற ராவடி தாங்க முடியாமத்தான் தமிழ்நாட்டுல எங்கேயும் சோபா செட் போடக்கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்கேனே? அப்புறம் எப்படி நீங்க ஸ்டூடியோவுல கால் மேல கால் போட்டு உக்காந்திருக்கீங்க? உஸ்மான் ரோடு முழுக்க சீல் வெச்ச பிறகும் உங்களுக்கெல்லாம் யாரு ஸ்பான்சர் பண்றது? செக்ரெடரி, உடனே கமிஷனரை விட்டு சேனலுக்கு சீல் வைக்கச் சொல்லுங்க"

"சீலா?" எல்லோரும் தறிகெட்டு ஓடுகின்றனர்.

Jayaraman
New Delhi

Monday, November 21, 2011

இந்தியா - 2020



எவ்ளோ நாளைக்குத் தான் டிராபிக் சிக்னல்ல நிக்கற பிச்சைக்காரங்களையும் ஊனமுற்றவங்களையும் பார்த்து உச்சுக் கொட்டி பரிதாபப் படறது? நான் கடவுள் படத்துல பாலா உண்மையை வெட்ட வெளிச்சமாக் கட்டிட்டார். அதனால இடுக்கண் வருங்கால் நகுகன்னு வள்ளுவர் சொன்ன மாதிரி கொஞ்சம் லைட்டா.....



ஒரு பிரபல தனியார் வங்கியின் கிளை.

விவேக் ஏதோ ஒரு வேலைக்காக அங்கே வந்திருக்கிறார். அவரிடம் ஒருவர் பேனா கேட்கிறார். பேனா கேட்கும் நபரை நிமிர்ந்து பார்த்து அதிர்கிறார்,

"நீயா?.."

"ஆமாம், நானே தான், வாந்தி எடுக்கறவன் எல்லாம் வண்டி எடுன்னு சொல்றான்னு சொன்னீங்களே, அதே பிச்சைக்காரன் தான்"

"டேய், நீ இங்க என்னடா பண்ற?"

"பணம் போட வந்தேன், நீங்க?"

"பணம் வாங்க வந்தேன், ஐ மீன் கடன் வாங்க வந்தேன்"

"இங்க ஏன் வாங்கறீங்க? அநியாய வட்டி வாங்குவாங்களே? நான் தரேன், இவங்களை விட கம்மி ரேட்டுக்கு"

"இந்த பிசினஸ் வேற பண்றியாடா நீ?"

"இதுவும் பண்றேன், ஒரு பத்து நிமிஷம் இருங்க, ஒரு வயர் ட்ரான்ஸ்பர் பண்ணிட்டு வரேன்"

"எல்லாம் உன் நேரம்டா"

பிச்சைக்காரர் வெளியே வருகிறார்.

"சொல்லுங்க சார், உங்களுக்கு எவ்ளோ பணம் தேவைப்படுது?"

"அது இருக்கட்டும், உங்க கிட்ட எப்படி இவ்ளோ பணம்?"

"உழைக்கறோம்ல"

விவேக், "அப்போ நாங்கல்லாம் சும்மாவா இருக்கோம்? நாங்களும் தான் உழைக்கறோம்"

"நீங்க சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க, நாங்க சுய தொழில் செய்யறவங்க"

"என்னது தொழிலா? நீ செய்யறது தொழில்னா டாட்டா பிர்லா அம்பானி இவங்க செய்யறதெல்லாம் என்னடா?"

"நாங்களும் டாட்டா அம்பானி தாங்க. இந்தியன் GDPல எங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கு "

"GDPயா?"

"கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட். இது கூடத் தெரியாதா?"

விவேக், "விட்டா பாலன்ஸ் ஷீட், ப்ராபிட் அண்ட் லாஸ் அக்கௌன்ட் எல்லாம் வெச்சிருப்பே போலிருக்கே?"

"அதெல்லாம் என் ஆடிட்டர் தான் பாத்துக்கறார்"

"இருந்தாலும் பிச்சை எடுக்கறது கேவலம் தானே?"

நீங்க கூட பல சினிமாக்கள்ல பிச்சைக்காரங்களைப் பற்றியும் பிச்சை எடுக்கறதைப் பற்றியும் காமெடி பண்ணியிருக்கீங்க. அப்படின்னா அதெல்லாம் கேவலமா? சிநேகிதனை, சிநேகிதனை - மறந்துட்டீங்களா?

விவேக், "அந்தப் பாத்திரத்தை மறக்க முடியுமா!ஆனா அதெல்லாம் காமெடிக்காக எழுதினது"

பிச்சைக்காரர், "பட் உங்க பொழைப்பு ஓடிச்சுல்ல. ஹிட் ஆச்சுல்ல? யார் தான் சார் பிச்சை எடுக்கலை? நாங்க ஓபனா செய்யறோம், நீங்க மறைவா செய்யறீங்க. அவ்ளோ தான் வித்யாசம்"

"அதுவும் சரி தான்"



"பெரிய பெரிய முதலாளிங்க எல்லாம் கம்பெனி நஷ்டத்துல ஓடுதுன்னு சொல்லிட்டு கவெர்மென்ட் கிட்ட போய் மானியம் குடுங்கன்னு நிக்கறாங்க. அது பிச்சை இல்லையா?. நாங்க ஒண்ணும் ஊரை அடிச்சு உலையில போடலை. மக்கள் அவங்களால முடிஞ்சதை எங்களுக்குத் தராங்க. அத வெச்சு நாங்க பொழைக்கறோம்"

"என்னமா லாஜிக் பேசறே"

"அத்தனையும் உண்மைங்க. நாங்களும் சமுதாயத்துல பெரும்புள்ளிங்க தான். எங்களுக்கும் சுவிஸ் பாங்க்ல அக்கௌன்ட் இருக்கு"

"டேய் என்கிட்டே சுவிஸ் நைப் கூட இல்லையேடா"

"நீங்க கூலிக்கு மாரடிக்கறவங்க, நாங்க சுய தொழில் செய்யறவங்க"

"மறுபடியும் தொழில்னு சொல்லாதேடா"

"ஏங்க சொல்லகூடாது? அரசாங்கமே தீவிரமா யோசிச்சிக்கிட்டிருக்காங்க"

"எதைப்பத்தி?"

"எங்களைப் பற்றித்தான். இதை ஒரு முறையான தொழிலா அறிவிச்சு தேசிய அளவுல ஏலம் விட்டு லைசென்ஸ் கூட குடுக்கப் போறாங்க"

"எதுக்கு லைசென்ஸ்?"

"பிச்சையெடுக்கத் தான். நான் கூட கம்பெனி பார்ம் பண்ணிட்டேன்"

"கம்பெனியா?"

"ஆமாங்க, முன்ன மாதிரி அங்க இங்க ஓடி பிச்சை எடுக்க முடியல. இப்படி ஒரு கம்பெனி ஆரம்பிச்சு லைசென்ஸ் வாங்கிட்டோம்னு வைங்க, அப்புறம் என் staff போய் பிச்சை எடுத்துட்டு வருவாங்கல்ல "

"அடேங்கப்பா, நான் உன்னை என்னமோ நினைச்சேன், ஆனா உன் ரேஞ்சே வேறயா இருக்கு. ரொம்ப விவரமாத்தான் இருக்கே"

"இல்லேன்னா தொழில் பண்ண முடியுமா?"

"வேறேன்னெல்லாம் ஐடியா வெச்சிருக்கே?"



கவெர்மென்ட் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி குடுத்தாங்கன்னா ஒரு வெளி நாட்டுக் கம்பெனிய என் கூட பார்ட்னரா சேர்த்துக்குவேன். அப்புறம் IPO மூலமா என் கம்பெனிய பப்ளிக் லிமிடெட் கம்பெனியா மாத்திடுவேன்.

"இப்பவும் உன் கம்பெனி பப்ளிக் தயவுல தானேடா ஓடுது?"

அப்புறம் ஒரு பெரிய இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கணும்

"யாருக்கு?"

"பிசைக்காரங்களுக்குத் தான்"

"எதுக்கு"

புதுசா பிச்சை எடுக்க வர்றவங்களுக்கு அங்க ட்ரைனிங் குடுக்கணும்.

"என்ன ட்ரைனிங் குடுப்பே?"

"எல்லா மொழிகள்லயும் பிச்சை எடுக்கறது எப்படி, போலீஸ் மற்றும் ரவுடிகளை ஹேண்டில் செய்வது எப்படி, ரக வாரியா பைசாவை எப்படி சீக்கிரம் எண்றது, பார்த்தா சட்டுன்னு அருவருப்போ இல்லை பரிதாபமோ வர்ற மாதிரி எப்படி மேக்கப் போடறது - இப்படி நிறைய விஷயம் யோசிச்சு வெச்சிருக்கேன். குறிப்பா மேக்கப்புக்கு கமல் சாரை டிரைனராப் போடலாம்னு ஒரு ஐடியா இருக்கு.

"அட அட அட, இளைஞர்களே, நோட் பண்ணுங்கப்பா"

இன்னும் கேளுங்க. மக்கள் போன் பண்ணினாப் போதும். டோல் ப்ரீ நம்பர் தான். நாங்களே வீடு தேடி போய் பிச்சை வாங்கிப்போம். மொபைல் மூலமாவும் எங்களுக்கு பிச்சை போடலாம். ஒரு சின்ன அப்ளிகேஷன் டவுன்லோட் பண்ணிக்கிட்டாப் போதும். ரெகுலரா பிச்சை போடறவங்களுக்கு நாங்க பாயிண்ட்ஸ் குடுப்போம். அதை அவங்க ஷாப்பிங் பண்ணும்போது ரீடீம் பண்ணிக்கலாம். இல்லேன்னா வருஷ முடிவுல அவங்களுக்கு சர்டிபிகேட் தருவோம், அதைக் காட்டி வருமான வரிலேர்ந்து விலக்கு வாங்கிக்கலாம்.




விவேக், "ஆஹா, நான் ஒரு காலத்துல காமெடியா சொன்னதெல்லாம் இப்ப நிஜமாலுமே நடக்கும் போலிருக்கே?"

"இது என் கனவுங்க. கனவு காணுங்கள்னு அப்துல் கலாமே சொல்லியிருக்காரே, உங்களுக்குத் தெரியாததா?"

விவேக், "உனக்கும் அவர் தான் ரோல் மாடலாடா? பாவம்டா அவரு. ஏற்கனவே கூடங்குளம் மேட்டர்ல மாட்டிகிட்டு மனுஷன் முழிக்கறாரு. இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப பீல் பண்ணுவாரு"

இதற்கிடையில் பிச்சைக்காரரின் போன் ஒலிக்கிறது. எடுத்துப் பேசுகிறார். "சொல்லுங்க தலைவரே, ஒஹ் அப்படியா? கண்டிப்பா, நாளைக்கே உங்க ஆளுங்களை அனுப்பி வாங்கிக்கோங்க"

பின்னர் விவேக்கைப் பார்த்து, " நாக்கமுக்க கட்சிலேர்ந்து பேசறாங்க. இடைத்தேர்தல் வருதாம், தேர்தல் நிதி வேணுமாம், வந்து வாங்கிக்கோங்கன்னு சொல்லியிருக்கேன். பிச்சைக்காரப் பசங்க, என்கிட்டயே பிச்சை கேக்கறாங்க"

"உங்ககிட்ட தானே ரெகுலரா இன்கம் வருது, அதுவும் டாக்ஸ் ப்ரீ. அதனால தான் கேக்கறாங்க"

"எங்கெங்க வருது? முன்னாடியெல்லாம் மக்கள் கிட்ட காசு கம்மியா இருந்திச்சு. ஆனாலும் நிறைய தர்மம் பண்ணினாங்க. இப்ப காசு நிறைய இருக்கு. ஆனா மனசு சின்னதாயிடுச்சு. எல்லாம் சுயநலவாதியா ஆயிட்டாங்க. அந்த அளவுக்கு போட்டி பொறாமை. அவங்களையும் தப்பு சொல்ல முடியாது. எல்லாரும் நித்ய கண்டம் பூரண ஆயுசுன்னு வேலை இன்னிக்கு போவுமோ நாளைக்கு போவுமொன்னு இருக்காங்க. போதாக்குறைக்கு என்னமோ சொல்றாங்களே, ரேஷனோ ரெசெஷனோ, அது வேற வந்திருக்காம். அரசாங்கமும் புதுசா தொழில் எதுவும் கொண்டு வரமாட்டேங்கறாங்க. எவ்ளோ நாளைக்குத் தான் கம்பியூட்டரை வெச்சு ஓட்டறது சொல்லுங்க? மக்கள் சம்பாதிச்சாத் தானே நாங்க சம்பாதிக்க முடியும்.

நீ சொல்றதை எகனாமிக் டைம்சிலேயே பப்ளிஷ் பண்ணலாம் போலிருக்கே!"

"போன வாரம் என்னோட இண்டர்வியூ வந்திச்சே, பாக்கலியா நீங்க?"

"ஆ, போதும்டா போதும்டா, என்னால இதுக்கு மேல தாங்க முடியாது"

பிச்சைக்காரர் சிரித்துக் கொண்டே, "அது சரி, உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லவே இல்லையே?"

"எனக்கு ஒரு 5 லட்சம் வேணும்"

"அவ்ளோ தானா? ஒரு நிமிஷம் இருங்க"

தன் ஐபோன் மூலம் விவேக்கை போட்டோ எடுக்கிறார். பிறகு போனில் அவரது கை ரேகையையும் எடுத்துக் கொள்கிறார்.

"டேய் என்னாங்கடா இது, புதுசா இருக்கு?"

பொறுங்க என்று சைகையில் காட்டிவிட்டு ஏதோ நாலைந்து முறை போனை தட்டுகிறார். பிறகு யாரிடமோ பேசுகிறார். "டேய் மாரி, டீடைல்ஸ் அனுப்பியிருக்கேன். சாருக்கு ஒரு 5 லட்சம் கேஷ் வீட்ல டெலிவர் பண்ணிடு, ஓகேவா?

விவேக் பிச்சைக்காரரைப் பார்த்து, "நீ என்கிட்டே எந்த விவரமும் கேக்கலையே, அப்புறம் எப்படி எனக்குப் பணம் கிடைக்கும்?"

பிச்சைக்காரர், "அதான் உங்க போட்டோ அண்ட் ரேகை இருக்குல்ல, அதை வெச்சு கண்டுபிடிச்சிடுவோம். நீங்க பணம் திருப்பிக் கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா ஜஸ்ட் ஒரு மிஸ்டு கால் குடுங்க, நாங்களே வந்து கலெக்ட் பண்ணிக்குவோம் - கஸ்டமர் சர்வீஸ் ரொம்ப முக்கியம் இல்லையா?"

"நீங்க இப்படியெல்லாம் பயன்படுத்துவீங்கன்னு முன்னமே தெரிஞ்சு தானோ என்னமோ, ஸ்டீவ் ஜாப்ஸ் சீக்கிரமே போயிட்டாரு. சரி, நான் உங்களை ஏமாத்திட்டு ஓடிட்டா?"

அதான் முடியாது. எங்க டேட்டாபேஸ் ரொம்ப ஸ்ட்ராங். இந்தியாவுல இருக்குற எல்லா பிச்சைக்காரங்க கிட்டயும் உங்க போட்டோ இருக்கும். நீங்க எங்களை ஏமாத்திட்டு எங்கேயும் ஓட முடியாது. ஏன்னா நாங்க தான் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், ஏர்போர்ட்னு எல்லா இடத்துலயும் இருக்கோமே!

"ஆமாம், கடவுள் இருக்காரோ இல்லையோ, கண்டிப்பா நீங்க எல்லா இடத்திலயும் நீக்கமற நிறைஞ்சிருக்கீங்க.

அப்படியும் மீறி நீங்க பிரச்சினை பண்ணினா, இருக்கவே இருக்கு ஆபீஸ் ரூம்"

"ஆபீஸ் ரூமா?"

"எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச ஆபீஸ் ரூம் தான் சார்"

"ஆஹா, அந்த ஆபீஸ் ரூமா? ஐ ஆம் எஸ்கேப்"

Tuesday, November 15, 2011

இதைப் படிக்காதீங்க



கொச்சின் அணி வெளியேறிய பிறகு அந்த இடத்தைத் தக்க வைத்தக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பல தென்னிந்திய நடிகர்கள் ஏழுமலையானுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தகவல்.

சாதனை சதம் தொடர்ந்து நழுவிப் போவது சாதனை நாயகனை மிகவும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. புதிய வீட்டின் அமைப்பு குறித்து வாஸ்து நிபுணர்களை மீண்டும் ஒருமுறை கல்சல்ட் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம்.

டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டை ப்ளாக்கில் விற்ற விவகாரம் தலைவர் காதுக்கு எட்டியிருக்கிறது. பார்ட்டி சூடாவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு "இப்படி ஒரு யோசனை நமக்கு வராம போச்சே" என்று ஷாக் குடுத்து வருகிறாராம்.

இந்திய வீரர்கள் மாறி மாறி செஞ்சுரி அடித்தும் கொல்கத்தா மைதானம் காலியாக இருப்பது அசோசியேஷன் அதிகாரிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. எனினும் அடுத்த இரண்டு நாட்களில் கூட்டம் கூடும் என்று நம்பிக்கையோடு இருப்பதாக கொல்கத்தாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட்டை வைத்து திரையில் சீட்டு விளையாடிய இயக்குனருக்கு நிஜத்திலும் அப்படி விளையாட ஆசை வந்து விட்டதாம். அநேகமாக அடுத்த IPLக்கு தம்பியுடன் மும்பையில் டேரா போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அடுத்தடுத்து நண்பர்கள் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவதில் பஞ்சாப் ராஜாவுக்கு ஏக வருத்தமாம். சீக்கிரம் தனக்கும் யாராவது கழுத்தை நீட்ட மாட்டார்களா என்று ஏங்கிப் போயிருக்கிறாராம். மைதானத்தில் தொடரும் சொதப்பல்களுக்கும் இதுவே காரணமாம்

திருமணமான அன்றே கிரிக்கெட் விளையாடச் சென்ற "வெற்றி" வீரரை அனைவரும் பெருமையுடன் பார்த்தாலும், அன்றைய தினம் சாந்தி முகூர்த்தத்துக்கு உகந்ததில்லை என்று ஜோதிடர் கூறியது தான் முக்கிய காரணம் என்கின்றனர் நெருங்கியவர்கள்.

மேட்ச் பிக்சிங் விவகாரத்தை முழுதாக விசாரிக்காமல் திடுமென முடித்து தீர்ப்பு வழங்கியிருப்பதாக பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்கள் குமுறி வருகின்றனர். முழுதாக விசாரித்தால் அணியின் என்றும் இளமையான வீரர் முதல் அமைச்சர் வரை பலரின் தலை உருளக் கூடும் என்பதே முக்கிய காரணம் என்கின்றனர் அவர்கள்.

தென்னாப்பிரிக்காவில் நடந்த தடாலடி டெஸ்ட் போட்டியில் ஐசிசியின் கைங்கர்யம் இருப்பதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். டெஸ்ட் போட்டியை விறுவிறுப்பாக்க இரண்டு அணிகளையும் சரி கட்டியதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இயந்திர மனிதன் எடுத்த கோடி இயக்குனர் கிரிக்கெட்டில் நடக்கும் திரைமறைவு சம்பவங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டு வருவதாகக் உதவி இயக்குனர் வட்டாரம் தெரிவிக்கிறது. அநேகமாக மேட்ச் பிகிசிங்கை மையமாக வைத்து அடுத்த படம் எடுக்கக் கூடும் என்பது கொசுறு தகவல்

விளையாட்டு மந்திரி பிசிசிஐயுடன் தொடர்ந்து விளையாடி வருவது ஏழுமலையானை உச்சகட்ட கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இருப்பினும் தற்போதைக்கு சாந்தமாக இருக்குமாறு "சக்தி" மந்திரி அறிவுறுத்தி வருவதாக நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

கங்காரு அணி மோசமாக விளையாடினாலும் வாரியம் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக சிட்னி செய்திகள் தெரிவிக்கின்றன. இதைச் சாக்காக வைத்து அணியில் அதிரடியாகக் களை பிடுங்க திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக முன்னாள் கேப்டனுக்கு செக் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"சுவர்" வீரர் தொடர்ந்து டெஸ்டில் வீடு கட்டி அடிப்பது கிரிக்கெட் பிரியர்களையும் இளம் வீரர்களையும் மிகவும் உற்சாகமூட்டியுள்ளது. இந்த வயதிலும் அவர் மன உறுதியோடு விளையாடுவது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Wednesday, November 9, 2011

நான்கு கில்லாடிகள்


இப்போதைய சென்சேஷன் மேட்ச் பிக்சிங் தான். அந்த கோர்ட் ரூம் டிராமாவைக் கொஞ்சம் வேற விதமா யோசிச்சா...?

நீதிபதி, " முதலில் ஆசிப்பை அழையுங்கள்"

ஆசிப், "வணக்கம் துரை, ஏன் சார், நமக்கு இதானே லாஸ்ட் மீட்டிங்?"

நீதிபதி, "குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா? ஏன் இப்படிச் செய்தீர்கள்?"

"நீங்களும் நிறைய தடவை கேட்டுட்டீங்க. நானும் நிறைய தடவை சொல்லிட்டேன். மறுபடியும் சொல்றேன்" என்று கூறி தொடர்கிறார்.

"மஜார் மஜீத் மஜார் மஜீத்னு ஒரு புரோக்கர் பய எங்க ஊர் கிரிக்கெட் போர்டோட ரொம்ப நாள் நெருங்கி பழகறதா எங்க ஊர்ல பேசிக்கிட்டாங்க. எனக்கு உடனே கோவம் வந்து அந்த ஆள் சட்டையைப் பிடிக்கப் போனேன். அதுக்கு அவன் "பணத்தை நீ வெச்சுக்க, கிரிக்கெட்டை நான் வெச்சுக்கறேன்னு" கூலா ஒரு பதில் சொன்னான். பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்திச்சு.

நீதிபதி, "இவ்ளோ கேவலமான கதையை எவ்ளோ தடவை தான் சொல்வே?"

"அதான் கேவலம்னு தெரியுதுல்ல, அப்புறம் திரும்பத் திரும்ப விசாரணைன்னு கூப்பிட்டு ஏன் தாலியை அறுக்கறீங்க? சீக்கிரம் கேட் பாஸ் குடுத்து அனுப்பி விடுங்க"

நீதிபதி, "ஒரு வருடம் ஜெயில் தண்டனை, நீங்க போகலாம்"

ஆசிப், "ஒரு வருடமா?". பிறகு போலீஸ் அதிகாரியைப் பார்த்து, "என் செல்லுக்குப் பக்கத்துல லேடீஸ் ஜெயில் இருக்கும்ல? ஏன்னா போரடிக்கும் பாருங்க, அதான் கேக்கறேன்"

போலீஸ் அதிகாரி, "அந்த கவலை உனக்கு வேண்டாம், நாங்க பார்த்துக்கறோம்"

அடுத்து மிஸ்டர் மஜார் மஜீத்:

"மிஸ்டர் மஜார், இந்த மொத்த ஆபரேஷனுக்கும் நீங்க தான் பொறுப்புன்னு ஒத்துக்கறீங்களா?"

"என்ன பெரிய ஆபரேஷன், கார்கில் யுத்தமா பண்ணினேன்? ஏதோ புக்கீங்களுக்கு நாலு காசு சம்பாதிச்சு கொடுத்தேன், நாலு ஏழை வீரர்களுக்கு வாழ்வு கொடுத்தேன், அப்படியே நாலு காசு நானும் பார்த்தேன். இதெல்லாம் ஒரு குற்றமா?"

"தான் செய்யறது தப்புன்னே தெரியாத அளவுக்கு உங்களுக்கெல்லாம் மரத்துப் போயிடுச்சுல்ல?"

"யோவ் பெரிசு, இங்கென்ன ஷங்கர் படம் ஷூட்டிங்கா நடக்குது? இந்தியன் தாத்தா மாதிரி பீல் பண்றே, சீக்கிரம் கடையை மூடு, ஏகப்பட்ட வேலைகள் இருக்கு"

நீதிபதி, "இரண்டு வருடம் மற்றும் எட்டு மாதம் ஜெயில் தண்டனை"

மஜார், "இம்புட்டு தானா?, இதுக்குத் தான் ஒரு வருஷமா என்னை கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய விட்டீங்களா?, உங்களால எனக்கு வருமானம் போச்சுன்னு உங்க மேல மான நஷ்ட வழக்கு போடறேன்"

அருகிலிருக்கும் போலீஸ் அதிகாரி மஜாரை முறைக்கவும், மஜார் "என்னடா லுக்கு, ஒழுங்கா ஜாக்கிரதையா ஜெயிலுக்கு கூட்டிட்டுப் போ. கேர்ல்பிரெண்ட் என்னைப் பார்க்க வரும்போது மூஞ்சி பளிச்சின்னு இருக்கணும்.

நீதிபதி, "சல்மான் பட், நீங்க வரலாம்"

நீதிபதி, "மிஸ்டர் சல்மான், உங்க மேல வைக்கப்பட்டிருக்கற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்றீங்க?, இது உங்களுக்கு நாங்க தர்ற கடைசி சான்ஸ்"

சல்மான், " நீதிமன்றம், எவ்வளவோ வித்யாசமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இது அதிவித்யாசமான வழக்கு. நோ பால் வீசச் சொன்னேன், வைடு போடச் சொன்னேன், கேட்ச் தவற விட்டேன், அதுவும் பணம் வாங்கிகொண்டு - குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.

பணம் வாங்கினேன், லாஹூரில் அடுக்கு மாளிகைகள் கட்டுவதற்காகவா? இல்லை, இஸ்லாமாபாத்தில் இடுப்பொடிந்த என் தாயாருக்கு வைத்தியம் பார்ப்பதற்காக.

நோ பால் போடச் சொன்னேன், எதற்காக? அவன் ஒழுங்காக பால் போடுவது பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை, ஒழுங்காகப் போட்டால் கேட்ச் பிடிக்க வேண்டி வருமே என்ற பீதியால்.

வைடு போடச் சொன்னேன், எதற்காக? டைவ் அடித்துப் பிடிப்பதற்காகவா? இல்லை, பேட்ஸ்மேன் அடித்தால் ஆறு போய்விடுமே என்ற அச்சத்தினால். கேளுங்கள் என் கதையை.

பாகிஸ்தானில் பிறந்த எல்லாருக்கும் பிறக்க ஒரு ஊர், பணம் இழக்க ஊர், பிறகு அதைக் கறக்க ஒரு ஊர். இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? கிரிக்கெட் கனவுகளுடன் இஸ்லாமாபாத் வந்தேன்.

கிரிக்கெட் போர்டு அலுவலகத்தில் நுழையவே அனுமதிச் சீட்டுக்குக் காசு வாங்கினார்கள், குடுத்தேன். அதிகாரிகளைப் பார்ப்பதற்கும் காசு வாங்கினார்கள், குடுத்தேன். வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் அணியில் நுழைய வைக்கிறேன் என்றார்கள். அதற்கும் குடுத்தேன். நான் மேட்ச் விளையாட வேண்டுமென்றால் அவர்களுக்குக் கட்டிங் தரவேண்டும் என்றார்கள் - தந்தேன். இப்படி ஒவ்வொரு இலாகாவாக இந்த சல்மானின் "பட்"டிலிருந்து ரத்தம் வரும் வரைக்கும் வாங்கிக்கொண்டே இருந்தார்கள்.

கிரிக்கெட் வாரியம் என் பணத்தைப் பதம் பார்த்தது. - ஓடினேன்

சீனியர் வீரர்கள் ப்ராக்டீஸ் என்ற பெயரில் பவுண்டரி வரை பல முறை என்னை ஓட ஓட பீல்டிங் செய்யச் சொன்னார்கள் - ஓடினேன்,

செலெக்ஷன் கமிட்டி என்னைக் கபாபும் குருமாவும் வாங்கித் தருமாறு விரட்டினர் - ஓடினேன்.
பிட்சில் கூட நான் அந்த அளவுக்கு ஓடியதில்லை.

ஓடினேன் ஓடினேன் ஓடினேன், தேம்ஸ் நதிக்கரை வரை ஓடினேன். அங்கே மஜார் மஜீத் இருந்ததால் நின்று விட்டேன்.

"ஓடினால் ரன் தான் கிடைக்கும், ஓடாமல் நின்றால் பணம் கிடைக்கும்" என்றார்.

"கேட்சைத் தவற விடு, உன் வாழ்க்கை சரியாகும்" என்றார்.

"நோ பால் வீசு, அந்த நோபெல் பரிசையே விலைக்கு வாங்கலாம்" என்றார்

"வைடாக வீசு, உன் வாழ்க்கை வசதிகள் விரிவடையும்" என்றார்
அவமானம், பணம், நாடு, மனசாட்சி - இறுதியில் பணமே வென்றது.

நீதிபதி, "அப்போ இது தப்புன்னு தெரிஞ்சே பண்ணியிருக்கீங்க?"

"இங்கு எல்லாமே தப்பு, எல்லாரும் தப்பு. சுறா மீன்கள் சிறு மீன்களை விழுங்குவது போல் சில பெரிய பண முதலைகள் எங்களைப் போன்றவர்களை முழுங்கிவிடுகின்றனர். ஒன்றை நினைவிற் கொள்ளுங்கள் நீதிபதி அவர்களே, உங்கள் வலை சிறியது. அதில் நான் கூறிய சுறா மீன்கள் சிக்காது."

நீதிபதி, "உன்னால் உன் நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?"

சல்மான் சிரித்துக் கொண்டே, "அவமானம் என் நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே அனைத்து பாகிஸ்தானியர்களும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப் பட்டுவிட்டனர். இலங்கை வீரர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதி மானம் பறி போனது. பாப் வூமர் மேற்கிந்தியத் தீவில் ரத்த வெள்ளத்தில் மிதந்த போது மீதி மானமும் மறைந்தது."

நீதிபதி, "உனக்கு தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது"

"அதற்கு முன்னாள் உங்களிடம் ஒரு கேள்வி. இதே ஒரு வெள்ளை கிரிக்கெட் வீரர் மேட்ச் பிக்சிங்கில் மாட்டியிருந்தால் அப்பொழுதும் உங்கள் விசாரணை இப்படித் தான் இருக்குமா? நன்றாக யோசித்து விட்டு தீர்ப்பு எழுதுங்கள்"

"கண்டிப்பாக, ஹன்சி குரோனே கதை தெரியாதா உனக்கு?"

"அதனால் தான் கேட்கிறேன், அவர் எப்படி இறந்தார் என்பது இன்று வரை ரகசியமாகவே இருக்கிறதே! முரளிதரன் எங்கே ஷேன் வார்னை முந்தி விடுவாரோ என்ற பயத்தில் அவரின் பௌலிங் திறமையை மீண்டும் மீண்டும் சோதித்தீர்கள். ஆசியர்களுக்கெதிரான ஐசிசியின் இந்த இனவெறித் தாக்குதல் என்று தான் அடங்குமோ!"

"என்ன பிதற்றுகிறாய்? நீ கூறுவதற்கும் இந்த கேசுக்கும் என்ன சம்பந்தம்?"

"அது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியும்"

நீதிபதி, "முப்பது மாதங்கள் சிறைத் தண்டனை"

சல்மான் சிரித்துக் கொண்டே, "வாழ்க்கையே சிறை, வருகிறேன் கனவான்களே"

அடுத்து டவாலி அமீரை அழைக்கிறார்.

டவாலி, "அமீர், அமீர், அமீர்"

நீதிபதி, "மேட்ச் பிக்சிங்க்ல நிஜமாவே பணம் வாங்கினியா?"

அமீர், "என்ன பணம் வாங்கினியா?"

"இல்லப்பா, நீ காசு வாங்கிட்டு விளையாடினதா சொல்றாங்களே!"

"என்ன காசு வாங்கிட்டு விளையாடினதா சொல்றாங்க?"

"தம்பி, நீ உன் நாட்டுக்கு பெரிய கெட்ட பேரை உண்டாக்கியிருக்கியே, அதை சொல்றேன்"

"என்ன பெரிய கெட்ட பெயர் உண்டாயிடுச்சு?"

"ஏற்கனவே கிரிக்கெட்டுக்கும் மேட்ச் பிக்சிங்குக்கும் வாய்க்கா தகராறு இருக்கு"

"என்ன வாய்க்கா தகராறு இருக்கு?"

நீதிபதி கடுப்பாகி, "நீ ஜட்ஜா நான் ஜட்ஜா?"

"என்ன நீ ஜட்ஜா நான் ஜட்ஜா?"

"டேய், உனக்கு 20 வருஷம் ஜெயில் தண்டனை, போயிடு"

போலீஸ் அதிகாரி குறுக்கிட்டு, "ஐயா, இவனை 20 வருஷம் ஜெயிலில் வெச்சிருந்தா எங்க நிலைமை என்னாவும்? பார்த்து செய்ங்க"

நீதிபதி, "ஆறு மாசம், ஒழிஞ்சு போ"

அமீர், "என்ன ஆறு மாசம்?"

நீதிபதி டென்ஷனாகி கத்தியபடியே கோர்ட்டை விட்டு தலை தெறிக்க ஓடுகிறார், கோர்ட் கலவரமாகிறது.

Greatness can be Humble... Can't be Subtle

India won the First Test with a day to spare. I’m glad we drew the first blood but the performance in home territory is far too convincing due to first innings debacle. Since we analyzed the episode far too much let’s move on. Now, “Did India just demonstrate the bounce backability or West Indies lacked the aptitude to surrender India after securing the first round?
Funny huh!!! First I wanted India to win and now I validate the feat.

It is very sad to watch the Master reaching a major milestone in front of empty audience. Lucky I witnessed the moment on TV. This reminds me a sweet memory from the past. Not sure the timeline precisely, but surely a decade years ago the least, around Diwali time, when New Zealand was on tour to India. The match was played at Chepauk Stadium, India won the toss and batted first but not much of play possible due to rain. When the pitch and conditions improved for any play on the afternoon of third day, the stands started filling pretty fast. Mind you everyone knew the game is not going to bring any result, but flocked the stadium just for a session to see the master sizzle. Much to the expectation Tendulkar served the fans appetite with a stylish half century. Mind you, we all ran to the stadium to get a glimpse of Tendulkar in a No Result game. Today watching the maestro reaching 15000 runs in empty stands hurts me badly. There could be several reasons for the poor turnout (skipping the analysis for your convenience) but if your son is playing a game out there and is in verge of achieving a major milestone won’t you be there to cheer him (if not witness the history for yourself)??? Sometimes no matter what the reason, it will be a good gesture to cheer the countries favorite son (or anybody) when they reach an important milestone. Am I over reacting??? Never mind. 

For once, Mumbai Cricket Association is doing all possible to get the crowd so as there are souls to cheer the 100th ton. Between, did Tendulkar on purpose miss his C at Delhi so as he doesn’t embarrass himself? Pl excuse, greatness can be humble but can’t be subtle. So I’m certain to see the biggie coming in front of a packed stadium and thousands of fans take privilege of witnessing the moment.

On the positives, good to see India breeding the new age cricketers. Also it is heartening to see the young spinners cashing the opportunity with commendable performance and prolong Harbhajan’s comeback. At the same time it is disappointing to watch seasoned pro like Yuvi wasting opportunities. Though his place is on the line, he could still feel secured of a spot throughout the series. Anyways, wish to see India winning the remaining Tests inside 5 days (BUT BATTING ONLY ONCE).

Somewhere in another part of the world there is another Test series between Australia and South Africa currently in progress. Once again it is disappointing to know it is only 2 Test Series. On paper, South Africa looks to be a better side in all aspects compared to Australia whose bowling seems to be a letdown. In reality, Australia has more match practice compared to South Africa. This should be an intriguing contest for true cricket fans.

Bottom line: A Tendulkar walking on the streets would attract more crowd than the Tendulkar in action during a Test Match at an Indian venue. Even Tendulkar could not save the game, time BCCI take good note of it.

Dinesh
Cricket Lover


PS: There is little happening in my professional life. So I might take a little break from sharing my views. Until then Jai should thrill you with his witty stuffs.

Monday, November 7, 2011

200 ALL OUT... INEXCUSABLE!!!


Cricket is a game of surprises. I’m sure every Indian fan must have experienced it today after India performed dismally on the second day of the first test match at home against a spineless attack.

For starters let me clarify my idea of the Test Match prior to the commencement. I expected a dry Kotla pitch, anticipated India to bat only once and perceived the game to finish inside four days with an India win. Looks like 2 out of 3 readings are certain to turn true, while the one that failed is not digestible by any means. At the same time one can’t ignore the devil in the pitch especially when 17 wickets fall on the same day. Of course these are specially doctored conditions that are demons for visitors and heavens for hosts. And India is expected to put better show when they are not dealing the likes Murali or Warne or Donald in the opposition ranks. But, 200 all out... INEXCUSABLE!!!

Now that set and done, what explains India’s poor show with the bat? Are the batsmen still in T20 mode?
Many might actually buy this, for some reasons I don’t want to blame T20, though I agree the format has big impact on Test cricket. Half the batmen in the XI namely Tendulkar, Dravid, Laxman are not actively involved in the format at all. So definitely can’t blame T20 entirely for the debacle. However it is very evident Tendulkar is yet to recover from the bout of failures, Dravid succumbed yet again for running out of partners and Laxman lost himself to low bounce. That leaves Sehwag, Gambir, Yuvraj performances to debate. The case of Sehwag Test, ODI or T20 he plays the same way and more over this game/series is sort of comeback for the Trio in order to be in shape for the big boys show down under. Today, Sehwag got out to a bizarre stumping episode, Gambir for holding the bat in the wrong hands and Yuvraj on the softer side. That leaves us to blame Dhoni and tail for the poor show. I opine the batmen’s reckless attitude to decimate WI has put the team in a spot of bother ahead of T20 cricket. Except the big 3, the remaining batsman showed a sense of urgency to dominate WI. Anyways, today’s show must have shaked India for good. I still want to believe the hosts will bundle the guests inside 150 and end up chasing 250 successfully.

Though it is wise to accept Indian standards deteriorating steeply, I’m curious to know if the ability to RISE still exists. Like, the Australian Cricket may have declined, but Australians continue to win. When India wins the test match and going forward display the attitude to bat 5 day cricket, it is still hope for Indian Cricket and this jerk could be pardoned.

Bottom line: Some part of my brain still asks, “Is it a lame BCCI gimmick to generate curiosity of the fans to follow Test Cricket?

Dinesh
Cricket Lover

Thursday, November 3, 2011

ஐ, எனக்குக் கல்யாணம்.....



கவுதம் கம்பீர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி.

எல்லோரும் கூடிக் குலாவிக் கொண்டிருக்க, யுவராஜ் மட்டும் "தனியே தன்னந்தனியே" என்று ஓரமாக ஒதுங்கியிருக்கிறார்.

ஸ்ரீசாந்த், "இங்க என்னய்யா பண்றே? அங்க எல்லாரும் உன்னை போட்டோ செஷனுக்காகத் தேடிக்கிட்டிருக்காங்க. ஆமாம், உன் மூஞ்சி ஏன் இப்படி வாடியிருக்கு? ஜாமீன் கிடைக்காத கனிமொழி மாதிரி"

"அட போய்யா, மனசே சரியில்ல"

"என்ன யுவி, என்ன ஆச்சு?"

"ஒரே வெறுப்பா இருக்கு, எதுவும் புடிக்கல"

ஸ்ரீசாந்த் புன்னகையுடன், "உனக்கும் கல்யாண ஆசை வந்திருச்சு போல. கவலையை விடு, ஒரு நல்ல புரோக்கர் இருக்கான். நாளைக்கு அவனைக் கூட்டிக்கிட்டு வரேன், நாம போய் பொண்ணு தேடுவோம். இப்போ எழுந்திருச்சு வா - கொஞ்சம் சிரிச்ச முகமா வா"

"ஹிஹிஹி"

"இதுக்கு சின்னக் கௌண்டர் மனோரமாவே பெட்டர்" "

Next day morning:
யுவி டிப் டாப்பாக டிரஸ் பண்ணிக் கொண்டு வீட்டு வாசலில் காத்திருக்கிறார். ஸ்ரீசாந்த் கார் அவர் அருகில் வந்து நிற்கிறது.

"ஏறு, வா போகலாம்"

யுவி காரில் யாரையோ தேடியவாறே, "யாரோ புரோக்கரைக் கூட்டிட்டு வரேன்னு சொன்னே, நீ மட்டும் வந்திருக்கே?"

ஸ்ரீசாந்த், "எல்லாருக்கும் அவங்களோட நெருங்கிய நண்பன் தான் முதல் புரோக்கர். அந்த வகையில் நான் தான் உனக்கு புரோக்கர். சீக்கிரம் ஏறு”

ஸ்ரீசாந்த் வண்டி ஒட்டியவாறே, "நீ பாட்டுக்கு பிக் அப், டிராப், எஸ்கேப்னு நல்லாத்தானே இருந்தே, திடீர்னு என்ன கல்யாண ஆசை?"

யுவி, "முன்ன மாதிரி எவளும் சரியா சிக்க மாட்டேங்கராளுங்க. கிரிக்கெட்லயும் எப்பவாச்சும் தான் சான்ஸ் கிடைக்குது, வயசு வேற ஏறிக்கிட்டே போகுது, அதான்"

"வயசு ஏறுதோ இல்லையோ, தொப்பை ஏறிக்கிட்டே போகுது, யுவி தொப்பையைக் குத்தியவாறே, "இங்க பாரு, உடம்பு டெல்லி வர்றதுக்கு முன்னாடி தொப்பை சிம்லாவுக்குப் போகுது"



"இன்னும் ரெண்டே மாசம் தான், அப்புறம் பாரு"

ஸ்ரீசாந்த், "என்ன குழந்தை டெலிவெரி பண்ணிடுவியா?"

"மொக்கை போடாதே, ஸ்ட்ரிக்ட் டயட்ல இருக்கேன், எப்படி ஸ்லிம் ஆகறேன்னு பாரு. தினமும் ரெண்டு டேப்லட் revital சாப்பிடறேன்"

"அடப்பாவி, நீ வீணாப் போனதுக்குக் காரணமே அந்த மாத்திரை தான். என்னிக்கு அதுக்கு விளம்பரம் பண்ண ஆரம்பிச்சியோ அன்னிக்கு புடிச்சுது சனி உன்னை"

"எங்க ஊர் கம்பெனிப்பா. அது சரி, இப்ப நாம எங்க போறோம்?"

பொண்ணு பாக்க. சரி, உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?"

"அழகா, படிச்சவளா, புத்திசாலியா, குடும்பபாங்கா..."

ஸ்ரீசாந்த் இடைமறித்து, "உனக்கு ஒரு பொண்டாட்டி வேணுமா இல்லை 4 -5 எதிர்பாக்கறியா?"

"இப்போதைக்கு ஒண்ணு தான்"

"அப்போ இதுல எதாச்சும் ஒண்ணு தான் கிடைக்கும்". காரை ஒரு அபார்ட்மென்டில் நுழைத்து பார்க்கிங்கில் நிறுத்துகிறார்.

யுவி கலவரமாகி, 'டேய், இங்க ஏண்டா வந்தே, இங்க யார் இருக்காங்கன்னு தெரியும்ல?"

"தெரியும், எப்பவுமே தெரிஞ்சவங்ககிட்டேர்ந்து தான் ஆரம்பிக்கணும்"

ஸ்ரீசாந்த் காலிங் பெல்லை அழுத்தவும், கதவு திறக்கிறது - சித்தார்த் மால்யா நிற்கிறார்.

"நீங்க எங்க இங்க வந்தீங்க?"

"தீபிகாவைப் பார்க்க. கொஞ்சம் பெர்சனலாப் பேசணும்"

சித்தார்த், "தீபி, உன் முன்னாள் தோஸ்த் வந்திருக்கார், வந்து என்னன்னு கேளு"

யுவி ஸ்ரீயிடம், "என்னடா, இந்த முள்ளம்பன்னித் தலையன் இங்கயே டேரா போட்டிருக்கானா?

ஸ்ரீ, "அவன்கிட்ட முள்ளங்கி பத்தை மாதிரி கரென்சி இருக்கே மச்சி, அதான்"

அனைவரும் சோபாவில் அமர்கின்றனர்.

சித்தார்த் மனசுக்குள் "இவன் ஏன் இப்ப வந்திருக்கான்? இவன் கூட கனெக்ஷனை கட் பண்ணிட்டேன்னு தானே சொன்னா, எவளையும் நம்ப முடியலையே!"

யுவி மனசுக்குள், "அதான் அவளுக்கு கோடியைக் காட்டி என்னை தெருக்கோடிக்கு அனுப்பிட்டீல்ல, அப்புறம் ஏன் நடுக்கம்?'


ஸ்ரீசாந்த் மனசுக்குள் "ஒரு மொள்ளமாரிக்கும் முடிச்சவுக்கிக்கும் நடுவுல மாட்டிக்கிட்டேனே, ஒரு ஜோர்ல இங்க வந்துட்டேன், இப்போ லெக் ரொம்ப ஸ்லிப் ஆவுதே"

தீபிகா உள்ளேயிருந்து வருகிறார், "ஹாய் யுவி, எப்படியிருக்கே? பார்த்து ரொம்ப நாளாச்சு?"
சித்தார்த் மறுபடியும் மனசுக்குள் "அப்பாடா, கனெக்ஷன் நிஜமாவே கட் தான் போல"

யுவி, "ஒண்ணும் இல்லை, சும்மாதான்....."

ஸ்ரீசாந்த், "அதன் இவ்ளோ தூரம் வந்தாச்சுல்ல? அப்புறம் ஏன் இழுக்கற? அது வேற ஒண்ணும் இல்லை தீபிகா, யுவிக்கு பொண்ணு பாக்கறோம்"

சித்தார்த் நடுவில் புகுந்து "அதுக்கு?"



ஸ்ரீசாந்த், "தீபிகாவும் யுவியும் ஒரு காலத்துல நல்ல நண்பர்கள் ஆச்சே, ஒரு வேளை தீபிகாவுக்கு இன்னமும் யுவி மேல இண்டரெஸ்ட் இருக்கான்னு தெரிஞ்சிகிட்டுப் போகலாம்னு வந்தோம்"

சித்தார்த் கடுப்பாகி "ஒழுங்கு மரியாதையா ரெண்டு பெரும் வெளிய போயிடுங்க, இல்லேன்னா அசிங்கமாயிடும்"

யுவி, "ஏய், என்ன வாய் நீளுது? பேட் எடுத்து அடிச்சேன்னு வெச்சுக்கோ,அப்புறம் உன் பாடியை பெங்களூர்ல தான் பொறுக்க வேண்டியிருக்கும்"

சித்தார்த் கோபத்தில் யுவியின் சட்டையைப் பிடிக்கப் போக இருவரும் கை கலப்பில் ஈடுபடவே, தீபிகாவும் ஸ்ரீயும் நடுவில் புகுந்து இருவரையும் விலக்கி விடுகின்றனர்.

தீபிகா, "Guys, ரிலாக்ஸ். யுவி, உனக்கு என்ன வேணும்?"

யுவி, "நீ வேணும் தீபி, நீ வேணும்"

தீபிகா, "நீ என்ன பைத்தியமா? நா சித்துவோட செட்டில் ஆயிட்டேன்"

யுவி, "அவன் கிட்ட அவங்கப்பா சம்பாதிச்ச பணம் தான் இருக்கு. என்னை மாதிரி சுயமா உழைச்சு முன்னேறியிருக்கானா?"

தீபிகா, "யாரு, நீயா? உங்கப்பா முன்னாள் ப்ளேயர். அந்த சிபாரிசுல உனக்கு சான்ஸ் கிடைச்சுது. ஏதோ ஆரம்பத்துல கொஞ்சம் விளையாடினதால இவ்ளோ நாள் டீம்ல வந்து போற."

ஸ்ரீசாந்த் யுவியிடம் "யோவ் உணர்சிவசப்படாதேன்னா கேக்கறியா? இப்ப பாரு உன் குப்பையை அவ நோண்ட ஆரம்பிச்சிட்டா!"

யுவி, "நம்ம ஆஸ்திரேலியா டூரெல்லாம் மறந்துட்டியா?"

தீபிகா, "எப்படி மறக்க முடியும்? ஆறு மணிக்கு டிஸ்கோ வாடான்னா 9 மணிக்கு வருவே, உனக்காக காத்திருந்து காத்திருந்து என் கால் வலிச்சது தான் மிச்சம். அந்த கேப்ல தோனி யதேச்சையா வந்து என்கிட்டே பேச அதுக்கு என் மேல சந்தேகப்பட்டே"

ஸ்ரீ, "யுவி, வா கிளம்புவோம்"

யுவி, "இருடா, கொஞ்சம் பேசிப் பாக்கறேன்"

ஸ்ரீ, "ரெண்டு பாலுக்கு ரெண்டு விக்கெட் எடுத்துட்டா, ஹாட்ரிக் அடிக்கறதுக்குள்ள போயிரலாம் வா"



வெளியே வரும்போது, "என்ன யுவி இப்படி டென்ஷன் ஆயிட்ட? வழக்கமா நான் தான் சீக்கிரம் சூடாவேன், சொம்பு மாதிரி இருக்கற உனக்குள்ள ஒரு சிம்பு இருப்பான்னு நான் எதிர்பாக்கலை"

"யுவி, "அவளைப் பார்த்தாலே அப்படி ஆயிடறேன், சரி அவளை விடு. அடுத்தது யாரு?"

ஸ்ரீ, "கிம் ஷர்மா?"

"அவ எவனோ ஆப்பிரிக்கக்காரனோட குடும்பம் நடத்தறா. "

"உன்னோட இப்பத்தைய கேர்ல்பிரெண்ட் ஆஞ்சல்?"

"அவ சும்மா டைம் பாஸ்,

"டைம் பாஸா?"

"அவ என்னை டைம் பாஸுக்குன்னு வெச்சிருக்கா, எப்போ என்னை கழட்டி விட்டுட்டு அந்தத் தொழிலதிபர் பின்னாடி போகப் போறாளோ!"



"கிரேஸ், மினிஷா, இவங்கள்ல யாரையாச்சும் பாப்போமா?"

கிரேஸ் மறுபடியும் அந்த வீணாப்போன விவேக் ஓபராயோட சுத்தறதா கேள்விப்பட்டேன். மினிஷா சரியான தெத்துப்பல்லி"

ஸ்ரீசாந்த் யோசிக்கிறார்...

யுவி, "யாராச்சும் புதுசா சொல்லுடா? Homely , family , Simply "

நார்த் முழுக்க நாறிட்ட போலிருக்கு, சவுத் இந்தியா ஓகேவா?'



"யாரு யாரு, மீரா ஜாஸ்மினா?"

அட நாயே, பேரைக் கூட தெரிஞ்சு வெச்சிருக்க. ஆனால் அது வேண்டாம்பா"

"ஏன்?"

"ஏன்னா, நானும் அவளும்..."

"அடப்பாவி, சரி, த்ரிஷா?"

"நீ சிக்சர் அடிச்சு சம்பாதிக்கறதை அவ breezer அடிச்சே காலி பண்ணிடுவா. உனக்கு ஒரு கட்டிங் கூட கிடைக்காது"

"நயன்தாரா?"

"அதுக்கு நீ மூக்கு நுனி கால் கட்டை விரலைத் தொடற மாதிரி வளைஞ்சு டான்ஸ் ஆடணும், முடியுமா?"

"ம்ஹும், தொப்பை நிஜமாவே பிதுங்கி கீழே விழுந்துடும். அனுஷ்கா?"

"நல்ல மாதிரி தான். ஆனா ஏகப்பட்ட கிராக்கி"

"வேற யாருமே இல்லையா?"

"ஒரு குடும்பக் குத்து விளக்கு ஒண்ணு இருக்கு, ஓகேவா?"

"டபுள் ஓகே"

Over to Chennai.



நடிகை ஸ்னேஹாவின் தாயார் இருவரையும் வரவேற்று அமரச் செய்கிறார். சிரித்த முகத்துடன் ஸ்னேஹா என்ட்ரீ ஆகிறார்.

யுவி, "டேய் ஸ்ரீ, இவ்ளோ நாள் இவ எப்படி என் கண்ல படாம இருந்தா?"

ஸ்ரீ, "நீ போற பார் பப் இங்கெல்லாம் இவங்க வர மாட்டாங்க, அதனால தான்"

ஸ்னேஹா, "வாங்க வாங்க, என்னால நம்பவே முடியல, நீங்க எவ்ளோ பெரிய கிரிக்கெட் ஸ்டார், எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க!! என்ன சாப்பிடறீங்க?"

ஸ்ரீ, "ஆஷிர்வாத் மாவுல செஞ்ச ரொட்டியும், குலாப் ஜாமூனும் கொண்டு வாங்க"

ஸ்னேஹா சிரித்துக்கொண்டே, "பரவாயில்லையே, இதெல்லாம் நோட் பண்ணியிருக்கீங்களே?"

"பிகர்னு வந்துட்டா நாங்க எல்லாத்தையும் நோட் பண்றது வழக்கம்"

ஸ்னேஹா, "சரி என்ன விஷயமா வந்திருக்கீங்க?"

யுவி, "நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்லலை, உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை, ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு சந்தோஷமா இருக்கு"

ஸ்னேஹாவின் அம்மா டென்ஷன் ஆகவே, "அம்மா, நீங்க உள்ள போங்க, நான் பேசிக்கறேன்"

ஸ்னேஹா "எந்த அடிப்படையில உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு எதிர்பாக்கறீங்க?"

யுவி, "என்னங்க, தெரியாத மாதிரி கேக்கறீங்க? இந்தியன் டீமுக்காக விளையாடறேன், நல்லா சம்பாதிக்கறேன், ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்லாப் போயிக்கிட்டிருக்கு. கொஞ்சம் அப்படி இப்படி பொண்ணுங்களோட ஊர் சுத்தறதா செய்திகள் வந்திருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் அதெல்லாம் சுத்தமா கட் பண்ணிடுவேங்க. நான் குடிக்கற பீர் மேல சத்தியம். வேறென்ன எதிர்பாக்கறீங்க?"

"நீங்க சொன்ன எல்லாம் சரி, ஆனா இந்தியன் டீமுக்காக ஆடறேன்னு சொன்னது தப்பு. டீமுக்காக ஆடறவனா இருந்தா இங்கிலாந்து டூர்ல சுண்டு விரல்ல அடிபட்டிடுச்சுன்னு சொல்லி திரும்பி ஓடி வருவியா?

"அந்த டூர்ல நிறைய பேருக்கு அடிபட்டுதே!. கிரிக்கெட்ல அதெல்லாம் சகஜம்"

"என்னால அப்படி எடுத்துக்க முடியாது. நீங்க ஒரு பஞ்சாபியாச்சே, தைரியமா நின்னு போராட வேண்டாம்?, அதை விட்டுட்டு கோழை மாதிரி பாதியிலேயே திரும்பி வந்துட்டியே? இந்தியாவுல ஆடும்போது மட்டும் அந்த குதி குதிக்கறே, உன் பவுசு எல்லாம் உள்ளூர்ல தானா? வெளிய போனா உன் பருப்பு வேகாதா?"

"வேர்ல்ட் கப்ல நான் எல்லா மேட்சும் நல்லா ஆடினேனே?"

"உன்னால தான் வேர்ல்ட் கப் ஜெயிச்சோம்னு சொல்ல வர்றியா? உனக்கு இப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா?'

"அப்படியில்ல...."

"நீ ஆடற IPL டீமும் ஒரு வெத்துவேட்டு டீம். உன் தாய் மண்ணான பஞ்சாப் டீமை விட்டுட்டு வட இந்தியர்களை ஓட ஓட விரட்டற மகாராஷ்டிரா டீம்ல பொய் சேர்ந்திருக்கே"

"அது தொழில், இது வாழ்க்கை"

"எனக்கு ரெண்டும் ஒண்ணு தான். உயிருக்கு உயிரா பழகின கிம் ஷர்மாவை உங்கம்மா சொன்ன ஒரே காரணத்துக்காக கழட்டி விட்டுட்டியே, நானும் சினிமாக்காரி தான், நாளைக்கு உங்கம்மா பேச்சைக் கேட்டுட்டு என்னையும் நடுத்தெருவுல நிறுத்தமட்டேன்னு என்ன நிச்சயம்?"

யுவி மௌனமாகவே, ஸ்ரீ "மேடம், இன்னும் எதாச்சும் பாக்கி இருக்கா?"

ஸ்ரீ, யுவியைப் பார்த்து, "யப்பா, நீ ஆறு பாலுக்கு ஆறு சிக்ஸ் தான் அடிச்சே, இவங்க அறுபது சிக்ஸ் அடிப்பாங்க போலிருக்கு, உனக்கு பால் போட்ட ஸ்டுவர்ட் பிராட் மாதிரி ஆயிடுச்சே உன் நிலைமை! வா கிளம்புவோம்"

வெளியே வந்தவுடன் யுவி, "என்ன ஸ்ரீ, குத்து விளக்குன்னு சொன்னே, இப்படி குடைஞ்சிட்டாங்க!"

"அதான் ஒரிஜினல் குத்து விளக்கு, குத்துற குத்துல எங்க எரியும்னு உனக்கே தெரியாது. பட் ஒண்ணும் பீல் பண்ணாதே, நம்பிக்கையே வாழ்க்கை"

யுவி, "சேச்சே, இதைவிட கேவலமா எல்லாம் திட்டியிருக்காங்க. ஆனாலும் அவங்க எனக்கு ஒரு நல்ல ஹின்ட் குடுத்திருக்காங்க"

"என்ன அது?"

"தாய் மண், பஞ்சாப் டீம்.."

"புரியலையே?"

"ப்ரீத்தி ஜின்டாடா"

ஸ்ரீ "அட்றா சக்கை, அட்றா சக்கை, அட்றா சக்கை. எனக்கு இப்பவே டான்ஸ் ஆடணும் போல தோணுதே!"

யுவி, "நான் போய் கேட்டு அவ முடியாதுன்னு சொல்லிட்டா? அந்த வாடியா வேற இருப்பானே?"

"அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது. அவளும் உன் நினைவாத்தான் இருப்பான்னு எனக்குள்ள பட்சி சொல்லுது, நீ பார்த்தாலே போதும்"

"அப்படியா? இப்பவே போறேன்" வண்டியில் ஏறி சடாரெனக் கிளப்பிக் கொண்டு பறக்கிறார்.

ஸ்ரீ, "இவனாச்சும் வித்யாசமா இருப்பான்னு நினைச்சேன், இவனும் பிகர் கிடச்ச உடனே பிரெண்டை கட் பண்றவன் தான் போலிருக்கு"

யுவி சென்று ப்ரீத்தியைப் பார்க்கிறார். அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள். இதற்கு மேல் வார்த்தைகள் தேவையில்லை...





Jayaraman
New Delhi


(This article is 100% imaginery one)

Wednesday, November 2, 2011

The Game of Fixing

Finally cricketers face Jail Terms in the ongoing spot fixing saga at England court. Having set the tone you know where this article is directed to.

Being an avid cricket fan and a blogger I regularly read columns written by various columnists associated to the sport. At this time I will have to mention most of these columnists happen to be ex-cricketers or TV presenters or a Journalist following the game forever. All of these writers mostly analyze a cricket match, cricket tours, should be strategies for the team, nuances of the sport, reminiscence of the past etc but nothing in particular dealing the global issue of match fixing. I can certainly bet all these columnists must have discussed this match fixing saga at length but not sure why nobody want to register their say thru an article. So, there is some truth to the saying “Talk all you want but beware of what you ink”. May be they must have written something, but none caught my eyes yet. All that public come to know about match fixing is the news published by the media. Let us move on to the main course.

Honestly, I never expected the verdict to finish up with Jail Terms for I’m used to cricketers banned for life the worst. Now that the bigger punishment is called for that hugely taints the image of the board and its players, I’ve faint hunch this issue is not going down alone but wake the past demons. Demons I meant the Cronje and Woolmer death which are far bigger conspiracies compared to the petty problem to which the verdict is Jail Terms. It is my personal opinion that fair investigation/trial did not take place on both Cronje and Woolmer episodes.

Hansie Cronje involves in match fixing, accepts his guilt only to wind up dead on a plane crash. One of the most successful coaches of the game Bob Woolmer suddenly found dead in his hotel room after his team failed to proceed beyond the group stages of World Cup 2007. Definitely the conspiracy & crime in both these episodes are larger magnitude and the criminals got away with the free pass. It is my individual view that Cronje was silenced so he won’t haunt later with an autobiography, while Woolmer death is more of Vendetta. In any case truth remains buried and the games governing body maintains silence to keep its members happy.

The memorandum of understanding “Not to drag others when you go down” usually takes a serious stick with harsh sentence. If somebody decide to dig past ghosts, it is only fair for feeling isolated (nobody tours in the fear of terrorism), if not quarantined by other boards. Well, this is only my logic for waking the ghosts.

By all means, if serious crimes get free pass why petty thieves face imprisonment?

At the same time, Jail Sentence may be new to cricket but it is no new to sports. If you are interested feel free to click the hyperlink Sports Betting Scandals. Again talking of punishment, I do agree that the intensity varies based on origin. Hansie Cronje got the maximum fine, Australians got away with minor fines for misdealing, Jadeja & Azhar were issued lifetime ban. The degree of penalty may have been different but problem remains the same in all the issues. Once again the games governing body stand different for different boards.

Like it or not the issue of “FIXING” exists at the root level. Teams in order to avoid relegation from the division/league usually fix their final few games with their opponents. In this case the opposition doesn’t throw the game deliberately by dropping catches/run outs but rest their star players to make it easy. Similarly Teams import players from outside for their final games to save their ass. So, fixing is very common even at the root level where betting is no way near the Stakes.

When the system is corrupted why blame the stakes?

I personally feel abolition of betting is not going to resolve this problem. In fact, making it legal will only limit the corruption. After all, it is only in India and few other countries betting are illegal. To me, betting is just an instinct of man kind. There is no denying every human must have involved in some casual bet with a friend/colleague/relative while serious folks play with large stakes in big forum. However people calling it sin play the game in the name of CHALLENGE. Anyways it is an instinct, so better embrace it rather attempt to abolish it. Like how government of Tamil Nadu controls the sale of liquor, even betting can be controlled by the government which in return fill the vault. 

At the same time, every sport, every sportsman, every game administration has to deal this issue of fixing. There is no harm in exploring the best practices to control the viral in CRICKET.

Dinesh
Cricket Lover

Tuesday, November 1, 2011

Reality Check


M S Dhoni (capt & wk), Gautam Gambhir, Virender Sehwag, Rahul Dravid, Sachin Tendulkar, VVS Laxman, Yuvraj Singh, R Ashwin, Pragyan Ojha, Ishant Sharma, Umesh Yadav, Virat Kohli, Varun Aaron, Ajinkya Rahane, Rahul Sharma

Indian selectors present a full strength Test squad for the home series against a meek West Indies outfit. Considering the hectic schedule Indian players just finished and the grind ahead, I personally anticipated India to take it easy against West Indies. But, it is interesting to see India wish to take no opposition lightly even at home.

More than happy to see our super stars in action, I’m forced to ask WHY, especially when India challenged the same opposition with a largely inferior unit only few months ago on their tour to Caribbean. Here are some WHYs.
Is India fielding a full squad because all the stars are available and roaring to go?
Is this the CHANCE availed to crucify a depleted side so as to redeem some points to improve the Test Rankings?
Is it because the REVENGE series witnessed empty stands, a lame gimmick attempted by the board to bring back audience to the stadium?
Is it because Indian cricketers are more involved in the short formats, here is an opportunity taken to get the players acquainted to Tests prior the series Down Under?
Is it a REALITY CHECK to verify if the beloved icons still have it in them to play sessions which they failed in the series at West Indies & England?
Is this an opportunity to get rid of the monkey from Sachin’s head so as he don’t have the pressure of 100th ton in Australia?
Finally, is this a litmus TEST to the Indian Cricket Fan who still manage to survive?

So many questions pop but no answers yet. As a reader if you already have kindly share your piece of wisdom.

In midst of all this perplexity there is something I truly appreciate about this selection. For once there is “NO” NOT SO SURE FIT ZAK to lead the pack only to break down in the middle of the series or the valor of TURBANATOR to execute an already executed West Indies. Last but not the least, Suresh Raina and Praveen Kumar are rewarded the most needed break of their life and the media report the duo being dropped and not rested for the overload they managed all along.
Now that the team is announced, time to move on rather brood over whys. It’s been ages India played 5 bowlers in a Test match. Considering the wickets in this series to be on the dry side and opposition not tough either, I will be excited to see India play Ishanth Sharma, Yadav/Aaron, Ashwin, Ojha and Rahul Sharma in the XI while scoring is left to 5 batsman only with Dhoni coming at 6 filling the role of all rounder. That would mean there would be no faceoff between Kohli and Yuvraj for a spot rather both benched to watch asli cricket. Though the scenario presented is ideal for Indian cricket, it can only turn true in dreams.

In reality India will chose to play 6 batsman and 4 bowlers ideally keeping the faceoff alive between Yuvraj and Kohli for a place in the XI, while Ojha and Rahul Sharma to fight out for the role of second spinner to accompany Ashwin. Though the XI is unsure at this time, one of the following two probabilities is certain to come true. If Yuvraj plays Rahul Sharma plays, If Kohli plays Ojha plays. I’m curious as you to know which combo is played and which combo is benched.

Bottom line: Since Delhi being the venue for first test and hometown for Kohli boy, does he have the charisma to bench Yuvi-Sharma combo? Anyways, India will sweep the series 3-0 unless weather intervenes.

Dinesh
Cricket Lover
Related Posts Plugin for WordPress, Blogger...